தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை

தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை, இயக்குனர் வ.கவுதமன், பன்மை வெளியீடு, விலை 250ரூ. தமிழ் தேசியத்துக்காக வாழ்நாள் முழுவதும் அடக்கு முறைகளை சந்தித்து உண்மை தொண்டராக இருந்தவர் வடமலை. தலைவணங்காத் தமிழ்தேசியப் போராளியாக இருந்த, அவருடைய வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவர் பற்றி சான்றோர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைவரும் இதனை வாங்கி படிப்பதன் மூலம் வடமலை தமிழ்த்தேசியத்துக்காக ஆற்றிய பணிகளை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். அதனை நாமும் பின்பற்ற உதவிகரமாக இருக்கும். நன்றி: […]

Read more

சீரடி அனுபவங்கள்

சீரடி அனுபவங்கள், தமிழாக்கம் நீலம் மதுமயன், பாபாஜி பதிப்பகம், விலை 90ரூ. சீரடி சாய்பாபாவின் பக்தர்களில் ஒருவரான ஜி.எஸ்.கபர்டே என்பவர் 1910 டிசம்பர் முதல் 1912 மார்ச் வரை சீரடியில் சாய்பாபாவை நேரடியாக சந்தித்தபோது கிடைத்த அனுபவங்களை நாட்குறிப்பாக எழுதி வைத்தார். அந்த நாட்குறிப்புகள் இப்போது புத்தக வடிவில் வெளியாகி உள்ளது. சாய்பாபா பற்றிய புதிய செய்திகளையும் அவர் கூறிய கதைகளையும், பாபாவின் அபூர்வ படங்களையும் இது தாங்கி இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 13/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

யாதுமாகி நின்றாள்

யாதுமாகி நின்றாள், சுப்ர.பாலன், கங்கை புத்தக நிலையம், விலை 150ரூ. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் குடி கொண்டு இருக்கும் ஆன்மிகத் தலங்களுக்கு ஆசிரியர் சென்று வந்த அனுபவங்களின் தொகுப்பாக இந்த நூல் உருவாகி இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மகா காளேஸ்வரர் உள்பட பல கோவில்கள் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 13/3/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027763.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

நானும் என் தமிழ் எழுத்தும்

நானும் என் தமிழ் எழுத்தும், ஆசிரியர் தீபம் எஸ். திருமலை, சஞ்சீவியார் பதிப்பகம், விலை 130ரூ. தமிழறிஞர்கள், இலக்கிய மேதைகள், எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள், கவிஞர்கள் போன்றவர்கள் தங்கள் எழுத்து அனுபவங்களை, தீபம் இலக்கிய மாத இதழில் பதிவு செய்துள்ளனர். அந்த கருத்துக்களின் 10-வது தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. வில்லிசை கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள், மகன் மற்றும் எழுத்தாளர்களான தமிழ் ஞான குரு, கவுதம நீலாம்பரன், கீரனூர் ராமமூர்த்தி உள்பட 26 பிரபலங்களின் எழுத்து அனுபவங்கள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, […]

Read more

என் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும்

என் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப. சங்கர், பாவை பிரிண்ட்ர்ஸ், விலை 460ரூ. தெய்வ பக்தியுடன், ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, ஒழுக்கத்தோடும் நற்குணங்களோடும் வளர்ந்து பல பெரியோர்களின் ஆசியாலும், ஆதரவாலும் கல்வி பயின்று, அரசின் மிக உயர்ந்த பதவிகளில் நேர்மையும், மனிதநேயமும் சிறக்கப் பணியாற்றி நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.சங்கரன். இவருடைய வாழ்க்கை வரலாறே இந்த நூல். குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடைய […]

Read more

காவிரியின் செல்வன்

காவிரியின் செல்வன், தேசிக மணிவண்ணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 260ரூ. புகழ் பெற்ற சரித்திர நாவலாசிரியர்கள் வரிசையில், தேசிக மணிவண்ணன் படைத்துள்ள காவிரியின் செல்வன் என்ற சரித்திர நாவலின் கதாநாயகன், சோழ மன்னர்களில் ஒருவரான கோச் செங்கட்சோழன் ஆவார். கி.பி. 101 முதல் கி.பி. 200 வரை நடைபெற்ற சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட இந்த நாவலில், அப்போது வாழ்ந்த மன்னர் பரம்பரையுடன் சில கற்பனை கதாபாத்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நாவல் முழுவதும் காதல், வீரம், போர் என்று சரித்திர நாவலுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் […]

Read more

ஸ்ரீ அழகிய சிங்கனின் அற்புத ஆலயங்கள்

ஸ்ரீ அழகிய சிங்கனின் அற்புத ஆலயங்கள், கைலாசம் சுப்ரமண்யம், சீ.சுந்தரம், வானதி பதிப்பகம், விலை 300ரூ. திருமாலின் அவதாரங்களில் முக்கியமான அவதாரமாகக் கருதப்படும் நரசிம்மருக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் அமைந்துள்ள 200 -க்கும் மேற்பட்ட ஆலயங்கள் பற்றிய அரிய தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. பிரகலாதனை காத்தருளவும், ஹிரண்யகசிபுவை வதம் செய்யவும் அவதரித்த நரசிம்மர் பற்றிய விஸ்தாரமான குறிப்புகள், நரசிம்மர் ஆலயங்களின் தனித்தன்மை ஆகியவற்றைத் தந்து இருப்பதோடு, நரசிம்மர் நிகழ்த்திய அற்புதங்கள், நரசிம்மரை வழிபடுவதற்கான ஸ்தோத்திரங்கள் ஆகியவையும் இடம் பெற்று […]

Read more

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம், சுவாமி தயானந்த சரசுவதி, தமிழில் பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 1000ரூ. மகாபாரதம் அனுசாசன பர்வத்தில் இடம் பெற்று இருப்பது விஷ்ணு சஹஸ்ரநாமம், பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர், அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாகக் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம், இந்துக்களின் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றதாகும். விஷ்ணுவைக் குறிக்கும் இந்த ஆயிரம் நாமங்களும், அவற்றுக்கு சுவாமி தயானந்த சரசுவதி அளித்த விரிவான விளக்கங்களும் இந்த நூலில் சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. விஷ்ணுவின் வழிபாட்டில் ஒவ்வொரு நாமத்துக்கும் என்ன பொருள் என்பதோடு, […]

Read more

திருக்குறள் மூலமும் உரையும்

திருக்குறள் மூலமும் உரையும், கீர்த்தி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ. அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று கொண்டாடப்படும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏராளமானவர்கள் உரை எழுதி இருக்கின்ற போதிலும், பரிமேழலகரின் உரை, காலத்தால் அழியாப் புகழ் பெற்றதாகும். இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு குறளுக்கும் பரிமேழலகர் கொடுத்த உரையும், அதனையும் எளிமைப்படுத்தி ஆசிரியர் கொடுத்துள்ள தெளிவுரையும் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் உட்பட அனைவரும் திருக்குறளை புரிந்து படிக்க இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 13/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

நாக்கை நீட்டு

நாக்கை நீட்டு, மா.ஜியான், தமிழில் எத்திராஜ் அகிலன், அடையாளம் பதிப்பகம், விலை 90ரூ. உலர்ந்த எலும்புகளின் கடைசி நினைவு தான் எழுதிய படைப்புகள் காரணமாக சீன அரசால் வேட்டையாடப்பட்டு தற்போது லண்டனில் வசிக்கும் 65 வயது எழுத்தாளர் மா ஜியானின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஓவியக் கலைஞருமான மா ஜியானின் ஓவியங்கள், 1983-ல் ஆன்மிக மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டு, கிழித்தெறியப்பட்டு அழிக்கப்பட்டதோடு அவர் சீன அரசால் கைதும் செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவரது தனிப்பட்ட வாழ்விலும் புயல் வீசியது. விவாகரத்துபெற்ற அவரது […]

Read more
1 230 231 232 233 234 505