அதிர்வுகள்

அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள், விகடன் பிரசுரம், பக்.290, விலை ரூ.160. சிறந்த ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவாளரான இலங்கை ஜெயராஜ் எழுதிய 27 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பல கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன; சில கட்டுரைகள் சிரிக்க வைக்கின்றன; அதேவேளையில், சில கட்டுரைகள் நம்மை அழ வைக்கின்றன. இதற்கிடையே, வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய தத்துவங்களும் சில கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. “பெரிய மாமி’‘ என்ற கட்டுரை தமிழ்ப் பெண் குலத்தின் மாண்பையும், பண்பாடு, கணவன் மீதான பாசத்தையும் பறைசாற்றுகிறது. கணவனுடன் வாழ்ந்தபோது பட்டுப்புடவை, நகைகள், அலங்காரங்களுடன் வலம் […]

Read more

ஆதி சைவர்கள் வரலாறு

ஆதி சைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், ஆதி சைவர்கள் நல வாழ்வு மையம் வெளியீடு, பக். 184, விலை 200ரூ. சிவாலயங்களில் பூசனை புரியும் மரபினர் ஆதி சைவர் எனப்படுகின்றனர். சிவ வேதியர், சிவாச்சாரியர் முதலாகிய இருபது பெயர்களால் அழைக்கப்படும், ஆதி சைவர்கள் ஆகமங்களினால் திருக்கோவில்களின் நாட்பூசனைகள், சிறப்புப் பூசனைகள், வேள்விகள், சடங்குகள் முதலியவற்றைச் செய்வோர் ஆவர். சிவாச்சாரியர் மரபு பற்றி சங்க நூலாகிய பரிபாடல் துவங்கிப் பல்வேறு இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள செய்திகளையும், சில பல வரலாற்றுக் குறிப்புகளையும் […]

Read more

அழகான அம்மா

அழகான அம்மா, (ரஷ்ய சிறார் கதைகள்), யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 352, விலை 290ரூ. குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆசையா? குழந்தைகளின் உலகம் மிக இனிமையானது. சாதாரண விஷயங்களையும் கதையாக சொல்லும் போது, ஈர்க்கும் பருவம் அது. வாழ்க்கையின் புரிதலை, கதை வழியாக கேட்பதால் ஆனந்தமடையும் வயது. அதனால் தான், வீடியோ காட்சிகளாகவும், ஆடியோ பேச்சுகளாகவும் வடிவம் எடுத்துள்ள கதைகளுக்கும் மவுசு குறையவில்லை. ‘டிவி சேனலில்’ ஒளிபரப்பாகும், பொம்மை படங்களின் கதைகள், இந்த தலைமுறை குழந்தைகளை ஈர்க்கின்றன. இருந்தாலும், […]

Read more

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார், முகிலை இராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 56, விலை 50ரூ. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. அதில் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் வகையில் அமைந்துள்ள நூல் இது. திண்ணன் எனும் இயற்பெயர் கொண்ட கண்ணப்ப நாயனாரின் பிறப்பிடமான பொத்தப்பி நாடும், காளத்தி மலையும் தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கின்றன என்பதையும், வேட்டுவர்களின் வாழ்க்கையையும் இந்த நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது. வேட்டுவச் சிறுவர்களுக்கு வில் வித்தை துவங்கும் போது, அக்காலத்தில் […]

Read more

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும்

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக். 112, விலை 110ரூ. மன்னரிடமோ, வள்ளல்களிலிடமோ பரிசில் பெற்ற கூத்தர், பாணர், பொருநர், விறலியர் முதலான இரவலர்கள் தம்மைப்போன்ற இரவலர் பசியாலும், வறுமையாலும் துன்புற்ற நிலையில் வழியில் எதிர்ப்படும்போது, தான் பரிசிலாகப்பெற்ற பெருவளத்தைக் கூறி அவர்களையும் அப்புரவலரிடத்துச் சென்று பரிசில் பெறுமாறு வழிகாட்டுதலே ஆற்றுப்படை இலக்கணம். ஆற்றுப்படுத்தப் பெற்றவர் பெயராலேயே ஆற்றுப்படை இலக்கியங்கள் எல்லாம் அமைந்திருக்க, திருமுருகாற்றுப்படை மட்டும் பாட்டுடைத் தலைவன் முருகன் பெயரால் அமைந்தமை ஏன்? இவ்வினா […]

Read more

தாயுமானவ சுவாமிகள் பாடல் – அரிய பழைய உரை

தாயுமானவ சுவாமிகள் பாடல் – அரிய பழைய உரை, சு. இலம்போதரன், முல்லை நிலையம், பக். 656, விலை 450ரூ. வேதாந்த – சித்தாந்த நெறி நின்ற தாயுமானவரின், 1,451 பாடல்களுக்குப் பலர் எழுதிய உரைத் தொகுப்போடு, செய்குதம்பி பாவலரின் கைவண்ணமும் கலந்து வெளிவந்துள்ள இவ்வரிய உரை தனித்தன்மை வாய்ந்தது. காலத்தால் பிற்பட்டவர் எனினும் அத்வைத நெறியை, தனது செழுமைச் சிந்தனைகளால் வெளிப்படுத்திய மகான். உரைச் சிறப்பிற்கு ஒரு சில உதாரணங்கள்: ‘அங்கிங்கெனாதபடி’ என்ற முதல்பாடலில், ‘மனவாக்கனிற் தட்டாமல் நின்றதெது’ என்னும் அடிக்கு, (பக்.100) […]

Read more

இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர்

இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர், வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 76, விலை 60ரூ. ப.ஜீவானந்தம், வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஏ.பி.பரதன், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கே.என்.பணிக்கர் முதலானோர், விவேகானந்தர் பற்றி எழுதிய 11 கட்டுரைகளின் தமிழாக்கம் தான் இந்த நூல். விவேகானந்தரை தேச பக்த துறவி என்றும், இந்தியப் பண்பாட்டையும், மேலை நாட்டு விஞ்ஞானத்தையும் இணைத்து, ஒரு புதிய பண்பாட்டைக் காண விரும்பியவர் என்றும், இந்த நூலில் ப.ஜீவானந்தம் எழுதியுள்ளார். சிகாகோவில், விவேகானந்தருக்குப் புகலிடம் தந்த பெண்மணி, மேரி ஹேல். அவருக்கு, 1886, நவ., […]

Read more

இன்றும் காந்தியம்

இன்றும் காந்தியம், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், பக். 96, விலை 70ரூ. இன்றைய சமூகத்தில், காந்தியம் கவைக்கு உதவாது என்று பலர் நினைக்கலாம். இந்தச் சூழலிலும் கூட, காந்திய தத்துவங்களும் போராட்ட வழிகளும் எவ்வளவு நடைமுறை சாத்தியமானவை என்று, நூலாசிரியர் இந்த நூல் மூலம் சிந்திக்க வைக்கிறார். உதாரணமாக, அகிம்சையின் அடிப்படைத் தத்துவம், தன்னை வருத்திக் கொண்டு எதிரியின் மனதில் நியாய உணர்வை விழிப்புறச் செய்வது தான். ‘நியாய உணர்வு’ என்பது, ‘தர்மம்’ என்ற வார்த்தையின் பொருளாக கருதலாம். சிறிதும் தவறற்ற சிந்தனை அது. […]

Read more

செவ்வி

செவ்வி, பேரா. தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பரப்பில் அறிவார்த்தமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், சரியாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் தொ. பரமசிவன். மரபின் வேர் பிடித்து நம்மை அழைத்துச் செல்பவர். அவரின் 14 நேர்காணல்கள் இடம்பெற்ற தொகுதி இது. 144 பக்கங்களுக்குற் செறிந்த உலகத்திற்குச் செல்வது சாத்தியமாகிறத, நம்முன்னோர்கள், சாதிகள், திராவிடக் கருத்தியல், தமிழர் பண்பாடு, பகுத்தறிவு, சீர்திருத்தம், தமிழ் தேசியம் என பரந்துபட்ட பரப்பிற்குள் மூழ்கி எழுகிற எத்தனிப்பு. மேலோட்டமாக எதையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு […]

Read more

புஷ்பாஞ்சலி

புஷ்பாஞ்சலி, யத்தனபூடி சலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 248, விலை 199ரூ. கதையின் நாயகன் மாதவன், ஒரு சுதந்திரப் போராட்ட வீரன். நாடு சுதந்திரம் அடைந்ததும், காங்கிரஸ் தியாகிகள் சிறையில் இருந்து விடுவிக்கப் படுகின்றனர். மாதவனும் விடுதலை ஆகிறான். தன் மாமன் மகள், தனக்காகக் காத்திருப்பாள் என்று நம்பிக்கையுடன் வருகிறான். ஆனால், மாமன் மகள் சுதாவுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விடுகிறது. இது அவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில், இளம்பெண் ஒருத்தி, அவனை அடித்து, […]

Read more
1 2 3 4 5 9