உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 110ரூ. யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியிடம் பயிற்சி பெற்ற இந்நூலாசிரியர் 75 வயதைக் கடந்தவர். இவர் குண்டலினித் தியானம், முத்ரைகள், ஆசனங்கள், யோகா, புத்தகங்கள் போன்றவற்றில் மிகுந்த அனுபவம் பெற்று, அவற்றை பலருக்கும் கற்பிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்நூலில் யோகா மற்றும் ஆசனங்கள் குறித்து 18 அத்தியாயங்களை எழுதியுள்ளார். ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் தியானங்கள் குறித்தும், அவற்றுக்கான முன்னெச்சரிக்கைகள், இவை குறித்து எழும் பல்வேறு சந்தேகங்கள், தியானத்தை, […]

Read more

தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம்

தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம், தொகுப்பாசிரியர் சுப்பு, விஜயபாரதம் பதிப்பகம், பக். 501, விலை 200ரூ. திராவிடக் கட்சிகளை விமர்சிக்கும் ‘திராவிட மாயை – ஒரு பார்வை’ என்ற நூலை எழுதிய இந்நூலின் தொகுப்பாசிரியர், தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர். இவர், சிறப்புமிக்க இலக்கணங்களையும், எண்ணற்ற இலக்கியங்களையும் கொண்ட செம்மொழியாகிய தமிழின் முக்கிய கருத்துக்களைத் திரட்டி இந்நூலில் பதிவு செய்துள்ளார். அந்த வகையில் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழ் கதாசிரியர்கள், தமிழ் இலக்கியவாதிகள்… என்று 108பேரின் கருத்துக்கள் இந்நூலில் பதிவாகியுள்ளது. சுகி.சிவம் […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 424, விலை 250ரூ. கல்கண்டு பத்திரிகையின் நிறுவனரான இந்நூலாசிரியர், 1960-80களில் அரசியல், ஆன்மிகம், சமூகம், மருத்துவம், பொருளாதாரம், வரலாறு என்று பல்வேறு துறைகள் குறித்தும் விவரித்து எழுதும் ஆற்றல் மிக்கவர். தவிர, இவர் எழுதிய ‘சங்கர்லால் துப்பறியும் மர்மநாவல்கள்’ பெரியோர் முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவை. அந்த வகையில், அன்றைய தலைமுறையினருக்கு மறைந்த இந்நூலாசிரியர் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகள் படி, இன்றைய தலைமுறையினருக்கும் பயன்தரக்கூடியவையே. இதில் 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் அவரது மகன் […]

Read more

முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. வாழ்க்கை தரும் நெருக்கடிக்கும் உறவுகள் தரும் ஏமாற்றத்திற்கும் இடையில் சிக்கி அல்லல்படும் பல பெண்களின், மனிதர்களின் கதைகளை தமிழில் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- மௌனப்போராட்டம், சீர்காழி உ. செல்வராஜு, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 75ரூ. அறத்தையும் வாழ்வியல் தர்மத்தையும் எடுத்துரைக்கும் ஆக்கங்கள், பாக்கள் வடிவில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.

Read more

பனித்துளிக்குள் ஒரு பயணம்

பனித்துளிக்குள் ஒரு பயணம், சந்தர் சுப்ரமணியன், வர்ஷன் பிரசுரம், பக். 128, விலை 80ரூ. உலகை பனித்துளியின் உள்ளிருந்து பார்க்கும் பார்வையாய் அமைந்த கவிதைகளின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- ராம ராவண யுத்தம், வ. பாரத்வாஜர், காவ்யா பதிப்பகம், பக். 227, விலை200ரூ. நாம் நம் மனதில் தேக்கி வைத்திருக்கும் ராமாயணப் பாத்திரங்களை வேறுவகையான கோணத்தில் பார்த்து நவீன ராமாயணத்தைப் படைத்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.

Read more

புதிய முகம்

புதிய முகம், இராம இளங்கோவன், சுலோசனா பதிப்பகம், பக். 204, விலை 130ரூ. இனம், மொழி, நாட்டுணர்வு, மாந்தர் நேயம், வீடு, மனைவி, மக்கள், காதல், பெண்மை போன்றவற்றை பாடுபொருளாய் யாத்த கவிதைகளின் அணிவகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- விந்தன் எனும் ஓர் ஆளுமை, கோ. ஜனார்த்தனன்(தொகுப்பு), விந்தன் நினைவு அறக்கட்டளை, பக். 272, விலை 200ரூ. கோவிந்தன் என்னும் விந்தன் தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர். விந்தனின் படைப்புகளை முன்வைத்து விந்தன் ஆக்கங்கள் எனும் கருத்தரங்கம் நடந்தது. […]

Read more

கவிதை ஓர் ஆராதனை

கவிதை ஓர் ஆராதனை, கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 176, விலை 125ரூ. கவிதை மனிதனை ஒழுங்கானவனாக்குகிறது. அழகனாக்குகிறது. கவிதை அழகை ஆராதிக்கிறது. அதாவது ஆண்டவனை ஆராதிக்கிறது. இப்படி மனிதனுக்கும் கடவுளுக்கும் ஆராதனை செய்யும் கவிதைகளின் தொகுப்பு கவிக்கோ வரிகளில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- டாக்டர் போத்தியின் கவிதைகள், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. கால்நடை மருத்தவரான போத்தி, பல்வேறு காலங்களில் தமிழரசு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய […]

Read more

ஜப்பானில் அருணகிரி

ஜப்பானில் அருணகிரி, அருணகிரி, கலைஞன் பதிப்பகம், விலை 200ரூ. உலகம் சுற்றும் வாலிபன், வாங்க பறக்கலாம், அந்தமானில் அருணகிரி, உலக வலம், ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி, அலைந்தும் அறிந்ததும் என சுற்றுலா நோக்கில் பயனுள்ள நூல்களை அளித்து இருக்கின்ற நூலாசிரியர் அருணகிரியின் மற்றொரு புதிய பயண நூலிது. அருணகிரியின் பயணங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம், துல்லியமான திட்டமிடுதல், செல்லும் நாடு குறித்த தகவல்களை திரட்டுவது, முன் சென்று வந்தோர் அனுபவங்களைச் சேமித்து கொள்வது, பார்க்க வேண்டிய ஊர்களையும் இடங்களையும் சரியாகத் தீர்மானிப்பது, இயன்றவரை செலவைச் […]

Read more

சங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள்

சங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள், முனைவர் மா. அமுதா, காவ்யா, விலை 320ரூ. இந்நூல் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூல். கணவன் – மனைவியிடையே நிகழும் அன்பு வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது அக இலக்கியங்கள். இவ்விருவர்களிடையே உண்டாகும் சிறு சிறு உணர்வு மோதல்களைக் களைந்து இணைத்து வைக்க வருபவர்கள் வாயில்கள்’ தூதுவர்களான இவர்கள் உறவின் உன்னதத்தை எடுத்துரைத்து இருவரையும் இணைத்து வைக்கவே முற்படுவர். உளச் சிக்கல்களை தீர்த்திட உதவும் வாயில்களைப் பற்றிய உளவியல் ஆய்வை, மிகவும் சுவாரஸ்யமாக செய்திருக்கிறார் முனைவர் மா. […]

Read more

கலாங்காதிரு பெண்ணே

கலாங்காதிரு பெண்ணே, விகடன் பிரசுரம், விலை 105ரூ. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் கூறுகின்ற புத்தகம் இது. குறிப்பாக “தாய்மை” என்ற பகுதியில் பெண்கள் கர்ப்பம் தரித்தது முதல், குழந்தை பிறப்பது வரை எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது விரிவாக விவரிக்கப்படுகிறது. தற்காலத்தில் ‘சிசேரியன்’ ஆபரேஷன் செய்துகொள்வதை பல பெண்கள் விரும்புகிறார்கள். அந்த ஆபரேஷனை எப்போது செய்துகொள்ளலாம், எப்போது செய்து கொள்ளக் கூடாது என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. எல்லாப் பெண்களும் படித்துத் தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைந்துள்ளன. […]

Read more
1 2 3 4 336