பாரதி பாட்டுக்கொரு பட்டிமன்றம்

பாரதி பாட்டுக்கொரு பட்டிமன்றம் , அரங்க பரமேஸ்வரி. மங்கை பதிப்பகம், பக்.288. விலை ரூ.220; பொதுவாக பட்டிமன்ற நூல் வகையைச் சேர்ந்த புத்தகங்கள் செவ்வியல் இலக்கிய கருத்துகளையோ வாழ்வியல் கருத்துகளையோ மேடையில் பேச உதவும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். மகாகவி பாரதியின் படைப்புகளின் அடிப்படையில்அப்படிப்பட்டபுத்தகம் இதுவரை வெளியானதில்லை என்று ஆசிரியர் கூறுகிறார். அந்த வகையில் இது ஒரு புதிய முயற்சி. அதே சமயத்தில் இது பாரதியாரின் கவிதைகளைப் பற்றிய ஆய்வை வித்தியாசமாக அணுகும் புத்தகமாகவும் உள்ளது என்று கூறலாம். எனினும் தோற்றத்தில் இது ஆய்வு நூல் […]

Read more

மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள்

மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள் – பாகம் 1, டி.எஸ்.தியாகராசன், நர்மதா பதிப்பகம், பக்.240. விலை ரூ.225. மத நல்லிணக்கம், கல்வித்துறை மேம்பாடு, நெகிழியால் வரும் கேடு, இலவசங்களால் அரசுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, நீதிமன்றங்களின் வித்தியாசமான தீர்ப்புகள், நதிநீர்ப் பிரச்னையில் மாநிலங்களுக்கிடையே நிகழும் மோதல்கள், பொதுத்துறை தனியார்மயமாவதில் உள்ள சாதக, பாதகங்கள் – இவ்வாறு பல்வேறு பொருண்மைகள் குறித்து எழுதப்பட்ட முப்பத்தெட்டு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அண்ணல் காந்தியடிகள் குறிப்பிட்ட “ஏழு பாவங்களும்’ இன்றுவரை சமுதாயத்தைவிட்டு நீங்கவில்லை என்பதில் தொடங்கி, கரோனா […]

Read more

திருமுருகாற்றுப்படை விளக்கம்

திருமுருகாற்றுப்படை விளக்கம்,  கி.வா.ஜகந்நாதன், பூங்குன்றன் பதிப்பகம்,  பக்.384, விலை ரூ.300. திருமுருக கிருபானந்தவாரியார் நடத்திய ” திருப்புகழ் அமிர்தம்’ என்ற இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முருகனை இன்ன வழியில் சென்று, இன்ன இடத்தில் கண்டால் முருகனுடைய தரிசனம் கிட்டும், அவன் திருவருளையும் பெறலாம் என்று சொல்லும் வகையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை.<br>திருமுருகாற்றுப்படைக்கு பிற்காலத்தில் பத்து வெண்பாக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான பொருளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. முருகனின் அறுபடை வீடுகள் குறித்த, திருமுருகாற்றுப்படையின் ஒவ்வொரு வரியையும் எடுத்துக் கொண்டு, அதற்கான பொருளைக் கூறும் […]

Read more

பள்ளு இலக்கியம் மறுகட்டமைப்பு

பள்ளு இலக்கியம் மறுகட்டமைப்பு,  தே.ஞானசேகரன், காவ்யா பதிப்பகம், பக். 253,  விலை ரூ.270. பள்ளு இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, தமிழ் இலக்கியங்களில் மருத நில மக்கள், மள்ளர்களின் வீரம், பெருமை, ஆட்சி அதிகாரம், வரலாற்று கதைகள் ஆகியவை இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த மள்ளர்கள் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களால் பட்டியலினத்திற்குக் கொண்டுவரப்பட்ட விதமும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சமூக மக்களின் வாழ்வியல் முறைகள், குலப் பெயர்கள், குடும்ப முறைகள், அவர்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை எளிய தமிழில் நூலாசிரியர் […]

Read more

விடுதலைக்கு முன் தமிழ்இலக்கிய வளர்ச்சி

விடுதலைக்கு முன் தமிழ்இலக்கிய வளர்ச்சி (1900 – 1930) முதல் பாகம்,  அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.270, விலை  ரூ.250. கடந்த நூற்றாண்டின் தொடக்கமான 1900- இல் இருந்து1930வரைகவிதை, சிறுகதை, நாவல்,நாடகம், ஊடகம்,கட்டுரை, பதிப்புத்துறை ஆகியவற்றில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்களை, வளர்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது . பாரதியாரின் “தனிமையிரக்கம்’ 1904 – ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. அக்காலகட்டத்தில் வழிநடை உப்புமா பாட்டு, தனிப்பாசுரத் தொகை,வருண சிந்தாமணி, சங்கிரக இராமாயணம், அருணாசல புராணம் போன்ற கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன. வ.வே.சு.ஐயரின் “குளத்தங்கரை அரசமரம்’ இக்காலகட்டத்தில் வெளிவந்த […]

Read more

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி, சந்தனம்மாள் பதிப்பகம்,பக்.300, விலைரூ.300. விஜிபி குழுமத் தலைவரான வி.ஜி.சந்தோஷத்தின் 85 – ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாட்டின் குடியரசுத்தலைவர், மாநில முதல்வர், துணைநிலை ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள், முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள், நீதியரசர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர் சங்கப் பொறுப்பாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களின் வாழ்த்துகள், கட்டுரைகள், நினைவுக் குறிப்புகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. “இவர் மனிதரல்ல. மிக நல்ல மனிதர்.உலகமே போற்றும் மாமனிதர். […]

Read more

ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்

ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம், விஜய் மகேந்திரன், புலம் வெளியீடு, விலை: ரூ.150. தமிழ் சினிமா இசையை சர்வதேசக் கவனத்துக்கு எடுத்துச் சென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை, திரைப்பயணம் குறித்த அறியப்படாத, சுவாரஸ்யமான, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களால் நிரம்பியுள்ளது ‘ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்’ நூல். தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த திலீப்பாக இருந்த காலம்தொட்டு, ரஹ்மானை ஒரு ரசிகராகப் பின்தொடர்ந்துவரும் விஜய் மகேந்திரன், ரசனையைத் தாண்டி ஒரு பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய சமநிலை நோக்குடன் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார். […]

Read more

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள், ரவிசுப்பிரமணியன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.150. இசை எனும் நீர் நல்லவற்றை அடையாளம் காணுதல் ஒரு கலை. தனக்கானதைக் கண்டடைந்து, அதைத் தன்னுணர்வாக மாற்றி பாடுபொருளின் பன்முகத்தன்மையை நம் பயணிப்புக்கு ஏதுவாக மாற்றம்கொள்ளவும் செய்திடுகிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். அன்றாடங்களில் நிகழும் சம்பவங்களில் கவிதைக்கான விதையைத் தேர்வுசெய்தல், திறம்பட மொழியில் பிணைத்தல், இசை எனும் நீரால் ஈரப்படுத்துதல் எனும் தொடர் செயல்பாடுகளால் தன் படைப்புகளுக்கு முழுமை தருகிறார் ரவிசுப்பிரமணியன். இயல்பில் அவர் பாடகராக இருப்பது அவரின் கவிதைகளுக்குக் கூடுதல் பலமாக […]

Read more

இரவு எலீ வீஸல்

இரவு, எலீ வீஸல், தமிழில்: ரவி, தி. இளங்கோவன், எதிர் வெளியீடு, விலை: ரூ.230. மறதிக்கு எதிராக நினைவின் கலகத்தை ஒத்தது அதிகாரத்துக்கு எதிராக மனிதன் நடத்தும் யுத்தம் என்ற மிலன் குந்தேராவின் கூற்றுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் ஆக்கம் எலீ வீஸல் எழுதிய ‘இரவு’ சுயசரிதை. தற்போது ருமேனியாவாக இருக்கும் நாட்டில் சிகெட் என்னும் சிறுநகரத்தில் 1928-ம் ஆண்டு பிறந்த எலீ வீஸல், சிறுவனாக இருந்தபோதே யூத வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பெற்றோரையும் சகோதரியையும் அங்கேயே பறிகொடுத்தவர். சென்ற நூற்றாண்டில் யூதர்கள் மீது […]

Read more

உடல்மொழியின் கலை

உடல்மொழியின் கலை, வெளி ரங்கராஜன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.120 கலை, இலக்கியம், நாடகம் தொடர்பான வெளி ரங்கராஜனின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பு இது. நேரடிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாக மொத்தம் 22 கட்டுரைகள். கலை வடிவங்களை ஆவணப்படுத்துவதன் வழியாக சமூக வரலாற்றைப் பேசும் புத்தகமாகவும் இந்நூலை வாசிக்க இடமுண்டு. பிரதிகள் சார்ந்ததாக மட்டுமல்லாமல் நபர்களும், அரசு நிறுவனங்களின் நடவடிக்கைகளும், சமூகத்தின் பிரதிபலிப்புகளும் விவாதமாகியிருப்பது இந்நூலின் தனித்துவம் எனலாம். மதங்களுக்கு உள்ளிருக்கும் குடும்ப அறநெறிகளும் ஏற்றத்தாழ்வுகளும் சமூக உளவியலுக்குள் ஏற்படுத்தியிருந்த துயரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காகவே […]

Read more
1 5 6 7 8