நூறு வயது வாழ நூறு உணவுகள்

நூறு வயது வாழ நூறு உணவுகள், ஆர். வி. பதி. அழகு பதிப்பகம், விலை 140ரூ. நீண்ட நாட்கள் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. அப்படிப்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் பழங்கள், கீரைவகைகள், தானியங்கள், காய்கறிகள் போன்ற நூறு வகையான உணவு முறைகளையும், அதன் பயன்பாடுகளையும் இந்த நூலில் ஆர். வி. பதி எடுத்துக்கூறியுள்ளார். நோய்கள் வராமல் தடுக்கவும், உடலைச் சீராக வைத்துக் கொள்ளவும் இந்த நூல் பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 22/6/2016.   —-   […]

Read more

கிராம ஊராட்சி நிர்வாகம்,

கிராம ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.344; ரூ.260. அரசின் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள், பணிகளைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள், நிதி ஒதுக்கீட்டு முறை ஆகியவை குறித்த விவரங்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கிராமப் பொதுமக்கள் தெரிந்து கொள்வது அவசியம். இது குறித்து இந்த நூல் அலசி ஆராய்கிறது. ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோரின் செயல்பாடுகள், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள், மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் எளிய நடையில் […]

Read more

நபிமொழிக் களஞ்சியம்

நபிமொழிக் களஞ்சியம்,  மவுலவி எம். அப்துல் ரஹ்மான் பாகவி, மின்னத் பப்ளிஷர்ஸ், விலை 500ரூ. இஸ்லாமிய நெறிமுறையில் திருக்குர் ஆனுக்கு அடுத்தபடியாக நபிகளாரின் பொன்மொழித் தொகுப்பாகிய ‘ஹதீஸ்’கள் மதிக்கப்படுகின்றன. ஹதீஸ் என்றால் உரை, உரையாடல், புதிய செய்தி எனப்பொருள்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் 2 ஆயிரம் ‘ஹதீஸ்’களைத் தேர்ந்தொடுத்து, இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் ‘ரியாளுஸ் ஸாலிஹீன்’ என்ற நூலை அரபி மொழியில் எழுதினார். அதை ‘நபிமொழி களஞ்சியம்’ என்ற பெயரில் மவுலவி எம். அப்துல் ரஹ்மான் பாகவி மொழிபெயர்த்தார். அது […]

Read more

பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க

பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க, கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 210ரூ. பெரியார் பற்றிய சிறந்த நூல் பெரியார் மறைவு பற்றி பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை சேகரித்து, “பெரியார் மறைந்தார். பெரியார் வாழ்க” என்ற தலைப்பில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஒரு நூலை தொகுத்துள்ளார். பெரியார் மறைவு பற்றி மட்டுமல்ல. அதற்கு முன் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகள் பற்றியும் இந்த நூலில் பல அபூர்வத் தகவல்கள் அடங்கியுள்ளன. பெரியாரின் பொன்மொழிகளும், கட்டுரைகளும் நல்விருந்தாக அமைந்துள்ளன. “எனது நிலை” என்ற […]

Read more

சிந்தனைக் கீற்றுகள்

சிந்தனைக் கீற்றுகள், கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. மாணவப் பருவம் முதல் கவிதைகள் எழுதி வருபவர் கா. வேழவேந்தன். தமிழ் இலக்கியப் பூங்காவில், புதுக்கவிதை என்ற சூறாவளி வீசியபோதும், இவருடைய மரபுக் கவிதைகள் தென்றலாய்த் தவழ்ந்தன. அதனால் ‘கவிவேந்தர்’ என்று போற்றப்பட்டார். அமைச்சர் பதவி வகித்தபோதும், இவருடைய கவிதைத் தொண்டு தொய்வில்லாமல் தொடர்ந்தது. “சிந்தனைக் கீற்றுகள்” என்ற இந்த நூல் அவருடைய சிந்தனைச் சிறப்புக்கும், கவிதைப் புலமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மொத்தம் 147 கவிதைகள் உள்ள இந்த நூலில், முதல் […]

Read more

தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி, தமிழில் சிவசங்கரி, வானதி பதிப்பகம், விலை 800ரூ. ஆந்திராவில் எளிய குடும்பத்தில் பிறந்து தமிழ்நாட்டில் குடியேறி உலக சாதனை புரிந்தவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி. ஒரு காலத்தில் அரசாங்க ஆஸ்பத்திரிகளும், நகரசபை ஆஸ்பத்திரிகளும்தான் இருந்தன. இந்நிலையில் சர்வதேச தரத்துக்கு ஆஸ்பத்திரிகளை அமைத்தார், பிரதாப் சி.ரெட்டி. இன்று அவருடைய அப்போலோ ஆஸ்பத்திரிகள், உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. வெளிநாட்டவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அப்போலோ மருத்துவமனைகள் ஒவ்வொரு நாளும் 60,000 பரிசோதனைகளைச் செய்கின்றன. 3000 அவசர நிலை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றன. 2200 […]

Read more

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், இரா. இளங்குமரனார், தமிப்பேராயம், பக். 384, விலை 200ரூ. தொல்காப்பியத்தில் இடம்பெறும் கலைச்சொற்களுக்கு விரிவான வகையில் விளக்கமளிக்கிறது. தொல்காப்பியர் தமிழர்தம் வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாகப் பிரித்துக் கூறினார். வேறு எந்த மொழியிலும் இல்லாத பொருளிலக்கணத்தைத் தொல்காப்பியர் கூறினார். பண்டைத் தமிழ் மக்களின் காதல், கற்பு நிலைகள், நாகரிகம், நகர் அமைப்பு, பண்பாடு, ஆட்சி முறை, போர்முறை, கலை நுணுக்கங்கள், ஆன்றோர் பண்பு, கவின் கலைகள், தொழில்கள், வாணிகம் முதலிய பலவற்றை கூறியுள்ளார். அத்தகைய தொல்காப்பியத்துள் இடம் பெற்றுள்ள […]

Read more

வலம்

வலம், விநாயக முருகன், உயிர்மெய் பதிப்பகம், பக். 336, விலை 310ரூ. பதினாறு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் மதரஸாபட்டினம் என்ற தற்போதைய சென்னையில் நடைபெற்ற நிகவுகளைப் படம் பிடித்து காட்டுகிறது இந்நாவல். பிரிட்டீஷ் அதிகார வர்க்கத்துடன் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஏற்பட்ட தவிப்பு, நம்பிக்கைக்கும், துரோகத்துக்கும் இடையே சிக்கி தவித்த சமூகங்களிடையே நடக்கும் முரண்பாடு ஆகியவற்றைக் கதைக் களமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. அன்றைய சென்னையை அவ்வளவு தெளிவாக எளிய நடையுடன் சித்தரித்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் மகன்களாக வெங்டாத்ரி […]

Read more

இயேசுநாதர் வரலாறு

இயேசுநாதர் வரலாறு, அ,லெ. நடராஜன், சந்தியா பதிப்பகம், பக். 288, விலை 250ரூ. இயேசுவின் வாழ்க்கையை மிகவும் தெளிவாக எம்மதத்தினரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். அன்பின் மறுவுருவம் இயேசு என தெளிவுபடுத்தியுள்ளார். இறைமகன் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை – ஐந்து கால கட்டங்களாகப் பிரித்துள்ளார். இயேசுவின் 33 வருட வாழ்க்கையை பிறப்பு முதல் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தது வரை அனைத்து நிகழ்வுகளையும் நம் கண்முன் நிறுத்தியுள்ளது அருமை. பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வருகையைக் குறித்து […]

Read more

மூங்கில்கள் புல்லாங்குழல்கள்

மூங்கில்கள் புல்லாங்குழல்கள், இரா. காளீஸ்வரன், மாற்று ஊடகமையம், பக். 80, விலை 60ரூ. மூங்கில்கள் புல்லாங்குழல்கள் என்ற சிறுகதை தொகுப்பு விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பேசும் 15 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக கூத்துக் கலைஞர்களின் சாதிய வேறுபாடுகள், பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட பெண், கோயில் திருவிழாக்களில் ஏற்படும் சாதிய சிக்கல்கள், திருநங்கையரின் துயரம், இறக்கும் மனிதர்களை அடக்கம் செய்ய உதவும் மானுட அன்பு, விநாயக சதுர்த்தியின் மத அரசியல், காதலை சொல்லாமல் மரிக்கும் பெண், மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோரை […]

Read more
1 2 3 4 9