சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, பாகம் 4, தொகுப்பாசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக்.552, விலை ரூ. 200. சுவாமி விவேகானந்தர் குறித்த மிக உயர்ந்த அபிமானம் கொண்டவராக பாரதி விளங்கினார். தான் நடத்திய பத்திரிகைகளிலும் பணிபுரிந்த பத்திரிகைகளிலும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விவேகானந்தரைப் போற்றி மகிழ்கிறார் பாரதி. அதுமட்டுமல்ல, விவேகானந்தரின் சீடர்களான சுவாமி அபேதானந்தரையும் சகோதரி நிவேதிதையையும், அவரது சகோதரர் பூபேந்திரரையும் தனிப்பாடல் புனைந்து வழிபட்டவர் பாரதி. மகாத்மா காந்தி, திலகர், நேதாஜி போன்ற பிற தேசியத் தலைவர்களைப் […]

Read more

வெல்ல நினைத்தால் வெல்லலாம்

வெல்ல நினைத்தால் வெல்லலாம்,  அ.அமல்ராஜ், விஜயா பதிப்பகம், பக்.368, விலை ரூ.300. வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விடை தரும் நூல். வெல்ல வேண்டும் என்று நினைத்தால் வெல்லலாம் என்றாலும் அப்படி நினைப்பதற்கே நம்மைத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்நூல் மனதின், எண்ணத்தின், சொல்லின், செயலின், பழக்கத்தின் வல்லமைகளை மிக விரிவாக விளக்குகிறது. மனம், எண்ணம், குணம், சொல், செயல், பழக்கம் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று இன்னொன்றின் மீது தாக்கம் ஏற்படுத்துபவை. எதிலும் கவனம் செலுத்த, நம்பிக்கை கொள்ள, […]

Read more

அச்சம் தவிர்… ஆளுமை கொள்

அச்சம் தவிர்… ஆளுமை கொள், பரமன் பச்சைமுத்து, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.160, விலை ரூ.150. படிப்பு என்பது ஒரு பாஸ்போர்ட். உங்களை நேர்முகத் தேர்விற்கும், முக்கியமான தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும். ஆனால் வாழ்வில் மேலும் மேலும் வெற்றி பெற சில தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஆளுமை என்று சொல்லலாம். ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள அச்சம் தடையாக இருக்கிறது. அச்சத்தை எவ்வாறு நீக்குவது? ஆளுமைப் பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது? இதுதான் இந்நூலின் சாரம். அச்சப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அச்சப்படும் ஒரு […]

Read more

அர்த்தமற்ற மனித மனம்

அர்த்தமற்ற மனித மனம் (அறம், மரம் மறந்ததேனோ), வ.ராஜ்குமார். கவிதா பப்ளிகேஷன், பக்.176. விலை ரூ.160. அறம் என்பது ஒழுக்கப் பண்புகளையும், மரம் என்பது இயற்கைச் செல்வத்தையும் குறிக்கும். ஒழுக்கமாகிய அறத்தையும், இயற்கைச் செல்வமாகிய மரத்தையும் வளர்ப்பதுவே நம் எல்லாருடைய இலக்காக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளில் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டும் தருணங்களில் மட்டுமே மனிதர்களின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ள முடியும். சாதாரணமாகத் தெரிந்து கொள்ள முடியாது என்று கூறும் நூலாசிரியர் தான் படித்த, கற்றுக் கொண்ட […]

Read more

குயில்பாட்டுத் திறன்

குயில்பாட்டுத் திறன், செ.வை.சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.280, விலை ரூ.260. ஓர் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு பலவிதமான கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இந்நூல் பாரதியாரின் “குயில் பாட்டு’ படைப்பை மொழியியல் இலக்கியத்திறனாய்வு நோக்கில் ஆராய்ந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மேலை நாடுகளில் தோன்றிய திறனாய்வு முறைதான் மொழியியல் இலக்கியத் திறனாய்வு. முதலில் இலக்கியத்தின் நடை தொடர்பாக ஆராய்ந்த திறனாய்வு, இலக்கியத்தில் காணப்படும் மொழி அமைப்பு முழுவதையும் ஆராயும் மொழியியல் திறனாய்வாக மாறியது. “மொழியின் அமைப்புதான் இலக்கியத்திற்கு வடிவ அழகைத் […]

Read more

கடற்காகம்

கடற்காகம், முஹம்மது யூசுஃப், யாவரும் பதிப்பகம், விலை: ரூ.395 அரபு நாடுகளின் அரசியல் இராக், குவைத், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், அமீரகம், ஓமன், ஈரான் போன்ற அரபு நாடுகளின் அரசியலை இந்நாவல் பேசுகிறது. சுற்றுச்சூழல் போர் என்ற தொழில்நுட்பத்தை வல்லரசு நாடுகள் பயன்படுத்தி, செயற்கை சுனாமி, நிலநடுக்கத்தை உருவாக்குவதை விவரிக்கிறது. வானில் கருமேகம் சூழும்போதெல்லாம், ஈரானிய பார்சி மொழியில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் சமீரா டீச்சர் கதாபாத்திரம் ஒரு கவிதை. அரபு மண் என்றாலே பாலைவனம், ஒட்டகம், வறட்சி என்றே பழக்கப்பட்ட நமக்கு அதன் […]

Read more

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள்

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள், வி.என்.சாமி, விலை: ரூ.120 பழங்குடி மக்களின் சுதந்திர தாகம் இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே வெள்ளையரை எதிர்த்து நடைபெற்ற பெரும் விடுதலைப் போராட்டங்களில் பழங்குடி இன மக்களின் பங்கும் கணிசமானது. அவர்கள் உயிர்த் தியாகம் செய்து, தங்கள் நாட்டுப்பற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். ஆனால், அந்தப் போராட்டங்களை வெள்ளையர்கள் ‘கலகம்’ என்றும், ‘வெறும் கிளர்ச்சி’ என்றும் வர்ணித்தனர். அதனால், அவர்களின் வீரச் செயல்கள் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம்பெறாமல் போய்விட்டதாகச் சொல்கிறார் நூலாசிரியர். கூர்ந்து கவனிக்கப்படாமல் விடுபட்டுப்போன பழங்குடி மக்களின் […]

Read more

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும், ப.திருமாவேலன், பரிசல் வெளியீடு, விலை: ரூ.140 காமராஜருக்கு முன்பே திராவிட இயக்கத்தால் தீவிரமாக ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர், ஓமந்தூர் ராமசாமி. இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதாலும், ஆலய நிர்வாகங்களில் அரசின் கண்காணிப்பை வலுப்படுத்தியதாலும் உள்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளைச் சந்தித்த அவர், உள்கட்சிப் போட்டியில் தோல்வியடைந்து, முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. தீவிர காந்தியராகவும் பழுத்த ஆன்மீகவாதியாகவும் விளங்கிய ஓமந்தூராரை ஆதரித்து, 1948 ஏப்ரலில் ‘திராவிட நாடு’ இதழில் அண்ணா எழுதிய இரண்டு தலையங்கங்கள் வகுப்பு துவேஷத்தைத் தூண்டிவிடுவதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு ரூ.3,000 பிணை கோரப்பட்டது. […]

Read more

ஐயா (எ) 95 வயது குழந்தை

ஐயா (எ) 95 வயது குழந்தை, வடிவரசு, விஜயா பதிப்பகம், விலை: ரூ.80 பிள்ளை பாடிய தந்தை தமிழ் கிராமத்து வெள்ளந்தி மனிதரான தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், தனது தகப்பனையும் தாயையும் சென்னையிலிருந்து கோவைக்கு அவர்களின் வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும்தான் இந்நூல். வடிவரசு சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒருவர் வீட்டில் டிவி பார்க்கப்போய் அங்கேயே தூங்கிவிட, அந்த வீட்டுக்காரர் இவரைத் தூக்கிவந்து தெருவில் படுக்க வைத்துவிட்டுப் போய்விட்டாராம். மறுநாளே சில ஆடுகளை விற்று டிவி வாங்கிவந்து வைத்துவிட்டு, “உன் கூட்டாளியையெல்லாம் […]

Read more

சிற்பியின் படைப்புத்தளம்

சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, பக். 453, விலை 450ரூ. இலக்கியம் காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது’ என்று சொல்வர். உருவத்திலும், உணர்விலும், உள்ளடக்கத்திலும் அது எத்தனையோ மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறது. அந்த வகையில் கவிதைகளால் தன்னை புதுப்பித்துக் கொண்ட கவிஞர் சிற்பி குறித்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் வெளிவந்திருக்கிறது சிற்பியின் படைப்புக்கலை நுால். ஒரு சிறந்த கவிஞனின் அனைத்து பரிமாணங்களும் இலக்கிய உலகிற்கு முறையாக சொல்லப்படவேண்டும் என்ற முயற்சியின் பலன் தான் இந்தப் புத்தகம். சிற்பி படைத்த ‘உத்திகள்’ […]

Read more
1 147 148 149 150 151 505