சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர்

சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர், கவிஞர் இளங்கண்ணன், ராமையா பதிப்பகம், பக். 320, விலை 160ரூ. ‘அந்தணரானாலும் அன்பால் அனைவரையும்/சாந்தமாய்க் கொண்டநல் ஆத்திர தாரியம்/சீரார் இராமானுசர்த் தொண்டைச் சிந்தை கொள்/ஓராயிரத் தாண்டாம் வாழ்த்து’ என்னும் வாழ்த்துடன் துவங்கும் நூலாசிரியர், 36 தலைப்புகளில், ராமானுஜரின் வரலாற்றை சிறுசிறு தலைப்புகளில், தக்க திருக்குறள் மேற்கோள்களுடன், வைணவச் சுவை குன்றாமல் திறம்படத் தந்துள்ளார். ‘அங்கத்தில் பஞ்ச சம்ஸ்காரம் தரித்தவரே அய்யங்கார். அது சாதியன்று (பக். 75). ஒருவன் தன் சமயத்தில் குற்றங்களைக் கண்டுபிடித்துத் தூற்றுவது மிகவும் கீழ்த்தரமான செயல் (பக். […]

Read more

ஊரங்கு உத்தரவு

ஊரங்கு உத்தரவு, பி.என்.எஸ். பாண்டின், வெர்கோபேஜஸ் பதிப்பகம். புதுச்சேரியை உலுக்கிய 10 நாட்கள் புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாற்றை சித்தரிக்கும், ‘ஊரடங்கு உத்தரவு’ என்ற நூலை, சமீபத்தில் படித்தேன். பி.என்.எஸ். பாண்டியன் எழுதிய இந்த நூலை, வெர்கோ பேஜஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது நடந்த போராட்டம். அவர் எழுத்தாளர் ஆன பின், ஒரு வரலாறாகப் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, புதுச்சேரியை, 1979ல் ஆண்டது. மத்தியில் ஜனதா ஆட்சி நடந்தது. புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி […]

Read more

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், சீத்தாகந்த் மகாபாத்ரா, தமிழில் முனைவர் ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாடமி, பக். 208, விலை 125ரூ. பழங்குடி மக்களை விவரிக்கும் சிறுகதைகள்! இந்த நூல் 13 கதைகள் வழி, வித்தியாசமான பாடுபொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மூலநூல் ஆசிரியர், புகழ்மிக்க கோபியாத் மொகந்தி, பழங்குடி மக்களின் வாழ்வியலைத் தம் கதைகளில் படம் பிடித்துக் காட்டுவதில் ஈடுபாடுடையவர். இந்த நூலிலும், ஒன்றிரண்டு கதைகள் அந்த பின்புலத்தில் அமைந்துள்ளன. இருப்பினும் குடும்பப் பாங்கான கதைகளும் இதில் உள்ளன. ‘அம்புப் படுக்கை, இருவீரர்கள், வீடு […]

Read more

இலக்கண விளக்கம்

இலக்கண விளக்கம், (எழுத்தியல், சொல்லியல், புணரியல், பொருளியல், யாப்பியல், அணியியல் ஆறு தனி நூல்கள்), கலாநிலையம் கே. இராஜகோபாலாச்சாரியார், கண்ணப்பன் பதிப்பகம், ஆறு நூல்களின் மொத்த விலை 570ரூ. இலக்கண விளக்கம் என்ற பெயரில் வந்துள்ள, இந்த ஆறு நூல்களும், தமிழுக்குச் சிறப்பைச் சேர்க்கின்றன. எளிய, இனிய நடையில், தமிழ் இலக்கணத்தை தெரிவிக்கின்றன. தமிழைப் பிழையின்றி எழுதவும், பேசவும் இலக்கண நூல்கள் பெரிதும் உதவுகின்றன. சொல்லுக்குஅடிப்படையான எழுத்து இலக்கணமும், சொல்லின் பெயர், வினை, இடை, உரி என்ற நான்கையும் விளக்கும் சொல் இலக்கணமும், சொற்கள் […]

Read more

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், புலவர் செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், பக். 212, விலை 120ரூ. கழிவுநீர் வடிகால இணைப்பிற்குக் கூட, வார்டு கவுன்சிலருக்குக் கமிஷன் தர வேண்டியுள்ளது என்கிறார், பழ. கருப்பையா. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊடுருவியிருக்கும் ஊழலைப் பற்றி, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் தீய உறவைப் பற்றி அவர் பேசுகிறார். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா? அவருக்கு, ப. சுப்பராயன் வரலாற்றைப் பரிந்துரைக்கிறோம். சட்டசபை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மாநில அமைச்சர். மாநில முதன்மை அமைச்சர், அரசியல் […]

Read more

பிராப்பர்ட்டி ரெஜிஸ்ட்ரேஷன்

பிராப்பர்ட்டி ரெஜிஸ்ட்ரேஷன், லேண்டு ரெக்கார்ட்ஸ் அண்டு பில்டிங் அப்ரூவல் புரசீஜர்ஸ் பாலோடு இன்வேரியஸ் ஸ்டேட்டஸ் இன் இண்டியா (ஆங்கிலம்), வழக்கறிஞர் ஜி. ஷியாம் சுந்தர், ஸ்ரீ வித்யாதேவி பப்ளிஷர்ஸ், பக். 341, விலை 499ரூ. பத்திரப் பதிவு பற்றிய தெளிவான நூல் நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் பத்திரப்பதிவு நடைமுறைகள், முத்திரைத் தீர்வை, கட்டணம் குறித்த விவரங்கள், எளிதான மொழிநடையில், இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன. சென்னையை விட நெருக்கடியான டில்லி, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிகபட்ச அளவில், கட்டடங்களுக்கான எப்.எஸ்.ஐ., எனப்படும், தளபரப்பு […]

Read more

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, பக். 159, விலை 120ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023754.html பத்திரிகைகள், வலைதளங்களில் தற்போதைய கல்விமுறை பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. விளையாடினால் தண்டிக்கும் பள்ளிகளையும், மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாணவர்களை உருவாக்கும் பள்ளிகளையும் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். (பக். 77). ‘மதிப்பெண்களைத் துரத்துவது எப்படி என, சொல்லித் தருகின்றனரே தவிர, மனிதர்களைப் படிக்க யாரும் சொல்லித் தருவதில்லை. நாளைய மன்னர்களாகிய மாணவர்கள், வாழ்க்கையைத் துவங்கும் […]

Read more

மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா.

மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா., எஸ். கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 152, விலை 100ரூ. புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமை வாய்ந்த, மதுரை மாநகரம் எண்ணற்ற தியாக சீலர்களை தந்துள்ளது. அவர்களில் ஒருவர், ‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’எனபவம், தோழர் ஐ.மா.பா., எனவும் அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி. சுதந்திர போராட்ட வீரர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர் என, பன்முகத் திறமை கொண்ட அவரை பற்றி, அனைத்து தகவல்களும் ஒருங்கே இடம் பெற்றிருக்கின்றன இந்த நூலில். அவரது […]

Read more

அமுதும் தேனும்

அமுதும் தேனும், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 242, விலை 150ரூ. முப்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ‘மூத்தோர் சொல்’ என்ற அத்தியாயத்தில், விவேகானந்தர், ரமண முனிவர், ராஜாஜி, நாமக்கல் கவிஞர், தமிழறிஞர் வ.அய். சுப்பிரமணியன், ஏர்வாடியார் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் அத்தனையும் அற்புதம். ‘இலக்கிய அமுது’ என்ற தலைப்பில் அகநானூறு, புறநானூறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் அறிவுக்கு சான்றாய் அலங்கரிக்கின்றன. இக்கால கவிஞர்களின் படைப்புகள் பற்றி தனி ஒரு அத்தியாயம். அதில் புதுக்கவிதை, மரபுக்கவிதை, […]

Read more

வண்ண மலர்த் தோட்டம்

வண்ண மலர்த் தோட்டம், மா.பா. குருசாமி, காந்திய இலக்கிய சங்கம், பக். 116, விலை 50ரூ. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தவை கதைகள். அதனால் கதை புத்தகங்கள் அதிகம் வெளிவருகின்றன. கதை சொல்வோரும், எழுதுவோரும் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவர்களுக்கான கவிதைகளை எழுதி, ‘வண்ண மலர்த்தோட்டம்’ தலைப்பில் புத்தகமாக்கியுள்ளார், முனைவர் மா.பா. குருசாமி. குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதுவது என்பது காற்றில் பறக்கும் பஞ்சுப் பொதிகளை கையில் பிடிப்பது போலத்தான். சுதந்திரமாய் சோலையில் சுற்றித்திரியும் வண்ணத்துப் பூச்சிகள்போல் வலம் வரும் குழந்தைகளுக்காக எழுத நினைப்போருக்கு எளிமையும், மனத்தூய்மையும், […]

Read more
1 147 148 149 150 151 240