தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும்

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும், எஸ். பி. எழிலழகன், சுரா பதிப்பகம், விலை 250ரூ. நூலாசிரியர் எழிலழகன் செய்தித்துறை அனுபவம் மிக்கவர் என்பதால், தமிழக மக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டிய தகவல்களை, இந்த நூலில் சிறப்பாக தொகுத்திருக்கிறார். நாட்டுப்பற்றுமிக்க கருத்துக்கள், வரலாறு பேசும் தகவல் இதில் அடக்கம். ஆகவே, முதல் நூல் என்ற கருத்தை விட, கருத்துக்கள் கோர்வையாக உள்ளன. தமிழக அரசு பல்வேறு தலைவர்களின் நினைவகங்களை உருவாக்கிய போதும், அதன் தொடர்புடைய, தமிழக தலைவர்களை வரலாற்றுப் பார்வையில், இவர் பார்த்து […]

Read more

பாரதியார் சரித்திரம்

பாரதியார் சரித்திரம், பாரதியின் துணைவியார் செல்லம்மாள் பாரதி, அழகு பதிப்பகம், பக். 136, விலை 100ரூ. ‘‘அந்த நாளில் ‘கல்யாணராமன் ஸெட்’ என்ற கம்பெனி நடத்திய, ‘துரோபதி துகிலுரிதல்’ என்ற நாடகம் பாரதியின் மனதைக் கவர்ந்தது. பின்னாளில் உலகத்தார் வியக்கும் வண்ணம், அவர் இயற்றிய பாஞ்சாலி சபதத்திற்கு, சிறுவயதில் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியே காரணமாயிருந்து இருக்கிறது,’’ (பக்.23). ‘ராமாவதாரத்தில் கூனிப் போகும்படி செய்து, கூனியின் கூனலைக் கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் நிமிர்த்தினான். தன் கவிதா சக்தியால், மின்சார சக்தி கொண்ட பாக்களால், தமிழகத்தின் கூனலைப் பாரதி […]

Read more

தாக நதி

தாக நதி, ரத்தின மூர்த்தி, விஜயலட்சுமி பதிப்பகம், பக். 213, விலை 200ரூ. வசந்தன் ஒரு விவசாயி. அவன் வெண்ணிலா என்ற பெண்ணை மணக்கிறான். ஆனால், வெண்ணிலாவோ நகரத்தில் உள்ள மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்றும், அதுவும் கோட்டு சூட்டுப் போட்ட மாப்பிள்ளையாக அமைய வேண்டும் என்றும் விரும்பியவள். அரை குறை மனதுடன்தான் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே வாழ்வைச் செம்மைப்படுத்த முடியும் என்பதையும், இருக்கும் பொருளாதாரத்தை வைத்தே வாழ்வை நிம்மதியாகக் கழிக்க முடியும் என்பதையும் மிக வசதியாக மறந்து கொண்டிருக்கிற […]

Read more

சின்னமனூரிலிருந்து சீனாவுக்கு

சின்னமனூரிலிருந்து சீனாவுக்கு, முனைவர் இரா. மனோகரன், காவ்யா, பக். 246, விலை 225ரூ. பயண நூல் ஒன்றை நாட்குறிப்புப் போல் எழுதி புதுமை செய்துள்ளார் முனைவர் இரா.மனோகரன். மஞ்சள் ஆறு பாயும் சீனாவைப் பற்றி தமிழருக்குத் தெரிவிக்கும் நூல் இது. பணி ஓய்வு பெற்றதும் சீனாவுக்குப் போய் நமக்காக அந்தப் பயண வரலாற்றைப் படைத்துத் தந்துள்ளார். நம் வீட்டின் வரவேற்பறையைப் போல் பராமரிக்கப்படும் சீனாவின் பொதுக் கழிப்பிடத்தையும் டாக்சிக்காரர் மீட்டர் கட்டணம் மட்டும் வாங்குவதையும் பார்க்கும்போது நமக்குப் பொறாமையாகத் தான் இருக்கிறது. சீனாவின் பாரம்பரியத்தை […]

Read more

சங்க கால ஜாதி அரசியல்

சங்க கால ஜாதி அரசியல், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 96, விலை 80ரூ. பல்வேறு இதழ்களில் வெளியான, 13 கட்டுரைகளின் தொகுப்பு. மகாபாரதத்தைத் திரும்ப எழுதுதல், தீபாவளியின் அரசியல், நோபல் விருதின் யுத்த அரசியல், சங்ககால ஜாதி அரசியல், மதிப்பெண் அரசியல், துவரம் பருப்பின் அரசியல் என ஒவ்வொரு கட்டுரையிலும், ‘அரசியல் மொழி’ என்று ஒன்றை பின்புலமாகக் கொண்டு இன்றைய சூழலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் முன்னாள், ‘உன்னதம்’ இதழாசிரியர். ‘துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று/ இந்நான் கல்லது குடியும் […]

Read more

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக். 96, விலை 85ரூ. மெட்ராஸ்காரர்கள் அயோக்கியர்கள் போலவும், அவர்கள் பேசும் மொழி கொச்சையானது என்றும், இந்த நகரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பேசுவது இந்த மண்ணின் பூர்வக்குடிகளை கேலி செய்வதாகும். எங்கெங்கிருந்தோ இந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்த, 90 சதவீதம் பேர் செய்யும் தவறுகளை, மெட்ராஸ் மக்கள் சுமக்கின்றனர்’ என, சித்திரை வெயிலாய் வறுத்தெடுக்கிறார், சென்னைவாசியான தமிழ்மகன். தமிழன் பெயரோடு, ‘துரை’ சேர்ந்த வரலாற்றிற்கு, வள்ளிமலை சுவாமிகளே காரணமாம். ஆம்… ஆங்கில புத்தாண்டில், […]

Read more

காந்திஜியின் கனவு நனவாகட்டும்

காந்திஜியின் கனவு நனவாகட்டும், முனைவர் அ. பிச்சை, சபாநாயகர் செல்ல பாண்டியன் அறக்கட்டளை, பக். 144, விலை 70ரூ. காந்தி விரும்பியது என்ன? ‘ஏழ்மை ஒழிக்கப்படவில்லை என்றால், தீண்டாமை முழுக்கத் துடைத்து எறியப்படவில்லை என்றால் நாம் சுதந்திரம் பெறுவதில் பொருளே இல்லை’ என, முழங்கியவர் காந்தி மகான். ‘என் அரிஜன சகோதரர்களை உள்ளே அனுமதிக்காத பூரி ஜகந்நாதர் கோவிலுக்குள், கஸ்தூரிபா, என்னை மீறி எப்படிப் போகலாம் என மனம் வருந்தியும், கடிந்தும் பேசியவர் அவர். தீண்டாமை ஒழிப்பை ஓர் இயக்கமாகவே நடத்தியவர். அவர் கண்ட […]

Read more

நினைவின் நிழல்கள்

நினைவின் நிழல்கள், மணா, கலைஞன் பதிப்பகம், விலை 195ரூ. இந்திய சிற்பங்களுக்கு ஒழுங்கு முறை மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு திறந்த புத்தகம். அந்தப் புத்தகத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். அதுவே ஓர் அறிஞராக இருப்பின் நமக்கு இன்னும் கூடுதல் தகவல்களும், செய்திகளும் கிடைக்கும். அந்த அறிஞர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நூலாக்கிப் படித்தால் தீங்கனியாக இனிக்கும்தானே! அப்படியான ஒரு புத்தகம் தான், ‘நினைவின் நிழல்கள்.’ பல்வேறு துறை சார்ந்த சாதனை மனிதர்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம், அனுபவங்கள், தான் பேட்டி […]

Read more

இளையராஜா இசையில் தத்துவமும் அழகியலும்

இளையராஜா இசையில் தத்துவமும் அழகியலும், பிரேம் ரமேஷ், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 118, விலை 100ரூ. இளையராஜா இசையின் சிறப்பை பேசும் உன்னத நூல். வித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்நாடக இசை வர்ண மெட்டுகளை போல் மக்களிடம் நாட்டுப்புற இசை வர்ண மெட்டுக்கள் ஏராளமாக உண்டு. அவைகளை தேடித் தேடி கவனத்துடன் மனதில் வாங்கிப் பதிவு செய்து கொண்ட ஞானியரில் மகா ஞானி நம்முடைய இளையராஜா அவர்கள் என்பது கி.ராஜ நாராயணனின் கணிப்பு. ஆனால், இளையராஜாவோ அடக்கத்துடன் பேசுகிறார். ‘இசை என்பது மிகப்பெரிய […]

Read more

இடக்கை

இடக்கை, எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், பக். 358, விலை 375ரூ. பேரரசர் அவுரங்கசீப் மரணம் அடைவதை சொல்லி, இந்த நாவல் துவங்குகிறது. டில்லி அரியணை ரத்தக்கறை படிந்தது. எளிய மனிதன் ஒருவனும் அதில் அமர்ந்ததேயில்லை. இந்த நாவல் வரலாற்றில் வாழ்ந்த சாமான்ய மனிதர்களின் கதையை சொல்ல முயல்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் சிறையில் அடைக்க இடம் இல்லாமல் போய் விட்டதால், அவர்களுக்கென ஒரு சிறு நகரை உருவாக்கி இருந்தனர். அந்த நகரை காலா என அழைத்தனர். சில குற்றவாளிகள் […]

Read more
1 130 131 132 133 134 240