கட்டுரை எழுதுவது எப்படி?

கட்டுரை எழுதுவது எப்படி?, டாக்டர் மா. இராசமாணிக்கனார், முல்லை பதிப்பகம், பக். 32, விலை 15ரூ நாம் எந்தப் பொருளை எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை ஆழமாகச் சிந்தித்து தயார் செய்ய வேண்டும். வாக்கியங்கள் கருத்தால் பிணைந்து செல்லத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

நெய்வேலியின் நிலக்கரிச் சுரங்கம்

நெய்வேலியின் நிலக்கரிச் சுரங்கம், சோமலெ, முல்லை பதிப்பகம், விலை 90ரூ. நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும், சுரங்கம் தோண்டப்பட்டதும் வியப்பான வரலாறு. அதை, சுவைபட எழுதியுள்ளார் சோமலெ. நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

பாரதியார் பெருமை

பாரதியார் பெருமை, முல்லை, பி.எல்.முத்தையா, முல்லை பதிப்பகம், பக்.143, விலை 60ரூ. பாரதியின் நண்பரான பரலி சு. நெல்லையப்பர் தொடங்கி, திரு.வி.க. , டி.கே.சி., ராஜாஜி, கவிமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணா, கல்கி, மு.வ., வையாபுரிப்பிள்ளை, ம.பொ.சி., ஜீவா, கி.வா.ஜ., புதுமைப்பித்தன், குன்றக்குடி அடிகளார், ரா. கனகலிங்கம், திருலோக சீதாராம், முல்லை முத்தையா என்று பல அறிஞர் பெருமக்கள் அவ்வவ் காலங்களில் பாரதிபற்றி புலப்படுத்திய கருத்துக்களைத் தொகுத்து பாரதியாருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். பாரதியார் பற்றிய கருத்துப்பெட்டகமான இந்நூல் பாரதியின் நூற்றாண்டு விழா நினைவாக மறுமுறை […]

Read more

ஆப்ரகாம் லிங்கன்

ஆப்ரகாம் லிங்கன், டாக்டர் மா. இராசமாணிக்கனார், முல்லை பதிப்பகம், பக்.80, விலை 35ரூ. ஆப்ரகாம் லிங்கன் ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தது முதல் அவர் அரசியலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருமுறை பதவி வகித்தது வரை சுருக்கமாக பேசும் நூல். அவரது குணநலம், பண்பாடு, சொற்பொழிவுகள், அவரது படைப்புகள் ஆகியவற்றை மாணவர் உலகம் பயனுறும் வகையில் சிறுநூலாகத் தந்துள்ளார் மூதறிஞர் இராசமாணிக்கனார். நன்றி: குமுதம், 21/12/2016.

Read more

பின்னலில் அவிழ்ந்த முடிச்சுகள்

பின்னலில் அவிழ்ந்த முடிச்சுகள், சுபி. முருகன், வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 65ரூ. கவிஞர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள், சந்திப்புகள், ஒன்றையொன்று பின்னி கவிதை வரிகளாக உருவெடுத்து கவிதைத் தொகுப்பாக மலர்ந்துள்ளது. ‘எனக்குள்ளே பின்னிக் கொண்டிருந்த முடிச்சுகளை அவிழ்க்கையில், என்னையே பின்னிக் கொண்டன… கனவு முடிச்சுகள்! இப்படிப் பல கவிதை. நன்றி: குமுதம், 28/12/2016.   —-   பாரதியார் பெருமை, முல்லை பதிப்பகம், விலை 60ரூ. பாரதியாரின் வாழ்க்கை வரலாறும், பாரதியார் பற்றி பல பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகளும் கொண்ட அரிய […]

Read more

பாரதியார் பெருமை

பாரதியார் பெருமை, முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், பக். 143, விலை 60ரூ. பாதியாரின் நண்பரான பரலி சு. நெல்லையப்பர் தொடங்கி, திரு.வி.க., டி.கே.சி., ராஜாஜி, கவிமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணா, கல்கி, மு.வ.., வையாபுரிப்பிள்ளை, ம.பா.சி., ஜீவா, கி.வா.ஜ., புதுமைப்பித்தன், குன்றக்குடி அடிகளார், ரா. கனலிங்கம், திருலோக சீதாராம், முல்லை முத்தையா என்று பல அறிஞர் பெருமக்கள் அவ்வவ் காலங்களில் பாரதி பற்றி புலப்படுத்திய கருத்துக்களைத் தொகுத்து பாரதியாருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். பாரதியார் பற்றிய கருத்துப் பெட்டகமான இந்நூல் பாரதியின் நூற்றாண்டு […]

Read more

அறத்தந்தை அண்ணாமலை அரசர்

அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு. அருணாசலம்பிள்ளை, முல்லை பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தை நிறுவி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி ஊட்டிய தனிப்பெரும் வள்ளல் டாக்டர் இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தமிழ்மக்களும் மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல். அண்ணாமலை அரசரின் கல்விப் பணியும் பொதுப் பணியும் பொதுப் பணியும் உலகம் நன்கு அறிந்த ஒன்றே என்றாலும் எதிர்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்து அவர்களை நெறிப்படுத்தும் நூல். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

அறத்தந்தை அண்ணாமலை அரசர்

அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு.அருணாசலம் பிள்ளை, பதிப்பாசிரியர் ஆறு. அழகப்பன், முல்லை பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. அன்ன சத்திரம் கட்டுவதைவிட கல்விக்கூடம் அமைப்பது புண்ணியம் தருவது என்று கூறுவர். ஆனால், அன்ன சத்திரமும் கட்டி, கல்விக்கூடங்களையும் அமைத்து, மருத்துவசாலைகளையும் ஏற்படுத்தி, தமிழிசைக்கென சங்கம் நிறுவி, கோயில்களை உருவாக்கி குடமுழுக்கும் செய்வித்து, அரசாங்கப் பணியலமர்ந்து மக்கள் பணியும் மேற்கொண்ட ஒருவர் உண்டென்றால் அவர் அரசர் அண்ணாமலை செட்டியாராகத்தான் இருக்க முடியும். அவருடைய வரலாறு சுருக்கமாகவும் சுவையாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் தனித்தனியே […]

Read more

ராமச்சந்திர ரகசியம்

ராமச்சந்திர ரகசியம், குமரவேல்,முல்லை பதிப்பகம், விலை 150ரூ. எம்.ஜி.ஆரின் சித்தாந்த சிறப்பை, பண்பாற்றைல பலர் சொல்ல மறந்த நுட்பங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர் வே. குமரவேல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —-   நின்று ஒளிரும் சுடர்கள், உஷா தீபன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 130ரூ. சிவாஜி கணேசன், எஸ்.வி. ரங்காராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, நாகேஷ் உள்பட 11 நடிகர்களின் சிறப்பை வர்ணிக்கும் நூல். எம்.ஜி.ஆர். பற்றியும் எழுதி இருக்கலாமே. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள்

எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 808, விலை 550ரூ. தற்கால வரலாற்றையும் சென்ற தலைமுறையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த கால கட்டத்தையும் இரண்டறக் கலந்து எழுதிச் செல்கிற நாவல் இது. முத்தமிழன், ரகு உள்ளிட்ட ஏழு கதாபாத்திரங்களுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையும் ஒரு கதாபாத்திரமாக அமைத்திருப்பது புதுமை. நன்றி: குமுதம், 31/8/2016.   —- தெரியும் ஆனால் தெரியாது, முனைவர் ந. அப்புராஜ், தண்மதி பதிப்பகம், பக்.110, விலை 120ரூ. மிகப்பெரிய கருத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் திணித்து வைத்திருப்பதுபோல் […]

Read more
1 2 3 4 5 6 8