காலம்தோறும் நரசிங்கம்

காலம்தோறும் நரசிங்கம் – பண்பாட்டுக் கட்டுரைகள், ஜடாயு, தடம் பதிப்பகம், பக். 204, விலை 130ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025223.html பண்பாட்டுக் கட்டுரைகள் என்ற உபதலைப்புக்கு ஏற்ப, பாரத ஹிந்துப் பண்பாடு தொடர்பான விழுமியங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் 20 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. வாழும் பிள்ளை என்ற தலைப்பிலான முதல் கட்டுரை, மகாகவி பாரதியின் விநாயக தரிசனத்தை விண்டுரைக்கிறது. அடுத்த கட்டுரை, அமெரிக்க எழுத்தாளர் மார்க் மார்ஃபோர்டு வியந்து போற்றும் அம்பலவாணனாகிய நடராஜர் பற்றியது. மகாத்மா […]

Read more

நலவாழ்வின் படிகள் நான்கு

நலவாழ்வின் படிகள் நான்கு (நான்கு நூல்கள்), பேராசிரியர் எம். ராமலிங்கம், விஜயா பதிப்பகம், பக். 264, 152. 232, 264, விலை ரூ. 170, 95, 145, 170. உணவு, உடல், உள்ளம், வாழ்க்கை என, மொத்தம் நான்கு நூல்கள். உணவு- உணவின் அவசியம், பகுதிப் பொருட்கள், உணவில் குற்றமும், உண்பவர் குற்றமும் என, பயனுள்ள கருத்துகளை உள்ளடக்கியது இந்த நூல். உடல்-உடற்பயிற்சி, தூக்கம், ஆகாயம், சூரியன், காற்று, நீர், உணவும், உபவாசமும், மவுனத்தின் மாண்பு ஆகியவை இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. உள்ளம்- ஏற்றத்திற்குப் […]

Read more

மாற்றம்

மாற்றம், மோ – யான், தமிழில் பயணி, காலச்சுவடு பதிப்பகம், பக். 87, விலை 80ரூ. மாற்றம் என்ற இந்தப் படைப்பு, நாவல் வடிவில் எழுதப்பட்ட சுயசரிதை, நாயகனின் பள்ளிப்பருவ வாழ்க்கையில் துவங்குகிறது கதை. நாயகன் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் வாழ்க்கையின் போக்கில் பயணித்து, எங்கெங்கோ அலைந்து, இலக்கியவாதியாகி, அவனுடைய கதை சினிமாவாக எடுக்கப்பட்டு, பிரபலமாகி கடைசி அத்தியாயத்தில் அதே கிராமத்துக்கு வந்து சேர்வதுடன், கதை முடிகிறது. நூலின் இடையிடையே பழமொழிகள், தத்துவங்கள் போகிறபோக்கில் இரைந்து கிடக்கின்றன. சீன வழக்குமொழி நடையில் எழுதப்பட்டிருப்பது சுவையாக […]

Read more

சீதாவின் பதி

சீதாவின் பதி, யத்தனபூடி, சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 312, விலை 250ரூ. இல்லற வட்டத்திற்க வெளியில், ஒரு பெண் சிநேகிதியை தேடிக்கொள்ளும் கணவன்மார்கள், எத்தனை அவஸ்தைகளுக்கு ஆளாகின்றனர் என்பதைச் சொல்லும் நாவல் இது. வித்யாபதி, இந்திரா ஆகியோர், ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். சூழ்நிலையால், பெற்றோர் நிச்சயித்த சீதாவை மணம்புரிகிறான் வித்யாபதி. ஆனால், வித்யாபதியால் இந்திராவை மறக்க முடியவில்லை. இந்திராவாலும் வித்யாபதியை மறக்க முடியவில்லை. சீதா, தான் கணவனின் முதல் காதலைப் பற்றி, திருமணம் ஆன அன்றே தெரிந்து […]

Read more

வந்தே மாதரம்

வந்தே மாதரம் (ஒரு வரலாற்று கண்ணோட்டம்), ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 208, விலை 120ரூ. சுதந்திர போராட்ட காலத்தில், காங்கிரஸ் மேடைகளில் எதிரொலித்த வந்தே மாதரம், மதச்சாயம் பூசப்பட்டு நிறுத்தப்பட்டது. ஆனாலும், பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘வந்தே மாதரத்தின்’ தாக்கம், மற்ற மொழி கவிஞர்களிடம் கொஞ்சமும் குறையவில்லை. வந்தே மாதரத்தின் உள்வாங்கல், தமிழ் கவிஞர்களிடமும், திரை இசைப் பாடல்களிலும் இருப்பதை உணர முடியும். வந்தே மாதரத்தின் வரலாற்றை, சுதந்திர போராட்டத்தின், பின்னி பிணைந்துள்ள அதன் வரலாற்றை விளக்கியுள்ளார். சுதேச இயக்கத்திற்கு வலுகொடுத்த […]

Read more

அம்ருதா

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், பக். 448, விலை 335ரூ. ஒரு சித்ரா பவுர்ணமியின் அடுத்த பத்து நாளின் நிகழ்வுகளைச் சித்தரித்து குலோத்துங்க சோழனின் வரலாற்றை ஒட்டிய புதினம் இது. என்றாலும் சோழர் காலத்திய முந்தைய வரலாற்று நிகழ்வுகள் பலவும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இக்கதை நிகழ்வின் காலம் கி.பி. 1070. கதை நாயகி, அம்தா ஒரு கற்பனை கதாபாத்திரமே. காம்போஜ தேசத்துப் பேரழகி அம்ருதா. தேச ஜாதகத்தின் படி வரவிருக்கும் ஒரு பிரளயத்தையே நிவர்த்திக்கக்கூடிய அவளது சாதகமான ஜாதகத்தின் காரணமாக, சோழ மன்னன் […]

Read more

இனிதே தொடரும் வானப்ரஸ்தம்

இனிதே தொடரும் வானப்ரஸ்தம், விஜயலட்சுமி சுந்தரராஜன், காவ்யா பதிப்பகம், பக். 160, விலை 150ரூ. காலவெள்ளத்தில் தோன்றிய முதியோர் இல்லங்களின் தேவை, அவசியத்தை பற்றி பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் முதியோர் இல்லத்தில்தான் வசிக்கிறார். ‘கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு, சமூக நிர்ப்பந்தங்களுக்காக, பெற்றோரைக் கவனிப்பதாக கூறி, நம்மையும் வருத்தி பெற்றோரையும் சிறுமைப்படுத்தினோம். வெளிநாடுகளில் வேலைக்காக செல்லும் பிள்ளைகள், சம்பளத்தையும் அங்கு கிடைக்கும் வசதிகளையும் பெற்றோருக்காக விட்விட்டு வரவேண்டுமான என்று யோசிக்கும் தலைமுறை’ (பக். 76) என, காலமாற்றத்தை சுட்டிக் காட்டுகிறார். முதியோர் […]

Read more

கனவுப்பட்டறை

கனவுப்பட்டறை, மதி, அகநாழிகை பதிப்பகம், பக். 160, விலை 160ரூ. அரசு பள்ளிகளில் படிக்கும், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளின் மனங்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்த சிறுகதைத்தொகுப்பு. முகம் பார்த்து பேச மறுக்கும் மாணவன், உணவுக்கு வழியில்லாத சிறுவன், தற்கொலை எண்ணத்துடன் திரியும் சிறுமி, தாழ்வு மனப்பான்மையை மறைக்க முரடனான வேடமிடுபவன் என்று இந்தக் கதைகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவனையும், நாம் வெவ்வேறு பெயர்களில், தோற்றங்களில் தினம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். வளரிளம் பருவத்தில் மாணவர்கள் மீது செலுத்தப்படும் அழுத்தங்கள், வாழ்வின் பிற்பகுதி வரை […]

Read more

ஹோம் கார்டன்

ஹோம் கார்டன், பா. ன்சென்ட், சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு, சமீபகாலமாக மக்களை வீட்டுத் தோட்டத்தின் பக்கம் ஈர்த்து வருகிறது. வீட்டிற்கு தேவையான காய்கறிகளை சாகுபடி செய்வதுடன், ‘டென்ஷனை’ குறைக்கவும், வீட்டுத் தோட்டங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன. அதீக செலவில்லாமல், அதீத உழைப்பும் தேவையில்லாமல், குறைவான இடத்தில் வீட்டுத் தோட்டம் அமைக்க ஆலோசனைகளை கூறியுள்ளார் நூலாசிரியர். மொட்டை மாடி மட்டுமின்றி, வீட்டு பால்கனியில்கூட செடி வளர்ப்பதற்கான எளிய ஆலோசனைகள் இடம் பெற்றுள்ளன. காய்கறிகள் முதல் […]

Read more

லாக்கப்

லாக்கப், சந்திரகுமார் (ஆட்டோ சந்திரன்), டிஸ்கவரி புக் பேலஸ். அன்றாட பிரச்னைக்கு கிடைத்த வரவேற்பு! ஆட்டோ சந்திரன் என்ற சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்ற நாவலை படித்தேன். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டு உள்ளது. கோவையை சேர்ந்த ஒரு இளைஞன் வேலைக்காக, பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார். 20வது வயதில், ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள, நெடுஞ்சாலை உணவகத்தில் வேலைக்கு சேர்கிறார். ஒரு நாள், அவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்கின்றனர். கைதுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. காவல் நிலையத்தில், திருட்டுக் குற்றம் […]

Read more
1 3 4 5 6 7 336