காந்தியச் சுவடுகள்

காந்தியச் சுவடுகள், டாக்டர் அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், விலை 135ரூ. மகாத்மா காந்தி எனும் மாமனிதர் இளம் தலைமுறையினருக்கு விட்டுச்சென்ற பாடங்கள் அடளவிட முடியாதவை. இந்திய வரலாற்றில் ஆழமாக பதிந்திருக்கும் அவரது வாழ்க்கைச் சுவடுகளை கட்டுரைகளாக தொகுத்து நூலாக்கப்படுகிறது. அத்துடன் காந்திய வழியில் தங்கள் வாழ்க்கையை அமைத்த தலைவர்கள் மற்றும் நாட்டை கட்டமைத்த மகான்கள் பலரை பற்றிய கட்டுரைகளையும் கொண்டிருக்கும் இந்த நூல், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தேசிய சிந்தனையாளர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நன்றி:தினத்தந்தி, 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

கார்ல் மார்க்ஸ் உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை

கார்ல் மார்க்ஸ் உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை, என்.ராமகிருஷ்ணன், மதுரை புத்தக மையம், விலை 15ரூ. உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதைமார்க்ஸியத் தலைவர்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை எளிய முறையில் எழுதிய அனுபவம் கொண்ட என்.ராமகிருஷ்ணன், ‘கார்ல் மார்க்ஸ் – உலகிற்குப் புத்தொளி தந்த மாமோதை’ என்ற குறுநாவலை எழுதியிருக்கிறார். இந்தக் குறுநூல் மார்க்ஸின் வாழ்க்கையைவிடவும் அவருடைய கொள்கைகளை, அடிப்படைகளைச் சுருக்கமான வகையில் தருகிறது. அறிமுக நூல் என்ற வகையில் இதுவும் குறிப்பிடத்தக்கதே. – ஆதி வள்ளியப்பன், நன்றி: தி இந்து, 5/5/2018. இந்தப் […]

Read more

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும், தா. பாண்டியன், என்.சி.பி.எச். வெளியீடு, விலை 140ரூ. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான தா.பாண்டியன், ‘கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் மார்க்ஸின் வாழ்க்கையைக் கூறும் அதே நேரம், இந்தியா குறித்து மார்க்ஸ் கூறிய முக்கிய பகுதிகளைப் பற்றியும் விவரிக்கிறது. இந்தியாவின் வறுமை குறித்து ஆராய்ந்த தாதாபாய் நௌரோஜியும் மார்க்ஸும் பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தில் அடுத்தடுத்த அறைகளில் ஒரே பிரச்சினையின் வெவ்வேறு பரிமாணங்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு ஆராய்ந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. சோஷலிச […]

Read more

மார்க்ஸ் பிறந்தார்

மார்க்ஸ் பிறந்தார், ஹென்றி வோல்கவ், தமிழில் நா.தர்மராஜன், அலைகள் வெளியீடு, விலை 160ரூ ரஷ்ய எழுத்தாளர் ஹென்றி வோல்கவ் எழுதிய ‘பர்த் ஆஃப் அ ஜீனியஸ்’ புகழ்பெற்ற நூலை ‘மார்க்ஸ் பிறந்தார்’ என்ற கவித்துவத் தலைப்புடன் பேராசிரியர் நா.தர்மராஜன் மொழிபெயர்த்ததன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. பேராசிரியர் ரஷ்யாவில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் வெளியான நூல் இது. உலகத் தத்துவச் சிந்தனைகளுக்குப் புதிய கண்களைத் தந்த மார்க்ஸின் ஆளுமையும் அவருடைய உலகக் கண்ணோட்டமும் எப்படி வளர்ந்தன என்பதை ஆழமாகவும் விரிவாகவும் இந்த நூல் அலசியிருக்கிறது. […]

Read more

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ், தமிழில் ச.சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், விலை 70ரூ. மார்க்ஸ் பிறந்த 200வது ஆண்டை முன்னிட்டு, தமிழில் அவருடைய வாழ்க்கையை மையப்படுத்திய சில புத்தகங்கள் வெளியாகியுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி நண்பர் வில்ஹெம் லீப்னெஹ்ட், மார்க்ஸின் மருமகன் பால் லஃபார்க் ஆகிய இருவரும் எழுதியது “நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்” என்ற நூலாக வெளியாகியுள்ளது. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி லீப்னெஹ்ட்டின் நினைவலைகள் புதியதொரு சித்திரத்தைத் தருகின்றன. மார்க்ஸ் எனும் மனிதரை அவை மையம்கொண்டுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைக் கதை போன்ற […]

Read more

காவிரி ஒப்பந்தம்: புதைந்த உண்மைகள்

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள், சி.பி.சரவணன், வி கேன் புக்ஸ், விலை 170ரூ. தமிழகத்தில் கோடை வெப்பத்தை விட அனலெனத் தகிக்கும் பிரச்சினை ஒன்று உண்டென்றால் அது காவிரி தொடர்பானதே. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காட்டிவரும் மெத்தனமும், உரிமைகளைப் போராடிப் பெற வேண்டிய தமிழக அரசின் மௌனமான இருப்பும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பெரும் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. காவிரி ஒப்பந்தம் தொடர்பாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப் பாதுகாப்புகள் குறித்து மிக விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். நன்றி: தி இந்து, 12/5/2018. […]

Read more

வெள்ளம்

  வெள்ளம், மா.கமலவேலன், தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 65ரூ. நாடகம் என்றாலே தொலைக்காட்சி தொடர்கள்தான் என்கிற எண்ணம் மேலோங்கியிருக்கும் சூழலில், பாரம்பரியமிக்க தமிழ் நாடகக் கலையை இன்னமும் தக்க வைத்துக்கொண்டிருப்பவை சில நாடகக் குழுக்களும், வானொலி நிலையங்களுமே. மதுரை வானொலியில் ஒளிபரப்பான வெள்ளம், கவிதை எனும் இரு நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டே நாடகத்தை வேகமாக நகர்த்திப்போகும் வசனங்கள் நாடகாசிரியரின் எழுத்தாற்றலுக்கு நல்ல சான்று. நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?, பிரியசகி, மேன்மை வெளியீடு, விலை 120ரூ. ‘என்னுடைய அனுபவங்களையும், நான் கண்ட, என்னைப் பாதித்த பிறரது அனுபவங்களையும் சிறுகதைகளாக்கியுள்ளேன்’ என்று நூலாசிரியர் சொல்வதை நிரூபிக்கும் வண்ணமாக எழுதப்பட்ட 13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. நூலாசிரியர் உளவியல் சார்ந்த கல்வியாளர் என்பதால் மனவளர்ச்சி குன்றுதல், கவனச் சிதறல் குறைபாடு, ஆட்டிசம் உள்ளிட்ட இளம்பிராயத்து குழந்தைகளுக்கான பிரச்சினைகளைச் சமூக அக்கறையோடு கையாண்டுள்ளார். சில கதைகளின் முடிவிலிருக்கும் தத்துவம் போன்ற வரிகளைத் தவிர்த்திருக்கலாம். நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

ஈர்ப்பின் பெருமலர்

ஈர்ப்பின் பெருமலர், எஸ்.சண்முகம், போதிவனம், விலை 120ரூ. வாழ்வின் நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து சற்றே விலகிச் செல்லும் அகச் சொல்லாடலில் முகிழ்த்த கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு. எதையும் முழுமையாக சொல்லித் தீராத சொற்களிலிருந்து உயிர்க்கும் இக்கவிதைகளில் வெளிப்படும் இருண்மை மொழி வாசகனையும் அகவெழுச்சி கொள்ள வைக்கிறது. ‘காட்சியில் புதைந்திருக்கும் எல்லையின்மையோ மின்னி மின்னி அழைக்கிறது உடன் யாருமற்றிருக்கும் அத்தனியனை -எனும் வரிகள், நம்மையும் உடன் அழைத்துக்கொள்ளும் கவி வரிகளாக உள்ளன. நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

போப்பின் கழிப்பறை

போப்பின் கழிப்பறை, எஸ்.இளங்கோ, அகரம் வெளியீடு, விலை 80ரூ. நல்ல திரைப்பட ரசனையை மேம்படுத்தும் நோக்கில் ‘புதுகைத் திரைப்பட சங்கம்’ அமைப்பின் மூலமாக உலகத் திரைப்படங்களின் உள்ளடக்கமாகத் துலங்கிய உள்ளம் கவர்ந்த 15 திரைக்கதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். ஒரு திரைப்படத்தின் உயிர்நாடி கதையே என்பதையும், அதைக் காட்சி வடிவத்தில் சொல்ல வேண்டிய நுட்பமான பார்வை குறித்தும் பகிர்ந்துள்ளார். கதைகளை நீட்டி முழக்காமல் சுருக்கமாக அதே நேரத்தில் சுவை குன்றாமல் சொல்லியவிதம் ரசிக்க வைக்கிறது. நன்றி: தி இந்து, 19/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more
1 9 10 11 12 13 36