காற்றடைத்த பையடா

காற்றடைத்த பையடா, ஜி.எஸ்.குமாரதேவி, வனிதா பதிப்பகம், பக். 328, விலை 250ரூ. தாம் விரும்பும் கல்வியையே தன் மகனோ மகளோ பயில வேண்டும் என்ற திணிப்பு. தாங்கள் விரும்பும்படியே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வற்புறுத்தல் இப்படியான குழப்பமான கலாச்சார யுகத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளுக்குமான போராட்டக்களமாக வெடித்துள்ளது இந்நாவல். நட்பும் காதலும் அதன் ஊடுபயிராய் இருந்து சிறப்பிக்கின்றன. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

படித்தாலே இனிக்கும்

படித்தாலே இனிக்கும், பேராசிரியர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 118, விலை 80ரூ. கருத்தரங்குகளில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள், நூல்களுக்கு வழங்கப்பட்ட அணிந்துரைகள், கலை. இலக்கியம், இசை, நாடகம் என்று பன்முக நோக்கில் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், அருட்செல்வர், நா. மகாலிங்கம், பேராசிரியர் க. வெள்ளைவாரனார், ஏர்வாடியார் என்று பலரின் ஆளுமையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் நூல்களை தேடிப்பிடித்து படிக்க வைக்க உதவும் கட்டுரைகள் இவை. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

ஜெய்ஸ்ரீராம்

ஜெய்ஸ்ரீராம், மஞ்சுளா ரமேஷ், ஸ்ரீபப்ளிகேஷன்ஸ், பக். 664, விலை 600ரூ. ஞான ஆலயம், சினேகிதி ஆகிய மாத இதழ்களின் ஆசிரியரான இவர், குங்குமம், தினமலர், சாவி, மங்கையர் மலர் போன்ற பத்திரிகைகளிலும் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். தவிர, இயல், இசை, நாடக மன்றம், திரைப்படத் தணிக்கைக் குழ, திரைப்படத் தேர்வுக்குழு, தொலைக்காட்சியின் தேர்வுக்குழு போன்ற அரசு சார்பான குழக்களிலும் செயலாற்றியதோடு, யோகக்கலையைப் பயின்று பலருக்கு யோகா பயிற்சிகளையும் கற்றுத் தருகிறார். இவர் இதற்கு முன் பாரத கண்டம் (பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நேபாளம், திபேத், பங்களாதேஷ், […]

Read more

சிறுவர் சினிமா

சிறுவர் சினிமா, தொகுப்பு நீலன், பேசா மொழி பதிப்பகம், விலை 170ரூ. பாட்டி கதைகளை தொலைத்துவிட்ட இன்றைக்கு, தும்பிகளைத் துரத்தும் குழந்தைகளைத் தொடுவானம் ஏந்திக் கொள்வது நல்ல சினிமாக்களாலும், புத்தகங்களாலும் சாத்தியம். பள்ளிப் புத்தகங்களில் கருக்கொள்ளும் மயிலிறகுகள் குட்டிகளை ஈனும் பால்யத்தில் நமக்கு அறிமுகமாகிற அம்புலிமாமா கதைகளில், நீண்டு கிடக்கும் அரண்மனைத் தெருக்களில், இரும்புக்கை மாயாவி பறந்து வரும் கனவுக்காடுகளில், 007 துப்பறியும் தங்கத் தீவுகளில், கெளபாய் சண்டை நடக்கும் மெக்ஸிகன் மலைப் பாதைகளில் மனம் மாய வண்டாகப் பறக்கிற அனுபவத்தை இன்றைய சிறுவர்கள் […]

Read more

படித்த வேலையா? பிடித்த வேலையா?

படித்த வேலையா? பிடித்த வேலையா? , காம்கேர் கே.புவனேஸ்வரி, தாமரை பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்,  பக்.196, விலை ரூ.145. நூலாசிரியர் கணினித் துறையில் தான் சந்தித்த சவால்கள் குறித்தும், கணினி உள்பட பல்வேறு துறைகளில் இன்றைய இளம் தலைமுறையிருக்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் இந்நூலில் எழுதியிருக்கிறார். ஐ.டி. துறை இளைஞர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களை குறைப்பதற்கான வழிமுறைகள், இணையதள வங்கி செயல்பாடுகள், கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு, பெண் நிர்வாகிகளின் கீழ் பணிபுரியும் பெண்கள் மனநிலை மாறுமா என 20 அத்தியாயங்களில் பல்வேறு […]

Read more

மஞ்சள் பிசாசு

மஞ்சள் பிசாசு,  தங்கத்தின் அரசியல் பொருளாதார வரலாறு,  அ.வி.அனிக்கின், தமிழில்: நா.தர்மராஜன், அடையாளம், பக்.328, விலை ரூ.270. ரஷ்யமொழியில் 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலின் மொழிபெயர்ப்பு இந்நூல். 1980 – 1982 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பாதியாகக் குறைந்துவிட்டது. அப்போது உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமாக, மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்தது, உலக அளவில் உற்பத்தியும், தொழில் முதலீடும் குறைந்தது தங்கத்தின் விலை குறைய இதுவே காரணமாகியது. வெறும் உலோகம் என்ற நிலையைத் தாண்டி, உலக முழுவதும் உள்ள பொருளாதார […]

Read more

திராவிடரின் இந்தியா

திராவிடரின் இந்தியா – டி.ஆர்.சேஷ ஐயங்கார்; தமிழில்: க.ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம்,  பக்.192, விலை ரூ.125. திராவிட நாகரிகம் குறித்தும் இந்து நாகரிக வரலாற்றில் அதற்குரிய இடத்தை வரையறை செய்யும் முயற்சியாகவும் எழுதப்பட்டுள்ள நூல். திராவிடர்களின் தோற்றம், திராவிட மொழிகள், திராவிடர்களின் இலக்கியம், இசை, சமய நம்பிக்கை, கட்டடக்கலை, வணிகம் போன்ற பல்வேறு கூறுகளையும் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர். கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பே பாண்டியர்கள் அரசு நாகரிகத்தில் சிறந்து விளங்கியதை மெகஸ்தனிஸ் எழுதியுள்ள குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. தொல்காப்பியத்திற்கு முன்னரே பல தமிழ்நூல்கள் […]

Read more

தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும்

தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும், மு.சண்முகம்பிள்ளை, பக்.192, விலை ரூ.120. இன்றைக்கும் பலராலும் அறியப்படாதவர் பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை. 15க்கும் மேற்பட்ட நூல்களையும், அச்சுக்கு வராத காப்பியம், சிற்றிலக்கியம், சங்க இலக்கியம் முதலிய 25க்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளையும் பதிப்பித்தவர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1941-42 களில் எழுதப்பட்ட இந்த ஆராய்ச்சி நூல், அவரது குடும்பத்தினரால் இத்தனை காலமும் பாதுகாக்கப்பட்டு, தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. இந்நூலில் காணப்படும் பல்வேறு கருத்துகளும் செய்திகளும் சுமார் 70 ஆண்டுக்கு முன் நூலாசிரியரால் ஆராய்ந்து எழுதப்பட்டவை என்பதை மறக்காமல் நூலைப் […]

Read more

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5, எஸ் – வேதா, டி.ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம்,  பக்.352, விலை ரூ.500. ஜப்பானில் பெரிய தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் உள்ள பொருட்களையும், செயல்முறைகளையும் எளிமையாகவும், முறைப்படியும், சிறப்பாகவும் கையாள, அவற்றை முறைப்படுத்துவதற்காக ஏற்பட்டதுதான் இந்த 5 எஸ். இதற்குப் பின் தொடர் முன்னேற்றமாக கெய்சன் என்ற முறையும் ஜப்பானில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு தொழிற்சாலையில் குவிந்து கிடக்கும் பல பொருள்களில் தேவையானவற்றையும், தேவையற்றவற்றையும் முதலில் பிரிக்க வேண்டும் (செய்ரி), அவ்வாறு பிரித்தவற்றில் எந்தப் பொருள், எந்த இடத்தில், எவ்வளவு, எப்படி வைக்கப்பட வேண்டும் […]

Read more

மாஸ்தி சிறுகதைகள்

மாஸ்தி சிறுகதைகள், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், தமிழில்: சேஷநாராயணா, சாகித்திய அகாதெமி, பக்.144, விலை ரூ. 120. சாகித்திய அகாதெமி விருதுபெற்ற, தற்கால கன்னடச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் கன்னடச் சிறுகதைகளின் எளிமையான, சிறப்பான மொழி பெயர்ப்பு இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகளும் சுவாரஸ்யமானவையே. ‘எறும்புகளின் உலகம்39‘ சிறுகதை எறும்புகளின் வாழ்க்கை குறித்த வியக்கத்தக்க செய்திகளைக் கொண்டுள்ளது. ‘மண வாழ்க்கையில் புதுமை39‘ சிறுகதையில் பெண் சுதந்திரத்தின் கசப்பான மறுபக்கம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. ‘இதற்கு முன் சில காலம் […]

Read more
1 2 3 4 5 8