இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள், சல்மான் ருஷ்தீ, தமிழில் சா.தேவதாஸ், எதிர் வெளியீடு, விலை 320ரூ. சல்மான் ருஷ்தீக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் தீர்க்கமான நாவல்களுக்காக மேலான கவனம் பெற்றிருப்பவர். அவரது இந்த புத்தகம் அதிக நுட்பம் நிரம்பியது. அணுக்கமான வாசிப்பு இருந்தால் இதன் மைய இழைகளை சுலபமாக தொட்டுவிடலாம். அவரது உரைநடை குறித்தும் அதன் செதுக்கிய தன்மை குறித்தும் இலக்கிய உலகில் மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறார்கள். பெரிதாக உரையாடல்கள் ஏதும் இல்லை. படிக்கும்போதே சில குறிப்புகள் கிடைக்கின்றன. சில ஒளித்து […]

Read more

மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் மூளை

மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் மூளை, டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன், தமிழில் பேரா.கு.வி. கிருஷ்ணமூர்த்தி, பாரதி புத்தகாலயம், விலை 450ரூ. மனித மனத்தை அல்லது இயல்பை புரிந்துகொள்வது மிகவும் கடினமானது. யாருடைய நடத்தையும், மனப்பாங்கும் அறுதியிட்டு உறுதியாக சொல்லப்படுவதற்கில்லை. புரிந்தும், அறிந்தும் கொள்ளப்படாத விஷயங்களில் மனித இயல்பு பிரதானமாகிவிட்டது. அதற்கான காரண காரியங்களை ஆராயப்புகுந்திருக்கிறார் டாக்டர் ராமச்சந்திரன். அறிவியல் நூல்தான். ஆனால் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், உணரக்கூடிய விதத்திலும் இருக்கிறது. இதை மொழிபெயர்ப்பது மலையைப் பிளக்கிற காரியம். மனமுவந்து செய்த அக்கறையில் கிருஷ்ணமூர்த்தியின் பணி […]

Read more

யுகபாரதி கவிதைகள்

யுகபாரதி கவிதைகள், நேர்நிரை, விலை 500ரூ. யுகபாரதியின் ஏழு கவிதைத் தொகுப்புகளை ஒன்று சேர்த்து இறுக்கிய நூல். நல்ல கவிதைகள் பள்ளிக்கூடத்து பிள்ளைகள் மாதிரி ‘காச்மூச்’ சென கத்தக்கூடாது’ என்பார் நகுலன். அப்படியே சத்தம் இல்லாமல் யுகபாரதி கொண்டு சேர்க்கும் எளிமைக்கும், அர்த்தத்திற்கும் தேய் வழக்கற்ற சொல் ஆளுமைக்கும் கட்டியம் கூறுகின்றன கவிதைகள். அவரது கவிதைகளில் கண்டடையும் உண்மை என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அவரின் கவிதைகளைத் தனித்தனியாக பார்க்கும்போதும் ஒவ்வொன்றிலும் ஒரு விசேஷமான பார்வை, கூர்மை, தெளிவு புலப்படுகிறது. எளிமையாக இருப்பதாலேயே இவை சாதாரணமானவை […]

Read more

கறுப்புக் குதிரை

கறுப்புக் குதிரை, நரேன் ராஜகோபாலன், நவி பதிப்பகம், விலை 150ரூ. 500, 1000 ரூபாய் திடீரென ஒரு ராத்திரியில் மதிப்பிழந்த நிலையில் நம்மில் நிறையப் பேர் நிலைகுலைந்து போனோம். அதற்கான காரண, காரியங்கள் தெரியாது. எரிச்சலே மிஞ்சியது. இந்த சூழலில் இப்புத்தகத்தில் கறுப்புப் பணம், பண மதிப்பிழப்பு இவற்றின் ஆதி அந்தங்களை விரிவாக எடுத்து வைக்கிறார் நரேன். ஆனால், ஆவணக் கட்டுரைகளின் சாயல் துளியும் எட்டிவிடாமல், ‘துறுதுறு’வென இவைகளின் சாரம் மட்டுமே புரிகிறது. கறுப்புப் பணம், பெரு வங்கிகள், மென்பொருள் துணை கொண்ட டிஜிட்டல் […]

Read more

மறுதுறை மூட்டம் (நாகார்ஜுனன் நேர்காணல்)

மறுதுறை மூட்டம், (நாகார்ஜுனன் நேர்காணல்), நேர்காணல் : எஸ். சண்முகம், நெறியாள்கை: முபின் சாதிகா, கலைஞன் பதிப்பகம், விலை 180ரூ. தமிழில் பின்நவீனத்துவம் காட்டிய எழுத்துக்களில், அதை அடையாளப்படுத்தியதில் நாகார்ஜுனனுக்கு பெரும் இடம் உண்டு. அவரது முழு நேர்காணலின் மூலம் துடிப்பும், அக்கறையும், பரந்துபட்ட அறிவும், சொல்லாடலின் செழுமையும் இந்த நூல் முழுமையும் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் கருத்து வைக்கும் இடம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. நாகார்ஜுனனின் வற்றாத உழைப்பும், மிகையற்ற மதிப்பீடுகளும், அகந்தையற்ற மனமும், மனிதநேய இழைவும் மிகவும் முக்கியமானவைகளாக இந்த நூலில் […]

Read more

நகலிசைக் கலைஞன்

நகலிசைக் கலைஞன், ஜான் சுந்தர், காலச்சுவடு பதிப்பகம், விலை 130ரூ. அனுபவக் கட்டுரைகளின் உண்மையும், ஆழமும் எப்போதும் சுவாரஸ்யமானவை. கற்பனையின் எல்லைக் கோட்டைக்கூட தொட்டுவிடாத அழகில் ஜான் சுந்தர் நகலிசைக் கலைஞர்களின் அனுபவங்களை, உடனிருப்பை ரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார். மெய் மறப்பதும், கவலை துறப்பதும் அனேகமாக திரைப் பாடல்களை கேட்கும் போது மட்டுமே நடக்கிறது. நகலிசைக் கலைஞர்களின் வாழ்க்கையின் சில பக்கங்களை துளி மிகையில்லாமல் செங்கல் சூளையின் வரிசை போல் கச்சிதமான அடுக்கில் கட்டுரைகள். இசையைப் புரிந்து கொள்வதும், அனுபவிப்பதும் ஜானின் எழுத்துகளில் தங்கு […]

Read more

பெண் எனும் பொருள்

பெண் எனும் பொருள், பெண்கள், குழந்தைகள் லிடியா காச்சோ, தமிழில் விஜயசாய், விடியல் பதிப்பகம், விலை 350ரூ. இது நாம் அறியாத உலகம். புலப்படாத புதிர். இடைவிடாது நடக்கும் பயங்கரம். நாளொன்றுக்கு உலகமெங்கும் பெண்களும், குழந்தைகளுமாக, இருக்கும் இடத்திலிருந்து அவர்கள் உணர்ந்து அறியாத மாய உலகிற்கு கடத்தப்படுகிறார்கள். படு பயங்கரமான வலைப்பின்னல் கொண்ட தொடர்ச்சி இது. இந்த பயங்கரங்களைக் கேட்டு உணர்ந்ததோடு நின்றுவிடாமல், தொடர்ந்து பயணித்து, துணிச்சலாக தகவல் சேகரித்து எழுதியிருக்கிறார் லிடியா. பெண்களைக் கடத்திச் செல்வது, விலைக்கு வாங்குவது, பாலியல் தொழிலுக்கு மூளைச்சலவை […]

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. இலக்கணம் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு சொக்கனின் இந்நூலைப் படித்தால் அடிப்படையான இலக்கணத்தை அறிந்து கொண்ட உணர்வைத் தருகிறது. நன்னூல், தொல்காப்பியம், இலக்கிய உதாரணங்களை மட்டும் சொன்னால் வறட்சியாக இருக்கும் என்று திரைப்படப்பாடல்களையும் பட்டிமன்ற நகைச்சுவையையும் உதாரணமாகக் காட்டுவது படிப்போரை எளிதில் விளங்க வைக்கும் உத்தி. புதிய தலைமுறையை நல்ல தமிழில் எழுதவைக்கும் முயற்சி இது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம், என். லிங்குசாமி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 110ரூ. நல்ல கவிதைகளின் பயண வழியில் காணக்கிடைக்கும் தரிசனங்கள் மனதை மகத்தான நிலைகளுக்கு இட்டுச் செல்லக்கூடியவை. “கவிதை எழுதுவது ஒரு கலை. அதை தேடிக் கண்டுபிடிப்பது அனுபவம்” என்பார்கள். அப்படிப்பட்ட அனுபவமான ‘ஹைக்கூ’ கவிதைகளை எழுதியிருக்கிறார் லிங்குசாமி. இரண்டு, மூன்று வார்த்தைகளிலேயே சுள்ளென்று தைக்கும் வீரியம். சாவகாசமான மனநிலையில் படிக்க அமர்ந்தாலும் தரதரவென நம்மை ஆழமான பின் நினைவுகளுக்கு இழுத்துப் போகிறது. ‘ என்னவொரு நுணுக்கம்’ என சில கணங்கள் யோசிக்கத் […]

Read more

எதிரி உங்கள் நண்பன்

எதிரி உங்கள் நண்பன், பால்தசார் கிராசியன், தமிழில் சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 80ரூ. ஸ்பெயின் தேசத்து சாணக்கியன் பால்தசார் எழுதிய புத்தகம் இது. எப்பொழுதும் நிலைக்கக் கூடிய கருத்துக்களை உருவாக்குகிற கலைஞர்கள் ஒருசிலரே பிறக்கிறார்கள். அவர்கள் கண்ட தரிசனங்களை வெளியில் வைக்கிறார்கள். இந்த வாழ்க்கை நம் முன் வைக்கும் மாய விளையாட்டைச் சுலபமாகக் கையாள பால்தசார் சொல்லித் தருகிறார். இது சுய முன்னேற்ற நூல்லல்ல. உங்களின் ஆளுமையை, இருத்தலை உங்களுக்கே உணர வைக்கும் நூல். உலகமெங்கும் பேசப்பட்ட புத்தகம். தினசரி வாழ்வில் […]

Read more
1 2 3 4 5 9