எல்லையில்லா பிரபஞ்சம்

எல்லையில்லா பிரபஞ்சம், மதிமாறன், வேமன் பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. மனித அறிவால் அறிந்த கோள்கள் சில; அறியாத கோள்கள் பல. அனைத்து கோள்களையும், பால்வெளிகளையும் உள்ளடக்கிய கற்பனைக்கு எட்டாத இந்த அண்டத்தின் விந்தை அளப்பரியது. பயிலப்பயில வியப்பைத் தருவது. எண்ணிக்கையில் அடங்கா கோள்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்தின் செறிந்த அறிவியல், பொருளியல் உண்மைகளைத் தமிழில் விளக்க முற்படும் நுால் இது. அகன்று விரிந்த இந்த அண்டத்தின் தோற்றம், அதன் வயது, அளவு, வடிவம், ஆய்வுகள் ஆகியவை உலகெங்கும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு தான் […]

Read more

சூபி கதைகள்

சூபி கதைகள், யூமா வாசுகி, என்.சி.பி.எச்., பக்.101, விலை 90ரூ. சூபி ஞானிகள் ஜென் ஞானிகளைப் போல எதையும் அனுபவத்தின் வழியேயும், வாழ்க்கை முறைக்கு உணர்த்த வேண்டிய கருத்துக்களை எளிமையாகச் சொல்வதன் வழியேயும் பலவற்றைச் சொல்லி இருக்கின்றனர். சின்னஞ் சிறுகதைகளாக, ஒரு பக்கத்திற்கும் குறைவாகவே உள்ள பல சிறுகதைகள் இதில் உள்ளன. பல கதைகள் வேடிக்கையான நிகழ்ச்சிகளை கொண்டுள்ளன. ஆட்டுக்கு ஆளைத் தெரியும். அடிமை, மூவர், மரணம் முதலிய கதைகள் இத்தகையன. அறவுரையும், அறிவார்ந்த எண்ணங்களை வெளிக் கொணரும்படியான கருத்துக்களும் அடங்கிய கதைகளும் இதில் […]

Read more

மனதைத் தொட்ட சில நிகழ்வுகள்

மனதைத் தொட்ட சில நிகழ்வுகள், சி.இரத்தினசாமி, வசந்தா பிரசுரம், பக். 136, விலை 100ரூ. ஒரு விஷயத்தை ஒருவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த, கதை மூலம் ஒரு விஷயத்தை சொல்வது மிக சிறந்த வழி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கதை கேட்பதிலும், படிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், வாழ்வியல் தத்துவங்கள், வாழ்க்கையின் செயல்பாடுகள் ஆகியவற்றை தமிழ் மணத்துடன், அழகுற, எளிய நடையில், சிறு சிறு கதைகளாக தொகுத்து, ஆசிரியர் தந்துள்ளார். இந்த கதைகளை படித்த போது, அந்த கதாபாத்திரங்கள், நம் மனதில் […]

Read more

இயேசு அந்தாதி

இயேசு அந்தாதி, வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், பக்.48, விலை 100ரூ. இயேசுவின் இறையருளைப் பற்றியும், மானிடக் குலத்துக்கு எடுத்துக் கூறும் போதனைகளையும் நல்ல கவிநயத்துடன் தன் கவிதை யில் ஓட விட்டுள்ளார் நுால் ஆசிரியர். நல்ல சொல்வளம், கவித்துவம், காவியம் முழுவதும் நிரம்பி, கவிமணம் வீசுகிறது. உலகைப் படைத்தவரே உவந்து மனித உருவில் வந்தார். தன் மானுடவதாரத்தின் முக்கிய மனிதன் நல்லவனாக வாழ வேண்டும்; தீமையை விட்டு விலக வேண்டும். அதுவே, இம்மையிலும் மறுமையிலும் மனிதனுக்கு நன்மை பயப்பதாக அமையும் என்கிறது இந்நுால். நன்றி: […]

Read more

மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், எஸ்.தமயந்தி, குமரன் பதிப்பகம், பக்.112, விலை 40ரூ. உலகில் பல குணங்களை கொண்ட மனிதர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும், ஒரு காவியத்தில் காண முடியும் என்றால், அது மகாபாரதம் தான். மகாபாரதத்தை ஒரு கதை களஞ்சியம் என்றே கூற வேண்டும்; கதைக்குள் கதை என பல்லாயிரம் கதைகள் உள்ளன. கடல் போன்ற மகாபாரதத்தை, ஏழு கதைகள் மூலம், ஆசிரியர் மிகச் சுருக்கமாக தந்துள்ளார். இதை படித்தால், மகாபாரதத்தை படித்த திருப்தி ஏற்படுகிறது. குழந்தைகளிடம் இந்த புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னால், அவர்கள் […]

Read more

மதுரை நகரக் கோவில்கள்

மதுரை நகரக் கோவில்கள், டி.வி.எஸ்.மணியன், அமராவதி பதிப்பகம், பக். 200, விலை 130ரூ. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார் அவ்வையார். கோவில் நகரம் என்றே அன்று முதல் இன்று வரை போற்றப்படுவது மதுரை மாநகரம். இங்குள்ள, 20 கோவில்களின் விபரங்களை இந்த நுால் அழகுடன் விளக்குகிறது. இலக்கிய வளமும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க, மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர் கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்களின் விளக்கங்கள் அருமை. மதுரை மீனாட்சி கோவிலில், குலசேகரப் பாண்டியன் வரலாறு, 64 […]

Read more

பெண் – சமூகம் – சமத்துவம்

பெண் -சமூகம் – சமத்துவம், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், வள்ளி சுந்தர் பதிப்பகம், பக். 136, விலை 90ரூ. சென்னை தரமணியில் இருக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், சமூகவியல் கலை பண்பாட்டுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர் பத்மாவதி விவேகானந்தன். கவிஞர், சிறுகதை எழுத்தாளர், திறனாய்வாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவர். பெண்ணுரிமைப் போராட்டத்திற்கான மிக முக்கியமான அம்சம், அடிமைத்தனத்தில் ஊறிக் கிடக்கும் அவளை அந்த அடிமைத் தனத்தை உணரும்படி செய்வது தான். தன்னை அறிந்து கொண்டு விட்டால், பின் எல்லாம் தானாகவே நடந்துவிடும். அதற்கான […]

Read more

மனநிழல் காட்சிகளும் சலனங்களும்

மனநிழல் காட்சிகளும் சலனங்களும், ந.பிச்சமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.128, விலை ரூ.120. புதுக்கவிதை முன்னோடிகளுள் ஒருவரான ந.பிச்சமூர்த்தியின் கவிதையும் அல்லாத, கட்டுரையும் அல்லாத, கதையும் அல்லாத புதுவகை அனுபவத் தெறிப்புகளின் தொகுப்பு இந்நூல். வாழ்க்கையை தன் கவிதைக் கண்களால் மிக நுட்பமாக, அழகாகப் பார்த்து காட்சிப்படுத்தியிருக்கிறார் பிச்சமூர்த்தி. அவர் வாழ்வின் நேரடி அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன. கூடவே அவருடைய வாழ்க்கைப் பார்வையும். மிகச் சிறு விஷயங்களிலும் கூட, இந்த வாழ்க்கைப் பார்வை வெளிப்படுகிறது. பிய்ந்து போன செருப்பைப் பற்றிக் கூறும்போது, இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் […]

Read more

கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், பக்.144, விலை ரூ.130. உலக வரலாற்றை மாற்றியமைத்த கடல் பயணங்களின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் நூல். வணிகம், புதையல், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, தேடல் என பல்வேறு காரணங்களுக்காக எத்தனையோ மனிதர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், சரித்திரத்தின் பக்கங்களை வசீகரித்த குறிப்பிடத்தக்க 13 பேரின் பயணங்கள் குறித்து இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. வாஸ்கோடகாமா போர்ச்சுகலில் இருந்து இந்தியாவைத் தேடி செயிண்ட் கேப்ரியல் என்ற கப்பலில் பயணிக்கிறார்; முதல் மூன்று மாதங்கள் நிலமே கண்ணில் படவில்லை. எங்கு திரும்பினாலும் […]

Read more

சாதனை மலர்கள்

சாதனை மலர்கள், தொகுப்பாசிரியர்: மக்கள் குரல் வீ.ராம்ஜீ, மணிவாசகர் பதிப்பகம், பக்.224, விலை ரூ175. மக்கள் குரல் நாளிதழில் வாரம்தோறும் வெளியான விருந்தினர் குரல் என்ற சிறப்புப் பகுதியில் இடம்பெற்ற 32 பல்துறை வித்தகர்களின் பேட்டி நூலாக்கம் பெற்றிருக்கிறது. இயல், இசை, நாடகம், நாட்டியம், நடிப்பு, கதை, கவிதை, இலக்கியம், பதிப்பு, தயாரிப்பு, மென்திறன், குழந்தை இலக்கியம், பாடலாசிரியர், கதாசிரியர், நாடகாசிரியர், எழுத்தாளர், மனநல ஆலோசகர், அறிவியல் ஆய்வாளர், நூலகர், சமூக ஆர்வலர், பொதுப்பணி ஆகிய துறைகளில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வழித்தடத்தை சுருக்கமாக தொகுப்பாசிரியர் […]

Read more
1 4 5 6 7 8