தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்

தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம், ஸ்டாலின் ராஜாங்கம், பிரக்ஞை, பக். 176, விலை 145ரூ. மிழ் சினிமாவைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளி வந்திருக்கின்றன. இந்த நூல் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும், பேசப்படும் வசனங்களிலும் உள்ள “உண்மைத்தன்மை‘’யை மிகையின்றிப் பதிவு செய்திருக்கிறது. இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடிவேலுவின் கிராமத்தான், போலீஸ், ரவுடி போன்ற வெற்றிகரமான பாத்திரங்களைப் பற்றிய ஆய்வும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திறமை பற்றிய பதிவும் இரண்டாவது பகுதியில் அடங்கியிருக்கிறது.‘ பல விதங்களில் வித்தியாசமான படமாக இருந்தாலும் வன்முறைப் […]

Read more

தமிழர் பண்பாடும் தத்துவமும்

தமிழர் பண்பாடும் தத்துவமும், நா. வானமாமலை, அலைகள் வெளியீட்டகம், பக். 208, விலை 145ரூ. மார்க்சிய ஆய்வாளரான நூலாசிரியரின் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் அடங்கிய நூல் இது. வடநாட்டின் ஸ்கந்த வழிபாடு, தமிழகத்தின் முருகன் வழிபாட்டோடு இணைந்தது பற்றிய கட்டுரை, இவ்வுலக இன்பத்தைப் பெறும் பொருட்டே, அதற்காக வேண்டுவதற்காகவே தமிழகத்தில் முருகன் வழிபாடு இருந்ததை பரிபாடலின் மூலம் விளக்கும் கட்டுரை ஆகிய இரண்டும் முருகன் வழிபாட்டின் வரலாற்றை ஆய்வுப்பூர்வமாக விளக்குகிறது. மனிதனின் உழைப்பு, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் அடித்தளத்திலேயே கலைகள் தோன்றுகின்றன; […]

Read more

பாண்டியர் கொற்கை

பாண்டியர் கொற்கை, செ.மா. கணபதி, சங்கத் தமிழ்ப் பதிப்பகம், பக். 412, விலை 250ரூ. மதுரையை ஆண்ட “அகுதை’ என்ற மரபினரிடமிருந்துதான் பாண்டியர்கள் மதுரையைக் கைப்பற்றினர் என்பதும், முதன்முதலில் கொற்கையில்தான் பாண்டியர்கள் ஆட்சி செய்தனர் என்பதும் பாண்டியர் வரலாறு கூறும் செய்தி. இராபர்ட் கால்டுவெல் என்பவர்தான் பாண்டியரின் கொற்கை பற்றிய ஆய்வினை முதன் முதலில் மேற்கொண்டவர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள “கொற்கை’ என்னும் சிறிய கிராமம்தான் முன்பு, பாண்டிய அரசர்களின் சிறந்த நகரங்களுள் ஒன்றான கொற்கையாகத் திகழ்ந்தது. இக்கிராமம் குறித்த அறிமுகத்துடன் […]

Read more

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 289, விலை 240ரூ. ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொழி வளர்ச்சி, அதன் போக்கு, அதில் வெளிப்படும் பண்பாடு ஆகியவையே அந்த மொழி பேசும் மக்களின் முழுமையான அடையாளமாக விளங்கும் என்ற அடிப்படையில் இந்த நூல் பல பகுதிகளாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர் இலக்கியம் கடந்த 1950 வரை தமிழக இலக்கியத்தையே சார்ந்திருந்தது. அதன் பின்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வளர்ந்தது. இலங்கைத் தமிழ் இலக்கியப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. […]

Read more

சோதிடத்தில் பலன் காணும் முறை

சோதிடத்தில் பலன் காணும் முறை, இளங்கோவன், குருவருள் சோதிட ஆய்வு மையம், பக்.72, விலை ரூ. 100. ஒரு ஜாதகத்தை கையிலெடுக்கும் ஜோதிடர், அடிப்படையில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. லக்கினத்தின் முக்கியத்துவம், பாவங்கள், அந்த பாவங்களை ஆளும் கிரகங்களின் காரகத்துவங்கள், அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் செயல்பாடுகள், பாவங்களைக் கண்டு ஜாதகங்களை ஆராயும் திறன் போன்றவற்றை அக்கறையுடன் எடுத்துக் கூறி எளிமையான உதாரணங்களுடன் இந்நூலைப் படைத்திருக்கிறார் இந்நூலாசிரியர். கிரகங்களுக்குரிய நட்பு, பகை கிரகங்கள், அவை […]

Read more

வெற்றித் திருநகர்

வெற்றித் திருநகர், அகிலன், தாகம் பதிப்பகம், பக். 528, விலை 350ரூ. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘’ என்பதை தனது வாழ்க்கையின் சீரிய லட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் (விசுவநாத நாயக்கன்) கதையைப் படைத்துள்ளார் நூலாசிரியர். கல்லில் வடிக்கப்பட்ட அவன் உருவைக் காண விரும்புவர் இன்றும் அவனை மதுரைமீனாட்சி அம்மன் ஆலயத்தில் சந்திக்கலாம்! பெண்மைக்கு உரிய எல்லாச் சிறப்பும் பெற்றிருந்தாள் கதை நாயகி இலட்சுமி. வீரன் ஒருவனின் அன்பு நெஞ்சத்தையும் தனக்கே உரிமையாகப் பெற்றிருந்தாள். ஆயினும் தந்தையின் சூழ்ச்சிக் கொடுமைகளைத் தடுக்கவோ மனப்போக்கைத் திருத்தவோ முடியாத […]

Read more

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில், தமிழில் மு. சிவலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ. வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை உருவாக்கும் சிந்தனைகளைத் தூண்டும் நூல். சிறப்பான மொழி பெயர்ப்பு. நூலாசிரியர் நெப்போலியன் ஹில், 12 மகத்தான செல்வங்கள் எனப் பட்டியலிட்டு, நேர்மறை மனோபாவம், நல்ல உடல் ஆரோக்கியம், சகமனிதர்களுடன் நல்லுறவு, பயத்திலிருந்து விடுதலை, சாதிக்கும் தன்னம்பிக்கை, நம்பிக்கை கொள்வதற்கான ஆற்றல், நமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களைப் பகிர்ந்து கொள்வதில் நாட்டம், உழைப்பின் மீது காதல், திறந்த […]

Read more

நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும்

நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 176, விலை 135ரூ. லட்சியத்துக்காக வாழ்வதென்பது அண்மைக்காலமாக அனைத்து அரசியல் கட்சிகளிலும் அருகி வருகிறது. இந்நிலையில், பொதுவுடைமை இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணம் செய்த தியாகிகளின் வரலாறு, இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. ப.ஜீவானந்தம், கே.பாலதண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சி.எஸ்.சுப்பிரமணியம், சாம்பவான் ஓடை சிவராமன், சின்னியம்பாளையம் தியாகிகள் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த அற்புதமான மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன. இவை ஜனசக்தி, தாமரை உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானவை. பொதுவுடைமை சித்தாந்தம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, […]

Read more

நமனை விரட்டும் நாட்காட்டி

நமனை விரட்டும் நாட்காட்டி, நா. துரைசாமி, அனைத்தண்ட இராமலிங்கர் சன்மார்க்க சுத்த மாயா சித்தர் பீடம், பக். 432, விலை 210ரூ. அருட்பிரகாச வள்ளலார் சுமார் 51 ஆண்டுகள் இப்பூமியில் வாழ்ந்துள்ளார். அந்த 51 ஆண்டுகளில் அவர் வாழ்வில் நடந்த அற்புதங்களும், அவர் வெளியிட்ட கருத்துகளும் சிறு சிறு குறிப்புகளாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதல் பகுதியில், அருட்பிரகாசர் அகவல் வடிவில் எழுதிய – இதுவரை ஏட்டில் வராத – பிரபஞ்ச ரகசியமும் அதற்கான எளிய விளக்கமும் தரப்பட்டுள்ளது. இரண்டாம் […]

Read more

உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு

உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு, அப்துல் கலாம், விகடன் பிரசுரம், பக். 269, விலை 145ரூ. “ஒவ்வோர் இளைஞனுக்கும் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு லட்சியம் வேண்டும். அதை நிறைவேற்ற விடாமுயற்சியோடு கடுமையாக உழைக்க வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும்‘’ என்று இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதற்காக நூலாசிரியர் அழுத்தம் திருத்தமாக திரும்பத் திரும்ப கூறியிருப்பது, புத்தகத்தை ஆழமாகப் படிக்கத் தூண்டுகிறது. தவிர, 2020-இல் இந்தியா ஒளிர வேண்டும் என்ற தனது கனவை மெய்ப்படுத்த விவசாயம், அறிவியல், […]

Read more
1 102 103 104 105 106 180