பன்முக நோக்கில் இராமானுசர்

பன்முக நோக்கில் இராமானுசர், பதிப்பாசிரியர்: ப.முருகன், கங்காராணி பதிப்பகம், பக்256, விலை ரூ.160. உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீஇராமானுசர் வேதத்துக்கு எளிய உரை வகுத்தவர். இளையாழ்வார், யதிராஜர், உடையவர், எம்பெருமானார், சடகோபன் பொன்னடி, கோயிலண்ணர், பாஷ்யகாரர், திருப்பாவை ஜீயர், இராமானுசர் ஆகிய எட்டுப் பெயர்களால் இவரை வைணவர்கள் போற்றித் துதிக்கின்றனர். இராமானுசரின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவை நினைவுகூரும் வகையில், சென்னை அரும்பாக்கம் வைணவக் கல்லூரி தமிழ்த் துறையினரால் தேசியக் கருத்தரங்காக நடத்தப்பட்டு, பன்முக நோக்கில் இராமானுசர் பற்றி 21 பேர் எழுதிய ஆழமான ஆய்வுக் […]

Read more

யுகப் புரட்சி

யுகப் புரட்சி,  அமரர் கல்கி, வானதி பதிப்பகம், பக்.232, விலை ரூ.140. அமரர் கல்கி 1931 -39 காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மகாராஷ்டிர மாநிலம் பெயிஸ்பூர் கிராமத்தில் 1937 இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டைப் பற்றிய கட்டுரை, அம்மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மாநாட்டுக்குச் சென்றவர்கள் தங்கிய இடம், குளிக்க செய்திருந்த ஏற்பாடுகள், மின்சாரம் இல்லாத அந்த ஊரில் இரவு நேரத்தில் எரியவிடப்பட்ட விளக்குகள், அளிக்கப்பட்ட உணவு என அனைத்தையும் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கிறது. […]

Read more

அறிவு வழிகள்

அறிவு வழிகள், பேகன் கட்டுரைகள், தமிழில் முகில்வண்ணன், சாகசம், பக்.280, விலை ரூ.250. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்  என்றார் மகாகவி பாரதியார். இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலத்தின் குழந்தை என கருதப்பட்ட பிரான்சிஸ் பேகனின் 60 கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. பிரான்சிஸ் பேகன் வாழ்ந்த காலத்தின் சமூக நிலைமைகளுக்கேற்ப அக்கால வாழ்வியல் விழுமியங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் புது ஒளி பாய்ச்சும்விதமாக பேகன் தனது கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். உண்மை, மத ஒற்றுமை, பழியுணர்ச்சி, பொறாமை, […]

Read more

காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம்

காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம், முதல் தொகுதி. இராம் பொன்னு, சர்வோதய இலக்கியப் பண்ணை, பக்.224, விலை ரூ.150. மகாத்மா காந்தியின் சிந்தனைகள் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூறும் நூல். கான் அப்துல் கஃபார் கான், மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, ஆங் சான் சூ கி, லான்சா டெல் வாஸ்டோ (சாந்திதாஸ்), சீசர் எஸ்ட்ரடா சாவெஸ், லெக் வலெசா ஆகியோர் மக்களுக்காக உலக அளவில் போராடியவர்கள். அவர்கள் பல்வேறு போராட்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலும் […]

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம், பக்கம் 304, விலை ரூ.200. நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஒரு மருத்துவர் கூறும் நோய் குறித்தோ, பரிந்துரைக்கும் சிகிச்சை குறித்தோ நோயாளிக்கு சந்தேகம் வரும்போது, வேறு மருத்துவரிடம் மறுஆலோசனை கேட்கத் தயங்குவோருக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்துவது , நோய் வரும் முன்னர் காக்கும் வழிகளை எடுத்துச் சொல்வது ஆகியவையே இந்த நூலின் முக்கிய சாராம்சமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் முக்கியமான நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள், சிகிச்சையளிக்கும் […]

Read more

பணமே பணமே ஓடோடி வா

பணமே பணமே ஓடோடி வா, ஏ.எல்.சூர்யா, பி பாஸிட்டிவ் புரொடக்ஷன்ஸ், பக்.296, விலை ரூ.300. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எல்லாரும் விரும்புகிறார்கள். ஆனால் என்னதான் உழைத்தாலும், எவ்வளவு முயற்சி செய்தாலும் பணத்தைச் சம்பாதிக்க முடியவில்லை; அப்படியே சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை என்று புலம்புபவர்களே அதிகம். அவர்களுக்கு வழிகாட்டும்விதமாக, இந்நூல் மலர்ந்திருக்கிறது. பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள் முதலில் தங்களுடைய ஆழ்மனதை அதற்குத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை இந்நூல் விளக்குகிறது. ஓர் இடத்தில் வேலை செய்பவர்கள் சுயமாக எதையும் செய்ய முடியாது. […]

Read more

கலாச்சார இந்து

கலாச்சார இந்து, ஜெயமோகன்,  நற்றிணை பதிப்பகம், பக்.176, விலை ரூ.200. இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் […]

Read more

அமராவதி

  அமராவதி, இரா.ரவிக்குமார், கொங்குமண்டல ஆய்வு மண்டலம், விலை 500ரூ. நடந்தாய் வாழி அமராவதி! தமிழ் மொழியில் நதிகளைப் பற்றி வெளியான புத்தகங்கள் மிகக் குறைவே. காவிரியைப் பற்றி தி.ஜ.-வும், சிட்டியும் எழுதிய ‘நடந்தாய் வாழி காவிரி’க்குப் பிறகு, நதியைப் பற்றி விரிவான புத்தகங்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். அந்தக் குறையைப் போக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது, உடுமலையைச் சேர்ந்த இரா.ரவிக்குமார் எழுதிய அமராவதி நதியைப் பற்றி ஆய்வுப் பார்வையிலான புத்தகம். கொங்கு மண்டலத்தில் பழனி மலைத் தொடருக்கும் ஆனை மலைத் தொடருக்கும் இடையே […]

Read more

கையளவு கடல்

கையளவு கடல், மதுக்கூர் ராமலிங்கம், பாரதி புத்தகாலயம், பக். 120, விலை 130ரூ. எள்ளலும் துள்ளலும் துள்ளல் நடையில் அமைந்த கட்டுரைத் தொகுப்பு இது. நாடறிந்த பேச்சாளர், பத்திரிகையாளரான மதுக்கூர் ராமலிங்கத்தின் சமூக அக்கறை எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படுகிறது. கூடவே, எள்ளலும், நகைச்சுவையும் கைக்கொடுக்கிறது. ‘நார்ச் சத்து மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தேங்காய் நார் சாப்பிடச்சொல்லாதது ஒன்றுதான் பாக்கி’ என்று தனக்கு சர்க்கரை குறைபாடு வந்திருப்பதைக் கூட எளிதாகக் கடந்துசெல்ல முடிகிறது அவரால்! -மானா பாஸ்கரன், நன்றி: தி […]

Read more

அபாயம் தொடாதே

அபாயம் தொடாதே, பட்டுக்கோட்டை பிரபாகர், கவிதா பதிப்பகம், விலை 200ரூ. கடந்த 40 ஆண்டுகளாகச் சிறுகதை, நாவல், தொடர்கதை, சின்னத்திரை தொடர்கள், வெள்ளித் திரையில் கதை – உரையாடல் எனத் தொடர்ந்து வெகுசன தளத்தில் பரவலாகப் பேசப்படும் எழுத்தாளரின் நாவல். எந்த முன்குறிப்பும் இல்லாமல் தொடங்கும் கதை, தொடங்கிய வேகத்திலேயே சட்டென முடிந்தும்போகிறது. சியாமளாவின் கொலைக்குக் காரணமான விவேக்கை அவனது கல்யாண மேடையில் வைத்தே கைது செய்வதோடு நாவல் முடிகிறது. வழக்கமான துப்பறியும் கதைதான் என்றாலும் மின்னல் வேக வாசிப்புக்கு உத்தரவாதம் உண்டு. நன்றி: […]

Read more
1 329 330 331 332 333 505