நபி வழி அறிவோமா?

நபி வழி அறிவோமா?, திருமதி வசந்தகுமாரி செல்லையா, திருமதி வசந்தகுமாரி வெளியீடு, பக். 433, விலை 280ரூ. இந்நூலாசிரியர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், எழுத்தாளருமாவார். இவர் தன் மகன் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறியதால், இஸ்லாம் குறித்து அறியும் விதமாக அது குறித்த நூல்களை ஆழமாக படிக்க, அதன் விளைவாக உருவானதே இந்நூல். இஸ்லாமிய மார்க்க அறிஞரைப் போல் மிக நுட்பமாக நபிகள் நாயகத்தையும், அவரது தூதுத்துவத்தையும் இஸ்லாமியை சித்தாந்தங்களுடன் இந்நூலில் விளக்கியுள்ளது – படிப்பவர்களை வியக்க வைக்கிறது. இந்நூல் 10 அத்தியாயங்களைக் கொண்டது. […]

Read more

புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள்

புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள், செங்குயில் பதிப்பகம், விலை 150ரூ. 1932ம் ஆண்டு காந்தியடிகளும் டாக்டர் அம்பேத்கருக்கும் உருவான ஒப்பந்தம், புனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்டவருக்கு தனித்தொகுதி அமைப்பதே, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கம். இது குறித்து 30 கட்டுரைகளில் முருகு.ராசாங்கம் எளிமையான முறையில், எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள், கவிஞர் தஞ்சை க. பத்மா, ஜெய்ஹிந்த் பதிப்பகம், விலை 100ரூ. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மவை […]

Read more

அப்துல்கலாம் பொன்மொழிகள்

அப்துல்கலாம் பொன்மொழிகள், தொகுப்பு ச.குமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ. தமிழகத்தில் பிறந்து இந்தியனாக வளர்ந்து உலக விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்ந்த நமது பாரத நாட்டின் ‘பாரத ரத்னா’ என்ற உயரிய விருது பெற்ற எளிமையான மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கைச் சுருக்கத்தையும், அவரின் பொன்மொழிகளையும் தொகுத்து அளித்திருக்கிறார் ச. குமார். அவருடைய பல நூல்களின் சாரத்தை இந்த ஒரே நூலில் அறிய முடிகிறது. மாணவ-மாணவிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- […]

Read more

அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம், சாரு நிவேதிதா, அந்திமழை, விலை 200ரூ. மனதில் பட்டத்தை துணிச்சலாக எழுதும் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் ஒரு பத்திரிகையில் எழுதிய கேள்வி – பதில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, இலக்கியம், கடவுள், மதுவிலக்கு… இப்படி சகலவிதமான விஷயங்களையும் அலசி இருக்கிறார். சில பதில்கள் சிந்திக்க வைக்கின்றன. சில சிரிக்க வைக்கின்றன. ஒரு ஜோசியர் பற்றி அவர் எழுதியிருப்பதாவது: “ஒருமுறை அவர் இந்திரா காந்திக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார். நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு இந்திரா காந்தி […]

Read more

தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள்

தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள், மறைமலை ராதா, மணிமேகலை பிரசுரம், விலை 60ரூ. தமிழ்த்தொண்டு புரிந்த உ.வே.சாமிநாத அய்யர், மறைமலை அடிகள் உள்ளிட்ட 20 செம்மொழிச் சிற்பிகளைப் போற்றுவதுடன், அவர்கள் ஆற்றிய பணிகளின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- ஸ்ரீஹரி வம்சம், எல். வரலட்சுமி நரசிம்மன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 250ரூ. வேத வியாசரால் இயற்றப்பட்ட மகாபாரதத்தோடு இணைந்த ஒரு பாகமாக இருக்கிறது ஸ்ரீஹரி வம்சம். சுமார் 12 ஆயிரம் சுலோகங்கள் […]

Read more

அலைகடலுக்கு அப்பால்

அலைகடலுக்கு அப்பால், பூங்கொடி பதிப்பகம், விலை 80ரூ. மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்ரமணியன் தனது அனுபவங்களை இந்த நூலில் எழுதியுள்ளார். தமிழ் மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக இச்சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதால், கட்டுரைகளில் தமிழ் மணம் கமழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —-   செல்வம் தரும் தென்னை வளர்ப்பு, டாக்டர் வா.செ. செல்வம், நர்மதா பதிப்பகம், விலை 75ரு. அறிவியல் வழிமுறைகளால் சாதிக்க முடியாதவற்றை தனது அனுபவ ஆராய்ச்சி அறிவால் ஆராய்ந்து, தென்னை வளர்ப்போருக்கு ஒரு […]

Read more

பிராஜக்ட்

பிராஜக்ட், ஜீவா புத்தக நிலையம், விலை 200ரூ. மர்ம நாவல் என்ற குறிப்புடன் இந்த நூல் வெளிவந்துள்ளது. நாவலை எழுதியவர் பெயர் கவா கம்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபற்றி, அணிந்துரையில் “திருக்குறள் பாராயணம்” அமைப்பின் தலைவர் புதேரி தானப்பன் கூறுகிறார்- “இந்த நூலின் ஆசிரியர் ‘கவாகம்ஸ்’ ஸா? இப்படியும் ஒரு பெயரா? இவர் ஆணா, பெண்ணா? நாவல் முழுவதும் ஆங்கிலச் சொற்கள் நிரம்பி வழிகின்றன…” இவ்வாறு தானப்பன் கூறினாலும் நாவல் சிறப்பானது என்று பாராட்டவும் செய்திருக்கிறார். என்ஜீனியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேர […]

Read more

லட்சுமி என்னும் பயணி

லட்சுமி என்னும் பயணி, லட்சுமி அம்மா, மைத்ரி புக்ஸ், விலை 180ரூ. சிறு வயதிலேயே குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, பதின்ம பருவத்தில் வேலைக்கு சென்று, தொழிற்சங்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு போராட்டவாதியாக வாழ்ந்து வரும் லட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்று தனது போராட்ட தளத்தை விரிவாக்கிய லட்சுமி, குழந்தை பருவம் முதல் அன்றாடம் எதிர் கொண்ட சோதனைகள், வேதனைகளை நெஞ்சை தொடும்படி வடித்திருக்கிறார். போராட்டம், அரசியல், உழைப்பு என பொதுவாழ்வில் ஈடுபடும் […]

Read more

கனவின் பலன்கள்

கனவின் பலன்கள், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 33ரூ. கனவின் பலன்களைக் கூறுகிறார், திருமுருக கிருபானந்த வாரியார். கனவில் கழுதையைக் கண்டால், கொஞ்சம் கொஞ்சமாக துன்பம் நீங்கும். யானையைக் கண்டால் அதிர்ஷ்டம். புலிகள், சிங்கங்கள், கரடிகள் முதலிய கொடிய மிருகங்களைக் கண்டால் பலவான்களுடன் விரோதம் ஏற்படும். சிட்டுக்குருவி, வாத்து ஆகியவற்றைக் கண்டால் நல்லது நடக்கும். இப்படி பல பலன்களை சொல்கிறார் வாரியார் சுவாமிகள். புராணங்களிலும் இலக்கியங்களிலும் கனவு கண்டவர்கள் பற்றியும், அவர்கள் கண்ட கனவுக்கான பலன்களையும் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

தாய்மை

தாய்மை, லக்ஷ்மி, சந்தியா, விலை 140ரூ. ‘லக்ஷ்மி’ என்ற புனை பெயரில் பல அற்புத நாவல்களைப் படைத்த திரிபுரசுந்தரி, ஒரு டாக்டர் ஆவார். தென் ஆப்பிரிக்காவில் பல ஆண்டுகள் டாக்டராக பணிபுரிந்தார். அவர் எழுதிய “தாய்மை:பூப்படையும் நாள் முதல் பிள்ளைப் பேறு வரை” என்ற மருத்துவ நூல் இப்போது வெளிவந்துள்ளது. இளம் பருவத்தில் இருந்து வயோதிகம் வரை, ஒரு பெண்ணுக்கு தன் உடல் பற்றிய அறிவியல் உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும். அந்த உண்மைகளை இந்த நூலில் விரிவாகக் கூறியுள்ளார், டாக்டர் திரிபுரசுந்தரி. பெண்கள் கையில் […]

Read more
1 4 5 6 7 8 336