சுமையா

சுமையா, கனவுப் பிரியன், நூல்வனம் வெளியீடு, பக். 216, விலை 160ரூ. சர்வதேச அளவிலான மனிதர்களை தமிழ்க் கதைப் பரப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர். சிறுகதைகள் வாயிலாக புதிய கதைக்களன்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் செய்துள்ளார். வாழ்வின் விசித்திரங்கள் கதைகளின் வழி காட்சிப்படுத்தும் விதம் சுவாரஸ்யம். சமூகம், அறிவியல் புனைவுகளும் கலந்து உற்சாகப்படுத்துகிறது. நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

இலை உதிர்வதைப் போல

இலை உதிர்வதைப் போல, இரா.நாறும்பூநாதன், நூல் வனம், பக்.192, விலை ரூ.150. வாழ்க்கை முழுக்க மனிதன், சக மனிதர்களுடன், இடங்கள், மரங்கள், செடி, கொடிகளுடன், வளர்ப்பு பிராணிகளுடன் எல்லாம் தொடர்புடையவனாக இருக்கிறான். வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளினால் சில தொடர்புகளை மனிதர்கள் விட்டுப் பிரிகிறார்கள். புதிய தொடர்புகள் வாழ்க்கையில் ஏற்படுகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள 26 சிறுகதைகளில் வரும் மனிதர்கள் எல்லாரும் இந்தத் தொடர்புகளின் அருமையை உணர்ந்தவர்கள். தொடர்புகளைவிட்டுப் பிரிய மனமில்லாதவர்கள். சக மனிதர்களை மட்டுமல்ல, செடியை, மரத்தை, ஆடு, மாடுகளை, இடங்களைப் பிரிய நேர்ந்தால், […]

Read more

ஆர். சூடாமணி

ஆர். சூடாமணி, கே. பாரதி,  சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. கருத்து வேறுபாட்டால் தனித்தனியே பிரிந்து வாழ நினைக்கும் ஓர் இளம் தம்பதி, ஆதரவற்ற ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றும் நற்செயலில் ஈடுபடும்போது தங்களின் பிரிவும் கோபமும் பொருளற்றவை என்பதை உணர்ந்து மனம் மாறுகின்றனர் (பூமியினும் பெரிது), தன் வயதே உடைய சின்னப்பொண்ணு கழிவறை சுத்தம் செய்வதைப் பார்த்து மனம் கசியும் விஜயா அவளின் உண்மையான பெயரைக் கேட்க அவள் விஜயா என்று கூறுகிறாள். விஜயாவின் மனதில் ஒரு நிம்மதி (விஜயா), காரில் தனியே […]

Read more

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ.மணி, சங்கர் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் சிறப்பு பெற்றவை ஆகும். ஆலயங்களுக்கு தெய்வங்களே வந்து வழிபாடு நடத்தி இருக்கின்றன என்பது ஐதீகம். அவ்வாறு எந்த கோவிலில் எந்த தெய்வம் வழிபாடு நடத்தியது என்பதையும், அந்த கோவிலின் வரலாறு உள்பட வேறு பல சிறப்புகள், அந்த கோவில்கள் அமைந்துள்ள ஊர், அங்கே செல்வது எப்படி என்பது போன்ற ஆன்மிக வாசகர்களைக் கவரும் பல்வேறு அம்சங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

சிறிய தூண்டில் பெரிய மீன்

சிறிய தூண்டில் பெரிய மீன், மூ.இராசாராம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.174, விலை ரூ.155. சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை எப்படிப் பெறுவது என்பதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல். நம்மிடம் அளவாக இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம் என்பதை சில முக்கிய மேற்கோள்கள் மூலம் சுவைபடக் கூறியுள்ளார். குறிப்பாக ரூ.1-க்கு விற்கப்படுகிறது என்ற பிரபல செய்தித்தாளின் விளம்பர உத்தி, ‘இந்த;டிசைன்&#39‘ சேலைகள் இன்னும் மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன' என்ற ஜவுளிக் கடைக்காரரின் விளம்பரத் தந்திரம் போன்றவை வாடிக்கையாளர்கள் என்ற பெரிய […]

Read more

வர்க்கப் புரட்சி

வர்க்கப் புரட்சி, புலவர் தி. குலோத்துங்கன், பிரசாந்த் நூலகம், பக். 120, விலை 80ரூ. பாமர மக்களின் அடிமை நிலை நீங்க, புரட்சியை ஆழப்படுத்தி, மக்களுக்கு அறிவு புகட்டி, போராடினால்தான் நாட்டில் சமத்துவத்தை உருவாக்க முடியும். பாட்டாளி வர்க்கம் ஆட்சியை அமைக்க முடியும். இத்தகைய கருத்துக்களை முன் வைக்கும் நூல் இது. நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

சீனப் பெண்கள்

சீனப் பெண்கள் , சொல்லப்படாத கதை, சின்ரன்: தமிழில்: ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக்.316, விலை ரூ.280. உலகப் பொருளாதார வல்லரசாகப் போற்றப்படும் சீனாவின் மற்றொரு முகத்தை துகிலுரித்துக் காட்டும் உண்மைப் பதிவு இந்நூல். இந்த நூலை எழுதிய காரணத்துக்காவே அதன் ஆசிரியர் சின்ரன் நாடு கடத்தப்பட்டு தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இதிலிருந்தே இந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடியும். உலக அளவில் பொருளாதாரரீதியில் அதிக வளர்ச்சி பெற்றிருக்கும் சீனா, இன்னும் தங்கள் நாட்டுப் பெண்களை ஒடுக்கியே வைத்திருக்கும் நிதர்சனத்தை உரக்கக் கூறும் படைப்பாக […]

Read more

வட்டாராதனை கதை உலகம்

வட்டாராதனை கதை உலகம், மூல கன்னட வடிவம்  சிவகோட்டாச்சார், நவீன கன்னட வடிவம்  ஆர்.எல். ஆனந்தராமய்யா, தமிழில் – தி.சு.சதாசிவம், பாவண்ணன், இறையடியான், சாகித்திய அகாதெமி பதிப்பகம், பக்.253, விலை ரூ.125. கன்னட மொழியின் முதல் உரைநடை நூல் என்ற பெருமைக்கு உரித்தானது இந்த நூல். மனித வாழ்வின் துன்பங்களைக் கடந்து கடுமையான நெறிகளின் பயனாக விண்ணுலகப் பேறு அடைந்த சமண துறவிகளின் வாழ்க்கையே வட்டாராதனை எனப்படுகிறது. இந்தக் கதைகள், பத்து அல்லது பதினொன்றாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. செய்யுள் வடிவில் […]

Read more

தமிழர் நாகரிகமும் பண்பாடும்

தமிழர் நாகரிகமும் பண்பாடும், அ.தட்சிணாமூர்த்தி, ஐந்திணை பதிப்பகம்,  பக்.576, விலை ரூ.350. தமிழர்களின் பண்பாடும் நாகரிகமும் மிகவும் தொன்மையானது. பன்னெடுங்காலத்திற்கு முன்பே அவர்கள் அகப்புற வாழ்வில் சிறந்தோங்கி இருந்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள நம் பண்டைத் தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தெள்ளத் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. தொன்மைக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, அரசியல் மற்றும் இசை, கூத்து, ஓவியம், சிற்பம் முதலிய கலைகள்; பல்லவர், சோழர், நாயக்கர் முதலியோர் காலத்தில் நிலவிய அரசியல்; பெளத்தம், சமணம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய சமயங்களின் […]

Read more

திரை இசைத் திலகங்கள்

திரை இசைத் திலகங்கள், வி.ராமமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.224. விலை ரூ.180. இசையமைப்பாளர்கள் ஜி.ராமநாதன் முதல் இளையராஜா வரையிலான ஐம்பத்திரண்டு இசைக்கலைஞர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர்களின் பங்களிப்புகள்; அனுபவங்கள் குறித்து விவரிக்கும் நூல். இசையமைப்பாளர்கள் தவிர, பாடி நடித்த நடிகர்- நடிகைகள் மற்றும் பிரபல பின்னணி பாடகர்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா, என்.சி.வசந்தகோகிலம், எம்.எல்.வசந்தகுமாரி, பி.ஜெயச்சந்திரன் முதலானவர்கள் குறித்த தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சி.ஆர் சுப்பராமனின் திடீர் மறைவுக்குப் பின் அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி தனித்து இசையமைக்கத் தொடங்கியது, எம்.ஜி.ஆர். படத்துக்கு […]

Read more
1 2 3 4 5 6 8