உடல் உள்ளம் ஆன்மா

உடல் உள்ளம் ஆன்மா, ஏ.எம். ஜேம்ஸ், ஓவியா பதிப்பகம், பக். 500, விலை 390ரூ. உடலும் உள்ளமும் தூய்மையாக இருந்தாலே பரிசுத்தமான ஆன்மாவை உணர முடியும். அந்த இலக்கில் இந்நூலை வாசிக்க ஆரம்பிக்கலாம். பல்வேறு மத நூல்கள், அறிஞர் பெருமக்களின் அறிவுரைகள், இந்துமத ஆன்மிகப் பெரியவர்கள், ஏசுநாதர் போதனைகள், அண்ணல் நபிகள் நாயகத்தின் பொறுமையைப் பறைசாற்றும் கட்டுரை.. இத்துடன் திருக்குறள், பாரதியாரின் அமுத மொழிகளையும் தலைப்புக்கு ஏற்றவாறு கலவையாகத் தந்து வியக்க வைக்கிறார் நூலாசிரியர். சமய நல்லிணக்கத்துக்கான மிகச் சிறந்த நூலாகவும் இது விளங்குகிறது. […]

Read more

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி, ஜெ. மதிவேந்தன், நெய்தல் பதிப்பகம், பக். 208, விலை 130ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள் பலருள் குறிப்பிடத்தக்கவர் பெருஞ்சித்திரனார். இதழாசிரியராகவும் நூலாசிரியராகவும் எழுத்துப்பணியில் அயராது ஈடுபட்டிருந்தவர். பெருஞ்சித்திரனாரின் இலக்கிய-இலக்கணக் கூறுகளையும் பாவினங்களையும் இந்நூல் ஆராய்கிறது. மக்களில் உயர்வு-தாழ்வைப் படைத்தவர்கள் பாவினங்களிலும் யார் எந்தப் பாவினத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வகைப்படுத்தியிருந்தனர். ஆனால், பெருஞ்சித்திரனார் இதைத் தகர்த்தெறியும்படியாக, தமிழிலுள்ள அனைத்துப் பாவினங்களையும் பயன்படுத்திப் பாடினார். மேலும், அவர் பயன்படுத்திய யாப்பு வடிவங்களையே முதன்மைப் பொருளாகக் கொண்டு இந்நூல் அமைந்திருக்கிறது. […]

Read more

தமிழாய்வு சில மயக்கங்கள்

தமிழாய்வு சில மயக்கங்கள், சா. பன்னீர்செல்வம், மணிவாசகர் பதிப்பகம், பக். 320, விலை 200ரூ. தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவை குறித்து எழுதப்பட்ட பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தொல்காப்பியர் நோக்கில் திசைச்சொல் என்பது என்ன, தமிழில் பேச்சுமொழியே எழுத்துமொழியாகி விடுமா, தமிழில் தன்வினை – பிறவினை பொருள் மரபுகளும் அவற்றிற்கான சொல்லாட்சிகளும் எவ்வாறு அமைகின்றன, தமிழ் கலப்புமொழி ஆகாமல் காப்பதெப்படி, வள்ளுவர் கொல்லாமையை முதலாவதாகவும் பொய்யாமையை இரண்டாவதாகவும் கூறியது சரியா – இப்படிப்பட்ட ஆழமான செய்திகளை எடுத்துக்கொண்டு அவற்றைப் பல கோணங்களிலும் அலசி […]

Read more

எப்போ வருவாரோ

எப்போ வருவாரோ, தொகுப்பாசிரியர் வள்ளி முத்தையா, தோழமை வெளியீடு, பக். 112, விலை 150ரூ. எம்.எஸ்.சுப்புலட்சுமி சதாசிவம் தம்பதியருக்கு ரசிகமணி டி.கே.சி. எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்நூல். இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ரசிகமணி எழுதிய கடிதங்கள், ஒரு பல்சுவை விருந்து. பல தனிப்பட்ட சம்பவங்களை அவை கூறும்போது, சரித்திர நிகழ்வுகளாக அவை நிழலாடுகின்றன. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அவர் எழுதும் கடிதங்கள், “அருமைப் புதல்வி குஞ்சம்மாளுக்கு’ எனத் தொடங்குகின்றன. டி.சதாசிவத்துக்கு எழுதும் கடிதங்கள் “அருமை நண்பர் சதசாசிவத்துக்கு’ என்று தொடங்குகின்றன. கடிதங்களின் முடிவில் “அன்புள்ள, டி.கே.சிதம்பரநாதன்’ என்றே எழுதி […]

Read more

சாமானியனுக்கான சட்டங்கள்

சாமானியனுக்கான சட்டங்கள், வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 90ரூ. ஒருவர் எந்தக் குற்றமும் செய்யவில்லையென்றாலும், எந்தவிதமான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றாலும், காவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டியதாகிவிடுகிறது. அப்படிச் செல்கிற ஒருவருக்கு நடப்பிலுள்ள சட்டங்களைப் பற்றியும், காவல்துறையின் நடவடிக்கைகளைப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றால், அவருடைய மனதில் பயம் புகுந்து கொள்வதோடு, கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக அலைய நேரிடுகிறது. இந்தக் குறையைப் போக்கும்விதமாக சாமானிய மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய குறைந்தபட்ச சட்ட அறிவை இந்நூல் புகட்டுகிறது. […]

Read more

அறிவியலில் பெண்கள் ஒரு சமூக வரலாற்றுப் பார்வை

அறிவியலில் பெண்கள் ஒரு சமூக வரலாற்றுப் பார்வை, கு.வி. கிருஷ்ணமூர்த்தி, அடையாளம் பதிப்பகம், பக். 340, விலை 280ரூ. மனித இனத்தின் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என அனைத்துக்கும் பெண்கள் தங்களின் பங்களிப்பை திறம்பட அளித்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. அதை இந்நூல் விளக்குகிறது. மருத்துவத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கி, வேதியியல், உளவியல், புவியியல், கணினிஇயல், உயிரியல், கணிதவியல் என அனைத்துத் துறைகளிலும் பெண் அறிவியலாளர்களின் பங்கு குறித்த வரலாறும் இதில் கூறப்பட்டுள்ளது. பிற நாட்டவர் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த மரபணு அறிஞரான இ.கே.ஜானகி […]

Read more

மறையாத வானவில் மகாகவி பாரதி

மறையாத வானவில் மகாகவி பாரதி, ஆசுகவி ஆராவமுதன், திராவிடமணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. பாரதியாரின் படைப்புகளில் ஆழ்ந்து தோய்ந்தவர் நூலாசிரியர் என்பதை இம்மரபுக் கவிதை நூல் விளக்குகிறது. பாரதியாரின் சில கவிதைகளையும், சில உரைநடை நூல்களையும் எடுத்துக்கொண்டு அதை மரபு வழுவாமல் மரபுக் கவிதைகளாகப் புனைந்துள்ளார். “அரிய உதயம் அவசர அஸ்தமனம்‘’ எனும் தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை இருபத்து நான்கு எண்சீர் விருத்தப் பாக்களில் பாடியுள்ளார். பாரதியார் கடலூர் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், ஊர் ஊராகச் சுற்றித் திரிந்ததை சில […]

Read more

மலர்களுக்காக மலர்ந்தவை

மலர்களுக்காக மலர்ந்தவை, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 184, விலை 135ரூ. “ஓம்சக்தி’ தீபாவளி மலருக்காக நூலாசிரியர் எழுதிய “மும்மூர்த்திகளும் தமிழர்களும்’, “கப்பலோட்டிய தமிழனின் கடைசி மணித்துளிகள்\’, “மாவீரனின் கடைசி மணித்துளிகள்‘’ ஆகிய கட்டுரைகள் போன்று பல்வேறு சமயங்களில் பல்வேறு மலர்களுக்காக எழுதப்பெற்ற கட்டுரைகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. “வடலூர் வள்ளலாரும் பசும்பொன் தேவரும்\’ கட்டுரையில் இருபெரும் மகான்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒப்பீடும், “மும்மூர்த்திகளும் தமிழர்களும்“ ட்டுரையில் காந்திக்கு “மகாத்மா’ என்ற பட்டம் எப்படி, யாரால் அளிக்கப்பட்டது “  என்பதற்கான விவரமும், மரணத்தைக் […]

Read more

பார் போற்றும் பகலவன் பாபா சாகேப் பயணப் பாதை

பார் போற்றும் பகலவன் பாபா சாகேப் பயணப் பாதை, எம்.ஏ. பாலசுப்பிரமணியன், சித்தார்த்த பதிப்பகம், பக். 655, விலை 450ரூ. 14.4.1891 முதல் 6.12.1956 வரையிலான சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கைப் பயணத்தை தேதி வாரியாக தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். நூலின் ஒவ்வொரு பக்கங்களும் அம்பேத்கர் எத்தகைய இடர்பாடுகளையெல்லாம் கடந்து தாழ்த்தப்பட்டவர்களை மிளிரச் செய்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. 1905-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் அம்பேத்கர் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர், “அவரிடம் தாழ்ந்த மஹர் இனத்தில் பிறந்த நீ படிப்பதனால் […]

Read more

நீங்கள் எந்த மரம்?

நீங்கள் எந்த மரம்?, தினமணி கட்டுரைகள், அ. அறிவுநம்பி, சித்திரம்,பக். 160, விலை 120ரூ. தினமணியில் வெளியான 21 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மொழி, சமூகம், நாடு தொடர்பான நூலாசிரியரின் தெளிவான கருத்துகள் இடம்பெற்றுள்ள இக்கட்டுரைகள், மிகவும் எளிமையானவை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். “அறம் என்பதை முதலீடாகக் கொண்டு பொருள் சேர். இரண்டின் அடிப்படையில் இன்பம் தானாக வந்து சேரும்‘’ என்று வாழ்வதற்கான நெறிமுறையைச் சொல்வதும், “சொல்லில் இனிமை கலந்து பேசும்போது எதிரியும் நண்பனாவான்; மாறாக வன்மை கலந்து உரையோடும்போது நண்பன் கூட […]

Read more
1 98 99 100 101 102 180