தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக்.296, விலை ரூ.200. தொல்காப்பியம்தான் தொன்மையான முதல் இலக்கண நூலாகத் திகழ்கிறது. எம்மொழி இலக்கணத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு மட்டுமே உண்டு. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய முப்பெரும் அதிகாரங்களைக் கொண்டது தொல்காப்பியம். இந்நூலிலும் முப்பெரும் அதிகாரங்கள் உள்ளன. எழுத்திலக்கணத்தில், எழுத்துகள் உருவாக்கம், எண்ணிக்கை, மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், மாத்திரை, போலி முதலியவற்றைக் கூறும் எழுத்தியல் பற்றியும்; பகுபதம், பகாபதம் போன்ற பகுபத உறுப்புகள், உறுப்பிலக்கணம் போன்றவற்றைக் கூறும் பதவியல் பற்றியும்; எழுத்துப் புணர்ச்சி […]

Read more

ஈழ இலக்கியம் – ஒரு விமர்சனப் பார்வை

ஈழ இலக்கியம் – ஒரு விமர்சனப் பார்வை, ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலைரூ.155. நாப அய்யர். அதன் பின்னர் ஈழ இலக்கியத்தை ஈழப்போர் வழியாகவே அறிய நேர்ந்தது. ஈழப்போர் வழியாகவே ஈழ இலக்கியம் சார்ந்த இதழ்கள் உருவாகின. அவையே ஈழ இலக்கியம் பரவலாக அறிமுகமாக வழி வகுத்தது. ஈழத்தின் இலக்கியச் சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி படைப்புகளின் வழியாகவும், சிறுகதையை அ.முத்துலிங்கம் படைப்புகளின் வழியாகவும், கவிதைகளை வில்வரத்தினம், சேரன் படைப்புகளின் வழியாகவும் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். தத்துவத்தின் விளிம்பில் மெய்யியலில் சஞ்சரிப்பவர் தளையசிங்கம். ஒரு முற்போக்காளராக […]

Read more

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம், தொகுப்பாளர்: எஸ்.சென்ன கேசவ பெருமாள், நர்மதா பதிப்பகம், பக். 480, விலை ரூ.300. இந்து சமயம் தொடர்பாக பல்வேறு நாளிதழ்களில் வந்த பல்வேறு தகவல்களை, கட்டுரைகளை, செய்திகளை இந்நூல் தொகுத்து தருகிறது. இறைவனின் தன்மைகள் எவை? இந்து மதத்தின் ஆச்சாரியார்களின் தத்துவங்கள் எவை? ஆலயங்களின் அமைப்பு எவ்வாறு இருக்கிறது? ஆலயங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் எவை? ஆலயங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன? வழிபடும் முறைகள், மார்க்கங்கள், அனுஷ்டானங்கள் எவை? இந்து மதம் சார்ந்த வேதங்கள், ஆகமங்கள், உபநிஷத்துகள், சாஸ்திரங்கள் என்ன […]

Read more

RTI பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள்

RTI பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.236, விலை ரூ.220 2005 ஆம் ஆண்டு இந்திய அரசால் தகவல் அறியும் சட்டம் நிறைவேற்றப்பட்ட து. அச்சட்டத்தின் முக்கிய சட்டப் பிரிவுகள் பற்றி இந்நூல் விளக்குகிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தகவல் பெற விரும்புபவர்கள் அளிக்கும் மனுவுக்கு பொதுத் தகவல் அலுவலர்கள் எப்படி பதிலளிக்க வேண்டும்? எப்படி பதிலளிக்கக் கூடாது? பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள் எவை? தகவல் ஆணையத்தில் பணிபுரிவோரின் அதிகாரங்கள், கடமைகள் ஆகியவை பற்றி எல்லாம் மிகத் […]

Read more

பேரா.நா.வா.வின் நான்கு கதைப் பாடல்கள்

பேரா.நா.வா.வின் நான்கு கதைப் பாடல்கள், பதிப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.545, விலை ரூ.500. பேராசிரியர் நா.வானமாமலை தொகுத்து, ஆய்வுரை எழுதி வெளியிட்ட காத்தவராயன் கதைப் பாடல், வள்ளியூர் வரலாறு (ஐவர் ராஜாக்கள் கதை), முத்துப்பட்டன் கதை, கான்சாகிபு சண்டை ஆகிய நான்கு கதைப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதைப் பாடல் குறித்தும் நா.வானமாமலை எழுதிய முன்னுரை(ஆய்வு)ரைகளும் இடம் பெற்றுள்ளன. 15 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த கதைப் பாடல்கள் […]

Read more

ஹிதோபதேசத்தில் நிர்வாகம்

ஹிதோபதேசத்தில் நிர்வாகம், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க், பக்.160, விலை ரூ.100.  16/2, ஹிதோபதேசக் கதைகளுக்கு என்றுமே முதுமையில்லை. குழந்தைகளுக்கான புத்தகம் என்ற நிலையில் உள்ள அதனை நூலாசிரியர் நிர்வாகக் களத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். மூலத்தில் உள்ளபடியே கதைகளைத் தருவதென்றால் வர்ணனை, உரையாடலுக்கு அதிகப் பக்கங்களாகும். நீதிகள், நியதிகள், சுலோகங்கள் கதைகளை விட நீளமானவை. எனவே கதைகளைச் சுருக்கி தாத்பர்யங்களை விரிவாகவும் நிர்வாகவியலோடு சம்பந்தப்படுத்தியும் இந்தப் படைப்பை நூலாசிரியர் தந்துள்ளார். 49 கதைச் சுருக்கங்கள் கொண்ட இந்த நூலில், துணிவில் இருக்கிறது வெற்றி; […]

Read more

மழைக்குருவி

மழைக்குருவி, கயல், வாசன் பதிப்பகம், பக்.96, விலை 85ரூ. ‘விளைநிலங்களில் வீட்டு மனைகள் பணப்பயிராய்க் கல்வி! கள்ளின்றி எல்லைச்சாமிகள் டாஸ்மாக் கடைகளில் காத்திருக்கும்… எட்டு மாதப் பெண் சிசுவையும் விட்டு வைக்காத கயமை அட! யாராவது செத்துப் போனால் இன்னமும் நாம் அழுகிறோம்… ‘வனமிழந்து, உறவிழந்து கூட்டங் கூட்டமாய் வழியறியாது அலையும்’ என்ற கவிதை வரிகள், இன்றைய சமுதாய சூழலில் விவசாய நிலங்கள் வீடுகளாகவும், மனைகளாகவும் மாறிக் கொண்டு இருப்பதையும், ‘டாஸ்மாக்’கில் குடிக்காக காத்திருக்கும் அவலத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 26/11/2017.

Read more

ஆநந்த மடம்

ஆநந்த மடம், பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர், தமிழில்: மஹேச குமார சர்மா, ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், பக்.336, விலை ரூ.120. கி.பி.1771 இல் வங்காளத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. கிராமப்புறங்களில் வாழும் மக்களில் பலர் பசியால், நோயால் மாண்டுவிடுகின்றனர். அந்நிலையிலும் அப்பகுதியை ஆண்ட மன்னர் கடுமையாக வரி விதிக்கிறார். வரி வசூலிக்கும் பணியை ஆங்கிலேயர் மேற்கொள்கின்றனர். காட்டில் மறைந்து வாழ்ந்த சந்நியாசிகள் ஆட்சி செய்த மன்னரையும், வரி வசூலிக்கும் ஆங்கிலேரையும் எதிர்த்து போரிடுகிறார்கள். வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். எனினும் ஆட்சியாளர்களால் இறுதியில் அவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள். […]

Read more

நாட்டை உலுக்கிய ஊழல்கள்

நாட்டை உலுக்கிய ஊழல்கள், குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ. சுதந்திரத்துக்கு பின், பல ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலிய ஊழல்கள் பல. 1952ம் ஆண்டு நடந்த நாட்டின் முதல் தேர்தலுக்கு பின், ஒவ்வொரு ஆட்சியிலும், குறைந்தது ஒரு ஊழலாவது பெரிய அளவில் பேசப்பட்டுள்ளன. போபர்ஸ் பீரங்கி, கால்நடை தீவனம், ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் என அடுக்கிக் கொண்டே போகலாம். நாட்டையே உலுக்கிய முக்கியமான ஊழல்களின் விபரத்தை எளிய நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் அளவில் ஆசிரியர் தந்துள்ளார். ஊழலுக்கு ஆட்சியும் அதிகாரமுமே […]

Read more

பாலர்களுக்கான பாகவதக் கதைகள்,

பாலர்களுக்கான பாகவதக் கதைகள், ஆர்.சி.சம்பத், அருணா பப்பிளகேஷன்ஸ், விலை 35ரூ. மஹாவிஷ்ணுவின் பெருமைகளை விளக்கும் நுால் ஸ்ரீமத் பாகவதம். இதை, எளிதில் ஒருவரால் முழுமையாக படித்துவிட முடியாது. படிக்க படிக்க சுவை கூட்டக் கூடிய பாகவதத்தை, குழந்தைகளுக்கு புரியும் வகையில், சிறு சிறு கதைகளாக ஆசிரியர் தந்துள்ளார். இதை, குழந்தைகள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அதனால், அவர்கள் மனதில் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும்; நம் கலாசாரம், புராணங்கள் மீதும் பற்று ஏற்படும். இதனால், அவர்கள் மனதில் ஒழுக்க நெறி மேம்படும். ஆண்டவன் மீது […]

Read more
1 3 4 5 6 7 8