அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே, பா. முருகானந்தம், விகடன் பிரசுரம், பக். 143, விலை 75ரூ. கடவுளுக்குத் தெரியாமல் உலகத்தில் எதுவும் நடக்க முடியாது. அதுபோல இணையத்தில் உள்ள ரகசியங்களும் தெரியாமல் இருக்க முடியாது. எனவேதான், வாழ்வின் அந்தரங்க உறவுகள் இணையத்தில் பகிரங்கம் ஆகிவிட்டன. இணையத்தில் புகுந்து ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் இணையற்ற துப்பறியும் மேதை ஆஸ்திரேலியர் ஜுலியன் அசாஞ்சே. இவர் தன் விக்கிலீக்ஸ் மூலம் பல நாட்டு ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தி அசரவைத்தார். கம்ப்யூட்டர் மூலம் சமூக அவலங்களை, லஞ்ச ஊழல்களை, அடக்குமுறைகளை […]

Read more

ஜான் கென்னடி கொலையானது எப்படி?

ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி, 1963ம் ஆண்டு டல்லாஸ் நகரில் காரில் ஊர்வலமாக சென்றபோது எவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார்? அவரை சுட்டதாக கைது ஆன ஆஸ்வால்டு என்பவனை ஜேக் ரூபி என்பவன் சுட்டுக்கொன்ற மர்மம் என்ன? என்பது பற்றியும், மற்றும்  இது தொடர்பான அனைத்து தகவல்களும் துப்பறியும் நாவல்போல சுவைபட தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கென்னடி கொல்லப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரை உண்மையில் சுட்டுக்கொன்றது […]

Read more

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், வேளுக்குடி கிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 216, விலை 115ரூ. சகல புண்ணியங்களும் பெற வேண்டுமென்றால் பகவானின் திவ்ய நாமங்களைச் சொன்னாலே போதும் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில் கண்ணன் நாமம் சொல்லும் க9தைகள் என்ற தலைப்பில் பல்வேறு அத்தியாயங்களை, மாருதியின் உயிரோட்டமான வண்ண ஓவியங்களுடன் தந்து விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். கண்ணனைப் போற்றம் கதைகள் அனைத்தும் ஸ்ரீ கண்ணனக்கே உரிய குணங்களான சுறுசுறுப்பு, துறுதுறுப்பு, குதூகலம் ஆகியவற்றை எளிமையாக அனைத்துத் தரப்பு […]

Read more

வெற்றி வெளியே இல்லை

வெற்றி வெளியே இல்லை, வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், சென்னை, பக். 224, விலை 100ரூ. நூலின் தலைப்பே நம்மைப் படிக்கத் தூண்டுகிறது எனலாம். நாடறிந்த வழக்கறிஞர் நூலின் ஆசிரியர். சிறந்த பேச்சாளரான நூலாசிரியர், ஏற்கனவே பல சுயசிந்தனை நூல்களை எழுதியுள்ளார். இந்நூலும் நம் சிந்தனையைத் தூண்டி, நல்லறிவு பெறவைக்கிறது. 50 தலைப்புகளில் நூலாசிரியர் தம் எண்ணச் சிறகுகளை விரித்துள்ளார். அத்தனையும் படிப்போர்க்கு, இனிக்கும் என்றே கூறலாம். திருக்குறள், கம்பராமாயணம், திரிகடுகம், பழமொழி நானூறு என, பல நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, நூலாசிரியர் […]

Read more

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம்

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம், பத்மா ஸ்ரீநாத், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரசகாசனம் வெளியீடு, சென்னை 28, பக். 220, விலை 250ரூ. மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும் வழக்கமான பாணியை வேறுவகையில் மாற்றி, அமைத்துள்ளது சி.சி.இ. என்ற தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீட்டுமுறை. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ. இந்தத் திட்டத்தை தமிழக அரசும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு வினாக்களுக்கு விளக்கமாக விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கும் தனது குழந்தை கற்கும் […]

Read more

திலக பாமா கவிதைகள்

திலக பாமா கவிதைகள், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 732, விலை 650ரூ. இந்நாளின் புதுக்கவிதை வாணர்களுள், குறிப்பாக பெண் கவிஞர்களுள் குறிக்கத்தக்க, ஒருவர் திலக பாமா, மரபின் தாக்கம் கொண்டவை, இவரது படைப்புகள். ஆனால் சிந்தனைகள் புதுமை வேகம் கொண்டவை. மொழியைப் பயன்படுத்தும் வல்லமை வாய்ந்துள்ள, இவரின் சொல்லாட்சிகள் சுவைக்கத் தக்கன. கவிதைகளைக் கதைகளாகவும், கதைகளைக் கவிதைகளாகவும் எழுதக்கூடிய சதுரம்பாடு பாராட்டத்தக்கது. வழிவழியாகப் பெண்ணைப் படைத்த பாதையினின்றி விலகி, ஒரு புதுப் பாதையை இவர் […]

Read more

நிழல் இளவரசி

நிழல் இளவரசி, இந்து சுந்தரேசன், தமிழில்-மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், பக். 512, விலை 250ரூ. பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை, கைப்பற்ற ஷாஜஹான் மிகக் கடுமையாகப் போரிட்டு ஈவிரக்கமில்லாமல், தன் சொந்த சகோதரர்கள், உடன் பிறவா சகோதரர்கள் மற்றும் மருமகன்கள் என்று எல்லாரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, முடி சூட்டிக் கொள்கிறார். காதல் மனைவி மும்தாஜ் உடன்கூடிக் களித்து, பதினான்கு குழந்தைகளைப் பெறுகிறான். நாவல் ஆரம்பத்திலேயே மும்தாஜ், தன் 38 வயதில் பதினாலாவது குழந்தையை பெற்று விட்டு இறந்துபோகிறாள். தந்தையை கவனித்துக் […]

Read more

வெல்லும் சொல்(வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)

வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள் – வெல்லும் சொல், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 300ரூ. அரசியல் பற்றி மட்டுமல்ல, இலக்கியம் பற்றியும் மனதைக் கவரும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர் வைகோ. அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள் அடங்கிய நூல் வெல்லும் சொல். சிலப்பதிகாரம் பற்றிய அவருடைய விரிவான உரையில், கண்ணகி கோவலன் வரலாற்றை சிறந்த முறையில் எடுத்துக் கூறுவதுடன் சிலம்புக்கு நிகரான காப்பியம் வேறு எந்த மொழியிலும் கிடையாது என்று அடித்துக் கூறுகிறார். கல்கியின் அற்புத நாவல்களான பொன்னியின் செல்வன், […]

Read more

தமிழ்நாட்டுப் பறவைகள்

தமிழ்நாட்டுப் பறவைகள், முனைவர் க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், விலை 300ரூ. அழியா அழகான இயற்கைக்கு அணி சேர்ப்பது பறவையினம். மொபைல் டவர் பாதிப்பால், சிட்டுக்குருவிகள் காணாமல் போனதாக பேசுகிறோம். சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நமது வாழ்வில், அழகான பறவைகள் பற்றி அறிய இந்த நூல் உதவிடும். பைனாகுலர் கையில் இருந்தால் தூரத்தில் உள்ள பறவைகளையும் பார்த்து மகிழலாம். ஆனால் அதன் வண்ணம், சிறகுகளின் சிறப்பு, அலகுகள், அதன் பெயர், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கின்றனர். தமிழகத்தில் எங்கே அவைகளை காணலாம் என்ற பல கேள்விகளுக்கு விடை […]

Read more

மனிதனாகும் பொருளே

மனிதனாகும் பொருளே, கே.வி. புருஷோத்தமன், செல்வி பதிப்பகம், 14, நான்காவது குறுக்குத் தெரு, வெங்கட்டா நகர், புதுச்சேரி 605011, பக். 134, விலை 100ரூ. ஆசிரியர் தமக்குத் தெரிந்த அனுபவச் சுவடுகளைத் தொகுத்து, இடை இடையே சிறு சிறு கதைகளை ஆங்காங்கே பொருத்தி எழுதியுள்ள, 31 கட்டுரைகள் அடங்கிய புத்தகம். கல்லூரி மாணவர்கள், இந்த நூலைப் படித்தால் பெரிதும் பயன் அடைவர். எளிய தமிழ்நடை, அரிய அருமையான கருத்துக்கள். நூலாசிரியர் தாம் நினைத்ததை எழுத்தில் சிறப்பாக வடித்துள்ளார். -ஜனகன்.   —-   ஸ்ரீ […]

Read more
1 17 18 19 20 21 31