இல்லுமினாட்டி- உலகையே நோட்டமிடும் கண்கள்

இல்லுமினாட்டி- உலகையே நோட்டமிடும் கண்கள் – கார்த்திக் ஸ்ரீநிவாஸ், வானவில் புத்தகாலயம்,  பக்.176, விலை ரூ.133. அண்மைக்காலமாக முகநூல், சுட்டுரைகளில் மிகவும் பரபரப்பாகச் சுட்டப்படும் சொல் இல்லுமினாட்டி. ஒளிபொருந்தியவர்கள், ஞானிகள் என இச்சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டாலும், நவீன யுகத்தில் சர்ச்சைக்குரிய குழுக்கள், உலகத்தின் மூளைகள் என்பார்களாம். காசேதான் கடவுளடா, கடவுள் பாதி மிருகம் மீதி… என விறுவிறுப்பைக் கூட்டும் தலைப்புகளோடு 15 அத்தியாயங்கள். இந்தக் கிரகத்தையே ஆள்வதுதான் இல்லுமினாட்டிகளின் நோக்கம். மிக்கி மெளஸ் நாயகன் வால்ட் டிஸ்னி, இல்லுமினாட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். மூளைச்சலவை […]

Read more

செவ்வியல் இலக்கியங்கள் பன்முகப் பார்வை

செவ்வியல் இலக்கியங்கள் பன்முகப் பார்வை; தலைமைப் பதிப்பாசிரியர்: ப.முருகன்; இணைப் பதிப்பாசிரியர்:ஆ.இரமேஷ்; தொகுதி-1, பக்.520, விலை ரூ.330; தொகுதி-2 பக்.552, விலைரூ.350; தொகுதி-3, பக்.504, விலை ரூ.330; தொகுதி-4, பக்.504, விலை ரூ.320. சென்னை அரும்பாக்கம், துவாரகதாஸ் கோவர்த்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை மற்றும் தமிழ் இலக்கியத் துறை இணைந்து மார்ச் மாதம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள், நான்கு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 290 ஆய்வுக் கட்டுரைகள். அவற்றுள் தெலுங்குக் கட்டுரை ஒன்றும், இந்திக் கட்டுரைகள் இரண்டும், பன்னிரண்டு ஆங்கிலக் […]

Read more

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும், செ. திவான், சுஹைனா பதிப்பகம்,  பக்.216, விலை 200ரூ. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றி தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியபோது அதை எதிர்த்து, தனி நபராகவோ, கூட்டாகவோ வன்முறை வழியில் போராட்டங்கள் நடத்தி, தியாகங்கள் பல புரிந்து தம் இன்னுயிரைத் துறந்தவர்கள் ஏராளம். அவர்களில் பலரையும், அவர்கள் நிகழ்த்திய போராட்டங்களையும் இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது. மக்களின் மன எழுச்சியினாலும், வரலாற்றின் மறுமலர்ச்சியாலும் புரட்சி இயக்கங்கள் பல தோன்றி வளரத் தொடங்கின. குறிப்பாக சாபேகர் சகோதரர்களிடம் காணப்பட்ட ஆர்வமும் […]

Read more

வஞ்சிக்கப்பட்ட தெற்கு மற்றும் மேற்கு தமிழகம்

வஞ்சிக்கப்பட்ட தெற்கு மற்றும் மேற்கு தமிழகம், சி.க.கருப்பண்ணன், செல்லம்மாள் பதிப்பகம், பக். 190, விலை 95ரூ. பிரிக்க வேண்டும் என்று வாதிப்பதாலேயே பிரிவினை வாதம் என்று எடுத்துக் கொள்ளாமல் பகுத்து ஆராய்ந்தால் இது ஒரு சிந்திக்க வைக்கும் நூல். நூலின் தலைப்பில் வெப்பமும் வேதனையும் இருப்பதுபோல் தோன்றினாலும், தமிழகத்தின் மேற்கு, தெற்கு பகுதி மக்களின் பின்தங்கிய நிலையைப் பல கோணங்களில் ஆராய்ந்து ஆதாரங்களோடு தன் தரப்பு வாதங்களை முன்வைக்கிறார் நூலாசிரியர், முன்னாள் சுங்கத்துறை அதிகாரி, சி.க.கருப்பண்ணன் ஐ.ஆர்.எஸ். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, அந்த மாநிலத்து […]

Read more

முகம் மாறும் நிலா

முகம் மாறும் நிலா, வறீதையா கான்ஸ்தந்தின், நெய்தல் வெளியீடு, பக். 78, விலை 75ரூ. தமிழ் கண்ட அபூர்வம் சில, கடல் சூழலியல், வாழ்வியல் எழுத்தாளர்களில் முன்வரிசையில் வருபவர், முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின். இவர் வரைந்த அறிவியல், சூழலியல் பேசும் புத்தகம் இது. கடலில் கால் நனைத்து, முடிந்தால் குளித்து, ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டு ஆச்சரியப்பட்டு, சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி விடும் நமக்கு, கடலும், கடல் சார்ந்த வாழ்வும் அந்நியமாக அறியப்படுவதில் ஆச்சரியமில்லை. அந்த அடித்தட்டு மக்களுடன் வாழ்ந்து, அவர்களின் வாழ்பனுவத்தை, தன் […]

Read more

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் – 2

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் – 2, தொகுப்பும் பதிப்பும் பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 922, விலை 900ரூ. எழுதி எழுதிக் குவித்த ஒரு மாபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். 1920ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தாலுகா, திசையன்விளையில் பிறந்தவர். 2006, நவ., 9ல் தன், 86வது வயதில் மறைந்தார். இவரது இயற்பெயர் கிருஷ்ணசுவாமி. புனைப்பெயர் வல்லிக்கண்ணன். ராசவல்லிபுரத்தில் உள்ள வல்லியும், கிருஷ்ணனின் தமிழ்ப் பெயரான கண்ணனும் சேர்ந்து வல்லிக்கண்ணன் ஆயிற்று. இத்துடன் நையாண்டி பாரதி, சொனாமுனா, சொக்கலிங்கம், கெண்டையன்பிள்ளை, கோரநாதன், மிவாங்கி, வேதாந்தி, பிள்ளையார், […]

Read more

சட்ட வல்லுநர் திருவள்ளுவர்

சட்ட வல்லுநர் திருவள்ளுவர், டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி வெளியீடு, பக். 275, விலை 220ரூ. மேல் நாட்டவர்கள் தான் நம் நாட்டின் சட்டங்களை வடிவமைத்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன்… 1980 – 83ம் ஆண்டுவாக்கில், நம் சட்டக் கல்லூரிகளில் ரோமன், ஆங்கிலேய, லத்தீன், அமெரிக்கர்கள் மட்டுமே சட்ட அறிஞர்களாக அறிமுகம் செய்யப்பட்டனர். இந்தியாவிலிருந்து சட்ட அறிஞர்களாக ஏனோதானோவென்று அறிமுகம் செய்யப் பட்டவர்கள் மனுவும், சாணக்கியரும் (கவுடில்லியர்) மட்டுமே. தமிழில் நீதி நூல்கள் அதிகம் இருக்கின்றன என்ற உண்மையோ, தமிழ்மொழி சட்டக் கருத்துக்கள் […]

Read more

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2, எஸ்.எஸ். பரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், பக். 328, விலை 275ரூ. முறையான இசைப் பயில விரும்புவோர், ஒரு சாகித்தியத்தை யார் எழுதியது என்பதையும், அந்த சாகித்தியத்தின் முழு அர்த்தத்தையும் முற்றிலும் புரிந்து கொள்ள முனைவர். இதெல்லாம், இசைக் கல்லூரிகளில் பயின்றால் மட்டுமே சாத்தியம். இப்போதைய அவசர உலகில், சங்கீதம் கற்றுக் கொடுப்பவர்களே, வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் காட்டுவதில்லை. ஆனால், வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் கொண்டோர், அவர்களைப் பற்றி மேம்போக்காக எழுதப்பட்டுள்ள […]

Read more

உங்களுக்கான 24 போர் விதிகள்

உங்களுக்கான 24 போர் விதிகள், செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்., சுரா பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. இப்போதைய நேர்மையற்ற சில அதிகாரிகளை மனதில் நிழலாட விட்டு, இந்தப் புத்தகத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம். எடுத்தாலும் தவறில்லை. படித்து முடித்து இறுதியில், இப்படிப்பட்ட சிந்தனையைத் தூண்டும் அதிகாரியை நாம் பெற்றிருக்கிறோமே என, ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம். தனக்கு நேர்ந்த அவமானங்களைத் தாண்டி, எப்படி ஒரு அதிகாரியாகச் செயல்படுவது என்பதற்கு, தன் அனுபவத்தின் மூலமும், தான் படித்த அரிய புத்தகங்களின் மூலமும் மனதைப் பதப்படுத்தித் […]

Read more

இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள்

இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள், யசோதரை கருணாகரன், ஆனந்த விகடன், விலை 165ரூ. இதயத்தைக் காக்கும் உணவுகள் என்ற தலைப்பில், பல்வேறு உணவுகள் பாரம்பரிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் வகைகளை இதில் காணலாம். கொள்ளு ரசப்பொடி, முடக்கத்தான் இட்லி, இலந்தை வடை என்று பல ரெசிபிகள் இதில் அடக்கம். இந்த மூன்று நூல்களையும் வெளியிட்டு உணவுத் தயாரிப்பின் சிறப்பை ஆனந்த விகடன் பிரசுரம் வெளிப்படுத்தியிருக்கிறது. நன்றி: தினமலர், 9/4/2017.

Read more
1 3 4 5 6 7 8