பயண சரித்திரம்

பயண சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ், விலை 333ரூ. ஆதிகாலத்தில், உலகம் உருண்டையானதா, தட்டையானதா என்று மனிதனுக்குத் தெரியாது. படகுகளிலும், கப்பல்களிலும் வீரப்பயணம் மேற்கொண்டவர்களால்தான் உலகம் பற்றிய பல உண்மைகள் தெரிய வந்தன. மாமன்னர் அலெக்சாண்டர், பாஹியான், யுவான்சுவாங், மார்க்கோபோலோ போன்றவர்கள் மேற்கொண்ட சாகசப் பயணங்கள், உலக வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றுள்ளன. இவர்களுடைய பயணம் பற்றிய விவரங்களை மெய்சிலிர்க்கச் செய்யும் வண்ணம் எழுதியுள்ளார் முகில். இதுவரை அதிகமாக அறியப்படாத பல புதிய செய்திகள் புத்தகத்தில் நிறைந்துள்ளன. உதாரணம், தன் குரு அரிஸ்டாட்டிலுக்கு இந்தியாவில் இருந்து […]

Read more

புத்தம் சரணம் கச்சாமி

புத்தம் சரணம் கச்சாமி, ஈ.அன்பன், திரிபீடக தமிழாக்க நிறுவனம், விலை 150ரூ. புத்தரின் வரலாற்றையும், அவருடைய போதனைகளையும் விரிவாக விளக்கும் நூல். மன்னராக வாழ்ந்தவர், மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக துறவியான சம்பவம், உலகம் அதற்கு முன்போ பின்போ நடந்திராத ஒன்றாகும். எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் உண்டு என்று பவுத்தம் நம்புவதில்லை. அதாவது புத்தர், கடவுள் நம்பிக்கை அற்றவர். நாத்திகர். ஆனால் பல நாடுகளில் புத்தரையே கடவுளாக வணங்குகிறார்கள். புத்தர் பிறந்த இந்தியாவில் புத்த மதம் வளரவில்லை என்றாலும், கடல் கடந்த பல நாடுகளில் […]

Read more

வேர்

வேர், அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், விலை 240ரூ. குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் முதலிய புனை பெயர்களில் பல நாவல்கள் எழுதியுள்ள அ.மா. சாமி, இப்போது தன் சொந்தப் பெயரில் எழுதியுள்ள புதிய நாவல் ‘‘வேர்”. லஞ்சத்தை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. “லஞ்சம் எப்படித் தோன்றுகிறது? அதற்குக் காரணம் யார்?” என்று ஆராயும் ஆசிரியர், பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். லஞ்சத்தை ஒழிப்பதற்கான வழிகளையும் கூறுகிறார். துள்ளல் நடையில் நாவலை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் அ.மா. சாமி. நன்றி: […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, எவிடன்ஸ் கதிர், விகடன் பிரசுரம், விலை 175ரூ. எத்தனை நிறங்களைப் பூசி இதை இந்திய தேசம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும், நாட்டு நடப்புகள் அத்தனையும் இதை, ‘சாதி தேசம்’ என்றுதான் தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. கோயில் முதல் கொலைகள் வரை, கல்யாணம் முதல் கருமாதி வரை, கிராமத்துப் பள்ளிகள் முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை நடக்கும் சம்பவங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது, ‘சாதி தேசம்’ என்ற அடையாளத்தைத்தான். அதற்கான ‘எவிடென்ஸ்’தான், கதிர் எழுதியுள்ள இந்தப் புத்தகம். சிலரைப் […]

Read more

சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள்

சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள், அழகிய சிங்கர், விருட்சம்,  பக். 136, விலை ரூ.100. எழுத்தாளர் அழகியசிங்கரின் 27 கவிதைகள், 8 சிறுகதைகள், 12 கட்டுரைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இது. பெரும்பாலான சிறுகதைகள் மிகவும் எளிமையாகவும் நேரடித்தன்மையுடனும் இருக்கின்றன. எழுத்தாளரான வங்கி அதிகாரி மீது வாடிக்கையாளர் ஒருவர் புகார் கொடுக்க, அதனால் அவருக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட வங்கி ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் சேர்க்க முயற்சி செய்யும் வங்கி அதிகாரி முடிவில் தோல்வியடைவது […]

Read more

வருடம் முழுவதும் வசந்தம்

வருடம் முழுவதும் வசந்தம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 254, விலை 200ரூ. இன்றைய இளைய சமுதாயம் ஆற்றல் மிக்க சமுதாயமாக விளங்குகிறது. அவர்களுக்கு நம் நாட்டில் தோன்றி நம் நாட்டு மக்களுக்காக பாடுபட்ட தியாகிகள் பலரின் வரலாற்றை சாதனையை தெரிந்து கொண்டால் இன்னும் உற்சாகமாக செயல்படுவார்கள். அந்த வரிசையில் நம் தலைவர்கள் சிலரின் வீரத்தியாகம் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பாக இந்நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

கண்ணோட்டம்

கண்ணோட்டம், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 160, விலை 120ரூ. பத்திரிகைகளில் வரும் மிக அரிதான செய்திகளையும், நம்மை கடந்துபோகும் வரலாற்று நிகழ்வுகளையும் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதுவது ஜீவபாரதியின் தனித்தன்மை. அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வந்தே மாதரம் வந்த கதை, வேலுநாச்சியார் பற்றிய கட்டுரை, கோதையம்மாளுக்கு தியாகி பென்சன் கிடைக்க காரணமாக இருந்த கட்டுரை என்று அத்தனையும் பல்நோக்கு கொண்டு பயனளிப்பதாக உள்ளன. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை

கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை, தொகுப்பாசிரியர்: இரா.சம்பத்,சாகித்ய அகாதெமி,  பக்.225, விலை ரூ.110. கவிஞர் கா.மு.ஷெரீப் கவிதை, காவியம், சமயம், திரையிசைப் பாடல்கள், கலை, இலக்கியம், இலக்கணம், அரசியல், பத்திரிகை, தலையங்கம், உரைகள் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்; பல்துறைகளிலும் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் . பத்திரிகையாளராகவும், காங்கிரஸ் கட்சி, ம.பொ.சி.யின் தமிழரசு கட்சி போன்றவற்றில் முக்கிய பங்காற்றியவராகவும், தமிழக எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதலிய போராட்டங்களில் பங்கேற்றவராகவும் அவர் அறியப்பட்டாலும், அவருடைய திரையிசைப் பாடல்களான ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயில […]

Read more

கொ.மா.கோதண்டம் நாவல்கள்

கொ.மா.கோதண்டம் நாவல்கள் , கொ.மா. கோதண்டம், காவ்யா வெளியீடு,  பக்.620. விலை ரூ.600. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நூலாசிரியர் எழுதிய மூன்று நாவல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. படிக்க எடுத்தால் பாத்திரங்களோடு ஒன்றிப் போகும் அளவுக்கு இயல்பான சித்திரிப்புகளுடன் அமைந்திருப்பது இத் தொகுப்பில் உள்ள நாவல்களின் பலம். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை கசப்பானது. அடிப்படை வசதிகள் என்றால் என்னவென்றே அறியாத அந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை காதல் உணர்வுகளுடன் இணைத்துத் தருவது ‘ஏலச் சிகரம் 39‘. இரண்டாம் நாவலான ‘குறிஞ்சாம் பூ […]

Read more

தமிழ்க் கிறிஸ்துவம்

தமிழ்க் கிறிஸ்துவம், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 152, விலை 150ரூ. சைவம், வைணவம், சமணம், புத்தம், இஸ்லாம் ஆகிய சமயங்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புபோல், கிருஸ்துவமும் தமிழ்ப்பணியாற்றி சிறப்பித்துள்ளதை வெளிக்காட்டும் நூல். தமிழில் முதன்முதலாக அச்சு நூல்களை வெளியிட்டது போன்ற தமிழ்ப்பணி இந்நூலில் உள்ளது. தமிழுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த தமிழறிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கிறது. கிருஸ்துவத்தின் தமிழ்ப்பணி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதை நிறுவும் நூல். நன்றி: குமுதம், 19/4/2017.

Read more
1 2 3 4 8