வையை தடம் தேடி

வையை தடம் தேடி, ப. திருமலை, இரா.சிவக்குமார், பட்டறிவு பதிப்பகம், பக். 106, விலை 120ரூ. வைகையின் தடம் தேடி புறப்பட்டு, அத்தனை தகவல்களையும் திரட்டி ஆவணப்படுத்தி உள்ளனர், அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் திருமலை, சிவக்குமார். வைகையை தெய்வமாக மதித்து, அதற்கு படையல் செய்தனர் அன்றைய மதுரை மக்கள். நற்றிணையும், குறுந்தொகையும், ஐங்குறுநூறும் கொண்டாடிய வைகை, இன்று நாறுதே என்ற பெருங்கவலையுடன் நூலாசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். சிங்கள கதையிலும் வைகை பற்றி குறிப்பிட்டிருப்பதாக கூறும் ஆசிரியர், இன்று வேதிக்கழிவால் வைகை படும் வேதனையையும் விவரிக்கின்றனர். வைகையின் […]

Read more

கிருஷ்ண யஜுர்வேத தைத்ரிய அனுபந்தம்

கிருஷ்ண யஜுர்வேத தைத்ரிய அனுபந்தம், ஸ்ரீகுளத்து ஹரிஹர புத்ர சர்மா, பக். 380, விலை 200ரூ. கிருஷ்ண யஜுர்வேத தைத்ரிய அனுபந்தம் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள நூல் இது. வேதங்கள் இந்த நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் ஆவணம். காலம்காலமாக போற்றப்படும் வேதத்தின் ஒரு பகுதியான, கிருஷ்ண யஜுர் வேத தைத்ரியச் சிறப்புகளை விளக்குகிறது இந்த நூல். தைத்ரிய யஜுர்வேதத்தில் உள்ள சம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம், மந்திரபிரச்னம், அனுவாகம் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ள, யாஜ்யா, ப்ரோநுவாக்யா போன்ற மந்திரங்களின் விவரங்கள், பிரதீகம் என்ற […]

Read more

மீரா

மீரா, இரா. மோகன், சாகித்ய அகாடமி, பக். 112, விலை 50ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024735.html ‘மரபில் பூத்த புதுமலர்’ என்றும், ‘காலத்தின் குரல்’ என்றும், ‘பாவேந்தரின் வாரிசு’ என்றும் திறனாய்வாளர்களால் மதிப்பிடப்பெற்ற மீரா (மீ.ராசேந்திரன்) இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை உலகில் தமக்கென தனியிடம் வகுத்துக்கொண்ட ஆற்றல்சால் ஆளுமையாளர். ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்’ எனும் புதுக்கவிதை நூல் மூலம், 1980களில், கல்லூரி மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர். அவரது படைப்புகளில் அங்கதச் சுவை ஆழ்ந்து விரிந்து கிடக்கும். அரசியல்வாதியின் பதவி […]

Read more

ஒருபிடிமண்

ஒருபிடிமண், இயக்குனர் ஸ்ரீதர், விஜயா பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 100ரூ. இயக்குனர் ஸ்ரீதரின் பெயரை தவிர்த்துவிட்டு, தமிழ் திரை வரலாற்றை எழுத முடியாது. அவர் கைவண்ணத்தில், சிவாஜி, முத்துராமன், கே.ஆர். விஜயா ஆகியோர் நடிக்க இருந்த படம் 1965ல் நடந்த, இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததால் கைக்கூடவில்லை. இந்த திரைக்கதை ‘பொம்மை’ சினிமா இதழில் தொடராக வெளிவந்தது. தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. கர்னல் ரங்கதுரை கதாபாத்திரம் இடம்பெறும் போதெல்லாம், நம் கண்முன் சிவாஜி தெரிவது அற்புதமான அனுபவம். கதாபாத்திரங்களின் தேர்வே, […]

Read more

தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன்

தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன், ஆலன் ரமோன் கிளின்ட்டன். மவுனப் படங்களின் சகாப்தம் சமீபத்தில் நான் படித்த நூல்களில் என்னை மிகவும் பாதித்த அற்புதமான நூல், பஸ்டர் கீட்டனின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆலன் ரமோன் கிளின்ட்டன் என்பவர் எழுதிய ‘தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன்!’ கடந்த 1920களில் அமெரிக்காவின் மவுனப் படங்கள், உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பார்க்கப்படுகின்றன. அந்த காலகட்டத்தில் பெரும் புகழ் பெற்ற முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் கீட்டன். உலகப் போரால் தங்களது வாழ்க்கையை இழந்து வெறுப்பிலும் வேதனையிலும் […]

Read more

கவுரி கருமை காளமேகம்

கவுரி கருமை காளமேகம், (தமிழாய்வுக் கட்டுரைகள்), க. கதிரவன், இராசகுணா பதிப்பகம், பக்.130, விலை 168ரூ. செவ்விலக்கியங்களும் கேரள உணவுகளும் இந்த நூல் பல்வேறு அரங்குகளில் படிக்கப்பெற்ற 11 கட்டுரைகளின் தொகுப்பு. சங்க இலக்கியம், இரட்டைக் காப்பியங்கள், பக்தி இலக்கியம், தனிப்பாடல், இக்கால இலக்கியம் ஆகிய தளங்களில், ஆசிரியருக்குள்ள புலமையைக் காட்டுகிறது. நூலாசிரியர், தனது அறிமுக உரையினைத் தற்சிறப்பு பாயிரம் என்னும் பெயரில் அமைத்து, உள் தலைப்புக்களுக்குப் படலம் என்று பெயரிட்டுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வு நெறிமுறைகளுக்கேற்ப கருதுகோளுடன் சிறந்த ஆய்வு முடிவையும் தருகிறது. […]

Read more

உத்தம நாயகன்

உத்தம நாயகன், த. தியாகையா, நூலக உலகம் வெளியீடு, பக். 88, விலை 60ரூ. ராமபிரானின் பண்பையும், ஒழுக்கத்தையும் விளக்கும் நூலாக உள்ளது. கம்பன் பாடல்களில் சில மிகநுட்பமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். ‘திருஉறப்பயந்தனள், உரம் உருகிய வாளி, ஏழிரண்டாண்டில் வா, முறைமை அன்று, என்னது கடன்’ என்ற ஆறு தலைப்புகளில் நூலாசிரியர், கம்பன் பாடல்களில் சிலவற்றை விவரித்துள்ளார். விஸ்வாமித்ரரிடம் இருக்கும்போது தான் தாடகை வதைப் படலம் முதல் அடுத்து வரும் படலங்களில், ராமபிரான் ஆற்றல் வெளிப்படுகிறது (பக். 25). கைகேயின் வரத்தை நிறைவேற்றியதன் […]

Read more

சேர மண்டல வரலாற்றுக் களஞ்சியம்

சேர மண்டல வரலாற்றுக் களஞ்சியம், பா. சசிக்குமார், விஜயா பதிப்பகம், பக். 248, விலை 160ரூ. சேர மண்ணை சேர்ந்தவர் சாணக்கியர்? சேர மண்டலத்தின் வரலாறு, இலக்கியம், ஆன்மிகப் பெருமைகளை காலவாரியாக தொகுத்து, வரலாற்றுக் களஞ்சியமாக மிகவும் சுவையுடன், இந்த நூல் வழங்குகிறது. ‘சேரலரே’ இன்றைய, ‘கேரளர்’ என்கிறார், நூலாசிரியர். இந்திய தேசமெங்கும் தமிழ் பரவியிருந்தது. இதற்கு ஆதாரமாக, இன்றைய பல பெயர்கள், தமிழிலிருந்து வந்தவையே. பேலாப்பூர் (வேளார்புரம்), பேலூர் (வேள்ஊர்), பெல்காம் (வேள்அகம்), பெல்லாளன் (வெள்ளான்) என்று ஆதாரத்துடன் கூறுகிறார். உலக வர்த்தகத்தில், […]

Read more

கெட்டவார்த்தை பேசுவோம்

கெட்டவார்த்தை பேசுவோம், பெருமாள் முருகன், கலப்பை பதிப்பகம். பீப் பாடல் துணிச்சல் வந்தது எப்படி? பெருமாள் முருகன் எழுதி, கலப்பை பதிப்பகம் வெளியிட்ட, கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலை சமீபத்தில் படித்தேன். ப.மணி என்ற பெயரில் அவர் எழுதி, உள்ளூர் சிற்றிதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். மனிதன் முதல் கால்நடை வரை பாலியல் புணர்ச்சி மற்றும் கிராமப்புற சொல்லாடல்களைப் பற்றியது இந்த நூல். கிராமங்களில் சாதாரணமாக பேசும் கெட்டவார்த்தைகளைக் கேட்டு யாரும் முகம் சுளிப்பதில்லை. அதனால் அந்த வார்த்தைகளை பேசுவதில் […]

Read more

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 208, விலை 90ரூ. தாகூருக்கு பாரதியை தெரியுமா? தமிழ்க் கவிதைகளிலும், கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. அய்யர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ. எனும் இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் பெ.சு.மணி. தாகூரின் கவிதைகள், உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும், அவற்றின் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளையும் தந்துள்ளதால் […]

Read more
1 150 151 152 153 154 240