லீ குவான் யூ

லீ குவான் யூ, பெருந்தலைவன், பி.எஸ்.ராஜகோபாலன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. சிங்கப்பூரின் பெருந்தலைவர் லீ குவான் யூவின் வரலாறு. இன்றைய தேதியில் உலகத்திலேயே எல்லோரும் விரும்பும், பயணப்படும் நாடும் அதுதான். இந்த மாற்றத்துக்காக லீ பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. கண்டிப்பு, தாராளம், உறுதி என்ற விசித்திர கலவையில் நாட்டை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். இன்றைக்கும் பூமியின் சொர்க்கமாக சிங்கப்பூரையே சுட்டுகிறார்கள். எதையும் துணிந்து செய்வதற்கும், மறுமலர்ச்சி கொண்டு வருவதற்கும் ஒரு தலைவன் வேண்டும். அதற்கு அவனே தூய்மையாக இருத்தல் அவசியம். அப்படியிருந்து […]

Read more

வீரம் விளைந்தது

வீரம் விளைந்தது, தமிழில் ஆதி வள்ளியப்பன், புக்ஸ் பார் சில்ரன், விலை 50ரூ. உலகமெங்கும் சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவோருக்கு உத்வேகம் அளிக்கும் உன்னதப் படைப்பு, ‘வீரம் விளைந்தது’. இந்த ரஷிய நாவல், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாடகமாகவும், திரைப்படமாகவும் வடிவம் பெற்றிருக்கிறது. அதைத்தான் அழகு தமிழில் மறுஆக்கம் செய்திருக்கிறார் ஆசிரியர் ஆதி வள்ளியப்பன். இந்நாவலின் நாயகனான பாவெல் கர்ச்சாகின், சகாப்தம் படைத்தவன். நூலை எழுதிய ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் வாழ்க்கையும் பணிகளுமே நாயகனுடையதாகக் கூறப்பட்டுள்ளன. அதனால் நாயகனின் புரட்சிப் பயணத்தில் நாமும் […]

Read more

இணைந்த கல்வி உருவாக்கம்

இணைந்த கல்வி உருவாக்கம், டாக்டர் கி.உமா மகேஸ்வரி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 100ரூ. அனைவருக்கும் தொடக்கக் கல்வி, அனைவருக்கும் உயர்நிலைக் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி என்னும் எழுச்சிமிக்க வாசகங்கள், இந்த 21ம் நூற்றாண்டில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கல்விச் சிந்தனைகளும், கோட்பாடுகளும் ஆங்கிலத்தில் இருப்பதால், அனைவருக்கும் அது எளிதில் சென்று சேராமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அவரவர் தாய் மொழியில், கல்விச் சிந்தனை பரவ வேண்டும் என்னும் உயர் நோக்கத்தில் தமிழில் உருவாக்கப்பட்டு உள்ளது இந்நூல். செவித்திறன், பேச்சுத் திறன், […]

Read more

தகப்பன் சாமி

தகப்பன் சாமி, ராமசுப்பு, வித்யுத் பப்ளிகேஷன்ஸ், பக். 114, விலை 100ரூ. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியது விசாக நட்சத்திரத்தில். எனவே முருகனை, விசாகன் என்றும் அழைக்கின்றனர். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கார்த்திகேயன் எனப்படுகிறான். சூரனை வெல்வதற்காகப் படைக்கப்பட்ட முருகன், வீரபாகு உட்பட, ஒன்பது வீரர்களின் துணையுடன், சக்தி கொடுத்த வேல் கொண்டு தாரகாசுரனையும், சிங்கமுகனையும் மற்றும் சூரனையும் அழிக்கிறான். தீபாவளியும், திருக்கார்த்திகையும் ஒரே விழாக்கள் என்றும், பங்குனி உத்திரத்தில் வள்ளியை, முருகன் மணம் புரிந்தான் முதலான தகவல்களை, இந்த நூல் எடுத்துரைக்கிறது. […]

Read more

நெல்லை வரலாற்று சுவடுகள்

நெல்லை வரலாற்று சுவடுகள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக். 244, விலை 240ரூ. திருநெல்வேலி சீமைப் பற்றிய, சிறு சிறு, பல அரிய செய்திகளை, இந்நூலுள் தொகுத்து வழங்கி உள்ளார், நூலாசிரியர். தென்கயிலை எனவும், பொதிகைமலை எனவும் போற்றப்படும், அகத்தியர்மலை முதல், அம்பாசமுத்திரத்தில் துண்டிக்கப்பட்ட தண்டவாளம் ஈறாக இருநூற்றுக்கும் மேற்பட்டச் செய்திகளை தரும், அரிய தகவல் களஞ்சியமாக திகழ்கிறது இந்நூல். ‘ நெல்லை மாவட்டத்தின், பண்பாட்டின் சின்னங்களாக விளங்கும் கோவில்கள், கோபுரங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள், நீரூற்றுகள், அருவிகள், ஆறுகள், பாலங்கள், விலங்குகளின் சரணாலயங்கள், சடங்குகள், […]

Read more

வா நம் வசப்படும் மணிக்கட்டுரைகள்

வா நம் வசப்படும் மணிக்கட்டுரைகள், அ. கோவிந்தராஜ், வானதி பதிப்பகம், பக். 174, விலை 110ரூ. வீதிகள் தோறும், ஆங்கிலக் கல்விக் கூடங்கள் நிரம்பியுள்ள நிலையில், கற்றல், கற்பித்தல் என்பது, ஆசிரியர், மாணவர்கள் என இருதரப்பிற்குமே, பெரும் சுமையாகவே உள்ளது. கல்வி என்பது, பொருளீட்டும் முதலீடாகவே கருதப்படும் அளவுக்கு சமூக மாந்தரின் சிந்தனை சுருங்கி விட்ட நிலையில், கற்றலும், கற்பித்தலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை, நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் எழுதியவற்றிலிருந்து மேற்கோள் காட்டி, வகுப்பறை ஒழுக்கங்களை முதல் பத்து கட்டுரைகளில், செம்மையுடன் […]

Read more

வானதியின் எண்ணச் சிறகுகள்

வானதியின் எண்ணச் சிறகுகள், வானதி சந்திரசேகரன், விஜயா பதிப்பகம். கல்லூரி காலத்தில், கவிதாயினியாக மலர்ந்தவர்; பின், குடும்பத்திற்காக, 24 ஆண்டுகளை ஒதுக்கி, கவிதையை ஒதுங்கியிருந்தவர், குடும்பத்தார் தந்த உற்சாகம் காரணமாக, தற்போது, நிறைய கவிதைகள் எழுதி வருகிறார். இடைப்பட்ட, 24 ஆண்டுகளில் நீர்த்துப் போகாதிருக்கும் இவரது வளமான தமிழால், பல விஷயங்களை பாடியிருக்கிறார். அதிலும், கரிசல் காடு, களிறுகளும், கயவர்களும் உள்ளிட்ட, பல கவிதைகள் அருமை! கவிதையை, வெறும் அலங்காரத்திற்கு பயன்படுத்தாமல், சுற்றுப்புறச்சூழல், மதுவின் பாதிப்பு, தவறான உணவு வகை, வனங்கள் அழிப்பின் அவலங்கள் […]

Read more

கதைகளின் கதை

கதைகளின் கதை, ம. மணிமாறன், விஜயா பதிப்பகம், பக். 224, விலை 160ரூ. முப்பத்தியிரண்டு தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனப் பார்வையை நம் முன் வைக்கிறார், ம.மணிமாறன். சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் – மனிதர்களின் உணர்ச்சி பெருக்கை கதைகளமாக்கிய மவுனி – அகத்தின் கேள்வியை புறத்தே கண்டெழுதிய, ந.பிச்சமூர்த்தி – பெண் உலகின் மாயங்களை கண்டெழுதிய, கு.ப.நா., – தஞ்சை பெருவெளியின் அதீத கணங்களை, கதை ஆக்கிய, தி.ஜானகிராமன். மனிதகுலம் சுமக்கிற புறக்கணிப்பின் சொற்களை கதை ஆக்கிய, கிருஷ்ணன் நம்பி – அழகின் […]

Read more

இல்லத்தரசி கையில் உலகம்

இல்லத்தரசி கையில் உலகம், மல்லிகா பலராமன், மணிமேகலைப் பிரசுரம், விலை 110ரூ. ஒரு இல்லத்தரசி எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்கும் நூல். பெண்கள் படிக்க வேண்டிய புத்தகம். திருமணத்தில் மணமக்களுக்கு பரிசளிக்கத் தகுந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 3/5/2017.   —-   மூலிகைகளின் பெயர்கள் பற்றிய அகராதி, டாக்டர் ஜே. ராஜகோபால், கஸ்தூரி பப்ளிகேஷன்ஸ், விலை 1200ரூ. மூலிகைகளுக்கு மொழிவாரியாகப் பல பெயர்கள் உள்ளன. இதனால் ஏற்படும் குழப்பங்களைப் போக்க, மூலிகைகளில் தாவர இனப்பெயர், ஆங்கிலப் பெயர், தமிழ்ப்பெயர், மலையாளப் […]

Read more

மனம் ஒரு மகாத்மா

மனம் ஒரு மகாத்மா, முனைவர் பா. மஞ்சுளா, விஜயா பதிப்பகம், விலை 70ரூ. வள்ளலாரின் வழியை பின்பற்றி வரும் நூலாசிரியரான தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பா. மஞ்சுளா, வள்ளலாரின் 43 அமுதுமொழிகளை தேர்வு செய்து, அதனை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாக தொகுத்துள்ளார். அதில் ‘துணையினை தூயமனதோடு நேசியுங்கள்’, ‘மனிதரை நேசித்தால் இறைவன் உங்களை நேசிப்பான்’, ‘எல்லோரும் ஜெயிக்க நினைப்பவன், ஒருபோதும் தோற்பதில்லை’ போன்ற வரிகளுக்கு விளக்கம் தந்திருப்பது மனதை தொடுகிறது. தற்போதைய தண்ணீர் பஞ்சத்தை நினைவூட்டும் வகையில் ‘குடிக்கின்ற நீர்ள்ளக் […]

Read more
1 2 3 9