தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்

தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள், பூம்புகார் பதிப்பகம், விலை: முதல் பாகம் ரூ.360; 2-ம் பாகம் ரூ.290; 3-ம் பாகம் ரூ.340;     முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 1989-ம் ஆண்டு முதல் சட்டமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரங்களில், சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் 3 பாகங்களாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. 1989 ஏப்ரல் 1-ந் தேதி நிதிநிலை அறிக்கை மீதான அவரது உரையுடன் இது தொடங்குகிறது. ஒவ்வொரு முறையும் நிதிநிலை அறிக்கைகள் மீதான உரைகள், ஆளுநர் உரை மீதான பதில் உரைகள் ஆகியவை 1-ம் பாகத்திலும், […]

Read more

நாம் வணங்கும் சித்தர்கள்

நாம் வணங்கும் சித்தர்கள், த.உத்திரகுமாரன், பூம்புகார் பதிப்பகம், விலைரூ.575. பரந்த மனப்பான்மையுடன் வாழ்ந்த சித்தர்களின் ஆன்மிகக் கருத்துகளை தெளிவாக, எளிய தமிழ் நடையில் விளக்கும் நுால். பெயர் மட்டுமே தெரிந்த சித்தர்களின் வரலாறும், அவர் தம் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளலாம். படிப்போருக்கு இன்பம் பயக்கும். ஜாதிப் பாகுபாடு கூடாது என்பதை சிவவாக்கியர், அவ்வையார், பாரதியார், குதம்பைச்சித்தர் பாடல்கள் மூலம் விளக்குகிறார்; அஷ்டமா சித்திகள் எட்டையும் விளக்கியுள்ளார்; அஷ்டாங்க யோகங்களையும் விளக்கி, தத்துவங்கள் 96 என்பதை பட்டியலிட்டுள்ளார். திருக்குறளுடன் ஒப்பிட்டுள்ளார். அபிராமி பட்டர், ராமலிங்க அடிகளார் […]

Read more

தமிழ் நூல் வரலாறு

தமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக். 458, விலை 300ரூ. சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் நுால்களின் வரலாற்றையும், தமிழ் மக்களின் வரலாற்றையும், 74 தலைப்புகளில் இந்த நுால் விளக்குகிறது. நிகண்டுகளின் வரலாற்றையும், சைவ மடங்களின் தமிழ்த் தொண்டினையும், தனித்தனித் தலைப்புகளில் விளக்குவது இந்த நுாலின் சிறப்பு. தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்கும் மிகச்சிறந்த கையேடாக விளங்கும் இந்த நுால் மிக எளிய தமிழ் நடையில் […]

Read more

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பு, சங்க காலத்தில் தமிழக மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது. தமிழ் மொழியும் தமிழ் நூல்களும் எந்த முறையில் சிறப்புப் பெற்று வளர்ந்தன என்பவை போன்றவற்றின் அரிய தகவல்களை இந்த நூல் தாங்கி இருக்கிறது. தமிழகத்தின் முற்கால, இடைக்கால, மற்றும் பிற்கால நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் ஆகியவற்றுடன் தற்கால புலவர்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம்பெற்று இருக்கின்றன. தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் மொழி ஆய்வு […]

Read more

பெளத்தத்தின் மூவர் நெறி

பெளத்தத்தின் மூவர் நெறி,  வெ.வேதவல்லி, பூம்புகார் பதிப்பகம்,  பக்.508, விலை ரூ.390. ஆசிய ஜோதியாக விளங்கிய புத்த பெருமானையும், அசோக சக்கரவர்த்தியையும் , மணிமேகலையையும் அணிசேர்க்கும்விதமாக எளிய நடையில் ஆசிரியரால் இயற்றப்பட்டுள்ள நூல் இது. பெளத்த மதத்தின் கொள்கைகளையும், போதனைகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் புத்தபெருமானின் அருள் சிறப்பும், அசோகரின் வரலாற்றுப் பெருமைகளும், மணிமேகலையின் தூய வாழ்க்கைச் சிறப்பும் நயமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கதைநாயகனும், அருள் நெறியருமான புத்தபெருமானின் வாழ்க்கையில் தொடங்கி, அவர்தம் அறநெறி கருத்துகளையும், கொள்கைகளையும் எளிய நடையில் விரிவாக ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். […]

Read more

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6, ஈரோடு தமிழன்பன், தொகுப்பாசிரியர்: வ.ஜெயதேவன், பூம்புகார் பதிப்பகம், பக்.872, விலை ரூ.750. புகழ்பெற்ற தமிழ்க்கவிஞரான ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்து இருக்கின்றன. இது ஆறாவது தொகுதி. இத்தொகுதியில் கவிஞரின் 14 கவிதைத் தொகுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. கவிதையின் பேசு பொருள்களும், அவற்றின் வெளிப்பாடுகளும் ஒவ்வொரு கவிதையிலும் மாறுபட்டும், புதியனவாகவும் இருக்கின்றன. இப்போதுதான் புதிதாக எழுதத் தொடங்கும் இளைஞனைப் போல கவிஞர், ஒவ்வொரு கவிதையையும் புதுவிதமாக எழுதிப் பார்க்கிறாரோ என்று இதிலுள்ள கவிதைகள் நம்மை எண்ண […]

Read more

தமிழ் அகராதி

தமிழ் அகராதி, தொகுப்பு த.கோவேந்தன், பூம்புகார் பதிப்பகம், விலை 300ரூ. தமிழ் இலக்கியங்களில் நெருடலான பல தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எளிய பொருள் என்ன என்பதைத்தெரிந்து கொள்வதற்காக புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரிடம் தமிழ் பயின்ற புலவர் த.கோவேந்தன், இந்த அகராதியைத்தொகுத்துத் தந்துள்ளார். ஒரே சொல்லுக்கு உரிய பல பொருள்களையும் அகர வரிசைப்படி தந்து இருப்பதால், மாணவர்கள்மட்டும் அல்லாமல் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த நூல் மிக்க பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு),  பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக்.458, விலை ரூ.300. தமிழ்மொழி, தமிழ் நூல்கள் எவ்வாறு வளர்ச்சியுற்றன; தமிழ் மொழியின் பழைமை, மாண்பு; முற்கால, இடைக்கால, பிற்கால நூல்கள், அவற்றை இயற்றிய ஆசிரியர்கள்; இக்காலப் புலவர்கள், அவர்களுடைய நூல்கள்; தமிழ் நாட்டின் தொன்மை, சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறை முதலியனவற்றை இலக்கிய வரலாற்றைக் கூறுவது போலக் கூறாமல், சுவையான செய்திகளையும், பாடல்களையும், மேற்கோள்களையும் இணைத்துக் கூறியிருப்பது, இந்நூலின் சிறப்பு. சங்க காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப்பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும், திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி என, வாதிட்டவர் தேவநேயப்பாவணர். மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல் ஆராய்ச்சி வல்லுனரும் ஆவார். இந்நுால், மொழிகள், இயன்மொழி, திரிமொழி என இருவகைப்படும். வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு இயன்மொழியும் இயற்கை மொழி, வளர்ச்சி மொழி என இருவகை நிலைகளை உடையது என்கிறார். ‘அம்’ என்னும் வேர்ச்சொல் கட்டுரையில், ‘அம்முதல்’ என்ற சொல்லுக்குரிய […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள்,  ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், பக்.688, விலை ரூ.450. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே‘ என்று சுட்டுகிறது தொல்காப்பியம். ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்து தோன்றும்போது, ஒரு சொல்லிலிருந்து மற்றொரு சொல் பிறக்க இடமுண்டாகிறது. கருத்து வேறுபடும்போது சொல்லும் வேறுபட வேண்டும். இல்லையெனில் பொருள் மயக்கம் உண்டாகும். மொழியும் வளர்ச்சியுறாது. இதுவே சொல்லாக்க நெறிமுறை. இந்த நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும் வேர்ச்சொல் ஆய்வில் மூழ்கிக் கிடந்த ஞா.தேவநேயப் பாவாணர் ‘செந்தமிழ்ச் செல்வி‘ என்னும் திங்களிதழில் தொடர்ந்து எழுதி […]

Read more
1 2 3 9