தேர்தல் வழிகாட்டி,

தேர்தல் வழிகாட்டி, வி. சிதம்பரநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், விலை 175ரூ. சோழர் காலத்திலேயே தேர்தல் முறை இருந்தது. காலத்துக்கு ஏற்றபடி அவ்வப்போது மாற்றங்கள் பெற்று வந்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் ஊரக, உள்ளாச்சி தேர்தல்கள் நடைபெற இருப்பதால், வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கு உதவும் வகையில், இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் வி.சிதம்பரநாதன். வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள், மனுவை வாபஸ் பெறுதல், சின்னங்கள் ஒதுக்கீடு, வாக்கு எண்ணிக்கை பற்றிய விதிமுறைகள்… இப்படி வாக்காளர்களும், வேட்பாளர்களும் அறிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் இப்புத்தகத்தில் […]

Read more

திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், மூன்று காண்டங்கள்: மதுரைக்காண்டம், பக்.668, கூடற்காண்டம், பக்.560, திருவாலவாய்க் காண்டம், பக்.528, (மூலமும் உரையும்), உரையாசிரியர்: பழ.முத்தப்பன், சகுந்தலை நிலையம், மூன்று காண்டங்களும் சேர்த்து விலைரூ.1200. திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய மூன்றும் சைவ சமயத்தின் மூன்று கண்களாகத் திகழ்பவை. நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் புலியூர் நம்பியும், பரஞ்சோதி முனிவரும் இயற்றியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பரஞ்சோதியாருடையது கூடுதல் சிறப்புடையது. மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கும் இந்நூல்கள் மதுரைக்காண்டம் (18 படலங்கள்), கூடற்காண்டம் (30 படலங்கள்), […]

Read more

கொஞ்சம் கனவு கொஞ்சம் கவிதை

கொஞ்சம் கனவு கொஞ்சம் கவிதை, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 75ரூ. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன். இந்நூல் அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு. ‘பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திடச் சொன்னாயே பாரதி… நோட்டுத் திறமல்லவா இந்த நாட்டை நடத்துகிறது‘ என்று இன்றைய நாட்டு நடப்பைத் தோலுரித்துக் காட்டுகிறார். ‘தேடுதல் இல்லா வாழ்க்கையில் யார்க்கும் தெய்வ தரிசனம் கிடைப்பதில்லை’ ‘விதைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். வருங்காலம் ஒரு விருட்சத்தை இழந்துவிடும்’ போன்றவை நெஞ்சில் விழிப்புணர்வை விதைக்கின்றன. ‘பிள்ளை மனமும் […]

Read more

வரலாறு உணர்த்தும் அறம்

வரலாறு உணர்த்தும் அறம், வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 50ரூ. வரலாற்றை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? என்பதற்கான பலவித வழிமுறைகளை இந்த நூல் மூலம் நாம் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். வரலாறு என்பது என்ன? எதுவெல்லாம் வரலாறாகப் பார்க்கப்படுகிறது? எவற்றையெல்லாம் வரலாறு வசதியாக மறந்து விடுகிறது என்பதை விரிவாக ஆராயும் நூல். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான வெ.இறையன்பு இதை எழுதியுள்ளார். போரின் போதும் மற்றும் குற்றங்களுக்கான கொடூர தண்டனைகள் போன்ற அறப்பிறழ்வுகளில் இருந்தும் எது அறம் […]

Read more

இந்தியாவின் மேன்மைகளும் சிறப்புகளும்

இந்தியாவின் மேன்மைகளும் சிறப்புகளும், பேராசிரியர் க.பரந்தாமன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. தமிழ்ச் சமுதாயம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போதைய நிலையில் தமிழ்ச் சமுதாயம் எந்த அளவு வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக இன்றைய இந்தியச் சமுதாயத்தில் இளைஞர்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை அனைவரையும் சிந்திக்க தூண்டுகிறது. சட்டங்களும், சம்பிரதாயங்களும் மக்கள் நலன் கருதியே செயல்படுத்துவதன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா வரும் 20 ஆண்டுகளில் வழிகாட்டும் என்று நூலாசிரியர் தன்னுரைய வைர வரியையும் நூலில் சுட்டி காட்டி உள்ளார். […]

Read more

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன், கல்கி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், விலை ஐந்து பாகங்களும் சேர்த்து 2500ரூ. புதிய வடிவமைப்பில் பொன்னியின் செல்வன் கல்கியின் படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்ட பிறகு, அவருடைய நூல்கள் பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு வடிவங்களில் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக கல்கியின் பிரம்மாணடமான வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் அநேகமாக எல்லாப் பதிப்பங்களிலும் விதம் விதமான தோற்றங்களிலும், விலைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் இந்த நாவலை, கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் வெளியிட்டுள்ளது. ஐந்து பாகங்களும் ஐந்து புத்தகங்களாக, ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளன. பக்கத்துக்குப் பக்கம் […]

Read more

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு, எஸ்.ஜெகன்னாதன், எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மனிதர்களை மகிழ்விக்கும் கால்நடைகளை போற்ற வேண்டும் என்று விவசாயப் பெருமக்களால் கொண்டாடப்படுவதுதான் மாட்டுப் பொங்கலும், அதையொட்டி கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றில் கால்நடைகளை வைத்து கொண்டாடும் விழாக்கள் குறித்து இந்த நூலில் எழுத்தாளர் எஸ்.ஜெகன்னாதன் சுவையாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், ச.உமாதேவி, நந்தினி பதிப்பகம், விலை 80ரூ. இலக்கியச் சுடர், எழுத்துச் சிற்பி முதலான விருதுகளைப் பெற்றுள்ள ச.உமாதேவி, “இலக்கிய அமுதம்” என்ற தலைப்பில், நூல் எழுதியுள்ளார். பாவேந்தர் கவிதைகளில் பெண்ணியம், அருட்பா காட்டும் பண்பாட்டுக் கூறுகள், திருக்குறளில் கல்வி உள்பட 15 ஆய்வு கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. எல்லாம், இலக்கியச் சிறப்பு வாய்ந்த கட்டுரைகள். சிந்தனைக்கு விருந்தளிப்பவை. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

தாமரை செந்தூர் பாண்டி நாவல்கள்

தாமரை செந்தூர் பாண்டி நாவல்கள், சிவாமி புத்தகாலயம், விலை 900ரூ. ஏழை மக்களின் துயர வாழ்வை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர் தாமரை செந்தூர் பாண்டி. அவர் எழுதிய நாவல்களில் முக்கியமான 16 நாவல்களை தேர்வு செய்து, ஒரே புத்தகமாக (மொத்தம் 1184பக்கங்கள்)வெளியிட்டு இருக்கிறார்கள். நாவல்களில் தாமரை செந்தூர் பாண்டி தனக்குரிய முத்திரைகளை ஆழமாகப் பதித்திருக்கிறார். இந்த நூலில் உள்ள “அந்தரங்க கேள்வி” என்ற நவால், “குருவம்மா” என்ற பெயரில் திரைப்படமாகியது. அதற்கு திரைக்கதை அமைத்து, டைரக்ட் செய்த தாமரை செந்தூர்பாண்டி ரிக்ஷாக்காரராக நடிக்கவும் […]

Read more

தப்புக்கடல

  தப்புக்கடல, பெ.கருணாகரன், குன்றம் பதிப்பகம், விலை 150ரூ. மண் வாசனை வீசும் பெ. கருணாகரன் கதைகள் தமிழ்நாட்டில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், பத்திரிகையாளருமான .கருணாகரன் எழுதிய 15 சிறுகதைகள் கொண்ட புத்தகம் ‘தப்புக்கடல’. கதாபாத்திரங்களை வடிவமைப்பது, கதையை வேகமாக நடத்திச் செல்வது இரண்டிலும் முழு வெற்றி பெற்றிருக்கிறார், கருணாகரன். அணிந்துரை வழங்கிய வெ. இறையன்பு, “பெ.கருணாகரன் எழுத்துகள் பரிச்சயமானவை மட்டுமல்ல. படிக்கத் தூண்டுபவையும் கூட… மண்ணின் மணம் நிறைந்தவை” என்று குறிப்பிட்டிருப்பது, முற்றிலும் உண்மை. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more
1 327 328 329 330 331 505