அறிவியல் தத்துவம் சமுதாயம்

அறிவியல் தத்துவம் சமுதாயம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா; தமிழில்: அ.குமரேசன், அலைகள் வெளியீட்டகம், பக்.64, விலை ரூ.50. பண்டைய இந்தியாவில் சமயச்சார்பின்றி முற்றிலும் உலகியல் சார்ந்ததாக மருத்துவம் இருந்திருக்கிறது என்பதை நூலாசிரியர் மிக விரிவாக விளக்குகிறார். மாயாவாத – மதச்சடங்கு சார்ந்த சிகிச்சை என்பதிலிருந்து பகுத்தறிவு சார்ந்த நிலைக்கு மருத்துவத்துறை முன்னேறுகிறது என்றும், யுக்தி-வ்யாபஸ்ரேய பேஸாஜா'வாக மருத்துவம் மாறுகிறது என்றும் நூலாசிரியர் கூறுகிறார். புத்தரின் கொள்கைகளை விளக்கும் நூலான வினய பீடகத்தில் துறவிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து புத்தர் நீண்ட விவாதம் நடத்தியிருக்கிறார். அது […]

Read more

பள்ளி தோற்றுவிட்டதா?

பள்ளி தோற்றுவிட்டதா?,  சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம்,  பக்.96, விலை ரூ.200. பள்ளிகள் தொழிற்கூடங்களுக்கு ஆட்களைத் தயார்ப்படுத்தும் இடம் அல்ல. பள்ளிப் படிப்பு என்பது வாழ்வியல் சிந்தனையை மையப்படுத்தி இருக்க வேண்டும்' என்ற அடிப்படையில் கல்வி கற்பிக்கும் முறையில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது. உயர் கல்வியையும், தொழிற்சாலைகளையும் கவனத்தில் வைத்து புத்தகங்களை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். குழந்தைகளின் தேவை, ஆர்வத்திற்கு ஏற்ற கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அடிப்படை அறிவை வளர்க்கும் படித்தல், கவனித்தல், திருத்துதல், […]

Read more

கூடல் நூல்களில் ஆடல்

கூடல் நூல்களில் ஆடல், ஆ.எஸ்தர் பிரதீபா, பக்.172, விலை ரூ.175. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பரதநாட்டியப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் நூலாசிரியரின் சங்க இலக்கியம் சார்ந்த நூலறிவு நம்மை வியக்க வைக்கிறது. கி.மு.300 – கி.பி.300 வரையிலான காலத்தில் நான்மாடக் கூடல் நகரில் கடைச்சங்கம் செயல்பட்டு வந்தது. அக்காலத்தில் தோன்றிய சங்க இலக்கியங்களான நற்றிணை, பரிபாடல், குறுந்தொகை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநூனூறு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவற்றில் காணப்படும் இசை, […]

Read more

காலனிய வளர்ச்சிக் காலம்

காலனிய வளர்ச்சிக் காலம் – புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை, எஸ்.ஜெயசீல ஸ்டீபன்; தமிழில்: ரகு அந்தோனி,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.188, விலை ரூ.175. இயற்கைச் சீற்றம், போர்கள், வாழ வழியில்லாமற் போதல், அரசின் நடவடிக்கைகள் என மனிதர்கள் புலம்பெயர நிறையக் காரணங்கள் இருக்கின்றன. பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் பாண்டிச்சேரி, காரைக்காலில் இருந்து மொரீசியசுக்கு இடம் பெயர்ந்த மக்களைப் பற்றியும், பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளுக்கு கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய அனுப்பப்பட்ட தமிழ் ஒப்பந்த குடியேற்றத் தொழிலாளர்களைப் பற்றியும், 1829 -1891 […]

Read more

சீர்மிகு சீவக சிந்தாமணி எளிய வடிவில்

சீர்மிகு சீவக சிந்தாமணி எளிய வடிவில், கே.சித்தார்த்தன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி எளிய வடிவில் புதுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணி காப்பியத்தின் முதல் பகுதியை அப்படியே கையாண்டு, பின் பகுதியில் கட்டியங்காரனின் மனைவி மங்கையர்க்கரசி, அன்னபூரணி போன்ற கற்பனைப் பாத்திரப்படைப்புகளைக் கொண்டு கதை சுவாரசியமாக பின்னப்பட்டு இருக்கறிது. கதை முழுவதையும் நாடக வடிவில் கொடுத்து இருப்பதோடு, ஒவ்வொரு காட்சியின் விவரமும் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது. கட்டியங்காரன் நடத்தும் சூழ்ச்சிகள், கடைசியில் […]

Read more

தமிழ் இலக்கியத்தில் கவின்கலைகள்

தமிழ் இலக்கியத்தில் கவின்கலைகள், அ.பழநிசாமி, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 175ரூ. கட்டிடங்கள், சிற்பம், ஓவியம், இசை, காவியம், கூத்து, நாடகம் போன்ற நுண்கலைகள் பழந்தமிழகத்தில் எவ்வாறு சிறப்புப் பெற்று திகழ்ந்தன என்பதை விரிவாக எடுத்துக் காட்டுகிறது இந்த நூல். சங்க கால இலக்கியங்கள், காப்பியங்கள், திருக்குறள், நீதிநூல்கள் போன்றவற்றில் இந்து மேற்கோள்களைக் காட்டியும், நேரில் ஆய்வு செய்தும் தரப்பட்டுள்ள தகவல்கள், இந்தத் துறையில் ஆய்வு செய்பவர்களுக்கு மிக்க பயன் உள்ளதாக இருக்கும் நன்றி: தினத்தந்தி, 30/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு

தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு, முத்தலாங்குறிச்சி காமராசு, தமிழ் திசை, விலை 170ரூ. வீரத்தின் விளை நிலமாகத் திகழும் தமிழகத்தின் தென் பகுதியில் சீரோடும் சிறப்போடும் விளங்கிய நட்டாத்தி ஜமீன், சாத்தான் குளம் ஜமீன் ஆகியவர்களின் மறைந்து போக இருந்த வரலாற்றைத் தேடிப் பிடித்து, நல்ல ஆவணமாகப் பதிவு செய்து இருக்கிறார் ஆசிரியர். இந்த வரலாறு தொடர்பான கள ஆய்வு மூலமும், இந்த ஜமீன்களின் வாரிசுகளை நேரில் சந்தித்தும் பெற்ற விவரங்கள் மலைக்க வைக்கின்றன. இந்த ஜமீன்களின் வீர வரலாறு, காதலால் அழிந்து போன ஜமீன் […]

Read more

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்,எஸ்.ஸ்ரீகுமார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.448; ரூ.420; வைணவ தத்துவம், வைணவத் திருத்தலங்கள் பற்றிய இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. முதற்பகுதியில் வைணவ தத்துவம் பற்றிய விளக்கம், வைணவ ஆகமங்கள், வைணவத்தின் சடங்குகளும் மந்திரங்களும், வைண விழாக்கள், ஆலய வழிபாடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில் திருவரங்கம்,திருக்குடந்தை, திருநந்திபுர விண்ணகரம், திருவெள்ளியங்குடி, திருக்கச்சி, திருநின்றவூர், காஞ்சிபுரம், திருநீர்மலை, திருப்பதி, திருப்புலியூர் உள்ளிட்ட 108 வைணவத் திருப்பதிகளைப் பற்றி விரிவான தகவல்களைக் கூறுகின்றன. ஒவ்வொரு திருப்பதியின் முக்கியத்துவம், மூலவர், உற்சவர், தாயார், […]

Read more

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு ஷரிஅத்திலா? சட்டத்திலா?

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு ஷரிஅத்திலா? சட்டத்திலா?, முவப்பிகா பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு, நாடாளுமன்றத்தில் முத்தலாக் மகோதாவைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி கற்பதில் உரிமை, கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, விவாகரத்து உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை இஸ்லாம் வழங்கி உள்ளது. அந்த வகையில் முத்தலாக் சட்டம் தேவையற்றது என்பதை உடன்குடி மு.முகம்மது யூசுப் பல்வேறு ஆதாரங்களுடன் திருக்குர்ஆன் […]

Read more

மீன்கள் உறங்கும் குளம்

மீன்கள் உறங்கும் குளம், பிருந்தா சாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. கவிதை வடிவங்களிலேயே யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி ஹைக்கூவுக்கு இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அந்தச் சின்ன, சிறிய மூன்றடி வடிவம், அழகான படிமங்களால் நுட்பமான வெளியீட்டு முறை, அதன் எளிமை ஆகியவையே ஈர்ப்புக்குக் காரணம். அந்த வகையில் பிருந்தா சாரதி எழுதிய இந்த ஹைக்கூ கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன. மணல் வீடு கட்டி விளையாடுகிறது அகதியின் குழந்தை. ‘இரு நாட்டுக் கொடிகளையும் ஒரே மாதிரி அசைக்கிறது எல்லையில் வீசும் […]

Read more
1 232 233 234 235 236 505