உணவு யுத்தம்

உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 240ரூ. நமது உடல் நலக் குறைபாட்டுக்கு, மாறிப்போன முறையற்ற உணவு முறையே காரணம். உணவின் பெயரால் நாம் நாள்தோறும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி 40 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபலமாகி வரும் துரித உணவகங்கள் உடல நலத்திற்கு பிராதன கேடு விளைவிக்கும். எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம். மரண விலாஸ்களாக மாறிவிட்ட சாலையோர மோட்டல்கள், ஆயுளைக் குறைக்கும் ஆயில் (எண்ணெய்) உணவுகள், வயிற்றைப் புரட்டிப் போடும் புரோட்டாக்கள், நகரம் […]

Read more

ஸ்ரீ பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

ஸ்ரீ பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள், புலவர் அனு. வெண்ணிலா, திவ்யா பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 302, விலை 220ரூ. மனதை வெட்ட வெளியாக்கு நல்லதெல்லாம் நாடி வரும். தேவைகளைத் தேடி ஓடும் மனிதர்களுக்கு, வியப்பாகத் தோன்றுவதை நிகழ்த்திக் காட்டி, அவர்களால் வணங்கப்பெறும் சித்தர்கள், காலந்தோறும் அவதரித்துக் கொண்டே இருப்பர் என்று சொல்லப்படுவதுண்டு. அவ்வாறான சித்தர்களின் வரிசையில் பூண்டிச்சித்தரின் வாழ்க்கையை பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள் என, வாழ்வியல் சித்திரமாக படைத்துள்ளார் நூலாசிரியர் அனு வெண்ணிலா. முதல் பாகத்தில் 52 தலைப்புகளிலும், இரண்டாம் பாகத்தில் […]

Read more

மேனேஜரியல் எபிலிட்டி ஆப் ஸ்ரீ ராமானுஜா இன்ரெட்ரோஸ்பெக்ஷன்

மேனேஜரியல் எபிலிட்டி ஆப் ஸ்ரீ ராமானுஜா இன்ரெட்ரோஸ்பெக்ஷன், ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ வெளியிடு, திருச்சி, பக். 257, விலை 300ரூ. காவிரி வெள்ளத்தை தடுக்க பொறியியலாளர்களை நியமித்த ராமானுஜர் கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், வைணவ நெறியின் கலங்கரை விளக்காக திகழ்ந்தவர். சுவாமி விவேகானந்தர், ராமானுஜரை, சேவைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மகான் என போற்றுகிறார். அரிய நெறிகளை பரப்ப, ராமானுஜர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இஸ்லாமிய ஆட்சி, இந்தியாவில் வந்து காலூன்றிய காலகட்டத்தில் பாமர மக்கள் மதமாற்றத்தில் சிக்கி விடாமல் […]

Read more

அந்நிய நிலத்தின் பெண்

அந்நிய நிலத்தின் பெண், மனுஷ்யபுத்திரன், உயிர்மை பதிப்பகம், சென்னை. சர்ச்சையை ஏற்படுத்தும் அந்நிய நிலத்தின் பெண் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள, அந்நிய நிலத்தின் பெண் என்ற கவிதை நூலைப் படித்தேன். இந்த நூல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். நம் சமூகத்தின் ஆண், பெண் விருப்பங்கள், அவர்களின் உறவுகள் குறித்து, இக்கவிதை நூல் விவரிக்கிறது. அன்றாட வாழ்வீல் நாம் பயன்படுத்திய பயன்படுத்தும் பல சொற்களை கவிதையில் பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர். இந்த சொற்களை பயன்படுத்தக்கூடாத கெட்ட சொற்கள் என, […]

Read more

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி, மு. ஸ்ரீனிவாஸன், சேகர் பதிப்பகம், பக். 440, விலை 350ரூ. தீவிரவாதம் மிதவாதம் 1950களிலிருந்து பல்வேறு இதழ்கில் எழுதிய படைப்புகளோடு புதிதாய் எழுதிய கட்டுரைகளையும் திரட்டி வெளிவருகிறது மு. ஸ்ரீனிவாசஸனின் கலை இலக்கிய வரலாறு மஞ்சரி. இதில் வரலாறு, கலை சார்ந்த அறிஞர்கள் பற்றிய குறிப்புகளும், கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளுமாக பெருமளவில் இடம் பெற்றிருக்கின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திராத, அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமைகள் பற்றிய அருந்தொகுப்பாக உள்ளது இத்தொகுப்பு நூல். மொழிபெயர்ப்பாளர் பெ.நா. அப்புசுவாமியின் […]

Read more

வெண்முரசு

வெண்முரசு, ஜெயமோகன், நற்றிணை பதிப்பகம். ‘மகாபாரதத்தில் பெண்களை முதன்மைப்படுத்தும் வெண்முரசு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு என்ற நாவலின் முதல் பகுதியை, சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டுள்ளது. மகாபாரதத்தை புதிய பார்வையில், இந்நாவல் பார்க்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு, நாள்தோறும் அவரது இணைய பக்கத்தில் வெண்முரசு வெளியிடப்படும் என, அறிவித்து ஜெயமோகன் எழுதி வருகிறார். வீட்டில் நம் பெற்றோர், தாத்தா, பாட்டிகள் சென்னா கதைகள் மூலமும், ராஜாஜியின் வியாசர் விருந்து, பாரதியின் பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட பல நூல்கள் மலமும், […]

Read more

கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள்

கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள், மு. முருகேஷ், அகநி பதிப்பகம், பக். 104, விலை 50ரூ. போதையும் இல்லை. போதனைகளும் இல்லை. தமிழ் எழுத்துலகில், இடதுசாரி இலக்கிய கருத்தியல், பரவலானபோது, அறியப்பட்டவர், கவிஞர் மு. முருகேஷ். கடந்த 1990களுக்குப் பின், ஹைக்கூ கவிதைகள், தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதிலும் தனித்து அடையாளம் காணப்பட்டார். இவரின், பத்தாவது கவிதை தொகுதி, கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள். கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற இடதுசாரி கருத்தியலை, கவிஞர் உள்வாங்கி இருப்பதால், வாசகனை மிரட்டாத வகையில், அவரது கவிதைகள், நம் […]

Read more

இலங்கை இந்திய மானிடவியல்

இலங்கை இந்திய மானிடவியல், சமயம் சமூகம் பற்றிய ஆய்வுகள், பேரா. கலாநிதி என். சண்முகலிங்கன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 222, விலை 175ரூ. சமூக பழக்க வழக்கம், சமய வழிபாடு போன்றவற்றை உன்னிப்பாக கவனித்து, ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். இதில் 14 கட்டுரைகள் உள்ளன. சமயம் தொடர்பாக, எட்டுக் கட்டுரைகளும், சமூகம் தொடர்பாக ஆறு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இலங்கயில் தமிழர்களின் வழிபாட்டு இடங்கள், வழிபாடுகள் பற்றி சண்முகலிங்கனின் கட்டுரைகள் ஆழமாகவும் அழுத்தமாகவும் உள்ளன. கட்டுரைகள் ஒன்றுக்கு ஒன்று […]

Read more

ஜெயகாந்தன் கதைகள்

ஜெயகாந்தன் கதைகள்,தொகுப்பாசிரியர்-என். ராம், வனிதா ராம், விகடன் பிரசுரம், பக். 367, விலை 350ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-260-9.html தமிழ் சிறுகதையுலகில் தனிப்பாய்ச்சலை நிகழ்த்தியவர் ஜெயகாந்தன். அவரது கதைகள் வெளியான காலத்தில், ஒரு பக்கம் பலத்த சர்ச்சைகள் உருவாகின, மறுபக்கம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வியந்து பாராட்டினர். பழமைவாதத்தின் மீது விழுந்த சவுக்கடி என்றே அந்த கதைகளை கூறவேண்டும். இந்தியில், பிரேம்சந்த் சிறுகதைகள் எழுதிய போது, இதே எதிர்வினைகளைத்தான் சந்தித்தார். முற்போக்கு எண்ணம் கொண்ட சிறுகதைகள் விவாதிக்கப்படுவதும், கடுமையான எதிர்வினைகளை […]

Read more

இதழுலகில் திரு.வி.க.

இதழுலகில் திரு.வி.க., மா.ரா. இளங்கோவன், அமுதா, பக். 182, விலை 120ரூ. தொழிலாளர்களே! கள்ளத் தலைவர்களே நம்பாதேயுங்கள்! காவி உடுத்தாத துறவி, துறவு பூணாத பிறவி, பட்டினத்தாரா? தாயுமானாரா? வள்ளலாரா? தமக்காக வாழாமல், பிறருக்காகவே தொண்டு செய்ய வாழ்ந்த புதுமைத் துறவி திரு.வி.க., புவி அறியா புதிய வரலாறு (பக். 14) என்ற அறிமுகத்துடன், தமிழ்த் தென்றல், தமிழ் முனிவர், சாது முதலியார்என, திரு.வி.க. அறிமுகம் செய்யப்படும் இந்த நூல், அவரது எழுத்து ஓவியங்களை நமக்கு விருந்து ஆக்குகின்றன. பேச்சிலும், எழுத்திலும், தமிழினம் தரம் […]

Read more
1 176 177 178 179 180 240