இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், சி.மஞ்சுளா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 150ரூ. தமிழகப் பழங்குடிகளில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்டவர்கள் இருளர்கள். இரண்டாவது நிலையில் இருந்தாலும் இவர்களுடைய எண்ணிக்கை என்னவோ ஒன்றரை லட்சம்தான். தமிழகத்தில் அருகிவரும் ஆறு பழங்குடிகளில் ஓர் இனமாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ‘இருளர்கள் என்றால் பாம்பு பிடிப்பவர்கள்’ என்பதுதான் பொதுச் சித்திரம். அதேநேரம் தாவரங்களை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்திவரும் இவர்களது மரபு அறிவைப் பற்றி ஆராய்ச்சி அடிப்படையில் முனைவர் சி. மஞ்சுளா ‘இருளர்களும் இயற்கையும்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதுபோன்ற […]

Read more

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம்

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம், ம.சுசித்ரா, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 150ரூ. இந்து தமிழ்’ நாளிதழின் ‘வெற்றிக் கொடி’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. மொழி, தர்க்கம் & கணிதம், காட்சி, உடல் & விளையாட்டு, இசை, மனிதத் தொடர்பு, தன்னிலை அறிதல், இயற்கை, இருத்தல்சார்ந்தவை என ஒன்பது திறன்கள் குறித்து எழுதப்பட்ட சிறப்பான கட்டுரைகள் இவை. ஒவ்வொரு மாணவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். கல்விக்கு வழிகாட்டி நன்றி: தி இந்து, 17/11/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி, பழ.அதியமான், பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், விலை 600ரூ. காலத்தின் கருவூலம் உ.வே.சாமிநாதையரின் சமகாலப் புலவர்கள், அடுத்த தலைமுறைப் புலவர்கள், உயர் அதிகாரிகள், ஆதினக் கர்த்தர்கள் போன்றோர் அவருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இப்புத்தகம். பிறருக்கு, சாமிநாதையர் எழுதிய கடிதங்கள் இதில் குறைவு. எனினும், தனக்குக் கடிதம் எழுதியவர்களுக்குப் பதிலாக அவர் எழுதிய சில குறிப்புகள் உண்டு. ஜி.யு.போப், ஜுலியன் வின்சோன், பொன்னம்பலம் குமாரசாமி உள்ளிட்ட சிலர் தவிர, மற்றவர் அனைவரும் தமிழிலேயே கடிதங்களை எழுதியுள்ளனர். […]

Read more

பனியில் ஒரு பிரளயம்

பனியில் ஒரு பிரளயம், தமிழில் எஸ். விஜயன், ஜம்போ காமிக்ஸ் சன்ஷைன் லைப்ரரி வெளியீடு, விலை 200ரூ. மீண்டும் தமிழுக்கு வரும் ஜேம்ஸ் பாண்ட் உள்ளங்கவர் உளவாளியாம் ஜேம்ஸ் பாண்ட், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்; முற்றிலும் புதிய வடிவில். வண்ணச் சித்திரங்கள் கொண்ட இந்த காமிக்ஸ் கதை, ஷான் கானரி காலத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போலன்றி, டேனியல் க்ரெய்க் பாணி படங்களைப் போல் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டது. அதேசமயம், அதிக விவரணைகள், வசனங்கள் இல்லாமல் காட்சிகள் […]

Read more

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன், சி.சரவண கார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ. ஏவாளான காந்தியின் கதை கதை வடிவில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்த மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனையும் மோதிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்குப் புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றைக் கூர்ப்படுத்துகின்றன. இவ்விளையாட்டில் வெற்றிபெற்றிருக்கிறது ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல். இந்நாவல் காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனையைக் களமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் […]

Read more

வான் மண் பெண்

வான் மண் பெண், ந.வினோத்குமார், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 160ரூ. சூழலியல் பெண்களின் கதை இயற்கையைப் பாதுகாக்க வந்த 50 பெண்களைப் பற்றிய ஆவணம் இந்நூல். உலகின் முன்னோடி சூழல் போராட்டங்களில் தொடங்கி தற்போது நம்மிடையே செயல்பட்டுவருபவர்கள் வரை பல்வேறு தரப்புப் பெண்களைக் குறித்துப் பேசுகிறது. சூழலியல் பெண்ணியவாதிகள் குறித்துப் பேசும் இந்நூல், தமிழில் முதல் முயற்சி. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தி இந்து, 13/10/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

நின்று துடித்த இதயம்

நின்று துடித்த இதயம், பெண்ணும் இருதய அறுவை சிகிச்சையும், அகிலா, ஐரிஸ் பதிப்பகம், விலை 100ரூ. மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்ட அனுபவம் இதய நோய் அறுவை சிகிச்சைக்குள்ளானது குறித்த தனது அனுபவங்களை ஒருவித சுயஎள்ளலுடன் எழுதியிருக்கிறார் கவிஞரும் சிறுகதையாளருமான அகிலா. இதய நோய் என்றவுடன் அய்யோ என்று பயந்துவிடாமல், அதை எப்படி சாதுர்யமாக எதிர்கொண்டார் என்பதை ‘நின்று துடித்த இதயம்’ நூலில் பதிவு செய்துள்ளார். பெண்ணுக்கே உரித்தான மனத்துணிவுடன் தனது உடல், மனப் பிரச்சினைகளை எதிர்கொண்டது குறித்து இயல்பான மொழியில் எழுதியுள்ளார். பைபாஸ் […]

Read more

குறள் இனிது

குறள் இனிது, சோமவீரப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 225ரூ. சிங்கத்துடன் நடப்பது எப்படி? தமிழின் மகத்தான நூலான திருக்குறள் காட்டும் வழியைப் பலரும் பலவிதங்களில் எழுதினாலும் இன்னும் பல வாசல்களை அது திறந்துகொண்டே இருக்கும். திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்திருக்கிறார் சோம வீரப்பன். ‘இந்து தமிழ்’ நாளிதழின் வணிக வீதி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் நன்றி: தி இந்து,20/10/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027269.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

வீழ்வேன் என்று நினைத்தாயோ?, மாலன், கவிதா பதிப்பகம், விலை 100ரூ. சிங்கப்பூர் குடிசைகள் எப்படி அடுக்குமாடி வீடுகள் ஆயின? சிங்கப்பூரை லீ குவான் யூ கட்டியமைத்த கதையை 128 பக்கங்களில் ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்ற நூலில் சுருக்கமாக எழுதியிருக்கிறார் மூத்தப் பத்திரிகையாளரான மாலன். குடிசைகளில் இருந்த பெரும்பான்மை சிங்கப்பூர்வாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள் எப்படி சொந்தமாயின எனும் அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதி இது. ‘‘லீ குவான் யூவின் கனவுதான் என்ன? ஒரு தேசம் உறுதியாக நிற்க வேண்டுமானால் அதில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உறுதியாக […]

Read more

புதர் மூடிய ஒருவன்

புதர் மூடிய ஒருவன், ஜி.காசிராஜன், நூல் வனம் பதிப்பகம், விலை 380ரூ. பரணிவாசம்: நினைவில் கரிசல் மண் காசிராஜன், தாமிரபரணி தொடங்கும் பாபநாசத்திலுள்ள கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியர். அவருக்குள் இருப்பதோ கரிசல்பட்டி கிராம விவசாயி. வண்ணதாசன் முன்னுரையில் சொல்வதுபோல கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்துவிட்ட, மீண்டும் கிராமத்துக்குத் திரும்ப நினைக்கிற ஆனால், திரும்ப முடியாத ஒருவனின் குரலாகக் காசிராஜனின் குரல் இருக்கிறது. கிராமத்து விவசாயிகளான தனது பெற்றோர்களின் ஆசைக்கிணங்கி படித்து அரசு வேலைக்கு வந்ததாகச் சொல்லும் காசிராஜனின் எழுத்துகள் சாத்தூர் அருகே உள்ள கிராமத்தையே […]

Read more
1 5 6 7 8 9 36