வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்திருக்கின்றன. புதிய புதிய பொருட்கள் பயன்பாட்டுக்கு வரும்போது பழைய பொருட்களில் பல காணாமற் போய்விடுகின்றன. எவ்வளவுதான் வாழ்க்கை மாறி வந்தாலும் சில பண்பாட்டு வழிமுறைகள் தொடர்ந்து வருகின்றன. சிறு தெய்வ வழிபாடு, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு, கண்ணேறு கழித்தல் போன்ற பல நிகழ்வுகள் இன்றைய வாழவிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தமிழர்களின் அன்றாட வாழ்வில் புழங்கிய பொருட்கள், […]

Read more

அணுத்துகள்

அணுத்துகள், க. மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 196, விலை 160ரூ. அறிவியலை மிக எளிமையாக எழுத முடியும் என்பதற்கு இந்நூலே சான்று. உலகின் எல்லாப் பொருட்களுக்கும் அடிப்படையான அணுவைப் பற்றி மிக விரிவாக இந்நூல் கூறுகிறது. அணுவோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் எளிமையாக, சுவையாக நூல் விளக்குகிறது. உதாரணமாக ‘ரயில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கும்போது நிற்காமல் படுவேகத்தில் கடந்து செல்லும் ரயிலின் சங்கொலி படிப்படியாகச் சுருதி குறைந்து கீழ் ஸ்தாயிக்கு நகர்வதை ஒலியியலில் டாப்ளர் விளைவு என்பார்கள். ‘விசைத்துகள்களை தாதுத் […]

Read more

ராணி மங்கம்மாள்

ராணி மங்கம்மாள், (சரித்திர நாவல்), நா. பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. தென்னாட்டின் ஒரே பெண்ணரசியாக, வீரதீர பெண்மணியாக வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடித்து இன்றளவும் மக்கள் மனதில் அபிமானத்தைப் பிடித்திருப்பவர் ராணி மங்கம்மாள். கணவனை இழந்த பிறகு தன் திறமையாலும், புத்திசாதுர்யத்தாலும் பதினெட்டு ஆண்டு காலம் சிறப்பாக மதுரையை ஆண்ட அவருயை தீரத்தை அழகாக எடுத்துரைக்கிறது ‘ராணி மங்கம்மாள்’ வரலாற்று நாவல். மேலும் ராணி மங்கம்மாள் செய்த தான தருமங்களையும் எடுத்துரைக்கிறது. மறவர் நாட்டு மன்னர் கிழவன் […]

Read more

கடந்து போகிறவர்களின் திசைகள்

கடந்து போகிறவர்களின் திசைகள், ஆசு, இருவாட்சி, பக். 160, விலை 100ரூ. வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. வாழ்க்கையை உணர்ந்து, சமூக அக்கறையுடன் எழுதும் கதைகளில்தான் உயிர்ப்பு இருக்கும். இப்படிப்பட்ட கதைகளை எழுதுவதற்கு வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் தேவை. நூலாசிரியருக்கு அத்தகைய அனுபவங்கள் இருப்பதை இந்நூலில் உள்ள சிறுகதைகளைப் படிக்கும் வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள். பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இந்நூலில் உள்ள சிறுகதைகளில் மிகவும் இயல்பாக, உயிர்ப்புடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நாம் அன்றாடம் சந்திக்கும் பல மனிதர்களை […]

Read more

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில், மாலன், சாகித்ய அகாதெமி, பக். 176, விலை 110ரூ. புலம்பெயர் எழுத்தாளர்கள் 14 பேர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். புலம்பெயர்வது பற்றியும் அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மாலன் எழுதிய முன்னுரை குறிப்பிடத்தக்கது. வாசகனை இந்நூல் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு இட்டுச் சென்று இனிமையான வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. புதிய சூழலில் எழுதும் எழுத்தாளர்களின் கதைக்கரு, சிறுகதை கட்டமைப்பு, சொற்றொடர்கள் புதியனவாக இருக்கின்றன. ‘இரண்டு வால் கிடைத்த […]

Read more

பாரதியார் சரித்திரம்

பாரதியார் சரித்திரம், செல்லம்மாள் பாரதி, அழகு பதிப்பகம், விலை 100ரூ. மகாகவி பாரதியாரின் வரலாற்றை பலரும் எழுதியுள்ளனர். இது, பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி எழுதிய புத்தகம், எனவே தனிச்சிறப்பு வாய்ந்தது. “பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினdை முடிந்தது. அப்போது எனக்கு வயது ஏழு” என்று கூறும் செல்லம்மாள் பாதி, மதம் பிடித்த யானையால் பாரதியார் தாக்கப்பட்ட சம்பவத்தையும், அவர் மறைவையும் படிப்போர் கண்களில் நீர் வரும் விதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம். நீண்ட இடைவெளிக்குப் பின் […]

Read more

வரலாற்று நாயகர் முகம்மது நபி

வரலாற்று நாயகர் முகம்மது நபி, அ. முகம்மது ஜமால், பஷாரத் பப்ளிஷர்ஸ், விலை 220ரூ. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், உலக மக்கள் அனைவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். உலக வரலாற்றில் வேறு எந்தத் தலைவரும் ஆன்மிகம், சமூக சீர்திருத்தம், நீதி மிக்க ஆட்சி ஆகிய மூன்று துறைகளிலும் வெற்றி பெறவில்லை. வாழ்நாளில் 23 ஆண்டுகளில் இந்தச் சாதனையை அவர்கள் நிகழ்த்தி காட்டி இருக்கிறார்கள். இத்தகைய வரலாற்று நாயகர், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அ. முகம்மது ஜமால், எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. ஏழ்மையின் செல்வாக்கு! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024759.html பழமொழி என்ற சொல், சொலவடை என, புதுக்கப்பட்டது. நம் பண்பாட்டின் நிலைக்களனாய் உள்ள கிராமங்களில், உழைக்கும் மக்களிடமிருந்து உருவாகும், உன்னத அனுபவங்களில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளே, இந்த சொலவடைகள். வாழ்வியல் அனுபவம், கவித்துவம், நக்கல் மூன்றும் கலந்து இதில் மிளிர்கிறது. நாட்டுப்புற இலக்கியமாய் தெம்மாங்கு, பள்ளு, கும்மி, லாவணி ஏடுகளில் பதிவாகி உள்ளன. வீட்டுப்புற […]

Read more

உணவில் உறையும் வாழ்வியல் அறம்

உணவில் உறையும் வாழ்வியல் அறம், சாவித்திரி கண்ணன், மாணிக்கசுந்தரம் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ. உணவு தேர்வில் நிலவும் அறியாமை உடல் நலன் பேணுதல் குறித்த கவலை, தமிழகத்தில் ஏற்பட துவங்கி உள்ளது. அது பற்றிய சிந்தனை, எழுத்தாகவும், உணவு பரிமாற்ற முகாம்களாகவும், பயிற்சி பட்டறைகளாகவும் வெளிப்பட்டு வருகின்றன. விவாதங்களும் துவங்கி உள்ளன. நலவாழ்வுக்கு அடிப்படை, அறம் நிறைந்த உணவும் சுற்றுச்சூழலும்தான். அவற்றை கிட்டத்தட்ட இழந்த நிலையில்தான் தமிழகம் உள்ளது. இதை பெருகிவரும், நட்சத்திர அந்தஸ்திலான மருத்துவமனைகளின் எண்ணிக்கையை முன் வைத்தே நிரூபித்து […]

Read more

குமரி கண்டமா? சுமேரியமா?

குமரிகண்டமா? சுமேரியமா?, பா. பிரபாகரன், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. தமிழகத்தை நிர்மாணித்த சுமேரியர்கள்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9788184937909.html பா. பிரபாகரன் எழுதிய ‘குமரி கண்டமா? சுமேரியமா?’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கோவையில், 2010ல் நடந்த செம்மொழி மாநாட்டில், இது தொடர்பாக அவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையின் நீட்சியாக இந்நூல் அமைந்துள்ளது. தமிழர்கள் எழுதிய நூல்கள் மிகக் குறைவுதான் என, சமஸ்கிருதத்தை ஒப்பிட்டு சில தகவல்களை சொல்கின்றனர். ஆனால், தமிழர்கள் அதிகளவில் நூல்களை […]

Read more
1 2 3 4 5 6 336