அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலை:ரூ. 160. நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ் நாவல்கள், சென்னையில் இருந்த பீப்பிள்ஸ் பூங்கா, அந்தக் கால சினிமாவின் புகழ்பெற்ற நடிகைகள், தீபாவளிக்கு வெளியாகி சாதனை படைத்த சினிமா போன்ற மலரும் நினைவுகள் சுவாரசியமாகத் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 13/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031315_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அடிமை முறை ஒழிப்பும் ஆபிரகாம் லிங்கனும்

அடிமை முறை ஒழிப்பும் ஆபிரகாம் லிங்கனும், வி.என்.ராகவன், அலைகள் வெளியீட்டகம், விலை:ரூ. 110. அமெரிக்காவில், கறுப்பினத்தவரின் அடிமை வாழ்வுக்கு எதிரான அடிமை முறை ஒழிப்பும் குறித்த முதல் தமிழ் நூலாக இது காணப்படு கிறது. இளமைப் பருவத்தின்போதும், அரசியலில் ஆபிரகாம் லிங்கனும் ஈடுபட்டபோதும் ஆபிரகாம் லிங்கன் எதிர் கொண்ட சவால்கள், அவற்றை மன உறுதியுடன் சந்தித்து அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்தது எவ்வாறு என்பது விளக்கமாகத் தரப்பட்டு இருக்கிறது. அவர் பதவி ஏற்றதும் நடைபெற்ற உள்நாட்டுப் போர், 1862-ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப்பட்டு வெளியான […]

Read more

வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன், மு.கோபி சரபோஜி, கிழக்கு பதிப்பகம், விலை: ரூ.140. ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர் என்றும், கொள்ளைக்காரர் என்றும் இருவிதமாக அடையாளப்படுத்தப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்னின் உண்மையான வரலாறு என்ன என்பது இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. கட்டபொம்மன் தொடர்பான இரண்டு கருத்துகளையும் எடுத்துக்கூறி, உண்மை என்ன என்ற தேடலில் இந்த நூல் ஈடுபட்டு இருப்பதை நன்கு உணரமுடிகிறது. ராமநாதபுரம் அரண்ம னையில் கட்டபொம்மனும் ஜாக்சன் துரையும் சந்தித்தபோது நடந்தது என்ன? அங்கு இருந்து கட்டபொம்மன் தப்பியது எப்படி? என்பவை […]

Read more

திருச்சி ஜெயில்

திருச்சி ஜெயில், எல்.எஸ்.கரையாளர், அழிசி, விலை:ரூ.170; இரண்டுமுறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட எல்.எஸ்.கரையாளரின் சுதந்திரப் போராட்ட சிறை அனுபவங்களாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. 1940-ம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தியதால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கு இருந்த ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், டாக்டர் சுப்பராயன் ஆகியோரின் சிறை அனுபவங்களையும் தெரிவித்து திருக்கிறார். சிறையில் அன்றாடம் என்ன நடக்கும்? சிறை மருத்துவமனை எப்படி இருக்கும் […]

Read more

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், சாத்தான்குளம் அ.இராகவன், அழகு பதிப்பகம், விலை 220ரூ. தமிழர்களின் நாகரிகத் தொட்டில் என்று வர்ணிக்கப்படும் ஆதித்த நல்லூர் நாகரிக வரலாற்றை தமிழில் முதல் முறையாக விளக்கமாக ஆதித்தநல்லூரும் | எடுத்துக் கூறியவர் என்ற பெருமையைப் பெற்ற பொருநைவெளி நாகரிகமும் இந்த நூலின் ஆசிரியர், தமிழர்களின் ஆதிகால நாகரிகத் தன்மை குறித்து வியப்பான தகவல்களைத் தந்து இருக்கிறார். ஆதித்தநல்லுர் நாகரிகம், சிந்துவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதையும், இரும்பை முதன் முதலாகக் கண் டுபிடித்தது தமிழர்களே என்பதையும் சான்றாதாரங்களுடன் தெரிவித்து இருக்கிறார். ஆதித்தநல் […]

Read more

வாழ்க்கைக்குத் தேவை விழிப்புணர்வு

வாழ்க்கைக்குத் தேவை விழிப்புணர்வு, எம். கருணாநிதி, மணிமேகலைப் பிரசுரம், விலை:ரூ. 175. மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பான வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளை, ரசித்துப் படிக்கும் வகையில் நகைச்சுவை கலந்து எழுதி இருப்பவர் தமிழகக் காவல்துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் என்பது வியப்பளிக்கிறது. காவல்துறைக்கு முற்றிலும் மாறான மென்மையான போக்குடன் அவர் தெரிவித்து இருக்கும் ஆலோசனைகள், அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகை யில் இருக்கின்றன. மாமியார்-மருமகள் உறவு, பேருந்து பயணத்தில் மாணவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பது, போதை மருந்து, சமூக விரோதிகள், கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றின் […]

Read more

புகழ்க் கம்பன் தந்த இராமாயணம்

புகழ்க் கம்பன் தந்த இராமாயணம், சக்திதாசன் சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை:ரூ.400. கம்ப ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களும், அவற்றுக்கு, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலான விளக்கமும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ஒவ்வொரு பாடலிலும் உள்ள அருஞ்சொற்களுக்கு விளக்கமும் தந்து இருப்பதால் பாடலின் முழுக் கருத்தையும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. புத்தகத்தின் முன்னுரையாக, கம்பர் காலம் எது? அவரது சொந்த ஊர் எங்கே இருந்தது? ராமாயண காவியத்தை கம்பர் இயற்றியது ஏன்? என்பது போன்ற விவரங்கள் அடங்கிய பெரிய கட்டுரை ஆராய்ச்சி நோக்கில் தரப்பட்டு […]

Read more

அழகு மல்லிகை

அழகு மல்லிகை, கவிஞர் வி.ஏ.நாராயணன், நாராயணன் பதிப்பகம், விலை:ரூ.50. இந்த நூலின் ஆசிரியர் சிறுவயதில் தான் கேட்ட செய்திகள், பார்த்த காட்சிகள், பட்ட அனுபவங்கள் அடிப்படையில், குழந்தைகள் படித்து மகிழ்வதற்கு ஏற்ற 31 பாடல்களைக் கொடுத்து இருக்கிறார். நீதியைச் சொல்லும் வகையிலும் இவை அமைந்து இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 6/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாழ்க்கைப் படிகள்

வாழ்க்கைப் படிகள், புலவர் மா.அருள்நம்பி, சங்கர் பதிப்பகம், விலை:ரூ.75. வாழ்வில் முன்னேறுவதற்கு வழிகாட்டியாக, அறிஞர்களின் அனுபவ வா அறிவு, சிறப்பாக வாழ்ந்து காட்டியவர்களின் வாழ்வியல் முறை ஆகியவை திருமந்திரம், திருக்குறள், தேவாரம் திருவாசகம், மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றின் எடுத்துக்காட்டுகளுடன் தரப்பட்டு இருக்கின்றன.  நன்றி: தினத்தந்தி, 6/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சேதி சொல்லும் தேதி

சேதி சொல்லும் தேதி, தொகுப்பு ஆசிரியர்: சி.வீரரகு, சத்யா பதிப்பகம், விலை:ரூ.100 17-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஞானிகள், விஞ்ஞானிகள், அறிவியல் ஆர்வலர்கள், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெருந்தலைவர்கள் பற்றிய குறுஞ்செய்திகளும், இந்தக் காலத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், சாதனைகள் ஆகியவையும் தேதி வாரியாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் தெரிந்துகொள்வோம் என்ற தலைப்பில் கொடுத்துள்ள கட்டுரைகளும் பயனுள்ளவை ஆகும். நன்றி: தினதந்தி, 6/2/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more
1 2 3 4 8