நபி நேசம் நம் சுவாசம்

நபி நேசம் நம் சுவாசம், மவ்லவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ, எஸ்.கே.எஸ். பப்ளிகேஷன்ஸ், பக். 186, விலை 100ரூ. நபிகள் நாயகத்தின் மகத்துவம் எத்தகையது என்பதை, டாக்டர் கலீல் இப்ராஹிம் முல்லா காதிர் என்பவர் எழுதிய ஒரு அரபு நூலின் அடிப்படையில் இந்நூலை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டி, 1,25,000க்கும் மேற்பட்ட தூதர்களை (நபிமார்களை) இறைவன் இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளான். அதில் முதல் முனிதரும் முதல் நபியுமான ஆதாம் முதல் ஈஸா (யேசு) வரையிலான அனைத்து நபிமார்களும், வேதங்களும் இறுதி நபியாகிய முஹம்மது […]

Read more

அரங்கமா நகருளானே!

அரங்கமா நகருளானே!, வேதா டி. ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, பக். 270, விலை 250ரூ. பூலோக வைகுந்தம் என்று வைஷ்ணவர்களால் போற்றிப் புகழப்படும் ஸ்ரீ ரங்கத்து திருக்கோவிலின் தல வரலாறு மற்றும் ஆலயம் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்து எளிய தமிழில் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். பன்னிரு ஆழ்வார்களில் பதினோரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே பெருமாளாகிய அரங்கநாதர் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தையும், அவரின் அருமை பெருமைகளையும் பற்றி 22 தலைப்புகளில் விரியும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பகத்ர்களுக்கு பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. […]

Read more

பஞ்சத்தந்திரக் கதை

பஞ்சத்தந்திரக் கதை, தமிழில் பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 496, விலை  200ரூ. ஐந்து வகையான தந்திரங்களை உள்ளடக்கிய கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இதன் மூல நூல் ஸம்ஸ்க்ருத மொழியில் இருந்தாலும், இதன் மேன்மையால் உலக மொழிகள் பலவற்றிலும் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ள சிறப்பைப் பெற்றுள்ளது. இவை சிறுவர்களுக்காக எழுதப்பட்ட பழங்கால நீதிக் கதைகள் என்றாலும், எக்காலத்திற்கும் எல்லா தரப்பினருக்கும் பயன் தரும் கருத்துகளைக் கொண்டவை. மகத நாட்டு மன்னன் சுதர்ஷனுக்கு வெகு காலத்திற்குப் பின் மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தும்கூட, […]

Read more

நாடு படும் பாடு

நாடு படும் பாடு, ஆர். நடராஜன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. கல்லூரி முதல்வராகவும், பத்திரிகையாளராகவும், அமெரிக்கத் தூதரக அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய இந்நூலாசிரியர், தமிழிலும், ஆங்கிலத்திலும் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பத்திரிகைகளில் எதையும் தெளிவாகவும், துணிவாகவும் எழுதும் அரசியல் விமர்சகர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. இந்நூலில் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் போன்றவை குறித்து துக்ளக் உட்பட பல பத்திரிகைகளுக்கு எழுதியவற்றில், சிறப்பான 51 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸின் கடந்த கால ஆட்சி குறித்த இவரது கடுமையான […]

Read more

போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், எஸ். குருபாதம், மணிமேகலைப் பிரசுரம், பக். 304, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023529.html யாழ்ப்பாணத் தமிழரான இந்நூலாசிரியர், பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி வருபவர். போதிதர்மரைப் பற்றிய அற்புதமான பல விஷயங்களைத் தேடிப் பிடித்து இந்நூலில் தொகுத்துள்ளார். புத்த பெருமானின் மறுஅவதாரமாகப் பேசப்படும் போதி தர்மர், தமிழகத்தில் தோன்றிய பௌத்த ஞானியாவார். இவர் ஆன்மிகம் மட்டுமின்றி, அறிவியல், தற்காப்புக் கலை, அக்குபஞ்சர், சித்த மருத்துவம், உடல் உறுப்புகள் தானம் பற்றிய மருத்துவ விஞ்ஞானம், […]

Read more

அரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும்

அரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும், நர்மதா வெளியீடு, பக். 328, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023950.html ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவில் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்டது சித்த மருத்துவம். சித்தர்கள் தங்களின் தவ வலிமையால் எல்லா விதமான மூலிகைகள், தாதுக்கள், ஜீவராசிகள் ஆகியவற்றின் தன்மைகளையும், மருத்துவ குணங்களையும் முழுமையாகக் கண்டறிந்தனர். அவற்றை மனித சமூகத்திற்குப் பயன்படுத்த எண்ணினர். அதன் அடிப்படையில் சுமார் 4,448 நோய்களுக்கான நிவாரணங்களை இந்த மூலிகைகளின் மூலம் கூறியுள்ளனர். அப்படி சித்தர்களால் […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ. To buy this Tamil book : http://www.nhm.in/shop/1000000022780.html ஏவி. எம். அறக்கட்டளை சார்பில் கம்பன் விழாவை ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2014 ஜுலை மாதம் நடைபெற்ற கம்பன் விழாவில், இந்நூலாசிரியர் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பே இந்நூல். சென்னை உயர் நிதிமன்றத்தின் நீதிபதியான இந்நூலாசிரியர், நீதித் துறையில் மட்டுமல்ல, இலக்கியம், இசை, ஆன்மீகம், இந்தியக் கலாச்சார மரபு, […]

Read more

ஒரு வீணையின் விசும்பல்

ஒரு வீணையின் விசும்பல், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்த இந்நூலாசிரியரின் இச்சிறுகதைத் தொகுப்பு, அவருக்குப் பெரும் எழுத்தாளருக்குரிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளது எனலாம். இந்நூலில் அவரது 21 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமியக் குடும்பங்களின் கதைகளாக உள்ளதால், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள், கலாசாரம், வழிபாட்டு முறைகள், இளைய தலைமுறையினரைப் பாதிக்கும் நவீனமயம்… என்று பல்வேறு கோணங்கள் இக்கதைகளில் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. இக்கதைகள் சில இஸ்லாமிய இதழ்களிலும், தூது வலைத் […]

Read more

கம்பரும் வால்மீகியும்

கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ.   To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024576.html வெளிநாட்டு வாழ் தமிழரான இந்நூலாசிரியர், இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் மீது தனக்குள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை இந்நூலின் மூலம் உணர்த்தியுள்ளார். வடமொழியில் ராமாயணத்தை படைத்த வால்மீகிக்கும், அதை தமிழில் உருவாக்கிய கம்பருக்கும் ஆயிரக்கணக்கான வருட இடைவெளியுண்டு. ஆயினும், இவ்விருவரின் கவித் திறனும், கற்பனைத் திறனும் கற்றோரால் இன்றும் ஒப்பிட்டுப் புகழப்படுகிறது. இந்நூலாசிரியரும் அந்த ஒப்பீட்டு […]

Read more

சரித்திரக் கடலின் முத்துக்கள்

சரித்திரக் கடலின் முத்துக்கள், ஹாஜி எஸ்.எம். கனிசிஷ்தி, முஸ்லிம் குரல் கம்ப்யூட்டர் பிரின்ட் வெளியீடு, சென்னை, பக். 200, விலை 100ரூ. மூத்தப் பத்திரிகையாளரான இந்நூலாசிரியர், ஆன்மிகம், இலக்கியம், அறிவியல், மருத்துவம், அரசியல், வரலாறு, பொன்மொழிகள் என்று பல துறைகளிலும் உள்ள பல்வேறு அரிய தகவல்களையும் திரட்டி, தகவல் களஞ்சியமாக இந்நூலை உருவாக்கியுள்ளார். 15ஆம் நூற்றாண்டில் அப்போதைய குருமகா சன்னிதானமாகிய மதுரை ஆதீனத்தை, மாமன்னர் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூரும், 1786, 1790 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய குருமகா சன்னிதானத்தை மாவீரர் திப்பு […]

Read more
1 8 9 10 11 12 21