சிந்தனை ஒன்றுடையாள்

சிந்தனை ஒன்றுடையாள், கே.எஸ். சுப்ரமணியன், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 512, விலை 350ரூ. கண்ணாடியும் பிம்பமும்போல தமிழும் சமஸ்கிருதமும்! ஓர் ஆடை, நூலிழையும், பாவுமாய் இணைந்து உருவாவதுபோல், பாரத நாட்டின் பழம் பெருமை, பண்பாடு, ஒருமைப்பாடு ஆகியன, செவ்வியல் மொழிகளான சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளாலும் கட்டிக்காக்கப்படுகின்றன. அந்த வகையில், சமஸ்கிருதத்தில்தான் படித்துச் சுவைத்த அரிய பகுதிகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும் எனும் பேரவா காரணமாக, நூலாசிரியர் இந்த நூலை உருவாக்கியுள்ளார். வேதம், உபநிஷத்துகள், கீதை, பர்த்ருஹரியின் […]

Read more

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. தன்னம்பிக்கைக் கட்டுரைகள், வெறும் வார்த்தைகளால் அலங்கரிக்கப்படக் கூடாது. அது, வாசகனின் தோளில் கை போட்டு, நடந்து கொண்டே, சுவாரசியமாக செல்வது போல இருக்க வேண்டும் என்பதற்கு, உதாரணமாய் வெளிவந்திருக்கிறது இந்த நூல். மைக்கேல் ஜாக்சன் முதல் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா வரை, 30 பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை அழகாக விவரித்து அதன் மூலம், வாழ்வைப் புரட்டும் மந்திரத்தை சொல்கிறார் ஆசிரியர். திரையில் சூப்பர்மேன் வேடத்தில் நடித்த […]

Read more

தருணம் பார்க்கும் தருணங்கள்

தருணம் பார்க்கும் தருணங்கள், சொ.சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 320, விலை 240ரூ சொல்லாட்சிக் கலையில் சிறந்து விளங்கும் முனைவர் சொ. சேதுபதியின் 22 இலக்கியக் கட்டுரைகளின் இனிய தொகுப்பே இந்த நூல். இலக்கியக் கட்டுரைகளின் அடி நாதமாக, மானிடநேயம், உயிரிரக்கம் ஒலித்துக் கொண்டிருப்பது நூலின் சிறப்பு. தொல்காப்பியம் முதல், தொடுக்கும் முகநூல் முடிய, நுவல்பொருளை வாழ்வியல் நோக்கில் வைத்துப் பார்க்கும் சிந்தனைகளின் தொகுப்பு இந்த நூல். தருணம் எனும் சொல்கொண்டு, சொல் விளையாட்டைச் சுடரச் செய்துள்ள திறம் பாராட்டத்தக்கது. கவிதை, சிறுகதை, […]

Read more

தினகரன் பொங்கல் மலர்

தினகரன் பொங்கல் மலர், தினகரன், பக். 240, விலை 100ரூ. மும்பை தாராவியில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை உடன், இந்த மலர் துவங்குகிறது. கடந்த ஆண்டு 1500 குடும்பங்கள், தாராவியில் ஒரே இடத்தில் பொங்கலிட்டு, கொண்டாடி உள்ளனர். வெள்ளம், வறட்சி என தமிழகம் அவதிப்பட்டு வரும் நிலையில், கோவில் குளங்களில் நீர் சேமிப்பது குறித்த முன்னோர் தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரை வரவேற்கப்படத்தக்கது. கர்நாடக சங்கீத வாத்தியங்களில் ஒன்றான கடம், தயாரிக்கப்படுவது குறித்த கட்டுரை, நாய்கள் கண்காட்சி குறித்த, தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே!

காஷ்மீர் இந்தியாவுக்கே!, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 303, விலை 250ரூ. கடந்த, 1947ல் நடந்த இந்தியா பாக்., போர் பின்னணியை முழுமையாக விளக்குகிறது இந்த நூல். ஆசிரியர் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், ராணுவ செயல்பாடுகளையும், நுணுக்கங்களையும் எளிமையாக விவரிக்கிறார். போரின் நிகழ்வுகள், அதில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகம், அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறை என, அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் உரிமை கோரும் பாகிஸ்தானின் நடவடிக்கையை ஏற்க மறுப்பதற்கான காரணத்தை ஆதாரங்களுடன் பேசுவது கடினம். அத்தனை எளிமைப்படுத்தி இருக்கிறார், நூலாசிரியர். காஷ்மீர் […]

Read more

அர்த்தநாரீஸ்வரம்

அர்த்தநாரீஸ்வரம், இரா.த. பாலாஜி, முரண்களரி வெளியீடு, பக். 112, விலை 100ரூ. தற்போது, எஸ்.ஆர்.எம்., சிவாஜிகணேசன் பிலிம் இன்ஸ்ட்டியூட்டின் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பாலாஜியின், ஏழு சிறுகதைகளைக் கொண்ட நூல் இது. வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மனம் தளர வேண்டாம் என்பதை சொல்லும் ‘தன்னம்பிக்கை’, இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைச் சொல்லும் ‘தாகம்’, மனம் விட்டுப் பேசுங்கள், பகைமை உணர்ச்சி வேண்டாம் என்று விளக்கும் ‘எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’, ஆடம்பரச் செலவு அவசியம் அற்றது என்று சுட்டிக் காட்டும், ‘ராயல் […]

Read more

இந்திய நாட்டுப் பண்பாடு

இந்திய நாட்டுப் பண்பாடு, சௌரி, சேது அலமி பிரசுரம், பக். 176, விலை 110ரூ. ராமாயண காலம் முதல் இந்தியாவில் நிலவிய பண்பாட்டை இந்த நூல் விவரிக்கிறது. வால்மீகி ராமாயணத்தின் துணை கொண்டு, பண்டைய சமூகப் பழக்க வழக்கங்கள், கோமாதா நம் குலமாதா என்று ஏன் வழிபடுகிறோம், பசு பராமரிப்பின் பயன், 84 சித்தர்கள், கி.பி. 800 முதல் கி.பி. 1200 வரையுள்ள, 400 ஆண்டுகளில் இந்திய மக்களிடையே சமத்துவ சமுதாய உணர்வைப் பரப்பினர் (பக். 113) ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தெய்வக்கலையாக நடனம் […]

Read more

செம்மொழிச் சிந்தனைகள்

செம்மொழிச் சிந்தனைகள், தா. நீலகண்ட பிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், பக். 98, விலை 60ரூ. இளம்பூரணரை பின்பற்றிய உரைக்காரர்கள்! தமிழ் இலக்கியங்களுள் காணக்கிடக்கும் சிந்தனைகளைத் தொகுத்து, ஒன்பது கட்டுரைகளாக பல்வேறு சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். ‘குறுந்தொகைப் பாடல்களில் இலக்கிய மாந்தர்கள் தம் உள்ளத்து எண்ணங்கள் முழுவதையும் வெளிப்படுத்துவதில்லை. கேட்போரின் மனநிலை, சூழல் இவற்றிற்கேற்ப, பேசுவோர் தம் உணர்வுகள் சிலவற்றைப் பேச்சிலும், மெய்ப்பாட்டிலும் வெளிப்படுத்துவர். சிலவற்றை தம் அடிமனதில்தேக்கி வைத்திருப்பர்’ என உளவியல் கோட்பாடு அமைந்திருக்கும் பாங்கை விளக்குகிறார். பிற இலக்கியங்கள் மூவேந்தர்களைப் பாட முற்பட்டபோதே, […]

Read more

சவீதா நாவல்கள்

சவீதா நாவல்கள், சவீதா, நன்னூல் அகம், பக். 1264, விலை 800ரூ. சுகமான வாசிப்பு அனுபவம் தரும் சவீதா ஒரு அபூர்வமான எழுத்துச் சிற்பி. உளி எடுத்துக் கொஞ்சம், கொஞ்சமாகச் செதுக்குவதுபோல், சொற்களைச் செதுக்கும் ஒரு அபூர்வக் கலைஞன், நிலவின் பாலில் குளிப்பதைப்போலவும், நிர்மலத் தென்றலில் குறிப்பதைப்போலவும், சுகம் தரும் வார்த்தைகளை வர்ணனைகளில் கொண்டு வரும் மாயாவி சுவீதா. இந்தத் தொகுதியில் உள்ள, 18 நாவல்களும், சுகமான வாசிப்பு அனுபவத்தைத் தரும். ‘மலைச் சிகரங்கள் மேகங்களால் கூர் மழுங்கி இருந்தன. மூடுபனி, யூகலிப்டஸ் மரங்களுக்கு […]

Read more

குடியரசு

குடியரசு, கிரேக்கத்தில் தத்துவஞானி பிளாட்டோ, சாகித்ய அகாடமி வெளியீடு. தலைவனுக்குத் தகுதி எது? தத்துவஞானி பிளாட்டோ கிரேக்க மொழியில் எழுதி, சாகித்ய அகாடமி தமிழில் வெளியிட்டுள்ள, ‘குடியரசு’ நூலை அண்மையில் படித்தேன். ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நூல் சொல்கிறது. நாட்டை வழி நடத்துபவன் ஒரு தத்துவஞானியாக இருக்க வேண்டும் என்பது, நூல் ஆசிரியரின் நோக்கமாக இருந்தாலும், அவனுடைய கருத்துக்கள் மக்களிடையே எதிர்மறை தாக்கத்தை உருவாக்கும் என்பதால், அரசுக்கு பின்னால் இருந்து இயக்கும் சக்தியாக, தத்துவஞானிகள் இருக்க வேண்டி உள்ளது […]

Read more
1 149 150 151 152 153 240