ஏவுகணை தந்தை அப்துல் கலாம்

ஏவுகணை தந்தை அப்துல் கலாம், தொகுப்பு  சிவரஞ்சன், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. கடந்த சில ஆண்டுகளில் யாரைப் பற்றிய புத்தகம் இந்தியாவில் அதிக அளவில் வந்துள்ளது என்று கேட்டால் தயக்கமின்றி கூறலாம் “அப்துல்கலாம் அவர்களைப் பற்றிய புத்தகங்கள்தான்” என்று. புத்தக ஆசிரியர்கள் அவரவர் கோணத்தில் அப்துல் கலாம் சிறப்புகளைக்கண்டு மகிழ்ந்து எழுத்தில் வடிக்கிறார்கள். சிவரஞ்சன் தொகுத்துள்ள இந்த நூல், சிறப்பாக அமைந்துள்ளது. அப்துல் கலாம் வரலாறு, அவருடைய சாதனைகள், அவர் எழுதிய புத்தகங்கள், அவருக்குப் பிடித்தமான புத்தகங்கள்… இப்படி அப்துல் கலாம் பற்றி […]

Read more

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு (அறிவியல் சிறு கதைகள்), க.மண, அபயம் பதிப்பகம், பக்.177, விலை ரூ.120. “மனித உணர்ச்சிகளுக்கு இடமில்லாத அறிவியல் தொழில்நுட்பத் தகவல்கள், காய்ந்த ரொட்டிகள் 39” என்று நூலின் முன்னுரையில் கூறும் நூலாசிரியர், இந்நூலில் உள்ள சிறுகதைகளை காய்ந்த ரொட்டித் தகவல்களாக உருவாக்காமல், சுவை மிக்கதாக உருவாக்கியிருக்கிறார். கடந்தகாலத்துக்குச் சென்று, விருப்பப்பட்ட மிருகத்தை வேட்டையாடலாம் என்று சென்ற ஏகாம்பரம், கடந்த காலத்துக்குச் சென்ற பின்பு, “அதில் எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அந்தக் கடந்த காலத்துக்குப் பின்பு, பலதலைமுறைகளில் ஏற்கெனவே […]

Read more

தமிழ் திரைப்பட நூற்றாண்டு – 2018

தமிழ் திரைப்பட நூற்றாண்டு – 2018, பெ. வேல்முருகன், ஒளிக்கற்றை வெளியீடு, பக். 104, விலை 100ரூ. தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டதன் விளைவாக, தமிழ்த் திரைப்படங்களின் நூற்றாண்டு எந்த ஆண்டாக இருக்க முடியும் என்ற விவாதங்கள் உருவாகியுள்ளன. அந்தக் குறையை இந்நூல் தீர்த்து வைக்கிறது. 2018 ஆம் நூற்றாண்டுதான் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது இந்நூல். தமிழ்த் திரைப்படங்கள் குறித்த ஆய்விற்கு வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

அருகர்களின் பாதை

அருகர்களின் பாதை, ஜெயமோகன், கிழக்குப் பதிப்பகம், பக். 272, விலை 250ரூ. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத் தலங்களை தேடிச் செல்லும் ஒரு பயணம் இது. ஜெயமோகன் தனது நண்பர்கள் ஆறுபேருடன் ஈரோடு முதல் ராஜஸ்தான் வரை ஆறு மாநிலங்கள் வழியாக இதற்காகப் பயணப்பட்டிருக்கிறார். அறநிலைகளை சமணர்கள், இந்தியாவில்அமைத்திருந்தனர். அந்த சங்கிலி இன்றும் அறுபடாமல் அப்படியே இருப்பதை ஜெயமோகன் இப்பயணத்தின் வழி கண்டறிந்துள்ளார். பயணத்தின்போது தினமும் அவர் இணைய தளத்தில் எழுதியதன் தொகுப்பு இந்நூல். நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.184, விலை ரூ.140. தமிழ் இலக்கியத் திறனாய்வுகள், திறனாய்வு செய்பவரின் வாழ்க்கைப் பார்வையிலிருந்து பலவிதமாக வெளிவந்திருக்கின்றன. இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமர்சிப்பவர்களும், இலக்கியத்தின் வெளிப்பாட்டு அம்சத்தைப் பிரதானப்படுத்தி அழகியல் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும், இலக்கியம் எந்தக் கருத்தைச் சொல்கிறது என்ற அடிப்படையில் சமூகக் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்களே. ஆனால் இந்நூலின் விமர்சனப் பார்வை சற்றே வித்தியாசமானது. உளவியல் அறிஞர்களான ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகியோரின் உளவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான […]

Read more

நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம், வரலாற்று நாவல், அ. ரெங்கசாமி, தமிழோசை பதிப்பகம், பக். 464, விலை 400ரூ. சயாம் – பர்மா மரண ரயில் பாதைத் திட்டத்தின் போது, ஜப்பான் இழைத்த கொடுமைகளால், 2.5 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்த சம்பவத்தை ஒட்டி மலேயத் தமிழர்களுக்காக, போர் நினைவுச் சின்னம் ஒன்றைப் போல எழுப்ப முடியாததால், இந்நாவலுக்கு பேனா முனை கொண்டு ‘நினைவுச் சின்னம்’ எழுப்பியுள்ளதாகக் கூறும் இந்நாவலாசிரியரின் எழுத்தோவியம், இன்றைய தலைமுறையினர் மூதாதையர்களின் அவல வரலாற்றைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. மலேஷியத் தமிழ்த் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி […]

Read more

டேவிட்டும் கோலியாத்தும்

டேவிட்டும் கோலியாத்தும், மால்கம் கிளாட்வெல், தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 352 , விலைரூ.300. பின்தங்கியவர்கள், பொருந்தாதவர்கள் எனக் கருதப்படுவோர் – பேராற்றல் வாய்ந்தவர்களாகக் கருதப்படுவோரை, தங்களது போராட்டத்தின் மூலம் எதிர்கொண்டு, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள் என்ற கருத்தை பல்வேறு உண்மை நிகழ்வுகளை உதாரணம் காட்டி இந்நூல் விளக்குகிறது . முதலாம் உலகப் போரின் முடிவில், அரேபியாவை ஆக்கிரமித்திருந்த துருக்கியின் வலிமையான ராணுவத்தை, முறையான போர் உத்திகளை அறியாத பழங்குடியின மக்களைக் கொண்டு வீழ்த்திக் காட்டிய டி.இ.லாரன்ஸ், டிஸ்லெக்சியாவால் […]

Read more

உங்களுக்கான 24 போர் விதிகள்

உங்களுக்கான 24 போர் விதிகள், செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்., சுரா பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. 1987 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நூலாசிரியர், தமிழக காவல்துறையின் உயர் பொறுப்புகள் பலவற்றிலும், நேர்மையாகவும், திறம்படவும் பணியாற்றி முதலமைச்சர் விருது, பிரதமர் விருது என்று பல விருதுகளையும் பெற்று வருபவர். தவிர, தமிழக இளைஞர்களுக்கு u.p.s.c.பதவிகளுக்கான போட்டித்தேர்வை எதிர்கொள்ள, இலவசப் பயிற்சி அளிப்பவர். இந்நூலில்இளைய தலைமுறையினரின் தன்னார்வத்தைக் கிளரச் செய்து, அவர்களின் வாழ்க்கைப் போர்க்களத்தில் எதிர்த்து நிற்கும் தடைகளை வெற்றி […]

Read more

மெல்லக் கொல்லும் பால்

மெல்லக் கொல்லும் பால், டாக்டர் ஜெகதீசன், எம்.டி., டிசிஎச்., எம்.எஸ்சி., விலை 100ரூ. பால் நல்லதா, கெட்டதா? என்று பட்டிமன்றம் வைத்தால் நிச்சயம் யார் வெல்வர் என்று நினைக்கிறீர்கள்? கெட்டது என்ற அணியினர் தான். காரணம் அதற்கான அத்தனை ஆதாரங்களையும் திரட்டி, புள்ளி விபரங்களோடு மருத்துவர் அவர்கள், மெல்லக்கொல்லும் பால் என்னும் நூலை எழுதியிருக்கிறார். இவர், முதுநிலை மரபியல் மருத்துவம் பயின்றவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்று குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவம் பார்த்துக்கொண்டிருப்பவர். ஒரு மருத்துவர் ஆதாரங்களுடன் எழுதி இருக்கும் […]

Read more

நினைவில் நிலைத்தவர்கள்

நினைவில் நிலைத்தவர்கள், வாசகன் பதிப்பகம், விலை 100ரூ. எழுத்தாளர்கள் பொன்னீலன், மெர்வின், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், நாட்டுப்புற இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி உள்பட 29 பிரமுகர்களின் சிறப்பை விவரிக்கிறார் நூலாசிரியரும், பத்திரிகையாளருமான அகநம்பி. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   மாவலி பதில்கள், நக்கீரன் பதிப்பகம், விலை 125ரூ. ‘நக்கீரன்’ இதழில் வெளியான கேள்வி – பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மாவலி என்ற பெயரில் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கோவி. லெனின். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில் சுவையாகவும், சிந்தனையைத் […]

Read more
1 5 6 7 8