உஷாதீபன் குறுநாவல்கள்

உஷாதீபன் குறுநாவல்கள், நிவேதிதா பதிப்பகம், விலை 250ரூ. சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதைகளை எழுதுவதில் தேர்ந்த எழுத்தாளர் உஷா தீபனின் 4 குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பிது. 9 சிறுகதை நூல்கள், 3 குறுநாவல்கள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பென தொடர்சசியாக எழுதி வருபவர் இவர். இந்த குறுநாவல்களில் குடும்ப உறவுகளில் எழும் சிக்கல்களையும், அதனால் உண்டாகும் மனக் கசப்புகளையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். உறவு சொல்ல ஒருவன், என்னவளே, அடி என்னவளே… ஆனந்தக் கண்ணீர், எல்லாம் உனக்காக என திரைப்பட பாணியில் வைக்கப்பட்ட […]

Read more

மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள்

மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள், பேரா.சோ.மோகனா, அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. பெண்களின் பங்களிப்பு வரலாற்றில் காலங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. ஆனால், இன்றைக்குப் பல துறைகளிலும் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், புற்றுநோய் தாக்குதலிலிருந்து உத்வேகத்துடன் மீண்டெழுந்த பேராசிரியர் மோகனா, இதுவரை பரவலான கவனிப்பைப் பெறாமல் போன 10 பெண் விஞ்ஞானிகளைப் பற்றி இந்நூலின் வழியே அறியத்தருகிறார். பழங்காலப் பெண் கணிதவியலாளர்கள் தொடங்கி, மேரி ஆன்னிங், சாவித்திரிபாய் புலே, கமலா சோகோனி உள்ளிட்ட ஆளுமைகளின் செயலூக்கம், வாசிக்கையில் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. […]

Read more

வலவன்

வலவன், சுதாகர் கஸ்தூரி, கிழக்கு பதிப்பகம், விலை 75ரூ. ஓட்டுநர்களின் வரலாறு வாடகை கார் ஓட்டுநர்களின் உலகமே தனி. அனைவருக்கும் ஒரே பின்புலம் கிடையாது. தாங்கள் செல்லும் ஊர்களையும் வழிகளையும் மட்டும் அல்லாமல் தங்களுடைய வாடிக்கையாளர்களின் குணநலன்களையும் நினைவில் பதிய வைத்துக்கொள்ளும் அலாதியான பண்புள்ளவர்கள். கீதோபதேச பார்த்தசாரதியைப் போலவே நியமம், கருமம் பற்றிப் பேசுகிறார் மஞ்சித் சிங் என்ற ஓட்டுநர். சோட்டானிக்கரை பகவதியின் பெருமையைப் போற்றுகிறார் பஷீர். வளரிளம் பருவப் பெண்ணின் பொய்க் குற்றச்சாட்டில் மனம் ஒடிந்து தற்கொலை செய்துகொள்கிறார் ஆதிமூலம். குடும்ப மரபைக் […]

Read more

பெண்களின் அகவுலகம்

பெண்களின் அகவுலகம், ஆர். சூடாமணி, சாகித்ய அகாடமி, விலை 50ரூ. தனித்துவமான மொழி நடையைக் கொண்டிருந்த எழுத்தாளுமை ஆர். சூடாமணி. 1954 முதல் 2004 வரை அரை நூற்றாண்டு காலம் படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கியவர். பெண்களின் அகவுலகத்தைப் பற்றிப் பேசியதில் முதன்மையானவரான இவரின் கதைகள், மானுட மேன்மையோடு உளவியல் நுட்பங்களையும் உள்வாங்கி எழுதப்பட்டவை. 7 நாவல்கள், 8 குறுநாவல்கள், 19 சிறுகதைத் தொகுப்புகள் என தனது பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கும் எழுத்தாளர். ஆர். சூடாமணியின் படைப்பாளுமையைப் பற்றி கச்சிதமாக எழுதியிருக்கிறார் பேராசிரியர் கே. […]

Read more

கொடுமைகள் தாமே அழிவதில்லை

கொடுமைகள் தாமே அழிவதில்லை, செ. கணேசலிங்கம், குமரன் புத்தக இல்லம், விலை 300ரூ. தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் செ. கணேசலிங்கன் தளராத உழைப்புக்குச் சொந்தக்காரர். ஈழத் தமிழ் எழுத்தாளரான அவரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு 1974-ல் வெளியானது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2015?ல் இந்தத் தொகுப்பு மீளச்சு கண்டது. ழுபதுகளில் இலங்கையில் நிலவிய சமூக, பொருளாதாரச் சூழல்களைச் சித்தரிக்கும் 17 கதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்பின் பல கதைகள் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தி […]

Read more

பொன்னியின் செல்வன் ஓவியங்கள்

பொன்னியின் செல்வன் ஓவியங்கள், ஓவியர் சங்கர் லீ, வெளியீடு, மு.ஆ. சங்கரலிங்கம், விலை 450ரூ. ‘பொன்னியின் செல்வன்’ நாவலே ஓர் எழுத்துச் சித்திரம்தான். வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியார், நந்தினி, பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி என அக்கதை மாந்தர்கள் அனைவருக்கும் வாசகர்களும் தங்கள் மனதில் உருவம் கொடுத்திருப்பார்கள். அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ கதாமாந்தர்களை ஓவியங்களாகப் படைத்துள்ளார் ஓவியர் சங்கர் லீ. அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டினால், நந்தினியையும், வந்தியத்தேவனையும் அலங்காரமாக உருவாக்கினால் எப்படி இருக்கும். அந்த அனுபவத்தைப் பெற வேண்டுமானால் ஓவியர் சங்கர் லீ -யின் […]

Read more

அறிவியல் பயணம் 2016

அறிவியல் பயணம் 2016, பேரா.கே. ராஜு, மதுரை திருமாறன் வெளியீட்டகம், விலை 120ரூ. அறிவியல் பார்வையுடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமென்கிற ஆவலில் விளைந்த 50 அறிவியல் குறுங்கட்டுரைகளின் தொகுப்பு. மாறிவரும் மனித வாழக்கைக்கேற்ப அறிவியலின் அற்புதங்களை எவ்விதம் நாம் கைக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய கட்டுரைகள் இவை. ‘செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்…?’, ‘சிம்பன்ஸிகளுக்கு சமைக்கத் தெரியுமா?’ ‘தண்ணீர் பிடிக்க ஏடிஎம் மிஷின்’, ‘சிறுநீரிலிருந்து மின்சாரம்’ என ஒவ்வொரு கட்டுரையும் நம்மை தலைப்பிலேயே கவனிக்க வைக்கின்றன. நன்றி: தி இந்து, 24/6/2017.

Read more

வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஆயிஷா இரா. நடராசன், பாரதி புத்தகாலயம், விலை 60ரூ. சிறுவர்களுக்கான படைப்புகளைத் தொடர்ந்து எளிய மொழியில் தரும் ஆயிஷா இரா. நடராசனின் எழுத்தில் வெளிவந்துள்ள அறிவியல் நெடுங்கதை இது. நம் தேசத்தை முன்பு ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நம்மையாளும் வெறியோடு வருகிறார்கள். அவ்வாறு நுழையும் அந்நிய சக்திகளை, அறிவியல் ஆற்றலின் சக்தியோடு குழந்தைகள் ஒன்றுசேர்ந்து எதிர்க்கும் போராட்டமே இந்தக் கதை. குழந்தைகளின் அறிவியல் சிந்தனைக்கும் தேசபக்திக்கும் ஒரு ‘சலாம்’ போட வைத்துள்ளார் நூலாசிரியர். நன்றி: தி […]

Read more

மன்னார்குடி இறைபணி வரலாறு

மன்னார்குடி இறைபணி வரலாறு, தந்தை எம்.எல். சார்லஸ், புனித யோசேப்பு ஆலயம் வெளியீடு. பல்வேறு மதங்களும் ஒன்றுக்கொன்று நட்புறவுடன் தழைத்து வளர்ந்திருக்கும் கலாச்சாரத்தைக் கொண்ட ஊர் மன்னார்குடி கொண்டிருப்பது பலருக்கும் தெரியாது. மன்னார்குடிக்கு கிறிஸ்தவம் வந்து 350 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல் மன்னார்குடி பாமணி ஆற்றங்கரையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம் கட்டப்பட்டு 175 ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் சிறப்புகளை வரலாறாக, தனது சீரிய முயற்சியின் பலனாக, எல்லோர் முன்னும் வைத்திருக்கிறார் பங்குத் தந்தை எம்.எல். சார்லஸ். நன்றி: தி இந்து, 24/6/2017.

Read more

திரைப்பட ரசனையின் வரலாறு

திரைப்பட ரசனையின் வரலாறு, இண்டியாஸ் ஃபிலிம் சொசைட்டி மூவ்மெண்ட், த ஜர்னி அண்ட் இட்ஸ் இம்பாக்ட், வி.கெ.செரியன், சேஜ் பப்ளிகேஷன்ஸ், விலை 895ரூ. திரைப்படங்கள் குறித்த ரசனையை மக்களிடையே பரப்ப முனைந்த திரைப்படக் கழகங்களே இந்தியாவில் மாற்றுத் திரைப்பட இயக்கம் தோன்றுவதற்கான அடித்தளமாக இருந்தன. பாம்பே(1940), கல்கத்தா (1947), மதராஸ்(1957), திருவனந்தபுரம்(1965) ஆகிய முன்னோடி திரைப்படக் கழகங்கள் உலகத்தின் சிறந்த திரைப்படங்களை இந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு, சத்யஜித் ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற உலகம் போற்றிய திரைப்பட இயக்குநர்களையும் உருவாக்கித் தந்தன. இந்தியாவில் சர்வதேச […]

Read more
1 18 19 20 21 22 36