முத்தும் பவளமும்

முத்தும் பவளமும், தொகுப்பாசிரியர் முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ, சாஜிதா புக் சென்டர், பக். 944, விலை 400ரூ. இஸ்லாமிய வாழக்கைக்கு வழிகாட்டியாக இருப்பவை திருக்குர்ஆனும், ஹதீஸும். குர்ஆன் என்பது இறைவன் அருளிய வேதம். ஹதீஸ் என்பது நபிகள் நாயகம்(ஸல்)) அவர்கள் அருளிய வாழ்க்கை நெறி. இஸ்லாமியர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள், தனது வாழ்க்கை முறையைக் கொண்டே வழிகாட்டினார்கள். அவற்றின் தொகுப்பே ஹதீஸ் நூல்கள். இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், வியாபாரம், கல்வி சமூக […]

Read more

விடுதலைப் போர் தெரிந்த பெயர்கள் தெரியாத தகவல்கள்

விடுதலைப் போர் தெரிந்த பெயர்கள் தெரியாத தகவல்கள், ஆர்.பி.வி.எஸ். மணியன், அத்வைத் பப்ளிஷர்ஸ், பக். 200, விலை 120ரூ. இன்றைய தலைமுறையினருக்கு அந்நியர்களிடம் குறிப்பாக வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம்நாட்டை மீட்டெடுக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த நம் விடுதலைப் போராட்ட வீரர்களின் அருமை, பெருமைகளை நினைவூட்டுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. காரணம், தேச விடுதலை என்றால் என்ன, அந்நியர்களிடம் தேசம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது நாட்டில் நடந்த நிகழ்வுகள் என்ன, அதனால் மக்கள் அன்றாடம் அடைந்த துயரங்கள் என்ன… என்பன போன்ற […]

Read more

பாலாற்றங்கரை தெய்வங்கள்

பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம், பக். 136, விலை 80ரூ. இந்நூலாசிரியர் கல்கிப் பத்திரிகையில் எண்ணற்ற அரசியல் கட்டுரைகள், பேட்டிகள் என்று சுமார் 35 வருடங்கள் எழுத்துப் பணியாற்றியவர். தவிர, ‘கல்கி’ குழுமத்தின் ‘தீபம்’ என்ற ஆன்மிக இதழில் ‘பாலாற்றங்கரைத் தெய்வங்கள்’ என்ற தலைப்பிலேயே, இவர் எழுதிய திருத்தலங்களைப் பற்றிய கட்டுரைகள் வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அவற்றின் தொகுப்பே இந்த நூல். இந்தியாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதா, கோதாவரி, காவிரிஆகிய ஏழு நதிகள் புண்ணிய நதிகள் என்று […]

Read more

வகாபிசம் எதிர் உரையாடல்

வகாபிசம் எதிர் உரையாடல், ஹெச்.ஜி.ரசூல், பாரதி புத்தகாலயம், பக். 160, விலை 140ரூ. மார்க்ஸியவாதியான இந்நூலாசிரியர் இப்படியொரு நூலை எழுதியுள்ளது ஆச்சரியப்படத்தக்கது. ‘இஸ்லாம்’ மூடநம்பிக்கைகளை அகற்ற மட்டுமின்றி, உலகில் அமைதியை நிலைநாட்டவும் தோன்றிய மார்க்கம். ஆனால், இன்று அம்மார்க்கம், அப்படிப்பட்டதா, இல்லையா என்ற விவாதத்திற்கு ஆளாகியுள்ளது. காரணம், இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாமிய நாடுகளிலேயே நடக்கும் தீவிரவாதச் செயல்களால், இஸ்லாமிய மக்களே கணிசமான அளவில் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள். ஓர் இறை நம்பிக்கைகயையும், அழகிய வாழ்வியலையும் முழுமையான முறையில் போதித்த இம்மார்க்கத்தின் ‘ஈமான்’ என்ற […]

Read more

பயன் தரும் பட்டிமன்றம்

பயன் தரும் பட்டிமன்றம், புலவர் கு.அனாதரட்சகன், மீனாட்சி பிரசுரம், பக். 304, விலை 300ரூ. பட்டிமன்ற நிகழ்ச்சி என்பது மற்ற நிகழ்ச்சிகளை விட அறிவார்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல நூல்களைப் படித்து அறியக்கூடிய பல்வேறு கருத்துக்களை, தகவல்களை பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறிய முடிகிறது. தவிர, ஒரு விஷயத்தைப் பற்றிய நேர்மறை, எதிர்மறைக் கருத்துக்களையும், அவை குறித்த ஆதாரப்பூர்வமான புள்ளி விபரங்களையும் மனதில் ஆழமாகப் பதிய உக்கிரமாகவும், சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவையாகவும் எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள், பெரியவர் முதல் சிறியவர் வரை […]

Read more

அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகள்

அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகள், மவ்லவி பி.எம்.கலீலூர் ரஹ்மான், எஸ்.கே.எஸ். பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 100ரூ. சென்னை பள்ளிவாசல் ஒன்றில் இமாமாகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்கள் பல எழுதி பிரசித்திப் பெற்றவர். இவர் முன்னாள் ஜனாதிபதியான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகளைச் சேகரித்து இந்நூலில் தொகுத்துள்ளார். அப்துல் கலாம் இஸ்லாமியராக இருந்தும், அந்த முறையில் அவர் வாழவில்லை என்ற கோணத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சில எழுப்பிய விமர்சனங்கள், எவ்வளவு தவறானவை என்பதை தக்க ஆதாரங்களோடு, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையிலும் […]

Read more

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம், தொகுப்பாசிரியர் பி. மகாதேவ அய்யர், அல்லயன்ஸ் கம்பெனி, பக். 320, விலை 400ரூ. 1946-ல் ‘நர்மதா ரஹஸ்யம்’ என்று ஹிந்தியில் வெளியான நூலில், வடநாட்டில் உருவான நர்மதா நதியின் மகிமை குறித்த பல்வேறு விஷயங்கள் தொகுக்கப்பட்டு பலரது கவனத்தைக் கவர்ந்தது. மகிமைகளை தொகுத்து ஒரு நூல் வெளியாக வேண்டும் என்ற ஆவல், காஞ்சி மடத்தின் மஹா பெரியவராக இருந்த மறைந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்குத் தோன்ற, அதன் அடிப்படையில் இந்நூல் உருவானது. ஸ்ரீ காஞ்சி மஹாஸ்மிகளின் ஆசியுடன் 1962-ல் […]

Read more

ஆன்மீகம் தெரிந்ததும் தெரியாததும் (இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்கள்)

ஆன்மீகம் தெரிந்ததும் தெரியாததும் (இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்கள்), டாக்டர் மா. ஷிவகுமார், அழகு பதிப்பகம், பக். 224, விலை 180ரூ. தென்னக ரயில்வேயில் இன்ஜீனியராக 33 ஆண்டுகள் பணியாற்றிய இந்நூலாசிரியர், ஜோதிடத் துறையிலும் 25 வருட அனுபவங்களைப் பெற்று, இது குறித்து பல பாடங்களையும் கற்று பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். ஜோதிடம் பார்க்க வருபவர்கள் தங்கள் மனதில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இவர் அளித்துள்ள பதில்கள், கேட்பவர்களுக்குப் பெரும் திருப்தி அளித்துள்ளன. அவற்றின் தொகுப்பே, இந்நூல். சந்தேகங்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் […]

Read more

தக்கர் கொள்ளையர்கள்

தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், பக்.224, விலை 200ரூ. வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்நூலாசிரியர், இத்துறை தொடர்பான மிகப் பழைமையான ஆவணங்களைத் தேடி நாடு முழுவதும் பயணம் செய்து, பலவகையான அரிய தகவல்களைத் திரட்டியுள்ளார். அந்த வகையில் தக்கர் கொள்ளையர்களைப் பற்றிய தனியான தொகுப்பே இந்நூல். பாரசீகத்தில் முஸ்லிம் மதத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு இந்தியா வந்த நாடோடி பழங்குடியினரும், இங்குள்ள ஹிந்து பழங்குடியினரும் இணைந்து உருவாக்கியதே இந்த தக்கர் குற்றச் செயல்பாடுகள். இவர்கள் சுமார் 8000 ஆண்டுகளாக இந்தியாவின் வட […]

Read more

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 242, விலை 220ரூ. மக்களுக்குப் பயனுள்ள நூல்களை வெளியிட்டு வரும் இந்நூலாசிரியர், உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த இந்நூலை வெளியிட்டுள்ளார். மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு நடத்தும் ஆட்சி மக்களாட்சி. இது கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்த வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதே, இந்திய அரசியலமைப்பில் 73 மற்றும் 74-ஆவது திருத்தங்கள். இதன்மூலம், அரசின் உயர்மட்ட அதிகார மையத்திலிருந்து அடிமட்ட நிர்வாகம் வரையிலான அதிகாரப் பரவல், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Read more
1 2 3 4 5 6 21