குஜிலிப் பனுவல்கள்

குஜிலிப் பனுவல்கள், க.விஜயராஜ், நறுமுகை,  பக்.238, விலை 180ரூ. “குஜிலிக் கடை’‘ – அந்தி நேரக் கடை என்பது, பழைய சென்னைப் பட்டணத்தில் இருந்த கடைவீதியைக் குறிப்பிடுவது. வெகுஜன ரசனைக்கு ஏற்ப தயாரான புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் அங்கு கிடைக்கும். இந்தப் புத்தகம் அப்படிப்பட்ட புத்தகங்களைப் பற்றியதாகும். இவற்றில் பலவற்றின்நோக்கம் சிற்றின்பக் கிளர்ச்சி. ஆசிரியரின் தகவல் அடுக்குகளில் “தலைகாணி மந்திரம்’‘, “குடியர் ஆனந்தப்பதமும் கெஞ்சாவின் ஆனந்தக் களிப்பும்‘’, “புகையிலையின் வெண்பாவும்’‘ ஏன் காலம் கடந்து நிற்கவில்லை என்பதைப் பெயர்களைப் பார்த்தே முடிவு செய்து கொள்ளலாம். […]

Read more

பிரயாணம்

பிரயாணம், பாவண்ணன், காலச்சுவடு,  பக்.216, விலை ரூ.190. பாவண்ணன் 1984இல் இருந்து எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 சிறுகதைகளின் தொகுப்பு. நம்மைச் சுற்றி வாழ்கிற பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, மன உணர்வுகளை மிகவும் அற்புதமாகச் சித்திரிக்கும் சிறுகதைகள் ஒவ்வொன்றும் நமக்குக் காட்டும் உலகு வித்தியாசமானது. நாம் அறிந்து கொள்ள வேண்டியது. வயதான காலத்தில் எந்த வருமானமும் இல்லாமல், எந்த ஆதரவும் இல்லாமல், ரெஜிஸ்டர் ஆபிஸில் யாருக்காவது சாட்சிக் கையெழுத்துப் போட்டு அதில் எப்போதாவது கிடைக்கும் சொற்பக் காசில் தன்னுடைய, தன் மனைவியினுடைய பசியைப் போக்கும் […]

Read more

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா, கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. நீயே உனக்கு நிகரானவன் ஏழு வயதில் எம்.ஆர்.ராதா ஆலந்தூர் மன மோகன ரங்கசாமியின் நாடகசபாவில் இணைகிறார். “கிருஷ்ண லீலா’ நாடகத்தில் பாலகிருஷ்ணனாக நடிக்கிறார். அதன் பிறகு பல சபாக்கள், பல மேடைகள். பால மீன ரஞ்சனி சங்கீத சபாவில் மட்டும் 15வருட அனுபவம்; சமூக சீர்திருத்தக்ப கருத்துகள் உடைய அவருக்கு, பெரியார், அண்ணாவுடன் பரிச்சயம் உண்டாகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, மு.கருணாநிதி ஆகியோருடனான நாடக அனுபவங்கள் கிடைக்கின்றன. கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய “இழந்த காதல்’\ நாடகத்தை பல […]

Read more

வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள்

வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் , ஜெகாதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம்,  பக்.128, விலை 80ரூ. வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் ஏற்கெனவே அ.கி. பரந்தாமனார் எழுதிய “மதுரை நாயக்க மன்னர் கால வரலாறு’‘ என்றநூலின் சுருக்கமாகவே இந்த நூல் உள்ளதாகக் கொள்ளலாம். வரலாற்றுச் செய்திகளை எந்த நூலாசிரியர் எழுதினாலும் ஒரே மாதிரியாகத்தான் விவரிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வரலாற்றை விவரிக்கும் முறையில் இந்நூலாசிரியர் தனது தனித்துவத்தை நிலைநிறுத்த தவறிவிட்டார் என்றே கூற வேண்டும். நூலில் ஆறுதலான விஷயங்களும் ஆங்காங்கே உள்ளதை மறுக்க […]

Read more

உபசாரம்

உபசாரம் ,சுகா, தடம் பதிப்பகம், பக்.152, விலை ரூ.130. திரைப்படத்துறையில் பணியாற்றும் நூலாசிரியர் எழுதிய 18 அனுபவம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திரைப்படத்துறையில் உள்ள படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலருடனான நூலாசிரியரின் அனுபவங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. நடிகை கல்பனா இவரை உடன் பிறவாத தம்பியாகக் கருதிப் பழகியது, வேலை நேரத்தில் முரண்பாடுகள் எழுந்தாலும் இவர் எடுக்கப் போகும் படத்தில் நடிக்க நடிகர் கலாபவன் மணி விரும்பியது, இவருக்கும் இவருடைய “வாத்தியார்‘’ பாலு மகேந்திராவுக்கும் உள்ள அன்புமிக்க அனுபவங்கள் என நெகிழ […]

Read more

தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுமை

தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுமை, க.வெங்கடேசன், வர்த்தமானன் பதிப்பகம், பக்.534, விலை ரூ.425. தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்த பலருக்கும் – அவர்கள் வாழுமிடம் பற்றிய தகவல்கள் கூட தெரியாமல் இருக்கும் இக்காலத்தில், இந்நூல் தமிழ்நாட்டைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்துத் தந்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஆட்சியமைப்பு வரலாறு சங்க காலத்திலிருந்து இன்று வரை கால வரிசையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது, தமிழ்நாடு அரசாங்கம், அது செயல்படும்விதம், பல்வேறு துறைகள், அவை இயங்கும் முறைகள், மாவட்ட, ஊராட்சி நிர்வாகங்களின் அமைப்புமுறை, அவை செயல்படும்விதம், கிராம நிர்வாக அலுவரில் இருந்து […]

Read more

சித்தர் இலக்கியங்கள் – பன்முகப் பார்வை

சித்தர் இலக்கியங்கள் – பன்முகப் பார்வை (இரு தொகுதிகள்), முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: ப.முருகன், சி.சதானந்தன், செம்மொழிக் கழகம், முதல் தொகுதி,- பக். 480, விலை ரூ.300; இரண்டாம் தொகுதி- பக். 520, விலை ரூ. 300. பாமரர்களுக்கும் விளங்குமாறு எளிய முறையில் வாழ்வியல் உண்மைகளைக் கூறியோர் சித்தர்களே. கடவுள் சார்ந்து, மருத்துவம் சார்ந்து, உடல் சார்ந்து, உலகம் சார்ந்து பல தத்துவங்களை சித்தர்கள் எளிமையாக விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் கூறிய கருத்துகளை ஆய்வு செய்யும்பொருட்டு நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட 158 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சித்தர் […]

Read more

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம், முகில், விகடன் பிரசுரம்,  பக்.493, விலை ரூ.250. வாழ்கின்ற மக்களுக்கு வாழ்கிற சாதனையாளர்களே பாடமாக அமைகிறார்கள் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். உலகின் அதிவேக மனிதர் உசைன்போல்ட் முதல் டிஸ்கவரி சேனலில் காடுகளில் வழிகண்டறிந்து சாகசம் நிகழ்த்தும் பியர் கிரில்ஸ் வரை நிஜவாழ்வின் கதாநாயகர்களை நம்முன் நிறுத்தி, அவர்களைப் போல நம்மையும் நனவுலக நாயகராக்கும் முயற்சியை நூலாசிரியர் சிறப்பாகவே செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட உசைன் போல்ட் தடகளத்தின் சரித்திரமானதையும், நடுத்தர வர்க்கத்தில் பிறந்து தனது அயராத உழைப்பால் […]

Read more

வளரும் ஒலிபரப்புக்கலை

வளரும் ஒலிபரப்புக்கலை, கோ. செல்வம், விஜயதிருவேங்கடம், வானதி பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. சோ.சிவபாதசுந்தரம் 1954 இல் எழுதிய “ஒலிபரப்புக்கலை‘’ என்ற நூலின் தொடர்ச்சியாக – அதன் வளர்ச்சிநிலையாக – இந்நூல் மலர்ந்திருக்கிறது. ஒலிப்பரப்புத்துறையில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற நூலாசிரியர்கள் இந்த நூலை எழுதியுள்ளார்கள். ஒலிபரப்புத்துறையின் பல்வேறு அங்கங்களை இந்நூல் விரிவாக விளக்குகிறது. வானொலி அறிவிப்பாளர் அல்லது தொகுப்பாளர் குரல் வளம், நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, சேர்ந்திசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்விதம், வானொலிக்கு எழுதும் முறை, வானொலிப் பேச்சின் தன்மை, வானொலி […]

Read more

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில் அருமை செல்வம், அசதா, காலச்சுவடு பதிப்பகம், பக். 96, விலை 100ரூ. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் கொலம்பியாவைச் சேர்ந்தவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இந்நாவல் சந்தியாகோ நாஸார் என்பவனின் கொலையுடன் தொடங்குகிறது. அக் கொலையுடனேயே நிறைவும் பெறுகிறது. இடையில் அவன் கொல்லப்படுவதற்கான காரணத்தை நாவல் விரட்டிச் செல்கிறது. பயார்தோ சான் ரோமான் என்பவரின் புது மனைவி ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு சந்தியாகோ நாஸார்தான் காரணம்; அதனால்தான் அவன் கொல்லப்பட்டான் என்பதாக […]

Read more
1 96 97 98 99 100 180