ஜென் சதை ஜென் எலும்புகள்

ஜென் சதை ஜென் எலும்புகள், பால் ரெப்ஸ், நியோஜென் சென்ஸகி, தமிழில் சேஷையா ரவி, அடையாளம், பக். 192, விலை 160ரூ. அமெரிக்கரான பால் ரெப்ஸ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற புத்த ஞானி நியோஜென் சென்ஸகி ஆகியோரால் தொகுக்கப்பட்ட படைப்புகளின் தமிழாக்கமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. மூல படைப்பில் உள்ள கருத்துகளைச் சேதமின்றி தமிழில் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது. நம் சிந்தனையைத் தூண்டும் வகையிலான உரையாடல்கள், நகைச்சுவை சம்பவங்கள், அனுபவ வழிகாட்டுதல்கள் 101 ஜென் கதைகளில் இடம்பெற்றுள்ளன. மறுபிறப்பு, […]

Read more

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், பக். 231, விலை 135ரூ. களப்பிரர் காலத்தை ஏன் தமிழகத்தின் இருண்டகாலமாகக் கருதுகிறோம் என்ற கேள்வியை மையமாக்கியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. களப்பிரர்கள் சமண சமயத்தவர் அல்ல; பெளத்தர்கள் என பல இலக்கியச் சான்றுகள் மூலம் நிலை நிறுத்தியுள்ளார் நூலாசிரியர். அதேசமயம், வைதீக மதத்துக்கு அவர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும் வாதிடுகிறார். ஆனால், “களப்பிரரும் சமயங்களும்’‘ எனும் கட்டுரையில் சமண, பெளத்த சமயப் பிரசாரம் களப்பிரர் காலத்தில் தழைத்து வளர்ந்ததையும், சைவ, வைணவ சமய […]

Read more

அறத்தந்தை அண்ணாமலை அரசர்

அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு.அருணாசலம் பிள்ளை, பதிப்பாசிரியர் ஆறு. அழகப்பன், முல்லை பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. அன்ன சத்திரம் கட்டுவதைவிட கல்விக்கூடம் அமைப்பது புண்ணியம் தருவது என்று கூறுவர். ஆனால், அன்ன சத்திரமும் கட்டி, கல்விக்கூடங்களையும் அமைத்து, மருத்துவசாலைகளையும் ஏற்படுத்தி, தமிழிசைக்கென சங்கம் நிறுவி, கோயில்களை உருவாக்கி குடமுழுக்கும் செய்வித்து, அரசாங்கப் பணியலமர்ந்து மக்கள் பணியும் மேற்கொண்ட ஒருவர் உண்டென்றால் அவர் அரசர் அண்ணாமலை செட்டியாராகத்தான் இருக்க முடியும். அவருடைய வரலாறு சுருக்கமாகவும் சுவையாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் தனித்தனியே […]

Read more

மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள் பகுதி 1

மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள் பகுதி 1, தமிழில் குறிஞ்சிவேலன், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், பக். 656, விலை 410ரூ. கார்ட்டூனிஸ்ட், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திரைக் கதாசிரியர், ஓவியர் என பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன். அவருடைய ஐந்து நாவல்கள் இரு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. முதல் தொகுப்பில் மூன்று நாவல்களும், இரண்டாவது தொகுப்பில் இரு நாவல்களும் இடம்பெற்றுள்ளன. பங்களா கட்ட பூர்வீக வீட்டையும், நிலத்தையும் விற்கச் செல்லும் ஐஏஎஸ் அதிகாரி, அவற்றை விற்காமல் திரும்பும் கதை “சல்லி வேர்கள்‘’. சுதந்திரப் போராட்ட […]

Read more

நாராய் நாராய்

நாராய் நாராய், ஆட்டனத்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 148, விலை 115ரூ. கடந்த 2015-லிருந்து தற்போது வரை விஜயபாரதம், உயிர் எழுத்து, தாமரை, கணையாழி, ஓம்சக்தி முதலிய இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு இது. வனத்துறை அலுவலராகப் பணியாற்றிய ஆட்டனத்தி, தனது பணி அனுபவங்களை அருமையான நடையில் சிறுகதைகளாக வடித்துத் தந்திருக்கிறார். நூலின் தலைப்பான “நாராய்… நாராய்…‘’ என்பது 13 கதைகளுள் ஒன்று. நூலைப் படித்தால், காடு, மலைகளைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். காடுகளில் […]

Read more

நவீன ஜோதிடம் ஜாதகப் பலன்கள் கூறும் கலையை விளக்கும் பேராசான்

நவீன ஜோதிடம் ஜாதகப் பலன்கள் கூறும் கலையை விளக்கும் பேராசான், எஸ். அன்பழகன், அன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா, பக். 884, விலை 750ரூ. ஜோதிட சாஸ்திரத்தில் கோள்களின் முக்கியத்துவம், ஜாதகங்களைக் கணிக்கும் முறைகள், நவக்கோள்களின் காரகத்துவங்கள், ராசி மண்டலத்தில் அமைந்துள்ள ராசிகள், அவற்றின் அதிபதிகள், ராசிகளுக்கான நட்சத்திரங்கள், அவற்றின் பாதங்கள், லக்னத்தைக் கணிக்கும் விதம், நவாம்சம் மூலம் ஜாதகங்களின் பலன்களைத் துல்லியமாகக் கணித்தல் என பல விவரங்கள் இந்த நூலில் பயனுற அமைந்துள்ளன. ராசிகள், லக்னங்கள், பன்னிரண்டு பாவங்களுக்கான பொதுப் பலன்கள், அந்த […]

Read more

காக்கியின் டைரி

காக்கியின் டைரி, பெ. மாடசாமி, நேசம் பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி, உதவி ஆணையராக ஓய்வு பெற்றவர் நூலாசிரியர். காவல்துறை பணியில் தனது அனுபவங்கள் – காவல்துறையில் பணிபுரிந்த, புரியும் தனது நண்பர்களின் அனுபவங்கள் – ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார். காவல்துறையில் பணிபுரிபவர்கள் சந்திக்க வேண்டிய பல்வேறு சவால்கள், சுமக்க வேண்டிய சுமைகள், அவர்களுடைய பல்வேறு பணிநெருக்கடிகள் ஆகியவற்றை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும். பலவிதமான குற்றங்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், அவர்களைப் […]

Read more

நிம்மதி

நிம்மதி, இடைமருதூர் கி. மஞ்சுளா, கலைஞன் பதிப்பகம், பக். 168, விலை 180ரூ. இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து மலேசியாவில் வெளியிடப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 22 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஓடும் ரயிலில், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது, பேருந்தில், ஆட்டோவில், மருத்துவமனையில், நெடுந்தூர ரயில் பயணத்தில்… ஏன், கனவில் கூட தன்னைச் சுற்றி நிகழ்ந்த – நிகழ்கின்ற நிகழ்ச்சிகளைக் கதைக் கருவாக்கியுள்ளார் நூலாசிரியர். தற்கால இளைஞர்களின் சுயநலப் போக்கை “சூளை’ சிறுகதை படம் பிடித்துக் காட்டுகிறது. “நிம்மதி’ […]

Read more

நூறு வடமொழிக் கதைகள்

நூறு வடமொழிக் கதைகள், பத்ம சாஸ்திரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், சாகித்திய அகாதெமி, பக். 256, விலை 150ரூ. வடமொழிக் கதைகள் என்பதை சம்ஸ்கிருத கதைகள் என்று புரிந்து கொண்டு படித்தாலும், இந்தக் கதைகள் எந்த வட்டத்துக்குள்ளும் பொருந்தவில்லை. மரபுவழிக் கதைகளா, நீதிக்கதைகளாக, புனைவுகளா, வேற்றுமொழிக்கதைகளா, பஞ்ச தந்திர கதைகளின் மாற்றுருவா? எதையும் நூலாசிரியர் சொல்லவே இல்லை. வாசகனே அவரவர் வாசிப்பின் பரப்புக்கேற்ப தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான். நூறு கதைகளில் அதிகபட்சமாக 4 கதைகளை “நன்று‘’ எனச் சொல்லலாம். குறிப்பாக, “இரும்பு வியாபாரி”, “அரசனின் […]

Read more

சூல்

சூல், சோ. தர்மன், அடையாளம், பக். 500, விலை 380ரூ. “தூர்வை’‘, “கூகை‘’ நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன். ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய “தரிசு நில மேம்பாடு’ புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார். எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாயை தூர்வாரி மராமத்துப் பணியை கிராமத்தினர் தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த நாவல். கண்மாயின் காவலனாக நீர்பாய்ச்சி, ஊர் பெரிய மனிதர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்தாலும் வழக்கம்போல் பிரச்னைகள் சூழ கதைக்களம் பல […]

Read more
1 100 101 102 103 104 180