ஜாமக்கோள் பிரசன்னம்

ஜாமக்கோள் பிரசன்னம், ஆர். செல்வம், புஞ்சை புளியம்பட்டி மற்றும் இருவர், வெளியீடு ஜெமினி பதிப்பகம், பக்கம் 272, விலை 270 ரூ ஜோதிடக்கலை வேதத்தின் ஓர் அங்கமாகும். அதில் பிரசன்னம் என்பதும் ஒரு பகுதி. இந்நூல் ஜாமக்கோள் பிரசன்னம் பற்றி, ஜோதிட நூல் சமண, சமய முனிவர்களில் ஒருவராகிய ஜைனமுனி முதல் இன்றைய நாள் வரை ஜாமக்கோள் பிரசன்னம் வளர்ந்தவிதம், அதன் வரலாறு, அதன் பயன் என தகவல்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கல்வி, திருமணம், காணாமல் போன பொருள் எங்கே கிடைக்கும் என்று பல்வேறுபட்ட தலைப்புகளில் […]

Read more

இங்கிதம் பழகு

உலகம் சுற்றலாம் வாங்க, சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்தசிவா பப்ளிகேஷன்ஸ், பக்கம் 96, விலை 300 ரூ. ஸ்பெயின் நாட்டின் தக்காளித் திருவிழாவில் கலந்துகொண்டு, நாமும் தக்காளிக் குளியலை அனுபவிப்பது, தென் அமெரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில், வலம் வரும் வனவிலங்குகளை நாமும் அருகில் சென்று பார்ப்பதைப் போன்ற படபடப்பு, போலந்து நாட்டில் உள்ள விலிக்கா உப்புச் சுரங்கப்பாறைகளில் உருவாக்கிய சிலைகளை நேரில் ரசிப்பது போன்ற உணர்வு. இவையெல்லாம் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களின், ‘உலகம் சுற்றலாம் வாங்க’ என்ற பயண நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. உலகின் வித்தியாசமான, […]

Read more

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும்

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, பக்கம் 456, விலை 250 ரூ. ஒரு ராஜ்யத்தின் ஏழு அங்கங்களில் உள்ள சுவாமி, அமாத்ய, மித்ர, கோச, ராஷ்ட்ர, துர்க, பல என்பனவற்றை (பக் 113) ஒவ்வொரு அங்கமாக விவரித்து, அன்றைய அரச தர்மம், இன்றைய நிலைக்கு எவ்விதம் பொருந்தி வருகிறது அல்லது முரண்படுகிறது என்பதை 64 கட்டுரைகளில் விவரித்துள்ளார் நூலாசிரியர். காட்சிக்கு எளியனாய் ராமன், சாலை சென்ற பிரஜைகளை அன்பொழுக விசாரிக்க அவர்கள், ‘நீ எங்களுக்கு அரசனாக இருக்கிறபோது என்ன […]

Read more

நாடக மேடையும் திரை உலகமும்

நாடக மேடையும் திரை உலகமும், ஏ.எல்.எஸ். வீரய்யா, திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, விலை 75 ரூ கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவான இந்நூலாசிரியர், சுமார் 50 ஆண்டுகள் சினிமாத் துறையிலும், அதற்கு முன் சில ஆண்டுகள் நாடகத் துறையிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவர். அந்த அடிப்படையில் இவ்விரு துறைகளைப் பற்றிய தனது சுவாரஸ்யமான அனுபவங்களையும், மற்ற பல செய்திகளையும் தொகுத்து அவ்வப்போது புத்தகங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இந்நூலிலும் வியப்பான, சுவையான பல செய்திகளை துணுக்கு வடிவிலும், சிலவற்றை […]

Read more

சங்க இலக்கியங்களில் மனித நேயம்

சங்க இலக்கியங்களில் மனித நேயம், முனைவர் முருகையன் பக்கிரிசாமி, வனிதா பதிப்பகம், சென்னை – 17,  பக்கம் 240, விலை 140 ரூ. மனிதநேயம் என்றால் என்ன விலை என்று கேட்கும் இன்றைய சமுதாயத்தில், சங்க இலக்கிய மக்கள் எவ்வளவு மனித நேயத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார். அகத்தின் தூய்மை, புறத்தின் மேன்மை, அறத்தின் மாண்பு, உலகப் பொதுமைச் சிந்தனை, உயிரிரக்கப் பண்பு, மனிதமும் மானமும் என்கிற ஆறு தலைப்புகளில் மனிதநேயத்தின் மகத்துவத்தைப் புரியவைத்துவிடுகிறார். ‘உயிரிரக்கப் பண்பு’ என்கிற இயல்தான் […]

Read more

விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் (ஊர் வரலாறு)

  விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் (ஊர் வரலாறு), கோ. செங்குட்டுவன், பி.எஸ்.பப்ளிகேஷன், விழுப்புரம் 605, பக்கம் 225, விலை 150 ரூ. நூலாசிரியர், விழுப்புரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல, வரலாற்று நிகழ்வுகளைத் தொகுப்பதிலும் கைதேர்ந்தவர். தான் வாழும் மண்ணின் பெருமை பேசும் விதத்தில் விழுப்புரம் பற்றிய முழு விவரங்களையும் இந்நூலில் பதிவுசெய்துள்ளார். கி.பி. 940 முதல் 2010 வரையிலான விழுப்புரத்தின் வரலாற்று நிகழ்வுகள் கோவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் ஓர் அறிமுகம். விடுதலை வேள்வியில் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரானது, விழுப்புரம் நகராட்சி நிர்வாகம், பண்பாட்டு நோக்கில், நினைவிற்குரியவர்கள், […]

Read more

மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை)

மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை), முனைவர் தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், சென்னை – 29, பக்கம் 704, விலை 300ரூ. இத்தனை நாள்களாக இப்படியொரு, ‘பெண்புலவர் களஞ்சியம்’ வெளிவராதா என்று ஏங்கியவர்களின் ஏக்கத்தைப் போக்கியிருக்கிறது இந்நூல். நூலகங்களில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய பெண்பாற் புலவர்கள் பற்றிய தகவல்களைக் களஞ்சியமாக்கியிருக்கிறார் நூலாசிரியை. அட்டைப்படமே அசத்துகிறது. நீண்ட நெடுங்காலமாக அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட ‘கயமனார்’ என்ற புலவர் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகத்தை – சர்ச்சையை இந்நூல் நிவர்த்தி செய்துள்ளது. அதுமட்டுமல்ல, […]

Read more

யாளி

அமிர்தம் தொகுதி 1,  நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், சென்னை – 75, பக்கம் 184, விலை 90 ரூ. ‘ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா’ என்று நம்மிடையே கூற்றொன்று உண்டு. ஒரு சாண் வயிறுக்கு படித்தவன், பாமரன், ஏழை, பணக்காரன் என்கிற எந்தப் பேதமும் இல்லை. பிறப்பு, இறப்புக்கு நடுவில் அனைவருக்கும் பொதுவானதான உணர்வு பசி. மொத்தம் இத்தொகுப்பில் உள்ள 14 சிறுகதைகளும் 14 ரகம். அத்தனையும் தனி ரகம். […]

Read more

ரெபிடெக்ஸ் கம்ப்யூட்டர் கோர்ஸ்

ரெபிடெக்ஸ் கம்ப்யூட்டர் கோர்ஸ்,  இ.ராமநாதன், ரெபிடெக்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 220 ரூ. கம்ப்யூட்டர், லேப்டாப், இன்டர்நெட், போன்றவற்றின் பயன்பாடுகளை அறியாமல், இனி எந்தவொரு இளைய தலைமுறையினராலும் எதிர்காலத்தை எதிர்கொள்வது என்பது மிகக் கடினம். அந்த அளவுக்கு இவற்றின் ஆதிக்கம் உள்ளது. அதே சமயம், இவற்றைப் பயன்படுத்த ஓரளவுக்கு ஆங்கில அறிவும், விஷய ஞானமும், பயிற்சியும் தேவை. ஆயினும் ஆங்கிலம் தெரியாதவர்களும் கம்ப்யூட்டரை பயன்படுத்தும் இலகுவான பயிற்சி முறையை எளிய தமிழில் இந்நூல் விளக்குகிறது. கம்ப்யூட்டர் என்றால் என்ன என்ற ஆரம்பப் பாடம் முதல், அதன் […]

Read more

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மனிதனின் நிரந்தரத் தேடல்

மனிதனின் நிரந்தரத் தேடல் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 1, விலை 150 ரூ. நான் தியானம் செய்ய ஆரம்பித்த போது அதில் இவ்வளவு ஆனந்தம் காண்பேன் என நான் ஒருபோதும் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல எவ்வளவு அதிகமாக நான் தியானித்தேனோ அவ்வளவு எனது அமைதியும், ஆனந்தமும் அதிகரித்தன’ என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வதைப் பற்றிய சொற்பொழிவுகள், கட்டுரைகளின் தொகுப்பை அண்மையில கொல்கத்தாவிலுள்ள ‘யோகோதா சத்தங்க […]

Read more
1 329 330 331 332 333 336