காதல் பறவைகள்

காதல் பறவைகள், ரேவதி ரவீந்திரன், வடிவம், திருச்சி, பக். 466. எழுதுவதற்கு ஒரு விஷயம் தேவை என்று தேடிப்போகிறவர்கள் அதிகம். ஆனால் அந்த விஷயமே இந்த நூலாசிரியரைத் தேடிவந்து எழுதச் சொன்னதுபோல், எல்லாவற்றையும் எழுதித் தள்ளியுள்ளார். படிக்க சுவாரஸ்யமாய் எழுதியதால் அத்தனை விஷயங்களுக்கும் உயிர் இருக்கிறது. குற்றாலம் அருவியில் குளித்ததையும், வீட்டுக்குப் பின்புறம் உள்ள குருவிகளையும், கார்த்திகை விரதத்தையும் எழுதியவர். கமல், சிவசங்கரி என்று கனமான பேட்டிகளையும் தந்துள்ளார். ஸ்ரீப்ரியாவை சமையலில் ஆர்வம் உண்டா என்று கேட்பவர், சுஜாதாவிடம் கம்ப்யூட்டர் பற்றியும் கேட்கிறார். தயக்கமில்லாத […]

Read more

கீதாஞ்சலி

கீதாஞ்சலி, தாகூர், தமிழில் சி. ஜெயபாரதன், தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 125ரூ. இரவீந்திரநாத் தாகூர் நோபல்பரிசு பெற்ற கவிதைத் தொகுப்பு நூல். தேசம், மொழி, இன்பம், துன்பம், அன்பு, நட்பு, கருணை, ஆன்மா, ஆற்றாமை, காத்திருப்பு, மரணம் என வாழ்வின் அனுபவங்களை தாகூர் அளவிற்கு உணர்வுபூர்வமாக யாரும் எழுதிவிடமுடியாது என்பதற்கான சாட்சியே இக்கவிதைகள். வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து, வாழ்க்கைப் பயணத்தின் முடிவுக்கு காத்திருக்கும் வரையில் விழிப்புணர்வு மிக்க கீதங்கள் இவை. இறுகிப்போன வயலை உழும் உழவன், வேர்வை சிந்தி கல்லுடைக்கும் தொழிலாளி, […]

Read more

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?, ஸ்ரீநிவாஸ் பிரபு, விகடன் பிரசுரம், சென்னை, விலை 125ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-861-3.html அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும், போட்டித் தேர்வு முறையே பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களே உரிய பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதால் போட்டியாளர்கள் இத்தேர்வு குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொள்வது முக்கியம். இந்நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் கதை, கட்டுரைகளை எழுதும் எழுத்தாற்றல் உள்ளவர் என்பதால், இத்தேர்வு குறித்த பல விவரங்களை […]

Read more

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை, வானதி பதிப்பகம், சென்னை, விலை 140ரூ. தமிழ்த் திரை இசை உலகில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த கவியரசு கண்ணதாசனின் பாடல்களில், காலத்தை வென்ற பாடல்களின் தொகுப்பு நூல். காலத்தை வென்ற அப்பாடல்களுக்கு முன்னுரையுடன் விளக்கம், பாடல் எழுந்த சூழ்நிலை, கதையின் கருத்தமைவு, காட்சிகளின் தனித்துவம், பண்பாட்டுப் பெருமை, தத்துவம், ஆன்மிகம், உறவுகள், சோகம் ஆகியவற்றினுள்ளே பொதிந்துகிடக்கும் செய்திகளை புதையலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர் காவிரிமைந்தன். அவர் காட்டும் பாடல்கள் அனேகமாக நமக்குத் தெரிந்தவை. ஆனால் அதில் நாம் அறிந்திடாத […]

Read more

அகம் புறம் அந்தப்புறம்

அகம் புறம் அந்தப்புறம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 999ரூ. விரிந்துகொண்டே செல்லும் ராஜபாட்டைகள் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-202-3.html குமுதம் ரிப்போட்டர் வார இதழில் முகில் எழுதிய தொடரின் தொகுப்பு நூலே அகம் புறம் அந்தப்புரம். கனத்த மேலட்டையுடன் கூடிய 1032 பக்கங்கள். பார்த்தாலே பிரமிப்பு ஏற்படுத்தும் இந்த நூலை வாசிக்கத் தொடங்கினாலோ பிரமிப்பு அடங்குவதே இல்லை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் நமக்குத் தெரிந்த, தெரியாத அரசர்களின் ஆளுமைகளின் செய்திகளை வேறொரு புதிய கோணத்தில் கதையாக […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. பறவைகளாக்கும் கவிதைகள் பழநிபாரதியின் கவிதைகளும் பாடல்களும் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. உன் மீதமர்ந்த பறவை என்னும் அவரது இந்தத் தொகுப்பில் இயற்கையும் காதலும் இயற்கை மீதான காதலும்  வாஞ்சையுடன் வெளிப்பட்டு கவிதை அனுபவத்தை அர்த்தப்படுத்துகின்றன. மென்மையான உணர்வுகளைச் சொற்களின் வார்ப்பிலிட்டுக் கவிதைகளாய்க் கவனப்படுத்தியுள்ளார் பழநிபாரதி. ஏ.பி. ஸ்ரீதரின் ஓவியங்களும் பழநிபாரதியின் கவிதைகளும் கொண்ட இந்தத் தொகுப்பு மெல்லிய காதலை விரும்புபவர்களுக்கும் இயற்கை நேசர்களுக்கும் விருந்தளிப்பவை. இளம் வெயில், கூந்தல், கூழாங்கற்கள், […]

Read more

இசையின் சித்திரங்கள்

இசையின் சித்திரங்கள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எழுத்து லக்ஷ்மி தேவ்நாத், ஹெரிடேஜ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, விலை 72ரூ. சித்திரமடலில் இசையரசி காமிக்ஸ் என்று வழங்கப்படுகிற வண்ணம் சித்திர மடலாக இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தந்திருக்கிறார்கள் ஹெரிடேஜ் வெளியீட்டகத்தார். லக்ஷ்மி தேவ்நாத் எழுதி, ஓவியர் அரஸ் கைவண்ணத்தில் வெளியாகியுள்ள இச்சிறு நூலில் குழந்தை சுப்புலக்ஷ்மி குஞ்சாவிலிருந்து, உச்ச நிலையை எட்டி அமரத்துவம் பெறுகிறவரை, ஒரு குறும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தோடு படித்தும் பார்த்தும் மகிழலாம். அடிக்குறிப்பு விவரங்களில் அரியக்குடி போன்றவர்களின் காலமும் […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 450ரூ. அற்புதமான சிறுகதைகளைத் தருகிறவர் வையவன். பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள எண்பது சிறுகதைகளை வைரமணிக் கதைகள் என்ற மகுடமிட்டு ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொன்றிலும் இயல்பாக இழையோடுகிறது அப்பழுக்கற்ற மனிதம். இந்தக் கதைதான் சிறந்தது என்று குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லமுடியாத சங்கடத்தை நியாயமான விமர்சகனுக்கு ஏற்படுத்துகிற தொகுப்பு இது. பெரும்பாலான கதைகளில் கிராமப்புற அழகுகளை மிகைப்படுத்தலில்லாமல் சொல்லியிருக்கும் ஆற்றல் வையவன் போன்ற வெகு சிலருக்கே கைவரக்கூடிய ஒன்று. மார்க்ஸ் ஆகப் பெயர் மாற்றம் பெற்ற […]

Read more

சுவடுகள் நெய்த பாதை

சுவடுகள் நெய்த பாதை(கவிதைகள்), பா. கிருஷ்ணன், தகிதா பதிப்பகம், விலை 60ரூ. காட்சியை ஜெயித்த கவிதைகள் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-1.html பத்திரிகையாளரான பா. கிருஷ்ணன் சிறந்த கவிஞரும்கூட. அவரின் கவிதை ஆற்றலை நிரூபிக்க வந்திருக்கும் கவிதை நூல்தான் சுவடுகள் நெய்த பாதை. இந்தத் தொகுப்பை கவிதையாகவே நெய்வதற்குக் காரணமாய் புகைப்படங்களே அமைந்துள்ளது. ஒரு படத்துக்கு ஒரு கவிதை என அமைந்துள்ள இத்தொகுப்பில் எதற்கு எது ஆதாரம் எனக் கண்டுபிடிக்க முடியாதபடி திகைக்க வைக்கிறது. கண்ணுக்கும் கருத்துக்கும் இதமான பயணத்தைத் […]

Read more

சிறுவன் தாகூர்

சிறுவன் தாகூர், லீலா மஜும்தார், தமிழில்-ரா.கி. ரங்கராஜன், நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை. பள்ளிக்கூடம் பிடிக்காத நோபல் கவி பல குழந்தைகளைப் போல ரவீந்திரநாத் தாகூரும் பள்ளி செல்லும் வயதை அடைவதற்கு முன்பே, பள்ளிக்குச் செல்ல ஆர்வமாக இருந்த குழந்தைகளில் ஒருவர்தான். அவரது உறவுக்காரப் பையன்கள் சத்யாவையும், சோமனையும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தினமும் வண்டி வரும். அதில் தானும் போக வேண்டுமென்று குழந்தையாக இருந்த தாகூர் அழுது அடம்பிடித்திருக்கிறார். அப்போது தாகூருக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரோ கொஞ்ச காலத்தில் பள்ளிக்குப் போகமாட்டேன் […]

Read more
1 178 179 180 181 182 336