கந்தனே உனை மறவேன்

கந்தனே உனை மறவேன், திருப்புகழ் மதிவண்ணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.220. ‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை!’ என்ற பழமொழிக்கு இணங்க, முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கும் தேவ சேனாதிபதி வரலாற்றை விளக்கும் நுால். பக்திரசம் சொட்ட எழுதியுள்ளார் மதிவண்ணன். கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், நக்கீரர், தாயுமானவர், வள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டி, சரளமான நடையில் தற்கால பாடல் வரிகளையும் புகுத்தி எழுதப்பட்டுள்ளது. கந்தனின் பிறப்பு, வளர்ப்பு, திருவிளையாடல்கள், வேல் […]

Read more

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர்

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர், எஸ். சேகு ஜமாலுதீன், வானதி பதிப்பகம், பக்.160, விலை ரூ.175. இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகளில் 16 பேரை தேர்வு செய்து, அவர்களின் தலைசிறந்த தமிழ்ப் படைப்புகள் எவை? அவர்களின் அரிய கருத்துகள் எவை என்பதை சுவாரசியமாக விவரிக்கிறது இந்த நூல். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் “சீறாப்புராணம்’ என்ற காப்பியமாகப் படைத்த உமறுப்புலவர், ராமாயண ஆய்வு நூல்களைப் படைத்தளித்த நீதிபதி மு.மு. இஸ்மாயில், “அக்னிச் சிறகுகள்’, “எழுச்சி தீபங்கள்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த […]

Read more

ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும்

ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும், முனைவர் பெ.ராஜேந்திரன், காவ்யா, விலைரூ.300. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லுாரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைச் சிறப்பாக விவரித்து, கல்வெட்டு, செப்பேடு, மெய்கீர்த்தி மற்றும் இலக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தொல்தமிழர் வாழ்வியல் அடையாளங்களை விளக்கிக் கூறும் நுால். அகழாய்வில் கிடைத்த பொன், இரும்புக் கருவிகள், மண்பாண்ட எச்சங்கள், வெண்கலப்பொருட்கள், வேளாண் பொருட்கள், நுண்கலைப் பொருட்கள், தாழிகள், தங்கப் பட்டைகள், மனித எலும்புகள், போர்க்கருவிகள் மற்றும் தரவுகளைத் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் அரசு ஆவணங்கள், கள ஆய்வு தரவுகள் மற்றும் […]

Read more

ஊடகச் சட்டங்கள்

ஊடகச் சட்டங்கள், சந்திரிகா சுப்ரமண்யன், சந்திரோதயம் பதிப்பகம், விலைரூ.250. ஊடக சட்டங்கள் மற்றும் அறங்கள் பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம், 16 தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. எளிய மொழிநடையில் புரியும் வகையில், குறுந்தலைப்புகளில் நேரடி அடுக்கமைவு முறையில் தகவல்கள் அமைந்துள்ளன. ஊடகம் பற்றி மகாத்மா காந்தியின் பொன்மொழியுடன் துவங்குகிறது. தொடர்ந்து, நான்காவது துாண், இந்தியாவில் ஊடக சுதந்திரம் போன்ற விபரங்கள் தனித்தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயே ஆட்சியில் ஊடக சுதந்திரம் தனி இயலாக உள்ளது. ஊடகத்துறை வளர்ச்சி மற்றும் வணிகம் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. ஊடக செய்திகளை, […]

Read more

ஓரெழுத்தில் ஆழ்வார்கள்

ஓரெழுத்தில் ஆழ்வார்கள், ப.ஜெயக்குமார், உமாதேவி பதிப்பகம், பக்.160, விலை ரூ.300. விதியை வென்று, முக்தியைஅடைய வழிகாட்டும் பன்னிரு ஆழ்வார்களின் பக்தி வரலாற்றை “ஓரெழுத்தில் ஆழ்வார்கள்’ என்ற நூல் வாயிலாக புதுக்காவியமாக செதுக்கி சிறப்பித்துள்ளார் நூலாசிரியர். சம்பவங்கள் விடுபடாமல், சமய நெறி குறைபடாமல், மொழியழகுடன் பிழையின்றி வைணவ வளம் காக்க ஆசிரியர் முயன்றுள்ளது மெச்சத் தகுந்தது. பன்னிருவர் வாழ்க்கையை ஓவியமாய், காவியமாய் பாடியுள்ளார். ஒவ்வோர் ஆழ்வாரின் பிறந்த மாதம், நட்சத்திரம், பிறந்த ஊர் – பெருமாளின் திருநாமம், திருமகளின் திருநாமம், தற்கால ஊரின் பெயர், தொடர்புக்கான […]

Read more

எந்தையும் தாயும்

எந்தையும் தாயும், நரசய்யா, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, விலை: ரூ.230 ஒடிஷாவில் பிறந்தவரும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவருமான நரசய்யாவுக்குத் தமிழிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கடற்படைக் கப்பல், விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளர், கம்போடியா புணர் நிர்மாணத்தில் பங்குபெற்றது, வங்கதேச விடுதலைப் போரில் பங்காற்றியது என இவருடைய பணி வாழ்க்கையைப் போல எழுத்து வாழ்க்கையும் விரிவானது. ‘எந்தையும் தாயும்’ என்று இவருடைய புதிய நூலில் சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தை விவரிக்கிறார் நரசய்யா. தன்னுடைய அனுபவங்களும், அவருடைய தாய் தந்தையரின் அன்றாட அனுபவங்களை அவர்கள் கதையாகச் […]

Read more

ஈமம்

ஈமம், கவிப்பித்தன், நூல்வனம் வெளியீடு, விலை: ரூ.440. வடஆர்க்காட்டின் நிலமொழியை அடையாளமாகக் கொண்ட கவிப்பித்தனின் ‘நீவாநதி’, ‘மடவளி’ நாவல்களைத் தொடர்ந்து வெளிவந்துள்ள மூன்றாவது நாவல் ‘ஈமம்’. விஷம் குடித்து இறந்துபோனதாகக் கருதிய ஒருவன், உடற்கூறாய்வுக்கு முன்னர் பிழைத்துக்கொள்கிறான். அவனை இந்தச் சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் மையச்சரடு. நாவலின் இந்த உள்ளடக்கம் புதியது; வியப்புக்குரியது. நாவல் தரும் வெளிச்சத்தில் மனிதத்திரளின் மேன்மைகள் நொறுங்கி வீழ்வதை வாசகர்கள் உணரலாம். கணவன், மனைவிக்கு இடையிலான சாதாரண பிரச்சினைக்காக விஷம் குடிக்கிறான் மகேந்திரன். இது தெரிந்த சுசீலா, ஆறு […]

Read more

இலக்கியத்தில் விருந்தோம்பல்

இலக்கியத்தில் விருந்தோம்பல், இறையன்பு, கற்பகம் பதிப்பகம், விலை: ரூ.175. சங்கத் தமிழர் மரபின் தொடர்ச்சியாகக் கருதப்படும் நவீன வாழ்க்கையிலும் காதல், வீரம், விருந்தோம்பல், நட்பு போன்ற சொற்கள் முக்கியமானவைதான். வீட்டுக்கு வரும் முன் பின் அறிமுகம் இல்லாதவரை உபசரித்தல் தமிழர் பண்பாட்டில் சிறப்பானது என்ற எண்ணம் இன்றைக்கும் நிலவுகிறது. ஆனால், இன்று விருந்தோம்பலைக் கொண்டாடும் போக்கு தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறதா என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்வோம். இந்தப் பின்னணியில், விருந்தோம்பலின் சிறப்புகளைச் சமகாலத் தமிழர்களிடம் நினைவுபடுத்திட வேண்டியுள்ளது. அந்தப் பணியை இந்த நூல் வழியாகச் செய்திருக்கிறார் […]

Read more

சூழலும் சாதியும்

சூழலும் சாதியும், நக்கீரன், காடோடி பதிப்பகம், விலை: ரூ.80. சூழலியல் சார்ந்த அக்கறைகளை நாவல் வடிவிலும் அபுனைவாகவும் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் நக்கீரனின் புதிய புத்தகம் ‘சூழலும் சாதியும்’. சூழலைச் சாதி எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. சாதி அவ்வளவு எளிதாக வேரறுத்துவிட முடியாத அளவுக்குப் பலம் கொண்ட ஆற்றலாக இருக்கக் காரணம், அது நம் வாழ்க்கையின் சகல கூறுகளோடும் சிக்கலான பிணைப்பைக் கொண்டிருப்பதுதான். இந்தச் சிக்கலான பிணைப்பைப் புரிந்துகொள்வதற்கு அதன் ஒவ்வொரு கூறுகளின் மீதும் தனித்தனியாகக் கவனம் குவிக்கும் முயற்சிகள் தொடர்ந்து […]

Read more

கொச்சிக்கட vs கும்மிடிபூண்டி

கொச்சிக்கட vs கும்மிடிபூண்டி, ஈழவாணி, பூவரசி பதிப்பகம், விலை: ரூ.250. கானவி, கண்ணன், நுவன், குழந்தை யாழி, ஆச்சி, லட்சுமி என்று மிகச் சில கதாபாத்திரங்களை வைத்து அற்புதமாக எழுதப்பட்டுள்ள நாவல் இது. நிகழ்கால நிஜமும் கடந்த கால வரலாறும் கேள்விகளாகவும் வேதனைகளாகவும் பதிவாகியிருக்கின்றன. கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத் திருத்தலத்தில் ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடங்கும் கதை, மடு மாதா தேவாலயத்துக்குச் சென்று லட்சுமியைப் பார்த்துவிட்டுக் குழந்தையுடன் கானவி திரும்புவதுடன் முடிகிறது. இடையில் புலிகளின் தகவல் தொடர்புப் பிரிவில் […]

Read more
1 3 4 5 6 7 8