திருக்குறளில் தன்னம்பிக்கை

திருக்குறளில் தன்னம்பிக்கை, ஜெ.கமலநாதன், குமரன் பதிப்பகம், பக்.104, விலை 40ரூ. திருக்குறளில் கூறப்பட்டுள்ள மேலாண்மை அறிவியல் கருத்துக்களை முன்னிறுத்துகிறது. உலகின் மிகச் சிறந்த ஆங்கில தன்னம்பிக்கை நுால்களில் கூறப்பட்டுள்ள ஆளுமைப் பண்புகள் பல உள்ளன. அவை யாவும், ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளில் வலியுறுத்தப்பட்டுள்ள பெரும் விந்தையையும், பெருமையையும் நுாலாசிரியர் தக்க சான்றுகளோடு பதிவு செய்து, சிறப்பு சேர்க்கிறார். இந்நுால், இலக்கிய அன்பர்கள் அனைவர் கைகளிலும் தவழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 7/1/2018.

Read more

பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம், பா.ஜோதி நிர்மலாசாமி, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 120ரூ. பெண்கள் பற்றிய, 30 தலைப்புகளில் தம் வாழ்வியல் அனுபவங்களை இந்நுாலில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார் நுாலாசிரியர். பெண்கள் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பல கோணங்களில் தம் வாழ்க்கைக்கு அனுபவங்களூடே விளக்கிச் சொல்கிறார். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் தம் இருப்பைக் குடும்பச் சூழ்நிலையிலும், வெளியுலகிலும் எவ்வாறெல்லாம் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்ல படிப்பினையைத் தருவதாக இந்நுால் விளங்குகிறது. பெண் உரிமையை நிலைநாட்ட வேண்டியதன் இன்றியமையாமை, […]

Read more

மின் கம்பியில் குருவிகள்

மின் கம்பியில் குருவிகள்,  சாரதா. க. சந்தோஷ், நீலநிலா பதிப்பகம் வெளியீடு, இந்த நூலின் ஆசிரியர் சாரதா. க. சந்தோஷ் சமூக வலைதலங்களிலும் இலக்கியம் சார்ந்த அமைப்புகளிலும் முனைப்போடு இயங்கி வரும்அவர் சமீபத்தில் கவியுலகப் பூச்சோலை அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழாவில் இந்நூலை வெளியிட்டார். மின் கம்பியில் குருவிகள் என்ற இந்த நூல் ஹைக்கூ கவிதை தொகுப்பாக வெளிவந்துள்ளது. <p style=”text-align: justify;”>கவிஞரின் இரண்டாவது நூல் இது. இந்த நூலில் பொது சிந்தனை, சமூக அக்கரை மனித நேயம் என பல தளங்களில் தன் […]

Read more

கிரேஸியைக் கேளுங்கள்

கிரேஸியைக் கேளுங்கள், கிரேஸி மோகன், தாமரை பிரதர்ஸ் பிரைவேட் மீடியா பிரைவேட் லிமிடெட், பாகம் 1, 2, விலை 224ரூ, 180ரூ. தமிழ் கேள்வி, பதில் துறையை வளப்படுத்தும் வகையில், கல்கி இதழில் கிரேஸி மோகன் எழுதிய கேள்வி –– பதில் பகுதி தொகுக்கப்பட்டு நுாலாக வெளிவருகிறது. அவருக்கே உரிய குறும்பும், நகைச்சுவையும் இந்நுாலில் தொட்ட இடமெல்லாம் மின்னுகின்றன. மிக நீண்ட பதில்களும், சுருக்கமான பதில்களும் கலந்தே காணப்படுகின்றன. அவரது எழுத்து வெளிப்பாடுகள் புதிய பாணியில் அமைந்தவை. படிக்க ரசமானவை. கவிஞர் வாலியை, ‘கதர் […]

Read more

வெளிச்சத்தைத் தேடி

வெளிச்சத்தைத் தேடி, கோ.ராமகிருஷ்ணன், வாசகன் பதிப்பகம், பக். 106, விலை 80ரூ. இந்த கவிதை தொகுப்பு நுாலில், பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக உருவாக வேண்டும். இளைஞர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக இந்த சமுதாய மாற்றத்திற்கு, போராடுபவர்களாக இருக்க வேண்டும். ஜாதி, மதம் இல்லாத மனித மனம் வேண்டும் என்ற கருத்துக்களை, இவரது கவிதை முன்வைக்கிறது. குறிப்பாக, அருகம்புல் என்னும் கவிதை தலைப்பில், ‘மண்ணின் ஆதி மைந்தர்களே அருகம்புல்லாய் துளிர்த்தெழுவீர்! அகிலம் போற்ற வாழ்ந்திடுவீர்’  (பக்., 20) என்று இளைஞர்களை எழுப்பும் வரிகள் பாராட்டப்பட வேண்டியது. காவல் […]

Read more

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல்

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல், முனைவர் த.தமிழரசி, அய்யா நிலையம் வெளியீடு, பக். 208, விலை 200ரூ. ஒவ்வொரு படைப்பாளனுக்கும் தனக்கென்று ஒரு மனக்கலவை இருக்கிறது. அவற்றை முற்றிலுமாக ஆய்ந்தால், இறுதியாக அப்படைப்பாளியின் வரைபடம் ஒன்று புலனாகும். முப்பது ஆண்டுகளாக தமிழிலக்கியத்தின் கதைக்களத்தில் உலா வரும் சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளை பலவகையிலும் ஆய்ந்து, அவரை ஒரு வாழ்வியல் படைப்பாளியாக நிலை நிறுத்துகிறார் முனைவர் தமிழரசி. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் கதை மாந்தர்களிடையே வெளிப்படும் எதிர்பார்ப்பற்ற மனிதநேயம், பயன் பெற்றதும் நன்றி மறத்தல், நெருக்கடியிலும் சுயநலம், துன்பத்திலிருந்து மீட்கும் நம்பிக்கைகள், […]

Read more

நீ பாதி நான் பாதி

நீ பாதி நான் பாதி, பலரது கட்டுரைத் தொகுப்பு, அந்திமழை, பக். 128, விலை 110ரூ. இரு வேறு மனங்கள் இணைந்து மேற்கொள்ளும் இல்லறத்தில், மகிழ்ச்சியான மண வாழ்வின் தேடல்களிலேயே பலரது நாட்களும் நகர்கின்றன. கருத்தொருமிப்பு இல்லாமல் மேற்கொள்ளும் இல்லற வாழ்க்கை, கருத்து மாறுபாடுகளின் கன பரிமாணத்திற்கேற்ப துன்பத்தில் வீழ்ந்து விடுகிறது. குறைந்த சதவீதத்தினரே இதில் வெற்றி கண்டு, அன்பான இல்லற வாழ்க்கைக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து நேசித்து வாழும் சாமானியர்கள் பலரை, அன்றாட வாழ்வில் கண்டு வியப்பதுண்டு. தனி […]

Read more

பூச்சிகள் ஓர் அறிமுகம்

பூச்சிகள் ஓர் அறிமுகம், ஏ.சண்முகானந்தம், வானதி பதிப்பகம், விலை 60ரூ. இயற்கையைப் பொறுத்தவரை ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு சங்கிலித் தொடர்பு இருக்கும். அதில் மிக முக்கியமானவை பூச்சிகள். பூச்சியைப் பார்த்தாலே பலருக்கும் அருவருப்பாகத் தோன்றும். ஆனால் அவை அருவருக்கத்தக்கவை அல்ல என்பதை அழகிய படங்களுடனும் அறிவியல் தகவல்களுடனும் சிறப்பாக அறிமுகம் செய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம், என்.ராமதுரை, க்ரியா பதிப்பகம், விலை 130ரூ. உலகெங்கிலும் பருவநிலை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்கத்தை விடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரிக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது அல்லது வறட்சி தலைகாட்டுகிறது. இது ஏன் என்பதை இந்த நூல் எளிமையாக விளக்குகிறது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி)

சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி), முனைவர் ஆ.மணி, காவ்யா, பக். 768, விலை 750ரூ. கும்மியாட்டம் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொள்வர். நடுவில் முளைப்பாரி அல்லது வேறு ஏதேனும் சில பொருட்களை நடுவில் வைத்து, பெண்கள் வட்டமாக நின்று கை கொட்டி ஆடும் ஆட்டம் கும்மியாட்டம் எனப்படும். இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது. வெள்ளையரை எதிர்த்து போராடிய மாவீரர்களில், மருது சகோதரர்களின் பெயர் மறக்க முடியாததாகும். 1772ல் ராணி வேலு நாச்சியாருக்கு உதவி […]

Read more
1 3 4 5 6 7 8