சங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள்

சங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள், முனைவர் மா. அமுதா, காவ்யா, விலை 320ரூ. இந்நூல் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூல். கணவன் – மனைவியிடையே நிகழும் அன்பு வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது அக இலக்கியங்கள். இவ்விருவர்களிடையே உண்டாகும் சிறு சிறு உணர்வு மோதல்களைக் களைந்து இணைத்து வைக்க வருபவர்கள் வாயில்கள்’ தூதுவர்களான இவர்கள் உறவின் உன்னதத்தை எடுத்துரைத்து இருவரையும் இணைத்து வைக்கவே முற்படுவர். உளச் சிக்கல்களை தீர்த்திட உதவும் வாயில்களைப் பற்றிய உளவியல் ஆய்வை, மிகவும் சுவாரஸ்யமாக செய்திருக்கிறார் முனைவர் மா. […]

Read more

இலட்சியப் பெண்டிர்

இலட்சியப் பெண்டிர், தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், பக். 160, விலை 125ரூ. பெண்களுக்கு மகுடம் சூட்டும் நூல்! சங்க காலத்தில், 45 பெண் புலவர்கள் இருந்தனர். இடைக்காலத்தில், காரைக்கால் அம்மையார், ஆண்டாளுக்குப் பிறகு, பெண்களுக்குக் கல்வி ஏன் மறுக்கப்பட்டது? இதை விரிவாக ஆய்வு செய்து, சாதனை செய்த ஒன்பது பெண்களின் சரித்திரத்தை அழகாகவும், ஆழமாகவும் இந்த நூலில் தந்துள்ளார் நூலாசிரியர், பாராட்டத்தக்கவர். அந்தண விதவைப் பெண்கள், ஆவுடையக்காள், துளசி அம்மாள், சுப்புலட்சுமி அம்மாள், லட்சுமி அம்மாள், செல்வம்மாள் போன்ற, 40க்கும் மேற்பட்ட கவிதாயினிகளை, கலங்கரை […]

Read more

கம்பதாசன்

கம்பதாசன், சிற்பி. பாலசுப்பிரமணியன், சாகித்ய அகாடமி, பக். 144, விலை 50ரூ. கண்கள் குளமாகும் கம்பதாசனின் வாழ்க்கை! உணர்வின் கூர்மையும், கலை வடிக்கும் கனித்திறனும் கொண்டிருந்த கம்பதாசன், சிறுகதை, நாடகம், திரைப்பாடல்கள், கவிதை, குறுங்காவியம் என, பன்முகம் கொண்ட படைப்பாளி. புதுக்கவிதையின் கூறுகளும், வியக்கத்தக்க கற்பனைகளும் புதிய புதிய உவமைகள், உருவங்கள், ஆழ்ந்த சிந்தனைகளுமாக விளங்கிய ஓர் ஆளுமைதான் கம்பதாசன். புரசைவாக்கம், குயப்பேட்டை நகராட்சிப் பள்ளியில், எட்டாம் வகுப்பைத் தாண்டாத, ‘அப்பாவு’ எனும் இயற்பெயர் கொண்ட கம்பதாசன், பெற்றோருக்கு தெரியாமல் நாடக தொழிலில் ஈடுபட்டு, […]

Read more

குமரப்பா கலைக்களஞ்சியம்

குமரப்பா கலைக்களஞ்சியம், மா.பா. குருசாமி, மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியீடு. உள்ளூரில் தோல்வியுள்ள ‘தாய்மை பொருளாதாரம்’ மா.பா. குருசாமி எழுதிய ‘குமரப்பா கலைக்களஞ்சியம்‘ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியிட்டு உள்ளது. எழுத்தாளர் குமாரசாமி, 80 வயது நிரம்பியவர். அவரது 150வது நூல் இது என்பது சிறப்பு அம்சம். ஜே.சி. குமரப்பா காந்தியின் சீடர். தஞ்சையில் பிறந்தவர். 1930களில், பட்டயக் கணக்கர் ஆவதற்கான சி.ஏ. தேர்வில் வெற்றிபெற்றார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், ‘இந்திய பொருளாதாரத்தை சுரண்டும் ஐரோப்பிய […]

Read more

தாயும் ஆனவன்

தாயும் ஆனவன், சுசீலா, ஜீஜீ எண்டர்பிரைசஸ், விலை 120ரூ. சிவாஜிகணேசனும், எம்.ஆர்.ராதாவும் இணைந்து நடித்த “பாகப்பிரிவினை” , “பாவமன்னிப்பு” ஆகிய திரைப்படங்களை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் வரும் வசனங்கள், ரசிகர்களின் செவிகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் படங்களுக்கு வசனம் எழுதியவர் சோலைமலை. அவருடைய மகள் சுசீலா சோலைமலைதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். இப்புத்கத்தில் தாயும் ஆனவன், பந்தயம், காரடையான் நோன்பு, ஏய் என்ற நான்கு குறு நாவல்கள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உரையாடல்கள் மூலமே கதையை நகர்த்திச் செல்கிறார் சுசீலா. படிக்கும்போது, அவருடைய […]

Read more

விளம்பர வீதி

விளம்பர வீதி, ந. அருள், கௌதம் பதிப்பகம், பக். 88, விலை 45ரூ. நூலாசிரியர் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுவதுடன் நியூசிலாந்து, லண்டனில் விளம்பர வகைப்பாடுகள் மற்றும் விளம்பர உத்திகள் குறித்து பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் நூல் முழுவதும் தெரிகிறது. கல்வெட்டுகள், மரசறைதல், தண்டோராபோடுதல் போன்ற விளம்பரங்கள், கால மாற்றத்துக்கு ஏற்ப சுவரொட்டி, விளம்பரத்தட்டி, பதாகைகள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்கள் என விரிவாக்கம் பெற்று வளர்ந்ததை தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன்முதலாக 1878இல் விளம்பரம் இடம்பெற்றது என்பன போன்ற […]

Read more

சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள்

சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள், தொகுப்பாசிரியர் பா. வீரமணி, சாகித்திய அகாதெமி, பக். 288, விலை 155ரூ. வழக்கறிஞர், தொழிற்சங்கவாதி, பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியவர், பொதுவுடைமைச் சிந்தனை உடைய போராளி எனப் பன்முகத்தன்மை கொண்ட சிங்காரவேலர், குடி அரசு, புதுவை முரசு, புரட்சி, புதுஉலகம் முதலிய இதழ்களில் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட 43 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எனினும் குடி அரசு இதழில் எழுதப்பட்ட கட்டுரைகள் அதிக அளவில் தொகுக்கப்பட்டு உள்ளன. கடவுள், மதநம்பிக்கை, சாதிப்பற்று, பய சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, அறிவியல் அடிப்படையிலான கருத்துகளை […]

Read more

ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம்

ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம், குருமலை சுந்தரம் பிள்ளை, பதிப்பாசிரியர் செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 124, விலை 90ரூ. புதிய விழிப்பின் ஆதின கர்த்தர்களில் ஒருவர் என்று பாரதியால் குறிப்பிடப்பட்ட பெருமைக்குரியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். ஒரே நேரத்தில் அரசியல், சமூக சீர்திருத்தம், இதழியல் என பல நிலைகளில் செயல்பட்ட முன்னோடி. சமூக சீர்திருத்தத்தை வெறும் வார்த்தைகளில் மட்டுமின்றி, நடைமுறை வாழவிலும் கடைப்பிடித்தவர். மூத்த மகள் தம் பன்னிரண்டாவது வயதில் கணவனையிழக்க அதே ஆண்டின் இறுதியில் அப்பெண்ணுக்கு அவர் மறுமணம் செய்து […]

Read more

கும்பகோணத்தில் உலா

கும்பகோணத்தில் உலா, வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன், யுனிவர்சல் பப்ளிஷிங், பக். 376,விலை 270ரூ. சோழ வளநாட்டின் சரித்திரத்தை குடந்தை நகருக்குச் சிறப்பான ஒரு பெரும் பங்குண்டு என்று கூறுவர். குடந்தையின் பெருமையை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், பேயாழ்வார் போன்றோர் போற்றிப் பாடியுள்ளனர். மகாமகக் குளத்தின் சிறப்பு, திருக்கோயில்களின் சிறப்பு போன்றவற்றைக் கல்வெட்டுச் சான்றுகளுடனும், தேவாரப் பாடல்களுடனும் புராணக் குறிப்புகளுடனும் தந்திருப்பது சிறப்பு. குடந்தை மட்டுமின்றி, குடந்தையைச் சுற்றியுள்ள திருவலஞ்சுழி, சுவாமிமலை, பட்டீஸ்வரம், திருபுவனம், திரவிடைமருதூர் முதலிய ஊர்களில் உள்ள […]

Read more

உருள் பெருந்தேர்

உருள் பெருந்தேர், கலாப்ரியா, விகடன் பிரசுரம், பக். 262, விலை 130ரூ. படைப்பாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை நாமும் உணர்வது நமக்கு புது அனுபவத்தைக் கொடுக்கிறது. நூலாசிரியர் கலாப்ரியா தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களையும் சுவாரஸ்யங்களையும் மிகவும் ஆழமாகவும் எளிமையாகவும் எடுத்துரைத்திருக்கிறார். தனது இளமைப் பருவத்தை வாசகர்களின் நெஞ்சில் பதிய வைத்துச் செல்லும் வரிகள் ஏராளம். தன் பதின் பருவத்தைச் சொல்லிச் செல்லும்போதுதான் வாழ்க்கை முறை குறித்தும், சமூகத்தின் வரலாறு குறித்தும் அழகாக எடுத்துரைத்துள்ளார். கலாப்ரியாவின் […]

Read more
1 2 3 4 5 336