ஒரு துணைவேந்தரின் கதை

  ஒரு துணைவேந்தரின் கதை, சே.சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், முதல்பாகம் விலை 400ரூ, இரண்டாம் பாகம் விலை 350ரூ. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சே.சாதிக், தனது வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களைத் தொகுத்து கதை போல எழுதி இருக்கிறார். முதல் பாகத்தில் இளமைக் காலப் பள்ளிப் படிப்பு முதல் பி.இ.படிப்பில் சேரும் வரையிலான நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். இரண்டாம் பாகத்தில் பொறியியல் மாணவராகவும், ஆசிரியராகவும் இருந்த காலகட்டத்தை விளக்கியுள்ளார். எழுத்து, மொழி, பேச்சு மொழி இவ்விரண்டையும் கையாண்டு மிகச் சாதாரண நடையில் பாமரரும் […]

Read more

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0,

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், விலை 175ரூ. உணர்வு மேலாண்மை என்ற எமோஷனல் இன்டெலிஜென்ஸ் புத்தகத்தில் மனிதர்களிடையே நட்பை ஏற்படுத்த தேவைப்படும் குணாதிசயங்கள் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் நமக்கு ஏற்படும் விதவிதமான உணர்வுகளை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்ற வழியையும் இந்த நூல் கற்றுத்தருகிறது. அத்துடன், பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும், பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களில் இருந்து மீள்வதற்கான வழிகளும் கற்றுத்தருகிறது. மன்னிப்பின் அவசியத்தையும், மற்றவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தையும் இந்த நூல் மூலம் தெரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் […]

Read more

இனி இல்லை மரணபயம்

இனி இல்லை மரணபயம், சந்தியா நடராஜன் சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. மரணம், வாழ்க்கையின் எதார்த்தம், இந்த எதார்த்தத்தை ஏற்கமறுக்கிற மனம், பயத்தில் வாழ்க்கையின் பெரும்பாலான சந்தோஷத் தருணங்களைக் கொண்டாட விடாமல் செய்கிறது.இதனால் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறவர்கள் நிறைய பேர். மரணத்தைப் பற்றி தேவையில்லாத பயமும் குழப்பமும் கொண்டவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் இந்த நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பத்துப்பாட்டினில் ஆளுமை வளர்ச்சி,

பத்துப்பாட்டினில் ஆளுமை வளர்ச்சி, முனைவர் கெ.ரவி, நிலாசூரியன் பதிப்பகம், விலை 200ரூ. பழந்தமிழர்கள் ஆளுமைத் திறன் உடையவர்களாகத் திகழ்ந்தனர். சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டினில் இடம் பெற்றுள்ள தமிழர்களின் ஆளுமையை முனைவர் கெ.ரவி ஆய்வு செய்துள்ளார். பத்துப்பாட்டினில் காணப்படும் ஆளுமை வளர்ச்சிக் கோட்பாடு, உளவியல் அறிஞர்களின் ஆளுமை வளர்ச்சிக் கோட்பாட்டோடு ஒத்துப்போகும் தன்மையை இந்த நூலில் அவர் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்களே

பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்களே, ஏ,எல்.சூர்யா, பி.பாசிட்டிவ் புரொடக்ஷன்ஸ், விலை 100ரூ. வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டும் கட்டுரைகள் அடங்கிய புத்தகம். “அறிவாற்றலும் அறியாமையும்”, “கனவுகள் மெய்ப்படுமா?”, “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” முதலான தலைப்புகளில் 15 கட்டுரைகளை ஏ.எல்.சூர்யா எழுதி இருக்கிறார். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டம் என்ன சொல்கிறது?, மணிமேகலைப் பிரசுரம், விலை 220ரூ. சட்டம் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம், பல்வேறு பிரச்சினைகளுக்கு சட்டம் கூறும் தீர்வு என்ன என்பதை, சட்ட நிபுணர் ஏ.பி.ஜெயச்சந்திரன் கேள்வி – பதில் ரூபத்தில் எழுதியுள்ளார். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

உலக நாயகன் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 280ரூ. ‘தினத்தந்தி’யில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது, நடிகர் கமல்ஹாசன் வரலாறு 70 வாரங்களாக வெளிவந்தது அது இப்போது தினத்தந்தி பதிப்பகத்தால் ‘உலக நாயகன் கமல்ஹாசன்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 352 பக்கங்கள். முழுவதும் கண்ணைக் கவரும் வண்ணத்தில். 6 வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது. சினிமாவுக்காக பரத நாட்டியம் கற்றுக் கொண்டு ‘டான்ஸ் மாஸ்டர்’ ஆனது. 27 வயதில் நூறு படங்களில் நடித்து சாதனை புரிந்தது. தமிழ், மலையாளம், […]

Read more

மனித யந்திரம்

மனித யந்திரம், சின்னப்ப பாரதி, கோரல், பக். 119, விலை ரூ.100. சமூகத்தின் விளிம்புகளில் வாழ்ந்து வருவோர் குறித்து தொடர்ந்து எழுதி பரவலான வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. ஊரில் எல்லாருடைய இழுப்புக்கும் இசைந்து கொடுக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளி வீரன் முதல், வாழ்க்கைப்பட்ட வீட்டில் அனைவருக்கும் இசைந்து கொடுக்கும் இல்லத்தரசி, ஒரு காவல் நிலையத்தையே தனது இல்லமாக்கிக் கொண்டு அங்கு நடைபெறும் அநீதிகளின் ஏக நேரடி சாட்சியான போதிலும், அந்த அநீதிகளுக்கு இசைந்து […]

Read more

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை….

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை…., சி.இளங்கோ, அலைகள் வெளியீட்டகம், பக்.112,  விலை ரூ.80. தமிழக வரலாற்றைத் தெரிந்து கொள்ள தொல்லியல் ஆய்வுகள் உதவுகின்றன. இந்நூல் அத்தகைய ஆய்வுகளைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப் பகுதி, திருவள்ளூர் மாவட்டம் கொற்றலையாற்றுப் படுகை, அத்திரம்பாக்கம் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் கிடைத்த பல்வேறு கல் ஆயுதங்கள், கற்கால மனிதர்கள் தங்கியிருந்த குகைகள், கைக்கோடரிகள், தென்னார்க்காடு, வடஆர்க்காடு, தர்மபுரி, நீலகிரி மலைத்தொடர், தேனி மாவட்டப் பகுதிகள், மதுரை அருகேயுள்ள குன்றுகளில் வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் போன்ற […]

Read more

சின்னச் சின்ன சிறகுகள்

சின்னச் சின்ன சிறகுகள், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, பக்.306,  விலை ரூ.250. ஆன்மிக உலகில் புக விரும்பும் மக்களுக்கு இறை, வாழ்வியல் தத்துவத்திற்கான வழிகாட்டியாக இந்நுலை வெளிக் கொணர்ந்திருக்கிறார் நூலாசிரியர். ஒரு கலையை கற்க சற்குரு எவ்வளவு முக்கியம் என்பதை விரிவாக விளக்கிக் கூற முற்பட்டிருப்பது அருமை. சற்குருவானவர் ஆத்ம, ஸ்ரீ, மகாவித்தை என மூன்று வித்தைகளுக்கு அதிபதியாக விளங்குகின்றார் என்றும், காலங்களுக்கும் பிறவிகளுக்கும் அப்பாற்பட்டவர் என்றும் நூலாசிரியர் பதிவு செய்கிறார். இப்பிரபஞ்சத்தில் காண்பது, உணர்வது இரண்டு. ஒன்று அண்டம், மற்றொன்று பிண்டம். இவற்றைப் […]

Read more
1 328 329 330 331 332 505