சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம்

சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம், பேராசிரியர் மா.ரா. இளங்கோவன், அருள் பதிப்பகம், சென்னை, பக். 264, விலை 175ரூ. ராமையா, அன்பழகன் ஆன கதை எப்படி? கடந்த 1936 முதல் 1955 வரை, 20 ஆண்டுகள், தமிழ் முரசு, தமிழன் குரல், கிராமணி குலம் ஆகிய இதழ்களில் ம.பொ.சி. எழுதிய தலையங்கங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் மூலம் தமிழக வரலாற்றையும், சமுதாய எழுச்சியையும் அறிய முடிகிறது. எனினும் இதில் அவரது செங்கோல் இதழ் தலையங்கங்கள் இடம்பெறவில்லை. ஜாதி, மதம், கட்சி வேற்றுமைகளுக்கு இடமின்றி, […]

Read more

கருத்து களஞ்சியம்

கருத்து களஞ்சியம், பேரா. அசோகா சுப்பிரமணியன், செந்தில் பதிப்பகம், பக். 168, விலை 160ரூ. மாணவர்களுக்கு முதன்முதலில் சத்துணவு வழங்கிய தலைவர் அபிப்ராய வீக்கம் எனும் சிந்தனையில், நம் மனதில் உயர்வாக விரிந்துள்ள தலைவர்களை பற்றி எவரேனும் விமர்சனம் செய்தால், விமர்சனங்களை புறந்தள்ளுவதும், கூறியவரை மறப்பதும் நம் இயல்பு. அவ்வாறு மறக்கப்பட்டவர்களுள் ஒருவர், சுதந்திர பித்தர், பாராட்டப் பெற்ற சிந்தனை சிற்பி, ம. சிங்காரவேலர். ரவுலட் சட்டம் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சைமன் குழு எதிர்ப்பு, கொடிநாள் போராட்டம் போன்றவை. சென்னையில் பிரபலமடைய காரணமானவர் […]

Read more

முதல் தலைமுறை

முதல் தலைமுறை, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 110ரூ. நூலாசிரியர் வெ. இறையன்பு, டில்லியில் தன் பயிற்சிக் காலத்தில் இந்தி மொழியின் எதேச்சதிகாரத்தையும், பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டதையும் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக, குறைந்த எல்லையில் தேர்ச்சி பெற்றதை இந்திக்கார்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என சாடுகிறார். உச்சத்தில் இருந்த சோழ சாம்ராஜ்யம் பின்னடைவு கண்ட காலத்தில், கம்பன் வாழ்ந்ததால், சோழநாட்டு இளைஞர்களின் இதயத்தில் மறுபடியும் போர்க்குணத்தைப் பாய்ச்ச, யுத்த காண்டத்தில் மட்டும் 4000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை படைத்துள்ளார் என்பதும், ‘முதலில் […]

Read more

நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர்

நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர், அ.மகபூப் பாட்சா, மதுரை சோக்கோ அறக்கட்டளை வெளியீடு. அவசர நிலை பிரகடனத்துக்கு காரணமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பு நூறு வயதை கடந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் நீதிபதி கிருஷ்ணய்யரின் வாழ்க்கை வரலாற்றை கூறும், நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ற நூலை மீண்டும் படித்தேன். மதுரை சோக்கோ அறக்கட்டளை வெளியிட்டுள்ள நூலை அதன் நிர்வாக அறங்காவலர் அ.மகபூப் பாட்சா எழுதியுள்ளார். கிருஷ்ணய்யரின் அரசியல், சமூக பங்களிப்பை நூல் விவரிக்கிறது. 1915ல் பாலக்காடு […]

Read more

வெ. இறையன்பு எழுதிய வேர்வையின் வெகுமதி

வேர்வையின் வெகுமதி, வெ. இறையன்பு, குமுதம் பதிப்பகம். தவத்தை விட வேலையே முக்தி தரும் உழைப்பை போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும், வெ. இறையன்பு எழுதிய வேர்வையின் வெகுமதி என்ற நூலை அண்மையில் படித்தேன். குமுதம் பப்ளிகேஷன், நூலை வெளியிட்டுள்ளது. உழைப்பின் பெருமையை, மகத்துவத்தை நூலின் ஒவ்வொரு பக்கமும் போற்றுகிறது. புராணங்கள், வரலாறு, தற்கால நிகழ்வுகள் மூலம், உழைப்பின் முக்கியத்துவத்தை நூலாசிரியர் விளக்குகிறார். ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் வேலை செய்தால் அவர் வேலையின் விசுவாசி. அவரே 12 மணி நேரம் வேலை […]

Read more

தீப்பற்றிய பாதங்கள்

தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர்.நாகராஜ், தமிழாக்கம்-ராமாநுஜம், புலம், சென்னை, விலை 350ரூ. தாழ்த்தப்பட்ட மக்கள் கையேந்தவுமில்லை; அங்கீரம் கேட்கவுமில்லை. கன்னட எழுத்தாளர் டி.ஆர்.நாகாஜன் எழுதிய தீப்பற்றிய பாதங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின் ராமானுஜம் என்பவரால் தமிழில் மொழிபெயர்த்து புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. இரு மொழிகளைக் கடந்து, தமிழில் வந்தாலும், மண்ணின் மனம் மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இந்நூலுக்கு ஆசிஷ் நந்தி முன்னுரை எழுதியுள்ளது, கூடுதல் பலமாக உள்ளது. பூர்வ குடிகளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என, தனியான […]

Read more

கொங்கு வேளாளர் வரலாறு

கொங்குவேளாளர் வரலாறு, முதல்பாகம், புலவர் செ. ராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு 638011, பக். 330, விலை 350ரூ. மனைமேல் பணம் அளிப்பது ஏன்? கொங்கு நாட்டைப் பற்றியும், அதன் காணியாளர்களான, கொங்கு வேளாளர்களின் நாகரிக பண்பாட்டு பெருமைகள், வரலாற்று கீர்த்திகள், கொங்கு வேளாளர்களின் முக்கிய குலங்கள், கூட்டங்கள், குடிகள் மற்றும் அதன் உட்பிரிவுகள் ஆகியவை பற்றியும், மிக விரிவாகவும், துல்லியமாகவும் ஆய்வு செய்து தந்துள்ளார் நூலாசிரியர். தொல்பொருள் ஆய்வு, இலக்கியத் திறனாய்வு, தனிப்பாடல்கள், நாட்டுப்பாடல்கள், காணிப்பாடல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் […]

Read more

லீகல் பிராட்டர்னிட்டி எம்ப்ரேஸ்டு மீடு

லீகல் பிராட்டர்னிட்டி எம்ப்ரேஸ்டு மீடு (ஆங்கிலம்), நீதியரசர் டி.எஸ். அருணாச்சலம், சட்ட உதவி ஆணையத்திற்கு நன்கொடையாக வெளியீடு, பக். 232. கீழமை நீதிமன்றம் தான் வழக்கறிஞர் தொழிலுக்கு அஸ்திவாரம் நீதியரசர் டி.எஸ். அருணாச்சலத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல், விற்பனைக்கல்ல; எனினும் அச்சுக் கூலியாக 100ரூபாயை சட்ட உதவி ஆணையத்திற்கு நன்கொடையாக அளித்து பெற்றுக் கொள்ளலாம் என்ற குறிப்போடு இந்நூலை வழக்கறிஞர் சமூகத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அர்ப்பணித்துள்ளார். கடந்த 1948 முதல் 17/12/1998ல் திருவண்ணாமலையில் மகான் யோகிராம் சரத்குமார், தம்மை அடியவராக ஆட்கொண்டவது வரை, 50 ஆண்டுக்கால […]

Read more

இராமன் கதை

இராமன் கதை, முனைவர் ச. லோகாம்பாள், அருள் பதிப்பகம், பக், 576, விலை 430ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-265-4.html ராமாயணத்தை பல கோணங்களிலும் நுணுக்கமாக ஆராய்ந்தெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ராமாயண பாத்திரங்கள் ஒவ்வொன்றையும், கதைப்போக்குடன் தன் ஆய்வுக் கருத்துக்களை நிறுவுகிறார் நூலாசிரியர். ராமபிரானின் குணநலன்களை அடுக்கிக்கூறும் நூலாசிரியர், ராமன் மாபெரும் மன்னன் என்ற இறுமாப்பின் உருவமாகவே காட்சியளிக்கிறான்‘ என்றும், கோபத்தால் பொறுமை இழந்து அரக்கர் முதலானோரைக் கொன்று குவித்த கொடியவன் ராமன் என்றும் கூறும் […]

Read more

காகிதப் படகில் சாகசப் பயணம்

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. கடமையை மறந்த கொள்கையால் என்ன புண்ணியம்? தமிழ் பத்திரிகை உலகில் நடக்கும் சம்பவங்களை விவரிக்கும் புத்தகங்கள். தமிழில் வெகு குறைவாகவே வெளிவந்துள்ளன. அந்த புத்தகங்களும், 20 ஆண்டுகளுக்கு முன் வந்தவை. அந்த குறையை போக்கும் வகையில் வெளிவந்துள்ளது, இந்த நூல். கடந்த 25 ஆண்டுகளாக, பல்வேறு தமிழ் வார இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் பணி புரிந்த, கருணாகரன் தமது அனுபவத்தை, 18 கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார். ஒரு […]

Read more
1 178 179 180 181 182 240