ஹைட்ரோ கார்பன் அபாயம் (இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்)

ஹைட்ரோ கார்பன் அபாயம், (இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்), கா. அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், பக். 288, விலை225ரூ. உணவு, எரிபொருள் ஆகிய இரண்டுமே மக்களுக்கு மிக முக்கியமான தேவைகள். இவற்றில் பூமிக்குள் பொதிந்திருக்கும் ஹைட்ரோ கார்பனிலிருந்து தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மிகப் பண்டைய காலத்தில் இருந்தே காவிரிப் படுகை விவசாய நிலமாகத் திகழ்ந்து வருகிறது. இப்படுகை நிலத்தைத் தோண்டி ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால், அந்தப் பிராந்தியம் முழுவதும் விவசாயம் செய்ய முடியாமல் பாழாகிவிடும். ஹைட்ரோ […]

Read more

சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும்

சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும், எஸ்.ஜெயசீல ஸ்டீபன், தமிழில் ரகு அந்தோணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 273, விலை 250ரூ. கி.பி., 1500 –- 1600 காலத்திற்குட்பட்ட சோழ மண்டலக் கடற்கரையும், அதன் உள்நாட்டு விபரங்களும் அடங்கிய முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சார்ந்த நுால் இது. சோழ மண்டலப் பகுதியின் பொருளாதார, சமூகத்தை ஆய்வு செய்கிறது; இதற்காக உள்நாட்டு, அயல்நாட்டுத் தரவுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அக்காலக்கட்டத்தில் தக்க வரலாற்று விளக்க நுால்கள் இல்லாத நிலையில், கல்வெட்டுகளின் தேதிகளும் தெளிவில்லாத நிலையில், தென்னகக் […]

Read more

ரூபாய் நோட்டுக்கள் தடை

ரூபாய் நோட்டுக்கள் தடை,  எஸ். குருமூர்த்தி, அல்லயன்ஸ் வெளியீடு, பக். 160, விலை ரூ. 120. இந்த நூலின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி நாடறிந்த பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமாவார். நாட்டின் முக்கிய பொருளாதார விவகாரங்களைப் பற்றி எழுதி வருகிறார். நாட்டையே உலுக்கிய உயர் மதிப்பு கரன்சி மதிப்பிழப்பு குறித்து எஸ். குருமூர்த்தி எழுதிய முக்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். மேலும் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பைத் தொடர்ந்து ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டிகளின் தமிழாக்கமும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த […]

Read more

உச்ச வழு

உச்ச வழு, ஜெயமோகன்,  நற்றிணை பதிப்பகம், பக். 176, விலை ரூ.200. நூலாசிரியர் கடந்த இரண்டாண்டுகளில் எழுதிய 10 புதிய சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகள் படிமங்களையும், உருவகங்களையும் பயன்படுத்திப் பேசுகின்றன. டாப்சிலிப் காட்டுக்குள் பழைய பங்களாவில் செல்லிட பேசியும் இல்லாது தனியாகத் தங்கும் இளைஞனை மையமாகக் கொண்டு நகரும் கதை. அம்மாவின் இறப்புக்குக் கூட நேரில் போக முடியாத கடந்த காலம் அடர்ந்த கானக கும்மிருட்டில் அவனுக்கு நினைவில் வருவது யதார்த்தம். பகல் முடியக் கூடாது என்பதற்காக விமானத்திலேயே பயணம் செய்து கொண்டிருக்கும் […]

Read more

ஆதி மருத்துவம்

ஆதி மருத்துவம், ஏகப்பிரியன் மு.இஸ்மாயில், ஏஎம் யோகா அறக்கட்டளை, பக்கம் – 384, விலை ரூ.360. நோய் வந்து அவதிப்பட்டு சிகிச்சை எடுப்பதைக் காட்டிலும் தடுப்பு மருத்துவத்தின் மூலம் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும் என்ற கருத்து பரவலாகி வருகிறது. அதன் காரணமாக பாரம்பரிய மருத்துவம், பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய விவசாயம் என்று மாற்று வாழ்வியலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உணவே மருந்து என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்கும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நூலின் ஆசிரியர் […]

Read more

கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை

கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை, திரைக்கலைஞர்கள்  அந்திமழை, அந்தி மழை, பக்.316, விலை ரூ.300. அந்திமழை இதழில் வெளிவந்த திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், மக்கள் தொடர்புத்துறையினர் என திரைப்படத்துறை சார்ந்த அனைத்து கலைஞர்களின் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். கமல்ஹாசன், நாசர், பாண்டியராஜன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள், கஸ்தூரி, கெளதமி, நதியா, வரலட்சுமி உள்ளிட்ட நடிகைகள், இளையராஜா, கங்கை அமரன், டி.இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, ஆர்.ரவிக்குமார், எஸ்.பி. ஜனநாதன் உள்ளிட்ட இயக்குநர்கள் என 58 திரைப்படத்துறை […]

Read more

கண்டேன் புதையலை

கண்டேன் புதையலை,  பிரியசகி, புக்ஸ் ஃபார் சில்ரன், பக்.208, விலை ரூ.160. திறமை இல்லாத குழந்தைகளே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. எல்லாருக்கும் எல்லாத் திறமைகளும் இருப்பதில்லை. எனவே ஒரு சில திறமைகள் இல்லாத (உதாரணமாக, கணிதத்திலும், ஆங்கிலத்திலும் திறமை இல்லாத) குழந்தைகளை முட்டாளாகச் சித்திரிப்பது தவறு. அப்படிச் சித்திரித்தால் அது அவர்களுடைய வாழ்க்கையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தினமணி.காம் – இல் இது தொடராக வெளிவந்தது. தேசியக்கவின்னு புகழப்பட்ட பாரதி கூட சின்ன வயசுல […]

Read more

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள், செ.வை. சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 235, விலை 200ரூ. தமிழ் அறிஞர்கள் என்று குறிப்பிடத்தக்க பதினான்கு அறிஞர்களைக் குறித்த வரலாற்றுப் பதிவாக இந்நுால் திகழ்கிறது. இவர்கள் அனைவரும், 19, 20ம் நுாற்றாண்டுகளில் தமிழ்க் கல்வி வரலாற்றிலும், ஆய்வு வரலாற்றிலும் சிறப்புற்று விளங்கியவர்கள். இவர்களுள் கால்டுவெல், உ.வே.சா., ஆகிய இருவரையும் இந்நுால் ஆசிரியர் நேரில் காணவில்லை. எனினும், அவர்கள் இந்நுாற்றாண்டில் இன்றியமையா சாதனைகளை நிகழ்த்தியவர்கள் என்பதால், அவர்களையும் இணைத்தே இந்நுால் உருவாக்கப்பட்டுள்ளது. கால்டுவெல் வரலாற்று ஒப்பிலக்கணம் […]

Read more

பான் கி மூனின் றுவாண்டா

பான் கி மூனின் றுவாண்டா, அகர முதல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை ரூ.120; பத்து சிறுகதைகளின் தொகுப்பு. ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போர் அங்கு வாழ்ந்த மக்களை எவ்வாறெல்லாம் பாதித்தது, மக்களின் அன்றாட, இயல்பான வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து போனது என்பதைச் சித்திரிக்கும் சிறுகதைகள். ராணுவம், மக்கள் மீது போர்தொடுக்கும்போது ஏற்படும் படுமோசமான தீய விளைவுகளும், நிகழும் மனிதத்தன்மையற்ற செயல்களும் மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் போர் இயக்கங்களின் நடவடிக்கைகள், அவற்றில் ஈடுபட்ட மனிதர்கள், அவர்கள் செய்த தியாகங்கள், அவர்களின் இழப்புகள் அதிர […]

Read more

எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, பக்.144, விலை ரூ.100. குடும்ப வாழ்வில் கணவன் – மனைவிக்கு இடையிலான உறவில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகள், அவற்றிற்கான காரணங்கள் இந்நூலில் ஆராயப்பட்டிருக்கின்றன. அன்பும், காதலும் குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் எத்தனை கணவன் – மனைவிக்கிடையே அது அடிப்படையாக இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. குடும்பத்தில் ஆணின் ஆதிக்கம் தலைதூக்கி இருப்பது, பெண் வீட்டு வேலைக்காரியாக உழைத்து உழைத்து மாய்ந்து போவது, பெண்ணின் கருத்துகள், உணர்வுகள் மதிக்கப்படாதது, இந்த ஆணாதிக்க குடும்ப அமைப்பைக் காட்டிக் […]

Read more
1 4 5 6 7 8