பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, பக். 896, விலை 950ரூ. ஆதித் தமிழர்களின் வாழ்வியலையும், கலாசாரத்தையும், அரசாட்சியையும் விளக்கிக் கூறும் ஆவணப் பதிவாக இந்நூல் வெளிவந்துள்ளது. பொதுவாக சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இந்நூலாசிரியர், இவற்றுடன் கூட வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகளின் பார்வையிலும் பழந்தமிழனின் வாழ்வை அணுகியிருக்கிறார். கிமு 500-ஆம் ஆண்டு காலங்களில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகள் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததும், அந்த அளவுக்கு வர்த்தகத்தில் தலைசிறந்தவர்களாக நாம் விளங்கியதும் […]

Read more

ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை

ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை, நாகேஸ்வரி அண்ணாமலை, அடையாளம் வெளியீடு, பக். 332, விலை 270ரூ. 5 தலைமுறைகளைச் சேர்ந்த 25 பெண்களின் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல்.பெண்களைப் பற்றியும் குறிப்பாக அவர்களின் திருமண வாழ்க்கையின் நிலையைப் பற்றியும் பேசுகிறது. சிவகாசியைப் பூர்வீகமாகக் கொண்ட நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கல்வி கற்பதில் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், ஜாதிய நடைமுறைகள், எதிர்காலத்தை, குறிப்பாக திருமணத்தைத் தீர்மானிப்பதில் இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுதந்திரம் என்ன என்பது போன்ற முக்கிய […]

Read more

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம்

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம், கருத்துரை குறிப்புரை கோ. வடிவேலு செட்டியார், தொகுதி 1, பக். 872, தொகுதி 2, பக். 888, இரண்டு தொகுதிகளும் விலை ரூ 1400. பல்கலை வித்தகரான கோ.வடிவேலு செட்டியார் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக வாழ்ந்தவர். இலக்கியம், இலக்கணம், சித்தாந்தம், வேதாந்தம் முதலியவற்றில் கரைகண்ட வித்தகர். இவர், திருக்குறள் பரிமேலழகர் உரைக்குச் செய்துள்ள தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் அடங்கிய நூல், பல்லாண்டுகளாகத் தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்டும், பின்பற்றப்பட்டும், பாராட்டப்பட்டும் வந்த பெருமைக்குரியது. இந்நூலில் திருக்குறளின் […]

Read more

தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும்

தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும், இரா. காமராசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 156, விலை 125ரூ. குருகுலக் கல்வி முறையின் கடைசி எச்சமாகவும், ஆசிரிய – மாணவ உறவின் உச்சமாகவும் விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையில் தொடங்கி, பாரதி, பாரதிதாசன், விந்தன், கம்பதாசன், ஜெயகாந்தன், கா.மு. ஷெரீப், தி.க.சி. உள்ளிட்ட பதினைந்து அறிஞர்களின் தமிழ்ப்பணியை ஓரளவு விரிவாகவே பதிவு செய்திருக்கிறது இந்நூல். பெரும்புலவராக அறியப்பட்ட பின்னரும் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கற்றதும், அப்போது […]

Read more

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் எழுபது மடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் எழுபது மடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு, ஆர். வைத்தியநாதன், ஸ்ரீசங்கராலயம், பக். 208, விலை 250ரூ. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தை நிர்மாணித்த ஆதிசங்கரர் முதல் அம்மடத்தின் தற்போதைய பீடாதிபதிகளான ஜயேந்திரர், விஜயேந்திரர் வரையிலான எழுபது குருமார்களின் வரலாற்றை எல்லாரும் புரிந்து கொள்ளும் வண்ணம் (குருரத்னமாலிகா பாணியில்) எளிய தமிழில் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வோர் ஆச்சார்யாருடைய பூர்வாசிரம பெற்றோர், பிறந்த ஊர், ஆற்றிய பணிகள், முக்தியடைந்த ஊர், நாள் முதலிய செய்திகளைத் திரட்டிக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க பணி. பெரும்பாலான ஆச்சார்யார்களைப் பற்றிய […]

Read more

நல்ல சோறு

நல்ல சோறு, ராஜமுருகன், விகடன் பிரசுரம், பக். 176,விலை 120ரூ. கேழ்வரகு அல்வா, குதிரை வாலி கீரை ஃப்ரைடு ரைஸ், தினை பால் கொழுக்கட்டை, கேழ்வரகு லட்டு, சோள கார பணியாரம், கம்பு காரப் புட்டு, சாமை ஆப்பம், சாமை கொழுக்கட்டை, பனிவரகு பால் பணியாரம், தினை பர்ஃபி, கொள்ளு லட்டு… இவ்வாறு சிறுதானியங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பல உணவுப் பொருட்கள், இனிப்புகள், தின்பண்டங்கள் ஆகியவற்றின் செய்முறைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. உடனே இது சமையற் குறிப்பு நூல் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். அதற்கும் மேலாக, […]

Read more

எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி

எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி, எம்.எஸ்.எம்.அனஸ், மாற்றுப் பிரதிகள், பக். 184, விலை 120ரூ. ஜமாலுத்தீன் ஆப்கானி வடமேற்கு ஈரானில் 1838 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கைத்தொழில் புரட்சி நடந்து தொழில்கள் வளர்ந்த பின், உலகம் முழுவதையும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முனைந்தன. அவற்றின் ஆதிக்கத்துக்குட்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளை எதிர்த்தனர். அப்படி எதிர்க்கும்போது, மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றகரமான சிந்தனைகளையும் எதிர்த்தனர். இது இஸ்லாமிய சமயத்திலிருந்த பழமைவாதிகளுக்கு உரமூட்டுவதாக அமைந்தது. […]

Read more

வெள்ளத் தாண்டவம்

வெள்ளத் தாண்டவம், வரலாற்று மகா காவியம், நீதிபதி மு. புகழேந்தி, செல்லம் & கோ புத்தகப் பதிப்பாளர், பக். 300, விலை 300ரூ. மரபுக் கவிதை எழுதுவது அருகிப் போன இக்காலத்தில், மரபுக் கவிதையில் ஒரு காவியமே படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால், அது உண்மை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த பெருமழை, ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, உடமைகள் இழப்பு இவற்றை மையப் பொருளாக வைத்து இந்தக் காவியம் படைக்கப்பட்டிருக்கிறது. இன்று நமது […]

Read more

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும்

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும், எஸ்.பி. எழிலழகன், சுரா பதிப்பகம், பக். 408, விலை 250ரூ. மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், ராஜாஜி, வ.உ.சி., பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் உள்ளிட்ட பல முக்கியமான தலைவர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் வாழ்க்கை, அவர்கள் மக்களுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களுடைய சாதனைகள், அவர்களுடைய நினைவாக அமைக்கப்பட்ட மணிமண்டபங்கள், நினைவிடங்கள் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ள சிறந்த நூல். இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்களைப் பற்றி மட்டும் இந்நூல் குறிப்பிடவில்லை. கொல்லிமலையில் புகழ்பெற்ற அறப்பளீஸ்வரர் ஆலயத்தை நிறுவிய மன்னனான வல்வில் […]

Read more

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மன்னை.மு. அம்பிகாபதி

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மன்னை.மு. அம்பிகாபதி (தேர்வு செய்யப்பட்ட உரைகள் பகுதி 1), தொகுப்பாசிரியர் மு.அ. பாரதி, இயல் வெளியீடு, பக். 364, விலை 250ரூ. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 1977 முதல் 1980 வரை மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த மன்னை.மு.அம்பிகாபதி, மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள், இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே அவர் சட்டமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்துதல், தனியார் பேருந்துகளை […]

Read more
1 99 100 101 102 103 180