சிறிய தூண்டில் பெரிய மீன்

சிறிய தூண்டில் பெரிய மீன், மூ.இராசாராம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.174, விலை ரூ.155. சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை எப்படிப் பெறுவது என்பதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல். நம்மிடம் அளவாக இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம் என்பதை சில முக்கிய மேற்கோள்கள் மூலம் சுவைபடக் கூறியுள்ளார். குறிப்பாக ரூ.1-க்கு விற்கப்படுகிறது என்ற பிரபல செய்தித்தாளின் விளம்பர உத்தி, ‘இந்த;டிசைன்&#39‘ சேலைகள் இன்னும் மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன' என்ற ஜவுளிக் கடைக்காரரின் விளம்பரத் தந்திரம் போன்றவை வாடிக்கையாளர்கள் என்ற பெரிய […]

Read more

நடந்தது நடந்தபடி

நடந்தது நடந்தபடி, ஆங்கிலத்தில் பி.வி.ஆர்.கே. பிரசாத், தமிழில் துறவி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 272, விலை 205ரூ. முதல்வராகும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்! வீங்ஙல்ஸ் பிகைஷ்ட் தி வீல்… பி.எம்., சி.எம்., அண்டு பியாண்டு’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்தான் இந்த நூல். நூலாசிரியர், பி.வி. நரசிம்மராவ், பிரதமராக இருந்தபோது, மத்திய அரசின் செய்தித்துறை ஆலோசகராக பணியாற்றியவர். தமிழக அரசியலில் நடந்த, ஒரு மாற்றத்தை பற்றி விரிவாக எழுதுகிறார். 1996, தமிழக சட்டசபை தேர்தல் நேரம். அ.தி.மு.க. மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி. […]

Read more

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், மரு. பரமரு, பழனியப்பா பிரதர்ஸ், பக். 184, விலை 145ரூ. தேவாரம் அருளிய சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரைப் பற்றியும், சைவ புராணங்களில் சிறப்பாகப் போற்றிப் புகழப்படும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய படைப்புகளில் இறைவனின் திருவருள் பற்றியும், மகாகவி பாரதியாரின் தெய்வப் பாடல்கள், அன்னை காரைக்கால் அம்மையார் பற்றியும் அழகுற ‘தெய்வத் தமிழ்’ என்னும் இந்த நூல் எடுத்துரைத்துள்ளது. கட்டுரை வடிவில் சமய ஆர்வலர்களும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் படித்துணரும் வகையில் அமையப் பெற்ற இந்த நூலில், […]

Read more

புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம்

புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம், செல்லபாப்பா கீரன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 424, விலை 325ரூ. பூர்விகம் பாலக்காடு என்ற போதிலும், மயிலாடுதுறையில் வளர்ந்து, தருமையாதீனத் தமிழ் கல்லூரியில் பயின்று, சிறு வயதிலேயே மேடைப் பேச்சிலும், இலக்கியத்திலும் புலமை பெற்று, 1956ம் ஆண்டில், நாகர்கோவிலிலிருந்து விழாவிற்கு தலைமை ஏற்க வந்த ஆறுமுகநாவலரால் (பக். 23) என்பவரால், ‘கீரன்’ என்று பெயர் சூட்டப்பட்ட, ‘வைத்தியநாத சுவாமி’ எனும் இயற்பெயர் கொண்ட புலவர் திலகம் கீரனின் வரலாற்றை, வாழ்விலும், இலக்கியத்திலும் துணை நின்ற அவரது மனைவி, […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு இக்காலம்

தமிழ் மக்கள் வரலாறு இக்காலம், தமிழ்க்கோட்டம், விலை 140ரூ. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன், தமிழ் மக்கள் வரலாற்றை இதுவரை 8 புத்தகங்களாக எழுதியுள்ளார். கடைசிப்பகுதியான 9வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. காலமாறுபாட்டால் தமிழர்களின் வாழ்விலும், பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை இதில் விவரிக்கிறார். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பெருந்தடையாக இருப்பது சாதிப்பிரிவினையே என்று கூறுகிறார். “இன்றைக்கும் தன்னை வழி நடத்தக்கூடிய தமிழனை சினிமாத் துறையிலேயே தமிழன் தேடுகிறான்” என்று சுட்டிக்காட்டுகிறார். தமிழரிடம் காணப்படும் குறைபாடுகளை, குட்டவும் செய்கிறார், தன் மோதிரக் கையால்! […]

Read more

அம்ருதா

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், பக். 448, விலை 335ரூ. ஒரு சித்ரா பவுர்ணமியின் அடுத்த பத்து நாளின் நிகழ்வுகளைச் சித்தரித்து குலோத்துங்க சோழனின் வரலாற்றை ஒட்டிய புதினம் இது. என்றாலும் சோழர் காலத்திய முந்தைய வரலாற்று நிகழ்வுகள் பலவும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இக்கதை நிகழ்வின் காலம் கி.பி. 1070. கதை நாயகி, அம்தா ஒரு கற்பனை கதாபாத்திரமே. காம்போஜ தேசத்துப் பேரழகி அம்ருதா. தேச ஜாதகத்தின் படி வரவிருக்கும் ஒரு பிரளயத்தையே நிவர்த்திக்கக்கூடிய அவளது சாதகமான ஜாதகத்தின் காரணமாக, சோழ மன்னன் […]

Read more

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், கோ.வில்வபதி, பழனியப்பா பிரதர்ஸ், விலை 900ரூ. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்துக்கு கவிதை அழகு மிக்க வர்ணனைகளுடன் புதுவடிவம் கொடுத்த கம்பரின் அற்புதத் திறமையால், ராமாயணம் என்றாலே கம்பராமாயணம் என்று கூறும் அளவுக்கு பெருமை பெற்ற கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திற்கு, மிகச் சிறப்பான தெளிவுரையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. அயோத்தியா காண்டத்தில் இடம் பெற்ற அனைத்து கவிதைகளுக்கும் விரிவான தெளிவுரையும், விளக்கமும் கொடுத்து இருப்பதுடன், கடினமான சொற்களுக்கான அர்த்தத்தையும் தந்து இருப்பதால், கம்பரின் காவிய சுவையை முழுமையாக […]

Read more

வாழ்க்கை ஒப்பந்தம்

வாழ்க்கை ஒப்பந்தம், தந்தை பெரியார், முல்லை பதிப்பகம், விலை 25ரூ. தந்தை பெரியார் 1940-41ஆம் ஆண்டுகளில் 3 திருமணங்களில் நிகழ்த்திய அரிய சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல். வாழ்க்கை துணை ஒப்பந்தத்திற்கு உறுதிமொழியும் அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும்? எனக் கேட்கிறார் தந்தை பெரியார். மேலும் வாழ்க்கை ஒப்பந்தம் பற்றிய அனைத்து கருத்துகளும் மிகத் தெளிவாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இளந்தலைமுறையினர் படித்து உணரவேண்டும். நன்றி: […]

Read more

தருணம் பார்க்கும் தருணங்கள்

தருணம் பார்க்கும் தருணங்கள், சொ.சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 320, விலை 240ரூ சொல்லாட்சிக் கலையில் சிறந்து விளங்கும் முனைவர் சொ. சேதுபதியின் 22 இலக்கியக் கட்டுரைகளின் இனிய தொகுப்பே இந்த நூல். இலக்கியக் கட்டுரைகளின் அடி நாதமாக, மானிடநேயம், உயிரிரக்கம் ஒலித்துக் கொண்டிருப்பது நூலின் சிறப்பு. தொல்காப்பியம் முதல், தொடுக்கும் முகநூல் முடிய, நுவல்பொருளை வாழ்வியல் நோக்கில் வைத்துப் பார்க்கும் சிந்தனைகளின் தொகுப்பு இந்த நூல். தருணம் எனும் சொல்கொண்டு, சொல் விளையாட்டைச் சுடரச் செய்துள்ள திறம் பாராட்டத்தக்கது. கவிதை, சிறுகதை, […]

Read more

நிலைபெறுமாறு எண்ணுதியேல்

நிலைபெறுமாறு எண்ணுதியேல், முனைவர் சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 220, விலை 165ரூ. ‘கற்கோவிலுக்குள் வீற்றிருக்கும் இறைவனைச் சொற்கோவிலுக்குள் எழுந்தருளச் செய்தது அப்பர் தமிழ்’(பக். 9) எனும் நூலாசிரியர், திருவாரூர் திருத்தாண்டகத்தின் ஒரு பாடல் அடியை தொடக்கமாகக் கொண்டு, ‘நிலைபெறுமாறு எண்ணுதியேல்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார். தேடல் நிறைந்த தன் தனி வாழ்வை, தவ வாழ்வாக்கித் தமிழ் வாழ்வாக உயர்த்திப் பற்பல அற்புதங்கள் புரிந்தவர் அப்பர் (பக். 19). ‘என் கடன் பணி செய்து கிடப்பதே, நாமார்க்கும் குடியல்லோம் நமனை […]

Read more
1 2 3 4 10