பேசும் வரலாறு

பேசும் வரலாறு, அ.கே.இதயசந்திரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 150ரூ. முக்தா சீனிவாசனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இந்நூலாசிரியர், பின்னர் இயக்குநராக வளர்ந்து, இன்று தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர் சங்கத்தின் இணைச்செயலாளராக உள்ளார். இவர் வரலாற்றுச் சிறப்புமிக்க இராஜாஜ சோழனின் வரலாற்றுச் சாதனைகளை இந்நூலில் பதிப்பித்துள்ளார். இந்நூல் நாவல் இல்லை. ஆனால் நாவலைப் படிப்பது போல ஆவலைத் தூண்டும் நூல். சரித்திர காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்தான் சிறப்பு மிக்க மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள். காரணம் இவர்களிடம் ஆட்சித்திறமை மட்டுமின்றி, […]

Read more

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம், (பாகம் 7), பேராசிரியர் டாக்டர் எஸ் சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், பக்கம் 296, விலை 220ரூ. ஆயுர்வேத மருத்துவப் பட்டம் பெற்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இந்நூல் ஆசிரியர், தினமணி கதிரில் 2004 முதல் 2017 வரை வாசகர்கள் தங்கள் நோய்களுக்கான மருத்துவம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல். இதற்கு முன் இந்நூலின் ஆறு பாகங்கள் இதேபோல் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு வெளியாகிய நிலையில் நல்ல வரவேற்பு […]

Read more

யுவான்சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப் பயணம்

யுவான்சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப் பயணம், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 160ரூ. சீனாவிலுள்ள புத்தமத நூல்கள் பலவற்றிலுமுள்ள முரண்பாடுகளைக் கண்டு, புத்தர் அவதரித்த இந்தியாவிற்கே சென்று உண்மை நிலையை அறிய விரும்பி, கி.பி.629-ல் பயணத்தை மேற்கொண்டவர் சீனத் துறவி யுவான் சுவாங். 20 வயதிலேயே தனது நாட்டை விட்டு வெளியேறி, காடுகள், மலைகள், பாலைவனம், சீதோஷ்ணம், காட்டு விலங்குகள், கெள்ளையர் கூட்டம்… என்று பல இடர்களையும், தடைகளையும் கடந்து கால்நடையாகவே இந்தியாவிற்குள் வந்தார். பாடலிபுத்திரத்திலுள்ள நாளந்தா பல்கலைக் […]

Read more

அதுவும் இதுவும்

அதுவும் இதுவும், டாக்டர் க.விஜயகார்த்திகேயன் I.A.S., விஜயா பதிப்பகம், பக். 152, விலை 120ரூ. மருத்துவக் கல்வியை முடித்து ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்று, தற்போது கோவை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள இந்நூலாசிரியர், நல்ல எழுத்தாளராகவும், பண்பட்ட பேச்சாளராகவும் விளங்குபவர். இவர் ஏற்கெனவே எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்., விடை பாதி எழுதும் பாணி பாதி என்ற இரு நூல்களையும் எளிய தமிழ் நடையில், அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதும் அரசுத் தேர்வாணைய மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டி நூல்களாகப் படைத்து, நல்ல பாராட்டைப் பெற்றவர். இந்நூலில் […]

Read more

கடல் குதிரைகள்

கடல் குதிரைகள், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 240, விலை 175ரூ. மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இந்நூலாசிரியர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று பல புதினங்களைப் படைத்துள்ளார். அவற்றில் பல இஸ்லாமிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளும், மத நம்பிக்கைகளும் பின்னப்பட்டு, யதார்த்தத்தை வெளிப்படுத்துபவை. குறிப்பாக, உண்மை நிகழ்வுகளை வைத்தே கற்பனைக் கதைகளை உருவாக்குவது இவரது பாணி. இந்நூலிலுள்ள எட்டு நெடுங்கதைகளும் இதே பாணியில் அமைந்துள்ளது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘கடல் குதிரைகள்’ என்ற முதல் கதை, கடத்தலைப் பற்றி ‘இந்தியா டுடே’யில் வெளியான […]

Read more

ஐம்பெருங்காப்பியங்களும் தமிழர் வாழ்வும்

ஐம்பெருங்காப்பியங்களும் தமிழர் வாழ்வும், கி.நெடுஞ்செழியன், வளர்மதி பதிப்பகம், விலை 200ரூ. மயிலாடுதுறையில் வழக்குரைஞராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், ‘தமிழ்மாமணி’ விருதும், ‘கரைகண்டம்’ என்ற புனைப்பெயரும் பெற்றவர். இவர் தமிழில் கரை காண முயற்சித்திருப்பது இந்நூலின் மூலம் அறியமுடிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் தமிழ்க் கடைச்சங்கம் தோன்றிய காலத்தில் உருவான தமிழ் இலக்கியங்கள் பல. அவற்றில் ஐம்பெருங்காப்பியங்களும் உண்டு. அதில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகியவை சமணக் காப்பியங்கள் என்றும், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவை பௌத்த காப்பியங்கள் என்றும் கூறப்படுவதுண்டு. இக்காப்பியங்கள் அச்சமயக் கொள்கைகளைப் போதிப்பதில்லை. […]

Read more

நல்லவற்றையே நாடுங்கள்

நல்லவற்றையே நாடுங்கள், மு.முகம்மது சலாகுதீன், பஷாரத் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 80ரூ. நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த இந்நூலாசிரியர், நல்ல எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர். இவர் தமிழகத்தின் மிகப் பெரும் நாளிதழான ‘தினத்தந்தி’ வெள்ளி மலரில் அவ்வப்போது எழுதிய மதநல்லிணக்கம் மற்றும் சமயரீதியிலான கட்டுரைகளில் சிறப்பானவற்றின் தொகுப்பே இந்நூல். இக்கட்டுரைகள் ஜாதி – மத வேறுபாடின்றி பலராலும் படித்து பாராட்டப்பட்டவை. மனிதன் எத்தகைய குணநலன்களோடு – எப்படி வாழ்வது, அது சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் எப்படி ஏற்றது என்பன போன்றவற்றை குர் – ஆன் மற்றும் […]

Read more

மனிதன் புரியாத புதிர்

மனிதன் புரியாத புதிர்(Man The Unknown), அலெக்சிஸ் காரெல், முல்லை பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்நூலாசிரியர் முதல் உலகப் போரின்போது (1914-19) ராணுவ சிறப்பு மருத்துவராக அரிய சேவை புரிந்து அமெரிக்கா, பிரிட்டிஷ் போன்ற அரசுகளால் கௌரவிக்கப்பட்டு ‘நோபல்’ பரிசும் பெற்றவர். இந்நூல் மருத்துவத்தையும், மனிதனையும் விஞ்ஞானக் கண்ணோடு ஆராய்ச்சி செய்து எழுதியது. 1935ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல், உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு, பல பதிப்புகளைக் கண்டது. நமது முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாம் […]

Read more

முன்னேற்றம் உங்கள் கைகளில்

முன்னேற்றம் உங்கள் கைகளில், துடுப்பதி ரகுநாதன், வசந்தா பிரசுரம், பக். 192, விலை 125ரூ. மூத்த எழுத்தாளரான இந்நூலாசிரியர் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். கட்டுரைகள், குறுநாவல்களை படைத்துள்ளார். இவரின் ‘மாயமான காப்பகம்’ என்ற நாவல் 2013ல் வெளிவந்து, சிறந்த நாவலாக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தால் தேர்வு செய்து, விருது பெற்றது. வாழ்க்கையில் முன்னேற விரும்புவர்களுக்கு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, ஊக்கத்துடன் செயல்படத் தூண்டும் விஷயங்களை தினமலர் மற்றும் பாக்யா போன்ற பத்திரிகைகளில் இந்நூலாசிரியர் எழுதிய தொடர் கட்டுரைகள் வாசகர்களின் வரவேற்பை பெற்றன. அவற்றில் சிறப்பான 62 […]

Read more

கசடறக் கற்க கற்பிக்க…

கசடறக் கற்க கற்பிக்க…, முனைவர் மு.கனகலட்சுமி, சிவசக்தி பதிப்பகம், பக். 156, விலை 140ரூ. ஷெனாய் நகரிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் இந்நூலாசிரியர், இதற்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர். பி.ஹெ.டி வரை கல்வித் தகுதி பெற்றுள்ள இவர், ஆரம்பக் கல்வி மாணவர்கள் மிக எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை எழுதி, படிக்க புதிய முறைகளை ஆய்வு செய்து இந்நூலை உருவாக்கியுள்ளார். முதலில் குழந்தைகள் மொழி கற்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டறிந்து, […]

Read more
1 2 3 4 5 21